ஞாயிறு, 31 டிசம்பர், 2023
மலர்கள் தரும் ஆனந்தம்
ஞாயிறு, 24 டிசம்பர், 2023
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!
ஏழைத் தொழுவில் வந்த இறைமகனே
தாலேலோ!
- கண்ணதாசன்.
வெள்ளி, 15 டிசம்பர், 2023
கார்த்திகை தீபமும் சொக்கப்பனையும்
திங்கள், 11 டிசம்பர், 2023
பறவைகளின் தேடல்
வெள்ளி, 8 டிசம்பர், 2023
புறாக்களின் தவிப்பு
ஞாயிறு, 3 டிசம்பர், 2023
அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்
சனி, 18 நவம்பர், 2023
கந்த வேள் முருகனுக்கு அரோகரா ! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !
வெள்ளி, 17 நவம்பர், 2023
பழனி ஆண்டவரும் மகனின் வெகு நாள் ஆசையும்
வியாழன், 16 நவம்பர், 2023
சுப்ரமணியம் சுப்ரமணியம் சண்முக நாதா சுப்பிரமணியம்
பழமுதிர் சோலை ஆறாவது படை வீடு. சுப்பிரமணிய சுவாமி
இன்று கந்த சஷ்டி 4 ம் நாள்.கந்தசஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு சக்தியை கொடுப்பவை முருகன் பாடல்களும் முருகன் தரிசனமும் தான். மனது உற்சாகமாக இருக்க முருகன் பாடல்களை பாடியும் கேட்டும் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள்.
தண்டபாணித் தெய்வமே சரணமய்யா!- முதல் நாள்
ஆறுமுகனே வருவாய்!- மூன்றாம் நாள்
கந்தசஷ்டி சிறப்பு பதிவுகளில் முந்திய பதிவுகள் . படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.
அரிசோனா மாகாணத்தில் உள்ள மகாகணபதி ஆலயம் பற்றி பல பதிவுகள் போட்டு இருக்கிறேன். அந்த ஆலயத்தில் நடக்கும் சூரசம்ஹாரத்திற்கு முருகன் அருளால் மகன் சூரன் செய்து கொடுத்து இருக்கிறான். அந்த படங்களும் முருகன் பாடல்களும் இந்த பதிவில் இடம்பெறும்.
புதன், 15 நவம்பர், 2023
ஆறுமுகனே ! வருவாய்
செவ்வாய், 14 நவம்பர், 2023
முத்தான முத்துக்குமரா முருகையா வா ! வா!
திங்கள், 13 நவம்பர், 2023
தண்டபாணித் தெய்வமே சரணமய்யா!
இன்று கந்தசஷ்டி விழா தொடக்கம். பல வருடங்களுக்கு முன் ஆறு நாளும் "முருகனை சிந்திப்போம்" என்று பதிவு போட்டேன். கந்தசஷ்டி காலத்தில் விரதம் இருப்பதும், "கந்த புராணம்" படிப்பதும் என்று இருப்போம். என் கணவர் ஆறு நாளும் சஷ்டி கவசத்தை 36 முறை படிப்பார்கள். மாதம் இரண்டு முறைவரும் சஷ்டி விரதம் அதில் ஒரு முறை விரதம் இருப்போம்.இப்போது விரதம் இருப்பது இல்லை.
ஞாயிறு, 12 நவம்பர், 2023
இறைவனுக்கு நன்றி.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள். நான் தீபாவளி வாழ்த்து சொல்ல தயார் செய்தபடம்.
இறைவன் அருளால் இந்த ஆண்டு மழை இல்லாமல் எல்லோரும் மகிழ்ச்சியாக வெடிகள் வெடித்து புத்தாடை அணிந்து மகிழ்ச்சியாக எங்கள் வளாகத்தில் கொண்டாடி விட்டார்கள்.நானும் என்னால் முடிந்தவற்றை செய்து கொண்டாடி விட்டேன்.
உறவுகள், வலை உலக நட்புகள், மற்றும், திருவெண்காடு , மாயவரம் நட்புகள் வாழ்த்து அனுப்பினார்கள்., பேசினார்கள் அனைவருக்கும் நன்றிகள்.
ஞாயிறு, 5 நவம்பர், 2023
நண்பர்கள் வீட்டு நவராத்திரி விழா
சனி, 4 நவம்பர், 2023
நவராத்திரி திருவிழா
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAcePwpDRSibvH5ndLcGS8UVrSXIgjOe-sMwXlGaAzmWZadaZJH63uH8O9b1ZI9A3CzN5w5gjs6Iqc0d7E-LCYl4F2NxOz9nGW0FfHtEiQBLfWcthDcbkuCj41n6Xec6T1kJN2DvskuMjUcb2G9vXaJgGWZazsZVn0foSCOR0pq31Ze4BryJhRcNYp_OE/w480-h640/IMG_4191.jpg)
அம்மன் சிவபூஜை செய்யும் காட்சி.
தீபாவளி வரப்போகிறது! இப்போது நவராத்திரி திருவிழா பதிவா? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.
எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் அய்யனார் கோவில் நவராத்திரி கொலு படங்கள் மற்றும் தெரிந்தவர்கள், உறவினர் கொலு படங்களை பதிவாக போட வலையேற்றி வைத்து இருந்தேன். அதனால் இந்த பதிவு. வாங்க கொலு பார்க்கலாம்.
செவ்வாய், 31 அக்டோபர், 2023
ஹாலோவீன் கொண்டாட்டம்
ஞாயிறு, 22 அக்டோபர், 2023
எங்கள் வீட்டு கொலு பார்க்க வாங்க
ஞாயிறு, 15 அக்டோபர், 2023
சிறுவர் பூங்காவும், அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறும்
ஞாயிறு, 8 அக்டோபர், 2023
ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்ததாம்
புதன், 4 அக்டோபர், 2023
கருட சேவை
புதன், 27 செப்டம்பர், 2023
ஊட்டிக்கு ஒரு சமயச் சுற்றுலா
விடுமுறைக்கு உறவினர் வீட்டுக்கு போகலாமா? அல்லது உறவினர்களைஅழைத்துக் கொண்டு எங்காவது மகிழ்ச்சியாய் சென்று வரலாமா?- என்று வீட்டில் எல்லோரும் கலந்து ஆலோசிக்கும் நேரம்.அவரவர் பட்ஜெட்டுக்க ஏற்றமாதிரி விடுமுறையை
சனி, 23 செப்டம்பர், 2023
பேரன் செய்த லெகோ பிள்ளையார்
ஞாயிறு, 17 செப்டம்பர், 2023
அருள் புரிவாய் ஆனைமுகா!
வியாழன், 7 செப்டம்பர், 2023
கோகுல கிருஷ்ணா வா வா!
செவ்வாய், 5 செப்டம்பர், 2023
பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில் - 5
பத்துமலை மலை அடிவாரத்தில் உள்ள ஆறுபடை வீடு கோவில்.
ஜூன் 7ம் தேதி மகன் குடும்பத்துடன் மலேசியாவில் உள்ள பத்துமலை முருகனை தரிசனம் செய்து வந்தேன். அங்கு போய் வந்ததை தொடர் பதிவாக இங்கு பகிர்ந்து வருகிறேன்.
இந்த பதிவு நிறைவு பகுதி. இதில் அடிவாரத்தில் உள்ள ஆறுபடை முருகன் கோவில் இடம்பெறுகிறது.
--------------------------------------------------------------------------------------------------
முன்பு பகிர்ந்த பதிவுகள்:-
மாலை நேரம், மழை மேகம் வந்து சிறு தூறல் போட ஆரம்பித்து விட்டது.
அழகிய வேலைப்பாடு , மேலே அலங்கார வளைவுக்குள் அழகிய பிள்ளையார்கள் வடிவங்கள்.
முதலில் நடுநாயகமாக பிள்ளையார் இருந்தார். அந்த பிள்ளையார் போன பதிவில் இடம்பெற்று விட்டார். அன்று சதுர்த்தி அவருக்கு அபிசேகம் செய்ய தயார் ஆகி கொண்டு இருந்தார்கள். ஹோமம் நடந்து கொண்டு இருந்தது.
பிள்ளையார் பக்கவாட்டில் ஆறுபடை முருகனுக்கும் சன்னதிகள் வரிசையாக இருந்தது. குருக்கள் மாலை சாற்றி அலங்காரம் செய்து கொண்டு இருந்தார்.
- திருப்பரங்குன்றம்
- திருச்செந்தூர்
- பழனி
- சுவாமிமலை
- திருத்தணி
- பழமுதிர்சோலை
ஆறுபடை வீடுகள் முருகன்கள் சன்னதி வரிசையாக இருக்கிறது.
திருப்பரங்குன்றம்
திருச்செந்தூர்
பழனிசுவாமி மலை முருகனை கொஞ்சம் கிட்டத்தில் எடுத்த படம்
கல்யாண மண்டபம் மாதிரி இருக்கிறது, கல்யாணங்கள் நடக்கும் போலும்
அம்மன் சன்னதி என்று நினைக்கிறேன் மூடி இருந்தது
சுவரிலிருந்த ஓவியம்
தூண்கள், சிற்பங்கள் எல்லாம் அழகு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQEamtmFLreDHpqesuXdz_NUGRfZHOQpPHv1j2ANOd53XwqPFvgKuWK1SMOkjBHTed8vLKE4SBsnYVvIq8KQLt2dwVzy7Gob1-y-XZFctp0hjPEQJQlKC38G8rDcqa6ncU6HsencAXoKodjb_TdpFOVVMoypztKthHBN-ZspIx1ZvcenggcBq14IEWC9Q/w640-h480/IMG_7406.jpg)