ஞாயிறு, 22 மார்ச், 2026

உலக தண்ணீர் தினம் - 2026

  

நன்றி-  கூகுள்

2026 ஆம் ஆண்டு உலக நீர் தினம், பாலின சமத்துவத்தில் நீரின் பங்கின் மீது கவனம் செலுத்தும்.


உலக நீர் தினம். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று ஜக்கிய நாடுகள் சபையால் உலகளவில் கொண்டாடப்படும் ஒரு தினமாகும்.

நீர் மற்றும் சுகாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதும், பாதுகாப்பான நீர் வசதியின்றி வாழும் 220 கோடி மக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.


ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு   கருபொருள் இருக்கும்.

இந்த ஆண்டு , 2026 -ல் உலகநீர்தினத்தின் கருப்பொருள்

"நீரும்  பாலினமும் " என்பதாகும்.அதன் முழக்கம்" எங்கே" என்பதாகும்

" நீர் பாய்கிறது, சமத்துவம் வளர்கிறது"  இந்தக் கருப்பொருள்,

தண்ணீர் நெருக்கடியால் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது ஏற்படும் சமமற்ற தாக்கத்தை வலியுறுத்துவதோடு , மேலும் சமத்துவமான எதிர்காலத்திற்காக நீர் தலைமைத்துவம், மேலாண்மை மற்றும் முடிவெடுப்பதில் அவர்களின் முக்கியப் பங்க்கிற்காக  வாதிடுகிறது.

வெள்ளி, 20 மார்ச், 2026

எங்கு இருந்தாலும் வாழ்க !

 

 நியூஜெர்சியில் மகன் வீட்டு தோட்டத்துக்கு வந்த சிட்டுக்குருவிகள்


மார்ச் 20  இன்று உலக சிட்டுக்குருவி தினம். ஒவ்வொரு ஆண்டும் பதிவு போடுவேன்.

இந்த ஆண்டு புதிதாக போட குருவிகள் எங்கள் வளாகத்திற்கு வரவில்லை.

வீட்டு இருபக்கமும் முன்பு காலி மனைகள் அதில் ஏராளமான மரங்கள், செடி, கொடிகள்  இருந்தன. குருவிகளுக்கு கூடு கட்ட இலை தளைகளும்,   உணவாக புழு பூச்சிகளும்  கிடைத்தன, அவை வந்து எங்கள் குடியிருப்புகளில் கூடு கட்டி மகிழ்வாய் இருந்தது.

வியாழன், 5 மார்ச், 2026

வரசித்தி விநாயகர்



எங்கள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள விநாயகருக்கு  புதிதாக செய்யப்பட்ட  செப்பு கவசம்.  ஜனவரி 25  ஆம் தேதி   சாற்றப்பட்டு  சிறப்பு  பூஜை செய்யப்பட்டது. அந்த படங்கள் இதில் இடம்பெருகிறது இந்த பதிவில்..
நாளை  சங்கடஹர சதுர்த்தி அதனால் இந்த பகிர்வு.

தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் நன்கு தேர்வு எழுத பிரார்த்தனைகள்.

செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

மறை பொருளான தெய்வமே நான்




ரோஜா பதிவை படிக்க வரும் அனைவருக்கும்  மலர் கொத்து கொடுத்து  வரவேற்கிறேன்.

ரோஜா எந்த நிறந்தில் இருந்தாலும் அழகானதுதான், அதன் மணம் எந்த அளவில் இருந்தாலும் அது இறைவனின் அன்பை ஏந்தி வருவது.
- அன்னை அரவிந்தர் 

மலர்களில் ராஜா  என்று பாராட்டப்படும் மனம் கவர்ந்த  ரோஜா பூக்களின் படங்கள் இந்த பதிவில். மலரே மலரே நீயார் ?  என்று மலரிடம் கேட்டதற்கு மலர்  சொல்லும் பதிலும் இருக்கிறது பதிவில்.

புதன், 18 பிப்ரவரி, 2026

பிராத்தனை பலித்தது, இறைவன் காப்பாற்றினார்


ஜன்னலில் குடித்தனம் நடத்தும் புறா பறவைகள்


குடியிருப்பில் புறாக்கள் அதிகமாகி விட்டது  அவற்றை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

திங்கள், 16 பிப்ரவரி, 2026

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி


என் கணவர் வரைந்த ஓவியம். (கணினி ஓவியம்)


சிவராத்திரி  பூஜை நல்லபடியாக  நிறைவு பெற்றது.

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026