ஒவ்வொரு ஆண்டும் இந்த மகா கணபதி ஆலயம் நடத்தும் பிள்ளையார் செய்யும் விழாவில் குழந்தைகள் தங்கள் கைகளால் அவர்களே பிள்ளையாரை செய்து பிள்ளையார் சதுர்த்தி அன்று வழிபடுவார்கள். அப்புறம் எல்லோரும் சேர்ந்து பிள்ளையாரை கரைக்கும் விழாவும் சிறப்பாக நடக்கும் மகா கணபதி ஆலயத்தில்.
வாத்தியங்கள் இசைத்து வரவேற்கிறார் பதிவை படிக்க வருபவர்களை
ராமு படத்தில் சீர்காழி கோவிந்த ராஜன் அவர்கள் பாடிய "கண்ணான் வந்தான் மாய கண்ணன் வந்தான்" இந்த பாடலை யூடியூப்பில் பகிர்ந்தவருக்கு நன்றி. மிகவும் அருமையான பாடல் வரிகள் கேட்கும் போது கண்களில் கண்ணீர் வரும்.
அதே பாடல் ரேவதி கிருஷ்ணா அவர்கள் வீணை இசையில் வாசித்து இருக்கிறார்கள் நன்றாக இருக்கும்.இந்த பாடலை யூடியூப்பில் பகிர்ந்தவருக்கு நன்றி.
எனக்கு இரவு நேரம் தூக்கம் வரவில்லை என்றால் வீணை மற்றும் , புல்லாங்குழல் இசை கேட்பேன். ரேவதி கிருஷ்ணா வீணையில் வாசித்த "சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ" பாடல் மிகவும் பிடிக்கும். மனம் அப்படியே லேசாகி விடும்.
கேட்டு பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும். கேட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
காலை 4,30 எழுந்தவுடன் காலைகடன்கள் முடித்து , உடற்பயிற்சி, தியானம் நிறைவு செய்து தோட்டத்திற்கு போய் சூரியன் உதயம் ஆவதை பார்ப்பது மகிழ்ச்சியான விஷயம். அப்படியே சிறிது நடைபயிற்சியும். மகன் ஊரில் அவன் வீட்டுத்தோட்டத்தில் அதிகாலையில் சூரியோதயம் மற்றும் அதிகாலை பறவைகளின் ஒலியை கேட்பது மிகவும் பிடித்த விஷயம். ஒவ்வொரு நாளும் சூரியன் உதயம் ஆவதைப்பார்த்து வணங்கி அதை படம் எடுத்து வைத்து இருந்தேன். அவற்றில் சில படங்கள் இங்கு இடம் பெறுகிறது.
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் அமைந்துள்ள "வில்லியம்ஸ் " நகரில் சுதந்திர தின விழா பார்க்க போகும் போது போகும் வழியில் அழகிய ஏரியை பார்த்தோம். அதன் பேர் Watson Lake
மக்கள் அந்த ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தார்கள். மலைகளில் ஏறினார்கள், மீன் பிடித்தார்கள் நல்ல பொழுது போக்கும் இடம்.
இந்த முறை வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் விடுமுறை நாளில் நீர்நிலைகள் இருக்கும் இடம் தேடி வருகிறார்கள்.
வழியெல்லாம் இது போன்ற வாழ்த்துகளை வைத்து இருந்தார்கள்.
அமெரிக்காவின் சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 4 அன்று கொண்டாப்படுகிறது.
பிரிட்டனிடம் இருந்து 13 அமெரிக்கக் காலனிகள் சுதந்திரம் பெற்றதை நினைவு கூறும் வகையில் 1776 -ஆம் ஆண்டு ஜூலை 4 -ல் சுதந்திர பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் அடிப்படையில் இந்த தேசிய விழா அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு 250 வது வருடம் அதனால் கூடுதல் சிறப்பு. அதைப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகனால். விழாவில் எடுத்த படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.