வெள்ளி, 4 செப்டம்பர், 2026

கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா !





அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.


இந்த பதிவில் எங்கள் வீட்டு கண்ணன்கள் மற்றும்  பாடல்கள் இடம் பெறுகிறது.

பேரன் கவின் சிறு வயதில்
 

என் அண்ணன்பேத்தி 

தங்கை பேத்தி

பெரிய தம்பி பேத்தி 6 மாத குழந்தை


 இப்போது அவள் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் நடனம் வைலட் கலர் பாவாடை போட்டு முன் வரிசையில் ஆடுகிறாள்

சின்ன தம்பி பேத்தி மதுரை   கோயிலில்


வரலட்சுமி  விரத விழாவிற்கு அழைத்த  வீட்டில் தசாவதார சிலைகள் வைத்து இருந்தார்கள்  கீழ் தட்டில் கண்ணன்  இருப்பது தெரிகிறதா?



சாய் பஜனைக்கு கூப்பிட்டவர்கள் வீட்டில் கண்ணன் சிலை தோட்டத்தில் இருந்தது.




டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் பாடிய "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே! "பாடல் எல்லோருக்கும் பிடித்த பாடல்

இந்த பாடலை யூடியூப்பில் பகிர்ந்தவருக்கு நன்றி.





டி.எம் .எஸ்பாடிய பாடலை புல்லாங்குழல் இசையில்
கண்ணன் ஜெயபிரகாஷ்   அவர்கள் பாடி இருக்கிறார்கள்

இந்த பாடலை யூடியூப்பில் பகிர்ந்தவருக்கு நன்றி.





ராமு படத்தில் சீர்காழி கோவிந்த ராஜன் அவர்கள் பாடிய  "கண்ணான் வந்தான் மாய கண்ணன் வந்தான்"   இந்த பாடலை யூடியூப்பில் பகிர்ந்தவருக்கு நன்றி. மிகவும் அருமையான பாடல் வரிகள்  கேட்கும் போது கண்களில் கண்ணீர் வரும்.




அதே பாடல் ரேவதி கிருஷ்ணா அவர்கள்  வீணை இசையில் வாசித்து இருக்கிறார்கள் நன்றாக இருக்கும்.இந்த பாடலை  யூடியூப்பில் பகிர்ந்தவருக்கு நன்றி.

எனக்கு இரவு நேரம் தூக்கம் வரவில்லை என்றால் வீணை மற்றும்  , புல்லாங்குழல் இசை கேட்பேன்.  ரேவதி கிருஷ்ணா வீணையில்    வாசித்த "சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ" பாடல் மிகவும் பிடிக்கும். மனம் அப்படியே லேசாகி விடும்.

கேட்டு பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்.  கேட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
 



இந்த பாடலை ஐஸ்வரியா , செளந்திரியா இனிமையாக   பாடி இருக்கிறார்கள்
இந்த கன்னட பாடல் எல்லோருக்கும் பிடிக்கும். இந்த பாடலை யூடியூப்பில் பகிர்ந்தவருக்கு நன்றி.


பாடல் தமிழில்:-

கிருஷ்ணா நீ வேகமாய் வாராய்
வேகமாய் வாராய் திருமுகத்தை காட்டுவாய் (கிருஷ்ணா)


கால்களில் கொலுசோடும் கைகளில் ரத்தின வளையோடும்
நீல வர்ணத்தில் இருப்பவனே நாட்டியம் ஆடியவாறே வாராய் (கிருஷ்ணா)

இடுப்பில் ஒட்டியாணமும் விரல்களில் மோதிரமும்
கழுத்தில் வைஜயந்தி மாலையும் அணிந்தவனே (கிருஷ்ணா)

பட்டு பீதாம்பரம் அணிந்து கையில் குழலோடு
உடலெங்கும் சந்தனத்தை அணிந்தவனே (கிருஷ்ணா)

தாய்க்கு வாயில் உலகத்தை காட்டிய
இந்த உலகத்தை காப்பாற்றுபவனே, உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா (கிருஷ்ணா)



ராதையுடன் கண்ணன் ( சாய் கோயில்)


மதுரையில் போன ஆண்டு  கிருஷ்ண ஜெயந்தி


கண்ணன் பெருமான் அனைவருக்கும்  எல்லா நலன்களையும் அருள வேண்டும். மகிழ்ச்சியை , அமைதியை  வழங்கட்டும். 
அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல் வாழ்த்துகள்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2026

மலர் வழிபாடு




இறைவனை மலர் தூவி வழிபாடு செய்வது மகிழ்ச்சி தரும், அதிலும் நம் வீட்டுத்தோட்டத்தில் பூத்த மலர் கொண்டு பூஜிப்பது மேலும் மகிழ்ச்சியை தரும்.

இந்த பதிவில் மகன் வீட்டுத்தோட்டத்தில்(அரிசோனா) பூத்த மலர்கள் படம் இடம் பெறுகிறது.

சனி, 1 ஆகஸ்ட், 2026

புத்தம் புது காலை பொன்னிறவேளை




புத்தம் புது காலை 


காலை 4,30  எழுந்தவுடன் காலைகடன்கள் முடித்து ,   உடற்பயிற்சி,  தியானம் நிறைவு செய்து தோட்டத்திற்கு போய் சூரியன் உதயம் ஆவதை பார்ப்பது மகிழ்ச்சியான விஷயம். அப்படியே சிறிது நடைபயிற்சியும்.   மகன் ஊரில் அவன் வீட்டுத்தோட்டத்தில் அதிகாலையில் சூரியோதயம் மற்றும் அதிகாலை பறவைகளின் ஒலியை கேட்பது  மிகவும் பிடித்த விஷயம். ஒவ்வொரு நாளும் சூரியன் உதயம்  ஆவதைப்பார்த்து வணங்கி அதை படம் எடுத்து வைத்து இருந்தேன். அவற்றில் சில படங்கள் இங்கு இடம் பெறுகிறது.

சனி, 25 ஜூலை, 2026

நாலுபக்கம் மலைகள் நடுவில் ஏரி






அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் அமைந்துள்ள "வில்லியம்ஸ் " நகரில் சுதந்திர தின விழா பார்க்க போகும் போது  போகும் வழியில் அழகிய ஏரியை பார்த்தோம்.  அதன் பேர்  Watson Lake 

  மக்கள் அந்த ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தார்கள்.  மலைகளில் ஏறினார்கள், மீன் பிடித்தார்கள் நல்ல பொழுது போக்கும் இடம்.

இந்த முறை வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் விடுமுறை நாளில்  நீர்நிலைகள் இருக்கும் இடம் தேடி வருகிறார்கள். 

புதன், 15 ஜூலை, 2026

அமெரிக்காவின் சுதந்திர தின கொண்டாட்டம்





வழியெல்லாம் இது போன்ற  வாழ்த்துகளை வைத்து இருந்தார்கள்.


அமெரிக்காவின் சுதந்திர தினம் ஒவ்வொரு  ஆண்டும் ஜூலை 4 அன்று கொண்டாப்படுகிறது.

பிரிட்டனிடம் இருந்து 13 அமெரிக்கக் காலனிகள் சுதந்திரம் பெற்றதை நினைவு கூறும் வகையில் 1776 -ஆம் ஆண்டு ஜூலை  4 -ல் சுதந்திர பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் அடிப்படையில் இந்த தேசிய விழா அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு 250 வது வருடம் அதனால்  கூடுதல் சிறப்பு. அதைப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகனால். விழாவில்  எடுத்த படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.

வியாழன், 9 ஜூலை, 2026

களக்கோட்டீஸ்வரர் சாஸ்தா துணை




ஜூன் மாதம் 11 ஆம் தேதி  மகன் குடும்பத்தோடு குலதெய்வம் கோயில் போய் வந்தேன்.
அங்கு எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்கும் என் சேமிப்பாகவும் இந்த பதிவில்  இடம் பெறுகிறது.

புதன், 24 ஜூன், 2026

வீரபாண்டிய கட்டபொம்மன் மணி மண்டபம்.



தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில்  உள்ளது இந்த  மணிமண்டபம்

ஜூன் 11 ஆம் தேதி எங்கள் குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்தோடு  போய்விட்டு திரும்பும் போது   இந்த மணிமண்டபத்தை பார்த்து வந்தோம்.  அங்கு எடுத்த படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.  பேரன் கட்டபொம்மன்  வரலாறை படித்து  மிகவும் ரசித்துப்பார்த்தான்.


 பாஞ்சாலங்குறிச்சியை ஆட்சி செய்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன்,

பாஞ்சாலங்க்குறிச்சியை ஆட்சி செய்த வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்களை  எதிர்த்துப் போரிட்டார் . இந்த வரலாறும் அவர் கதையை படமாக எடுக்கப்பட்டு அதில் சிவாஜிகணேசன் அவர்கள் நடித்ததும் அனைவரும் அறிவார்கள்.


 

 1799- ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி கட்டப்பொம்மன் தூக்கிலிடபட்டார். அந்த இடத்தில் இந்த மணிமண்டபத்தை அமைத்து இருக்கிறார்கள்.


வாசலுக்கு வெளியே இடது பக்கம் சிவலிங்கம் வைக்கப்பட்டு சுப்பையா தேவர்  என்று வருடம் எல்லாம் எழுதி இருக்கிறது. விளக்கு மாடம் இருக்கிறது, அவரின் சமாதி போல் இருக்கிறது.



வீரபாண்டிய  கட்டபொம்மனின் குலதெய்வம் ஜக்கம்மா
வீரபாண்டிய படத்தில் வரும் பாடல் நினைவுக்கு வருகிறதா?



கேட்டுப்பாருங்கள் நன்றாக இருக்கும்.


ஜக்கம்மா



சிறு முயல் நாயை துரத்துவதை கண்டு "வீரம் மிகுந்த நிலம் " என்று பாராட்டி கட்டபொம்மன் அந்த இடத்தில் தன் கோட்டையை அமைத்தார்




மண்டபத்தின் நடுவே கம்பீரமாக சிவாஜி கணேசன் சாயலோடு  கம்பீரமான தோற்றத்தில் 7.25  அடி உயரமுள்ள கட்டபொம்மனின் சிலை நிறுவப்பட்டுள்ளது.  மாடி ஏறி போய் அங்கு இருந்து சிலையை பார்த்து வந்தார்கள். நான் படியேறி போய் பார்க்கவில்லை அங்கு இருக்கும் பணியாளர் படங்களை பார்த்து  வரலாறை சொல்லி சுற்றி காண்பித்தார். வருகை பதிவேட்டில் நம் கையெழுத்தை வாங்கி கொண்டார்.




வரலட்சுமி அவர்களின்   குரலில் மனதை கனிய வைக்கும் பாட்டு திருச்செந்தூர் முருகனை  வழிபாடு செய்யும் பாடல் பாட்டின் முடிவில் போர் செய்தியை கொண்டு வரும் வீரன்



 கனல் பறக்கும் பேச்சு  நினைவுக்கு வந்து இருக்குமே!








கட்டபொம்மனை தூக்கிலிட்ட புளியமரம் பட்டு போய் விட்டது அந்த இடத்தை சிவாஜி கணேசன் அவர்கள்  விலைக்கு வாங்கி 1970 ஆம் ஆண்டு   நினைவு தூண் அமைத்தார் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு .

அதன் பின்னர் அரசிடம் ஒப்படைத்து விட்டார். மணிமண்டபம் 2015 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் ஆட்சி  காலத்தில்  மணிமண்டபம் அமைக்கப்பட்டது.

புதிதாக கட்டப்பட்டபோது நான்  என் கணவருடன் திருநெல்வேலிக்கு ஒரு திருமணத்திற்கு போன போது  வழியில் இறங்கி இந்த மணிமண்டபத்தை  பார்த்தோம் , அப்போது கட்டப்பபொம்மன் சிலையும், ஒரு படமும் மட்டும் இருந்தது மற்ற படங்கள் சென்னையிலிருந்து சிறிது நாளில் வரும் என்றார்.
அந்த படம்  சிறு முயல் ஒன்று நாயை துரத்தி செல்வதை பார்த்து "வீர மிகுந்த நிலம்"   என்று சொல்லி  தன் பாஞ்சாலங்க்குறிச்சி கோட்டையை அந்த இடத்தில் கட்டினார் என்ற படம்.

பாஞ்சாலங்க்குறிச்சி கோட்டையைப்பார்த்து படம் எடுத்து பதிவு போட்ட நினைவு இருக்கு தேடினால் கிடைக்கவில்லை. 4வது படிக்கும் போது  பள்ளியில் அழைத்து சென்ற சுற்றுலா பாஞ்சாலங்க்குறிச்சியும், கயத்தாறும். என் அம்மாவும், அத்தையும் என்னுடன்  சுற்றுலாவில் கலந்து கொண்டது பற்றி எல்லாம் பகிர்ந்து இருந்தேன்.

இந்த தடவை பாஞ்சாலங்க்குறிச்சி போக நேரமில்லை. அது கொஞ்சம் தள்ளி போக வேண்டும். கருணாநிதி அவர்கள் ஆட்சி  காலத்தில் கட்டப்பட்டது.  இங்கு இருக்கும் ஜக்கம்மா கோயிலில் உள்ள பூசாரியுடம் நான் சிறு வயதில் பள்ளிச்சுற்றுலாவில்  வந்து இருக்கிறேன் என்று  சொன்னதும் அவர்  நினைவை பாராட்டினார்.




மணிமண்டபத்தை சுற்றிப்பார்த்து விட்டு  வந்து  உள்ளேயே சற்று தள்ளி இருக்கும் கட்டபொம்மன் தினைவு தூணை பார்க்க போவதற்குள் மழை  வந்து விட்டது. என்னால் வேகமாக நடக்க முடியாத காரணத்தால் சிறு தூறல் சமயம் காரில் ஏற சொல்லி விட்டார்கள். நான் காரிலிருந்து எடுத்த படம்.

குழந்தைகள் விளையாட சிறு பார்க் அமைத்து இருக்கிறார்கள்  தூணை சுற்றி.


நன்றி - கூகுள்



மதுரை பெரியார் பேரூந்து நிலையம் அருகில்  உள்ள கட்டபொம்மன் சிலை 

நன்றி - கூகுள்


நன்றி - கூகுள்



கயத்தாறிலிருந்து திருநெல்வேலி போகும் வழி எல்லாம் இந்த காற்றாலைகளை பார்க்கலாம்.  



வழி எல்லாம் நல்ல மழைதான்.

முதன் முதலில் நடக்க தொடங்கும் குழந்தை போல  தளர் நடை நடக்கிறேன். நீங்கள் போய் வாருங்கள் நான் வீட்டில் இருக்கிறேன் என்றாலும் கேட்காமல் வீல் சேர் வாங்கி வந்துவிட்டான் மகன்  அதில் என்னை வைத்து பல இடங்களுக்கு கூட்டி சென்றார்கள்.  படங்கள் எல்லாம் நான் உடகார்ந்து கொண்டு எடுத்தது.   

இன்னும் பதிவுகள் வரும் வெகு நாட்கள் ஆகி விட்டதால் ஒரு சிறிய பதிவு. 

வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-----------------------------------------------------------------------------------------------------------------------