வியாழன், 5 மார்ச், 2026

வரசித்தி விநாயகர்



எங்கள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள விநாயகருக்கு  புதிதாக செய்யப்பட்ட  செப்பு கவசம்.  ஜனவரி 25  ஆம் தேதி   சாற்றப்பட்டு  சிறப்பு  பூஜை செய்யப்பட்டது. அந்த படங்கள் இதில் இடம்பெருகிறது இந்த பதிவில்..
நாளை  சங்கடஹர சதுர்த்தி அதனால் இந்த பகிர்வு.

தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் நன்கு தேர்வு எழுத பிரார்த்தனைகள்.

செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

மறை பொருளான தெய்வமே நான்




ரோஜா பதிவை படிக்க வரும் அனைவருக்கும்  மலர் கொத்து கொடுத்து  வரவேற்கிறேன்.

ரோஜா எந்த நிறந்தில் இருந்தாலும் அழகானதுதான், அதன் மணம் எந்த அளவில் இருந்தாலும் அது இறைவனின் அன்பை ஏந்தி வருவது.
- அன்னை அரவிந்தர் 

மலர்களில் ராஜா  என்று பாராட்டப்படும் மனம் கவர்ந்த  ரோஜா பூக்களின் படங்கள் இந்த பதிவில். மலரே மலரே நீயார் ?  என்று மலரிடம் கேட்டதற்கு மலர்  சொல்லும் பதிலும் இருக்கிறது பதிவில்.

புதன், 18 பிப்ரவரி, 2026

பிராத்தனை பலித்தது, இறைவன் காப்பாற்றினார்


ஜன்னலில் குடித்தனம் நடத்தும் புறா பறவைகள்


குடியிருப்பில் புறாக்கள் அதிகமாகி விட்டது  அவற்றை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

திங்கள், 16 பிப்ரவரி, 2026

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி


என் கணவர் வரைந்த ஓவியம். (கணினி ஓவியம்)


சிவராத்திரி  பூஜை நல்லபடியாக  நிறைவு பெற்றது.

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

திங்கள், 26 ஜனவரி, 2026

குடியரசு தின விழா வாழ்த்துகள்.





இந்த 77 வது  குடியரசு தின  அணிவகுப்பு விழா எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும்  மகிழ்ச்சியை தந்தது. புது தில்லியில்  கர்த்தவ்ய பாதையில் (முன்னாள் ராஜ பாதை)   குடியரசுத் தலைவர் முன்னிலையில் நடைபெறும் அணிவகுப்பு   விழாவில் என் பேத்தியும் கலந்து கொண்டு வந்தேமாதரம்பாடலுக்கு ஆடியது  மிகவும் மகிழ்ச்சியை தந்தது.

புது தில்லியின் கர்த்தய பாதையில் (முன்னாள் ராஜபாதை)

  நடைபெறும்

முன்பு என் அண்ணனின் மகளும் ஒரு வருடம் அணிவகுப்பில் கலந்து கொண்டாள் அப்போதும்  எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தோம்.

ஒவ்வொரு ஆண்டும்  வீட்டிலிருந்து தொலைக்காட்சியில் அலங்கார ஊர்திகளையும் , கம்பீரமான துருப்புகளின் அணிவகுப்பையும் கண்டு களிப்போம். 

இந்த முறை பேத்தியும் கலந்து கொண்டதுமட்டற்ற மகிழ்ச்சி.