என் பதிவுகள் சிலவற்றுக்கு என் கணவர் ஓவியம் வரைந்து தந்தார். அதை பார்த்தவர்கள் பாராட்டினார்கள். அதுவும் எங்கள் Blog ஸ்ரீராம் , என் கணவர் வரையும் ஓவியத்தை பாராட்டி விட்டு அடுத்த பதிவில் சார் படம் இல்லை என்றால் ஏன் வரையவில்லை சார்? என்று கேட்பார். நான் சாரிடம் உங்கள் ஓவியத்தை காணோம் என்று உங்கள் ரசிகர் ஸ்ரீராம் கேட்கிறார் என்று சொல்வது உண்டு.
கழுகுமலை
ஜல்லிகட்டு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-kG05ASVHTqEC2l_3T6uQDwAGqh4H0Zvrrn2ZsH14HiTJfx_X2vcWTP5_IVC0WbDAj8Dg8j7RKruvrC9K9N6QnsiGu_0AChUM-sct5tT-d6H4Q5BuPII8GNzhFaLwNDubYUWI7rErvoo/s400/mattuppongal+new.JPG)
மாட்டுப் பொங்கல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh98a2DtNiR_-o3coiq1J_TZ58B5aMyBzah50vE0FYa_84qJVELWxnWhsOVGr-re7u0MzsdaNpasB2c1wN2NdzupLGv1rdDhKuEDHpvtY2nVxAzKb5B0iOlAVWBMwxh_V762mOo_uu7D9Q/s400/http-__makeagif.com_media_2-14-2013_I6JbFg.gif)
மின்சாரமே ! மின்சாரமே!!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCBlhy7XY_gx1y0HoXgWYFpocAXZn3l0AS-v1v0HA0561alyveSaJdOKMJSysOLljFc_Pq7kj_aLUsNqGqEu_T4lhV9Dn2vuf6BPRiXQPwnv1IUGrJcGKbtInU86zYJmoPJVYlKCee1PQ/s400/cleanig.JPG)
பொங்கலோ பொங்கல் -- பாகம் - 2
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFyjG346-cOMBCWtTqNAWw507GXT6L5gs5Ch15TJTAocWsRJ1K2S5iI_eM8Q8SJNv8nJOGfIHlpaxKDSfQdC4tp3HHw-TWWv5uCerg4X0XympwCSJ2ZjZpbzz0RKduwiczh4-hs-sUK_g/s400/blog+watch.bmp)
டிக் டிக் கடிகாரம் அன்பை கூறும் கடிகாரம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZWphRKPwMZ2LVkK-XgqYtRH7Jq3nU_vMGbJs3ukxX9VeD8SQ78XklrJz-fIGb7UK43D4xj61f8vr-g4j_1ZKIY3oo1UgA58giHZe7euXEVbAqjrf8w8vJDbdgLpEWjrLFFrOWgeG0_hI/s1600/computer+learning.bmp)
இளமையின் ரகசியம் - தீராக்கற்றல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPVAjPBNBT5Gg81HZItqkAIjvLZUkmJ2Hy1eOkxIN_5DfhYX4yg_CbIFJnZQjIVbtI44JPFKjl3MBu64Z3ssgutUZyXafU4KnCwuCHNF3RI_hiUfG748QEb796ELFIDwkT6IIaljaL1ac/s320/urulaikkizangu2000.jpg)
ஆஹா உருளை !
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZDO20qOLnmlQimi_mLPm7zMfe1R_cb-Z0cQse3u1pFlX0rIA5Hs8FCE8lt33WBc0D0VBgokVLygEiyUl-waaO3QP7EWtBq_WcWyire6uybr2GNZEdS2tX39KKOF1WO_J6o-Y1BF2nWYY/s1600/RAILADY+2+001.JPG)
சிக்குபுக்கு ரயிலே ரயிலே!
![KUMKUM school](https://kungumamthozhi.files.wordpress.com/2014/11/kumkum-school.jpg?w=936&h=504)
![home](https://kungumamthozhi.files.wordpress.com/2014/11/home.jpg?w=1023&h=549)
ஸ்ரீராம் கேட்டுக் கொண்டதால் என் கணவரின் படங்கள் இங்கு பகிர பட்டு இருக்கிறது. ஸ்ரீராமுக்கு நன்றி.
வாழ்க வளமுடன்.
எழுத்துப்பணி நிறைய இருந்ததால் அவர்களால் வரைந்து தர முடியவில்லை. சமீபத்தில் மதுரை வந்து இருந்த போது எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். ஸ்ரீராம் ஸ்ரீராம் மனைவி, ஸ்ரீராம் அண்ணா மூவரும் வந்து இருந்தார்கள். ஸ்ரீராம் வலைத்தளத்தின் மூலம் பழக்கம், ஆனால் அவர் மனைவியும் அண்ணாவையும் அன்றுதான் பார்த்தேன் வெகு நாள் பழகியது போல் நன்றாக பேசினார்கள். மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
அவர்கள் இரண்டு மூன்று இடங்களுக்கு செல்லவேண்டியது இருந்ததால் சந்திப்பு வெகு சீக்கீரத்தில் முடிந்து விட்டது. குறுகியகால இடைவெளியிலும் சாரை படம் வரைய சொல்லி வேண்டுகோள்விடுத்து சென்றார் ஸ்ரீராம்..அடுத்த பதிவுக்கு வரைந்து தருவதாய் சொல்லி இருக்கிறார்கள். ஸ்ரீராம் வேண்டுகோள்படி .
ஸ்ரீராம் எனக்கு அப்பாவின் இரண்டு புத்தங்களை பரிசாய் அளித்தார்கள். ” இவனும் அவனும்” என்ற சிறுகதை தொகுப்பும், ”தூறல்கள் ” என்ற புத்தகமும் .
இன்னும் முழுதாய் படிக்கவில்லை விருந்தினர் வருகை, உறவினர் மணிவிழா என்று நேரம் சரியாகி விட்டது.
ஸ்ரீராம் அப்பா அவர்களைப்பற்றி துளசிதரன் அவர்கள் எழுதிய பதிவு ஒன்றில் தெரிந்து கொண்டேன். கதை எழுதுவார்கள் என்றும் தன் மனைவி மேல் உள்ள பிரியத்தில் அவர்கள் பெயருடன் தன் பெயரை இணைத்து ஹேமலதா பாலசுப்ரமணியம் என்ற பெயரில் எழுதி வந்தார்கள் என்று அறிந்து கொண்டேன்.
தூறல்கள் புத்தகத்திற்கு திரு. திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் அளித்துள்ள அணிந்துரையில் மேலும் தெரிந்து கொண்டேன்.
தூறல்களீல் எனக்கு பிடித்த , எல்லோருக்கும் பிடித்த வானத்தைப்பற்றி சொல்லி இருப்பது எனக்கு மிகவும் பிடித்தது. படித்துப்பாருங்களேன்.
டல் அடிக்கும் போதும் மனச்சோர்வின் போதும் வானத்தை நிமிர்ந்து பார்த்தால் போதும் என்கிறார். நமக்கு வானத்தைப் பார்ப்பது பிடிப்பது போல் வானத்திற்கும் நம்மிடம் பேசப் பிடிக்கிறதாம், காத்து இருக்கிறதாம்.
எனக்கு சிறு வயதில் இருந்தே வானத்தைப் பார்ப்பது பிடிக்கும். மேகங்கள் செய்யும் ஜாலங்கள் அற்புதமாய் இருக்கும். நமக்கு தெரிந்த கற்பனை காட்சிகள் மற்றவர்களுக்கும் தெரிகிறதா என்று கேட்டு அவர்களுக்கும் அது தெரிந்தால் குழந்தையின் குதுகலம் நம்மைத் தொற்றிக் கொள்ளும் . காட்சி மட்டும் தான் நாம் கண்டோம் பாலசுப்பிரமணியம் சார் அது பேசுவதையும் கேட்கச் சொல்கிறார். பேசுவதைவிடக் கேட்பது நல்லது என்கிறார். வானத்தை பார்ப்பதையும், வானம் பேசுவதையும் கேட்டால் அலுப்பு போயே போச்சு.
அப்புறம் என்ன! உலகம் பிறந்தது எனக்காக என்று பாடத் தொடங்கி விடுவோம் பாலசுப்பிரமணியம் சார் சொல்வது போல்.
தூறல்கள் புத்தகம் விலை 40 ரூபாய்.
இவனும் அவனும் சிறுகதை தொகுப்புக்கு அணிந்துரை திரு. கர்ணன் அளித்து இருக்கிறார். ஜீவி சார் புத்தகத்தில் (ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா வரை) குறிப்பிட்டுள்ள பல ஆசிரியர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து இருக்கிறார் திரு. ஹேமலதாபாலசுப்பிரமணியன் அவர்கள்.
//கும்பகோணத்தில் மணிக்கொடி எழுத்தாளர்கள் கு.பா ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, -கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், தி. ஜானகிராமன் மற்றும் பல எழுத்தாளர்கள் வாழ்ந்த காலத்தில் , உடன் வாழ்ந்தவர். ஹேமலதா பாலசுப்பிரமணியன் அப்போது சிறுவயது.இவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரார் கு.ப. ரா. கு .ப. ரா மனைவியும் பாலசுப்பிரமணியம் மனைவி ஹேமலதாவும் நெருங்கிய சினேகிதிகள் //
என்று குறிப்பிடுகிறார். கர்ணன் அவர்கள்.
இவனும் அவனும் சிறுகதைத் தொகுப்பில் 25 கதைகள் இருக்கிறது. அதில் 12 ஆவது கதையான .”நாலணா” கதையில் ஆரம்பத்தில் வரும் வாக்கியம் இது. மாதக்கடைசியைப் பற்றி சொல்கிறார் :- //அப்படி ஒன்றும் கடைசியுமல்ல . தேதி இருபதுதான். ஆனாலும் என்ன? ஏழுதேதிவரை கையும், பையும் குலுங்கும். அதன் பின் மனம் மட்டும் குலுங்கும் -இது ஒரு வாழக்கை// என்று .//
கலைவாணர் முதல்தேதி படத்தில் பாடுவாரே தேதி ஒன்னிலே இருந்து 20 வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம், தேதி 21லிருந்து திண்டாட்டம், திண்டாட்டம். பாடல் நினைவுக்கு வருது.
13 ஆவது கதை - எனக்குப் பிடிச்ச பூ ! என்ற கதையில்
இரு பெண்கள் பேசிக் கொள்வது.
உங்களுக்கு என்ன பூ பிடிக்கும்?”
“எனக்கு ரோஜா பிடிக்கும், மல்லிகை பிடிக்கும் ரெண்டும் ரொம்ப கிராக்கி கெடைக்கிறதே இல்லை.”
உங்களுக்கு?
வாழைப்பூ
சமைக்கிறதுக்குக் கேக்கலே...:
நானும் அதைச் சொல்லலே... புடிக்கிறது எதுவா இருந்தா என்ன? கெடைக்கிறது அது இல்லியே ... கெடைக்கிற்தையே புடிக்கிறதாக்கிக்கிறதுதான் நல்லது, இல்லியா! எனக்கு கிடைக்கிறது வாழைப்பூதான்.!”
ஏன் வாழைப்பூவும் நல்லது தானே - உடம்புக்கு ரொம்ப நல்லதும்பாங்க!:
வாழைப்பூவை கவனிச்சிருக்கீங்களா கீழே மட்டும்தான் விரிஞ்சிருக்கும் ....மேலே முகம் கூப்பி குறுகி இருக்கும். மத்த பூ மாதிரி அதுக்குச் சிரிக்கவே தெரியாது //
இப்படி பேசி முடித்தவுடன் சிரிக்கிறார்கள். இருவரும் உரக்கச் சிரிக்கிறார்கள் மனம் லேசாகி விட்டதாய்ச் சொல்லிக் கொள்கிறார்கள்.
நிறைய பெண்கள் தங்களுக்குப் பிடிக்காத வாழ்க்கையை பிடித்ததாய் ஆக்கி க்கொண்டு வாழ்வதைச் சொல்கிறது கதை.
படித்த இரண்டு கதையும் எனக்குப் பிடித்து இருக்கிறது. மற்ற கதைகளை நிதானமாய் ப்படிக்க வேண்டும்.
திருமதி ஹேமலதா பாலசுப்பிரமணியன் அவர்கள் பெயரில் அறப்பணிச்சேவைகள் எப்படி உருவானது அதனால் யார் யார் பயனடைகிறார்கள் என்று பாருங்கள்.
ஸ்ரீராமின் தாயார் தன் சேமிப்பைக் கொடுத்து இருக்கிறார்கள். ஸ்ரீராமின் அப்பா தன் ஓய்வூதியத்தில் 50 சதவீதம் கொடுக்கிறார், அது ஒரு பெரிய செயல் நல்ல செயல். ஸ்ரீராம் அப்பா வணக்கத்துக்குரியவர். மருத்துவத்துறையில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவரது படைப்புகள் 1950 முதல் 1980 வரை பல்வேறு பத்திரிக்கைகளில் வந்து இருக்கிறதாம்.அவற்றிலிருந்து தொகுக்கப்பட்டதுதான் ”இவனும் அவனும் ” சிறுகதைத் தொகுப்பு.
இவனும் அவனும் - புத்தகம் கிடைக்குமிடம் மணிவாசகர் நூலகம். விலை 90 ரூபாய்.
நல்ல பெற்றோர்கள் பெற்ற மகன் நல்லவைகளை பதிவிடுகிறார் . ஒவ்வொரு சனிக்கிழமையும் பாஸிட்டிவ் செய்திகளை தொகுத்து வழங்குவார்.
* * *
பல பதிவுகளுக்கு என் கணவர் வரைந்த ஓவியங்கள்
பாலீதீன் மறுசுழற்சி
அபிராமி பட்டர் கதை
கோவிலில் லட்சதீபம் ஏற்றுதல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiH5lqmyZzFUUvjsj-ZI9-EZggBRIEijX5yA8lODZe8w2heXf3auDqqO3u_VZMF5_jUiTURJ204o4-Ggyxms-cI-ZzKgRsNVYacOXnSCn8LemcPhpZeLvs2GI8rGT-fVB6pp7vbA15Kx_o/s1600/2lamplady_01.jpg)
இலட்சதீபம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi56B85ihHOBEWXjVJHT5Pxh1DnvYw6SCkh0D06Oz3GVX32uiuOyWAOwEN2VFdYyEKnFCdC2N53ifRWWnj1wGkxPDScfVx25s2m79R39fJQQk-UnsaISXvDhd43DaiNQf0sMB2hFN8p_nQ/s400/Lamplady_01(1).jpg)
கழுகுமலை வெட்டுவான் கோவில்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRrW7f2BtVceJ-ygoGaSgk4dv8x4mA7IgA0it_0iE5gLWeE6T7Ciowq0NzL5IXd8RS1rrj6JmTQSTHrkhBhN88iat_eiz7rNt2BYH02In5X_1RXrqXKeJYraUaxDawiqmAjHS-ZV8W_ac/s1600/myphoto+(3).gif)
கழுகுமலை
ஜல்லிகட்டு
மாட்டுப் பொங்கல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh98a2DtNiR_-o3coiq1J_TZ58B5aMyBzah50vE0FYa_84qJVELWxnWhsOVGr-re7u0MzsdaNpasB2c1wN2NdzupLGv1rdDhKuEDHpvtY2nVxAzKb5B0iOlAVWBMwxh_V762mOo_uu7D9Q/s400/http-__makeagif.com_media_2-14-2013_I6JbFg.gif)
மின்சாரமே ! மின்சாரமே!!
பொங்கலோ பொங்கல் -- பாகம் - 2
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFyjG346-cOMBCWtTqNAWw507GXT6L5gs5Ch15TJTAocWsRJ1K2S5iI_eM8Q8SJNv8nJOGfIHlpaxKDSfQdC4tp3HHw-TWWv5uCerg4X0XympwCSJ2ZjZpbzz0RKduwiczh4-hs-sUK_g/s400/blog+watch.bmp)
டிக் டிக் கடிகாரம் அன்பை கூறும் கடிகாரம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZWphRKPwMZ2LVkK-XgqYtRH7Jq3nU_vMGbJs3ukxX9VeD8SQ78XklrJz-fIGb7UK43D4xj61f8vr-g4j_1ZKIY3oo1UgA58giHZe7euXEVbAqjrf8w8vJDbdgLpEWjrLFFrOWgeG0_hI/s1600/computer+learning.bmp)
இளமையின் ரகசியம் - தீராக்கற்றல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPVAjPBNBT5Gg81HZItqkAIjvLZUkmJ2Hy1eOkxIN_5DfhYX4yg_CbIFJnZQjIVbtI44JPFKjl3MBu64Z3ssgutUZyXafU4KnCwuCHNF3RI_hiUfG748QEb796ELFIDwkT6IIaljaL1ac/s320/urulaikkizangu2000.jpg)
ஆஹா உருளை !
சிக்குபுக்கு ரயிலே ரயிலே!
![KUMKUM school](https://kungumamthozhi.files.wordpress.com/2014/11/kumkum-school.jpg?w=936&h=504)
![home](https://kungumamthozhi.files.wordpress.com/2014/11/home.jpg?w=1023&h=549)
ஸ்ரீராம் கேட்டுக் கொண்டதால் என் கணவரின் படங்கள் இங்கு பகிர பட்டு இருக்கிறது. ஸ்ரீராமுக்கு நன்றி.
வாழ்க வளமுடன்.