வெள்ளி, 31 ஜூலை, 2020

வரமருளும் அன்னை



                                                            
                                                          
                                       எங்கள் வீட்டில் இன்று காலை வழிபாடு வரலக்ஷ்மிக்கு
வரலக்ஷ்மி விரதம் இருக்கும் வழக்கம் எங்களுக்கு இல்லை, ஆனால் வெள்ளிக் கிழமை லட்சுமி வழிபாடு உண்டு

திங்கள், 27 ஜூலை, 2020

தம்பிரான் தோழர்


இன்று சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை. சேரமான் நாயனார் குருபூஜை.
கயிலாயத்தில் ஆலாலசுந்தரர் எனவும், பூவுலகில் வாழ்ந்த போது ஆளுடைநம்பி, ஆரூரர், வன்றொண்டர் எனவும் அழைக்கப்பட்டவர் சுந்தரர்.
சிவபெருமானால் தம்பிரான்தோழர் எனவும் சிறப்பிக்கப் பட்டார். 
தோழமையுடன் இறைவனை அணுகியவர். உரிமையுடன் அனைத்தையும் வேண்டிப்பெற்றவர்.

சுந்தரர்  வெள்ளை யானையில்,  சேரமான்  நாயனார் குதிரையில் கயிலை சென்ற காட்சி.


யூடியூப்பில் தெரிய வில்லை என்றால்  இந்த சுட்டியைப் பயன்படுத்திப் பாடலைக் கேட்கலாம்.

மாமா அவர்கள் இளமையாக இருக்கும்போது பாடிப் பதிவு செய்து வைத்துக் கொள்ளாதது ஒரு பெரிய வருத்தம் எல்லோருக்கும். வயதான பின் ஒலி நாடாவில் பதிந்த பாடல்களை இப்போது என் கணவரின்  தம்பி யூடியூப் பதிவாக பதிவு செய்து வருகிறார்கள். 

சுந்தரர்  பற்றிய வரலாறை சகோ திரு. துரைசெல்வராஜூ அவர்கள் அவர்களுக்கே உரிய அழகான எழுத்து நடையில்  அருமையாக எழுதி இருக்கிறார்கள்.


மூன்று நாட்கள் இந்த பயிலரங்கத்தில் கலந்து கொண்டேன்.

சுந்தரர் குருபூஜையை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சி.


சுந்தரர் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அவர் பாடல்களில்  இசைக்கருவிகள் இடம்பெற்ற பாடல்களைப் பாடினார். அவை இங்கே-

முதலில் இருப்பவர் கலைமாமணி  முனைவர் சுரேஷ்சிவன் அவர்கள் அவர்தான் தேவார ஆசிரியர். இரண்டாவது  படத்தில் இருக்கும் முனைவர் யாழ் சந்திரா அவர்கள் தியாகராஜர் கல்லூரியில் பேராசிரியாராக இருப்பவர்கள் அவர்கள் வாழ்த்துரையுடன் நிகழச்சி ஆரம்பம் ஆனது.

முழவு எனும் மிருதங்க வாத்தியம் பற்றி  மிருதங்க வித்வான் தியாகராஜன்  அவர்கள் பேசினார்கள். மிருதங்க வாத்தியக் கருவியின் படிப்படியான வளர்ச்சி.எந்த மரங்களில் செய்யப்படுகிறது என்று எல்லாம் சொன்னார்கள். இப்போது பலாமரத்தில்தான் அதிகம் செய்யப்படுகிறதாம்.

மிருதங்கம் பற்றி நிறைய நூல்கள் எழுதி இருக்கிறார்கள் என்றும், 30 ஆண்டுகளாய் மதுரையில் நிறைய மிருதங்கம் வாசிக்கும் மாணவர்களைத் தயார் செய்து இருப்பதாகச் சொன்னார்கள்.










இந்த குடமுழா வாத்தியத்தை பிரம்மா வாசிப்பது போல் உள்ள சிற்பம் மீனாட்சி அம்மன் கோவிலில் கொடிமரத்திற்கு பின்புறம் உள்ள தூணில் இருந்தது முன்பு எடுத்தேன் அந்தப் படத்தைத் தேட வேண்டும்.




காலுக்குக் கீழ்  நின்று வாசிக்கிறார் பாருங்கள்.
மணக்குடிக் கோவிலுக்கு திருவாதிரைக்குப் போய் இருந்தோம்,மாயவரத்தில் இருக்கும்போது. மாயவரத்திலிருந்து 6 கி.மீ  தூரத்தில் இருக்கும் கோவில். அந்த கோவிலில் நடராஜர் காலுக்கு அடியில்  குடமுழா வாத்தியத்தை ஒருவர் வாசிப்பார் . இந்த கோவில் பதிவு போட்டு இருக்கிறேன். தேட வேண் டும்.

நான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பாடப்பட்ட சுந்தரர் தேவாரத்தை இங்கு பகிர்ந்து இருக்கிறேன். தேவாரம்  பாட  விருப்பம் இருந்தால் அவர் போன் நம்பருக்கு போன் செய்து இணைந்து கொள்ளலாம். புதன் கிழமைதோறும் சொல்லித் தருகிறார். 

மூன்று நாளும் நன்றாக இருந்தது. நிறைய அன்பர்கள் கலந்து கொண்டார்கள். ஞாயிறு காலை அண்ணாமலை ரெட்டியார் அவர்களின்  காவடி சிந்து  பாடல்கள் காலை 10 மணி முதல் 12 மணி வரை நடந்தது. 

சுரேஷ்சிவன் அவர்கள் பல வருடமாய் இலவசமாக தேவாரம் கற்றுக் கொடுக்கிறார், தேவாரத்தலங்களுக்குத் தன்னிடம் பயில்பவர்களை அழைத்து சென்று அங்கு தேவாரங்களைப் பாட வைக்கிறார். என் தங்கைகள், என் அண்ணி எல்லாம் கலந்து கொள்கிறார்கள்.

சான்றிதழல்  கிடைத்து இருக்கிறது  மகிழ்ச்சி  அளிக்கிறது.

வீட்டில் அடைந்து கிடக்கும் இந்த நாளில் இறைவனைப்பற்றிச் சிந்திக்கவும், அவன் புகழைப் பாடவும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. இறைவனுக்கு நன்றி. சுரேஷ்சிவன் அவர்களுக்கு நன்றி.

சுந்தரர் குருபூஜையில் சுந்தரர்தேவார பாடல்கள், என் மாமனார் அவர்கள் பாடிய சுந்தரர் தேவாரம் பகிர்ந்து கொண்டேன்.

இன்னொரு குழுவிலும் சேர்ந்து இருக்கிறேன். திங்கள், புதன், வியாழக்கிழமைகளில் பாடுதல் உண்டு அதில் திருமதி. கோடீஸ்வரி  அவர்கள் (85 வயது)  தேவாரம், திருவாசகம், திருவருட்பா, திருப்புகழ், மற்றும் தனிப் பாடல்கள் எல்லாம் ஒரு மணி நேரம் சொல்லித் தருகிறார். அவர்கள் கோவையில் இருக்கிறார்கள், என் மாமனார் இறந்தபோது வந்து திருவாசகம் படித்தார்கள்.  என் மாமாவின் பெயரைச்சொல்லி அவர்கள் மருமகள் அம்மா என்று போனில் அறிமுகப்படுத்திக் கொண்டபோது மகிழ்ந்து போனார்கள். வீடியோ கிடையாது. லேண்ட் லைனில் என்னை இணைத்து இருக்கிறார்கள்.

இன்று மாலை சுந்தரர் தேவாரம் படித்தோம். நிறைய பாடல்களைச் சொல்லித் தந்தார்கள். 85 வயதுக்கு மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் எண்ணம்  மிக உயர்ந்தது. அதுவும் மகிழ்வாய் சிரித்துச் சிரித்து, பாடல் இடம்பெற்ற ஊர், பாடல் பாடப்பெற்ற காரணம், பாடினால் கிடைக்கும் நன்மைகள் அனைத்தையும் சொல்கிறார்கள். 

 என் மாமனார் அவர்கள் 80 வயது வரை கற்றுக் கொடுத்தார்கள், பாடசாலை சென்று . அப்புறம் சிறிது காலம் வீட்டுக்கு அருகில் இருக்கும் அருள் விநாயகர் கோவிலில் சொல்லிக் கொடுத்தார்கள்.


அவன் அருளால் அவன் தாள் வணங்கி மகிழ்வோம்.



                                                    வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் !


==========================================================================


சனி, 11 ஜூலை, 2020

ஹொரநாடு அன்னபூரணேஸ்வரி



கர்நாடகாவின் சிக்மகளூர் மாவட்டத்தில்  அமைந்து இருக்கிறது அன்னபூரணி கோவில்; மேற்கு தொடர்ச்சி மலை அருகில் பத்ரா நதிக்கரையில்  இருப்பதால் இயற்கை எழிலோடு அமைந்து இருக்கும் கோவில். 

நிறைய கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மலைப்பாதை. வரும் வழி எல்லாம் இயற்கை எழில் நம்மை மெய் மறக்கச் செய்யும்.

மழைக்காலத்தில் விடாது மழை பெய்யும்போது முன்பெல்லாம் பயணம் செய்வது மிகவும் கஷ்டமாம் . இப்போது பாதை நன்றாக  இருக்கிறது. 

ஞாயிறு, 5 ஜூலை, 2020

சிருங்கேரி சாரதாம்பாள் கோயில் - நிறைவுப் பகுதி

அடுத்த பதிவில் ஆற்றுக்கு அக்கரையில் இருக்கும்  'குரு நிவாஸ்' . மிக அழகாய் பாக்குமரமும், அதைச் சுற்றி மிளகுக்கொடி  படர்ந்து இருப்பதைப் பார்த்துக் கொண்டே  போகலாம்.   பல மரங்களும்  சூழ்ந்து இருக்கும் இடத்தில் அமைந்து இருக்கிறது "குருநிவாஸ்" என்ற பெயரில்  அழகிய பிரம்மாண்ட கட்டிடம். அங்கே ஜகத்குரு சங்கராச்சாரிய பாரதிதீர்த்தசுவாமிகளைப் பார்க்கப்  போகலாம் என்று சொன்னேன் .

இந்தக் கதவு திறந்தால்தான் அக்கரையில் இருக்கும் குருவைப்பார்க்கப் போக முடியும்.  மாலை திறக்கும் வரை காத்து இருந்தோம். மாலை 3.30க்கோ 4.30க்கோ திறந்தது.(சரியாக நினைவு இல்லை) கதவு திறந்து விட்டது, வாங்க! போகும் வழியின் அழகைப் பார்த்துக் கொண்டு செல்வோம்.