புதன், 30 ஜனவரி, 2019

குருவிக்குஞ்சு பாடிய வாழ்த்துரை

Image may contain: bird


No photo description available.
//கதவு இடுக்கு வழியாக அலைபேசியில் எடுத்த படம்..//

கதவு நாதாங்கி, குருவி, சாதம் -- இந்த மூன்றையும் இணைத்து யாராவது கவிதை ஒன்று எழுத முன்வருவார்களா?..

திங்கள், 28 ஜனவரி, 2019

கூட்டைவிட்டுப் பறக்க ஆசை

Image may contain: bird
பயந்து போய் மூலையில் ஒதுங்கி

இன்று கூட்டைவிட்டு அவசரமாய்ப் பறந்த குருவிக் குஞ்சு எங்கள் வீட்டுப் பால்கனியில் விழுந்து விட்டது. இன்னும் இரண்டு நாள் உணவைச் சாப்பிட்டால் தெம்பு வந்து பறக்கலாம். அதற்குள் பறக்க ஆசை.

வெள்ளி, 25 ஜனவரி, 2019

செல்லக்குட்டிகள்




அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள்   பள்ளி முடிந்து வீட்டுக்குப் போகும் வேளையில்  வழியில் இருந்த செல்லக்குட்டியுடன் விளையாட்டு.

வியாழன், 24 ஜனவரி, 2019

ஜன்னல் வழியே




காக்கையின் குறும்பு


காக்கைக் குஞ்சு துணியைப் பிடித்து இழுத்து விளையாடுகிறதா? அல்லது கோபமா ?தெரியவில்லை.
கன்றுக் குட்டி துணிகளைக் கடிக்கும் அது போல் இதுவும் செய்கிறதா என்று தெரியவில்லை.

அந்த ஸ்கர்ட் அதற்குப் பிடித்து இருக்கு






காகங்களை எடுத்த படங்களைப் போடலாம் என்று சேர்த்து வைத்து இருந்தேன்.
Image may contain: bird, table and outdoor

புல் புல் பறவை
Image may contain: bird, table and outdoor

Image may contain: bird and outdoor


அவசரப்பட்டு பப்ளிஷ் ஆகி விட்டது.

வாழ்க வளமுடன்.


திங்கள், 21 ஜனவரி, 2019

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

இன்று தைப் பூசம் எல்லோரும் பதிவு போடுகிறார்கள் முருகனை நினைந்து.


நான் ஜனவரி 1ம் தேதி பழமுதிர்சோலை போய் வந்தேன்.  அங்கு எடுத்த படங்களை இந்தப் பதிவில்  போட்டு மனத் திருப்தி அடைகிறேன்.


எதிர்ப் பக்கம் போனால் நன்றாக எடுக்கலாம் கோபுரத்தை ஆனால் கோபுர வாசலில் வரிசையில் நின்று இருந்தேன். உள்ளே செல்ல . அங்கு இருந்தே எடுத்த படம்.


ஞாயிறு, 20 ஜனவரி, 2019

குண்டடம் வடுகநாதசுவாமி திருக்கோயில்

  அருள்மிகு காலபைரவ வடுகநாதர்

கோவை போய்விட்டு வரும்போது( 30.12.18 ) குண்டடம் என்ற ஊரில் உள்ள வடுகநாதசுவாமி கோவில் போனோம். 

இந்த ஊர்,பல்லடத்திலிருந்து  28 கி.மீ தூரத்திலும் தாராபுரத்திலிருந்து  16 கி.மீ தூரத்திலும் இருக்கிறது. மகாபாரத காலத்திலேயே குண்டடம் ஊர் சிறப்பு பெற்றது என்கிறார்கள். தாராபுரத்திற்கு முன்பு உள்ள பேர் விராடபுரம்.

இந்தக் கோவிலில் உள்ள ஸ்ரீகாலபைரவ வடுகநாத சுவாமி மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும்,காசி சென்று காலபைரவசுவாமியை வணங்க முடியாதவர்கள் இவரை வணங்கினால் போதும் என்றும் சொல்கிறார்கள்.
இந்தக் கோவிலில் இருக்கும் இறைவனின் பெயர் விடங்கீஸ்வரர். விடங்கர் என்ற முனிவர் இங்கு தவம் இருந்த காரணத்தால் இங்குள்ள ஈசனுக்கு விடங்கீஸ்வரர் என்று பெயர்.அம்பாள் விசாலாட்சி.  தலவிருட்சம் இலந்தைமரம்.

ஞாயிறு, 13 ஜனவரி, 2019

பொங்கல் வாழ்த்துக்கள்


பொங்கலோ பொங்கல்
மாயவரத்தில் மாடி ஏறும் இடத்தில் உள்ள வாசல் திண்ணையில் போட்ட கோலம்.

மாயவரத்தில் பொங்கல் கொண்டாடிய நினைவு படங்கள் சில பகிர்வு இந்த பதிவில்.