வெள்ளி, 23 நவம்பர், 2018

அண்ணாமலைக்கு அரோகரா!

விழா நாயகர் லிங்கோத்பவர்

திருவண்ணாமலை ஆலயத்தில் கருவறை கோஷ்டத்தில் மூலவருக்கு நேர் பின்புறத்தில் மேற்கு திசை நோக்கி லிங்கோத்பவர் இருப்பதைக் காணலாம். இந்த லிங்கோத்பவர், மும்மூர்த்திகளின் அருளையும் ஒரே திருவுருவில் வழங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம்.

அக்னிஜுவாலை சொரூபமாகிய இறைவனை வழிபடும் நாள் கார்த்திகைத் தீபத்திருநாள்.  ஐசுவரியம், வீரம், தேஜஸ், செல்வம், ஞானம், வைராக்கியம் எனும்    ஆறுகுணங்களும்   ஆறுமுகங்களாய்  கார்த்திகைப்  பெண்களால்  வளர்க்கப்பட்ட முருகப் பெருமானை வணங்கும் நாளும் இந் நாளே.  கார்த்திகை நட்சத்திரத்தில் சரவணனை விரதமிருந்து  வணங்குவோர் நலம் பல பெற்று நற்கதி அடைவார்கள் என்று கந்த புராணம் சொல்கிறது.

திங்கள், 19 நவம்பர், 2018

புதன், 14 நவம்பர், 2018

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்



மகன் இந்த முறை நவராத்திரிக்கு  சூரசம்ஹார காட்சி அமைத்து இருந்தான்.
கந்தன் கருணையில் வரும் காட்சியை    முருகனும், சூரனையும்  பொம்மலாட்ட காட்சி போல் அமைத்து இருந்தான்.   நவீன பொம்மலாட்டம். கொலுவிற்கு வந்த குழந்தைகள் , பெரியவர்கள் ரசித்தனர். நீங்களும்
பார்த்து விட்டு எப்படி என்று சொல்லுங்கள்.

செவ்வாய், 13 நவம்பர், 2018

கந்தவேள் முருகனுக்கு அரோகரா! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!



கந்த சஷ்டி நாட்களில் முருகனைச் சிந்தித்து வருகிறோம்.  இன்று 6 வது நாள் .

முருகனுக்கு உகந்த செவ்வாய்க் கிழமை சூரசம்ஹாரம் நடைபெறுவது சிறப்பு.

காலம் காலமாய் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் யுத்தம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. முடிவில் நல்லது வெற்றிபெறும். தீயவை அழியும் என்பது நீதி.  அதுதான் கந்த சஷ்டி விழா நமக்கு உணர்த்தும் பாடம்.
சிவபக்தனாக இருந்தாலும் ஆணவத்தால் பாலகன் என்று ஏளனம் புரிந்து அவரை எதிர்த்து யுத்தம் புரிந்து, உடல் பிளவுபட்டு ஒரு பாதி சேவலாகவும், மறுபாதி மயிலாகவும் மாறினாலும் முருகனை எதிர்த்து போர் புரிந்தான், அவைகள் மீது திருநோக்கம் செய்து சாந்தப்படுத்தித் தஞ்சம் அடைய வைத்துச் சினம் கொண்ட சேவலையும், செருக்குற்ற மயிலையும் தன்னிடம் பற்றுக் கொண்ட ஞானியாக மாற்றினார் முருகன்.

பகைவனுக்கும் அருளிய கருணை வள்ளல். சேவலைத் தேரில் கொடியாகவும், மயிலை வாகனமாகவும் வைத்துக் கொண்டார்.


திங்கள், 12 நவம்பர், 2018

வருவான் முருகன் தருவான் அருளை

முருகன் வருகைப் பாடல் :-
பொன்னே வருக பொன்னரைஞாண் பூட்டவருக சிறுசதங்கை
புனைய வருக மணிப்பதக்கம் பூணவருக தவழ்ந்தோடி
முன்னே வருக செவிலியர்கண் முகத்தோடணைத்துச் சீராட்டி
முத்தமிடற்கு வருக எதிர் மொழிகண் மழலை சொல வருக
தன்னெறில்லா நுதற்றிலகந் தரிக்க வருக விழியினல்மை
சாத்தவருக மேலாகத் தானே வருக தேவர் தொழு
மன்னே வருக மாமாலின் மருகா வருக வருகவே
வளஞ்சேர் பழனிச்  சிவகிரி வாழ் வடிவேல் முருகா வருகவே.

கந்த சஷ்டி நாளில் முருகனைச் சிந்தித்து வருகிறோம்.  இன்று 5 வது நாள்
இந்தப் பதிவில் இரண்டு பாடல்களைக் கேட்போம். இரண்டும் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் தருவதற்கும் போகும் பாதையை நன்னெறிப் படுத்தவும்- இறைவன் வழிபாடு. கந்தன் அன்பும் கருணையும்  இந்த இருபாடலில் விளக்கமாய் இருக்கிறது, எது உண்மைப் பொருள் எது நிரந்தரமானது எல்லாம் இந்தப் பாடலில் விளக்கமாய் இருக்கிறது.

ஞாயிறு, 11 நவம்பர், 2018

முருகனைச் சிந்திப்போம்- 4



கந்த சஷ்டி நாளில் முருகனைச் சிந்தித்து வருகிறோம்.  இன்று நான்காவது நாள்  முருகனுக்கு உகந்த காவடிச் சிந்து பாடல்களைக் கேட்கலாம்  இந்த பதிவில்.

அண்ணாமலை ரெட்டியார் (1865 - 1891) காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்படுபவர். நினைத்த மாத்திரத்தில் எந்தப் பொருளைப்பற்றியும் சிறப்பாக உடனேயே பாடக்கூடிய வல்லமை பெற்றவர். தமிழில் மிகச் சிக்கலான பாடல்களையும்கூடப் பாடிச் சாதனை புரிந்தவர்.
அண்ணாமலை ரெட்டியார் திருநெல்வேலி மாவட்டம் சங்கரநயினார் கோயில் ஊரை அடுத்துள்ள சென்னிக்குளத்தில் பிறந்தார். காவடிச் சிந்து, வீரைத் தலபுராணம், வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம், கோமதி அந்தாதி ஆகியவற்றை இயற்றினார். ஊற்றுமலை ஜமீன்தார் இருதயாலய மருதப்ப தேவரால் ஆதரிக்கப்பட்டவர்.
- விக்கிப்பீடியா
                                      
                                              பாடியவர் சுதா ரகுநாதன்

சனி, 10 நவம்பர், 2018

முருகனைச் சிந்திப்போம் -3


கந்த சஷ்டி நாட்களில் முருகனைச் சிந்தித்து வருகிறோம்.  இன்று மருதமலை முருகையா பாடலை ரேடியோ சிட்டியில் வைத்தார்கள். மதுரை சோமு அவர்களின் குரலும், பாடல் வரிகளும், குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசையும் எல்லாம் சேர்ந்து கேட்கும் போது கண்ணில் நீர்துளிர்க்க வைக்கும் பாடல்.

இந்தப் பாடலைத்தான் இன்று  பகிர எண்ணி இருந்தேன். கீதா அவர்களின் பதிவு அதைக் கண்டிப்பாய் போட வேண்டும் எண்ணத்தை வளர்த்து விட்டது. ஸ்ரீராமுக்கு நன்றி சொல்ல வேண்டும்.  அவர் வியாழன் எழுதிய பதிவு நிறைய பேரை எழுத ஊக்கப்படுத்துகிறது. நன்றி ஸ்ரீராம், நன்றி கீதா.

வெள்ளி, 9 நவம்பர், 2018

முருகனைச் சிந்திப்போம் - 2

மண் ஆனாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் - டி,எம் .எஸ் அவர்கள் பாடல்.

இன்று கந்த சஷ்டி இரண்டாவது நாள். என்ன எழுதலாம் என்று சிந்தித்துக் கொண்டு இருக்கும்போது காலை ரேடியோ சிட்டியில்  இந்தப் பாடலையும் வைத்து சஷ்டி கவசம் இயற்றப்பட்ட வரலாறு சொன்னார்கள். இந்தப் பாடல் எனக்குப் பிடித்த பாடல். உங்களுக்கும் பிடிக்கும்.

வியாழன், 8 நவம்பர், 2018

முருகனைச் சிந்திப்போம்



திருவேடகம் செல்லும் பாதையில்  இருந்த கோவில்


முருகனுக்கு உகந்த விரதங்கள் மூன்று. வாரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் செவ்வாய்க் கிழமை விரதம்,  நட்சத்திரத்தை வைத்து கடைப்பிடிக்க வேண்டிய விரதம் கார்த்திகை விரதம், திதியை வைத்து கடைப்பிடிக்கப்படுவது சஷ்டி விரதம்.

முருகனுக்கு உகந்த விழா கந்தசஷ்டி விழாவாகும்.  சூரபன்மனைச்  சம்ஹாரம் செய்த வைபவத்தைக் கொண்டாடுவது கந்தசஷ்டி விழா.

இன்று கந்த சஷ்டி தொடக்க நாள்.  கந்தன் பெருமைகளை, பாடல்களைப் பாடி விரதம் இருப்பார்கள். தீபாவளி பலகாரங்கள் சாப்பிட்டு முடிக்கும் முன்னே சஷ்டி விழா வந்து விடும். 

தீபாவளி பலகாரங்களை மறந்து மன வைராக்கியத்தோடு  கந்தனை நினைத்து வேண்டும் வரங்களைத் தரச்சொல்லி விரதம் இருப்பார்கள்.
ஆறு நாளும் மூன்று வேளையும் சாப்பிடாமல் விரதம் இருப்பவர்கள் சிலர். ஒரு வேளை உணவு எடுத்துக் கொள்பவர்கள்  உண்டு, அவர்கள் காலையும், மாலையும் பால் பழம் எடுத்துக் கொள்வார்கள். ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு. சூரசம்காரம் அன்று முழுவது உணவு அருந்தாமல், மறுநாள் விரதத்தைப் பூர்த்தி செய்வார்கள். ஆறு நாளும் சாப்பிடாமல் முருகன் கோவிலில் தங்கி விரதம் இருப்போரும் உண்டு.

செவ்வாய், 6 நவம்பர், 2018

சில நினைவுகள்

தீபாவளி நினைவுகள் - அத்தை மாமா அவர்களின் நினைவுகள் தீபாவளி நாளான இன்று  மனதை நிறைத்து இருந்தது. தீபாவளி பண்டிகைக்கு ஊருக்குப்போய் அத்தை மாமாவுடன் கொண்டாடுவது இதுவரை வழக்கம். இப்போது அவர்கள் இல்லாததால் ஊருக்குப் போகாமல் இருப்பது  மனதுக்கு வேதனை அளிக்கும் விஷயம். இம்முறை நான்கு தினங்கள் விடுமுறை .எல்லோரும் உறவுகளுடன் பன்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்து இருப்பீர்கள். நானும் கொஞ்சம் என் நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

காலை இந்த பஜ்ஜி, வடை, சுசியம், இட்லி  இவைகளை அவர்கள் கையால் செய்தால் தான் ஆனந்தம். மதியம் நாங்கள் சமைப்போம் , அவர்கள் ஒய்வு எடுத்துக் கொள்வார்கள் மகன்களுடன்  உரையாடி. 

இந்த நினைவுகளை தொகுப்பாய் மகன் எங்கள் குடும்ப வாட்சப் குழுவில் அனுப்பி மகிழ்ந்தான். நான் இதை இங்கு உங்களுடன் பகிர்கிறேன்.