மார்ட்டின் லூதர் கிங் தேசிய பூங்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை
அட்லாண்டாவில் உள்ள மார்டின் லூதர் கிங் தேசிய பூங்கா . முந்தின பதிவின் தொடர்ச்சி. மேலும் சில தேசிய பூங்கா படங்கள். இந்த பதிவில் இடம்பெறுகிறது.
காந்தியின் சிலை இருக்கும் மேடையில் மார்டின் லூதர் கிங் காந்தியை பற்றி சொன்ன வாசகமும், காந்தியின் கை ராட்டையும் இடம் பெற்று இருக்கிறது.
கருப்பு காந்தி
மார்ட்டின் லூதர் தர் கிங் வாழ்க்கை வரலாறு இணையத்தில் படித்தேன் அவை:-
//டென்னசியில் 1968 - ஆம் ஆண்டு ஏப்ரல் 4- ஆம் நாள் மாலை வெள்ளையினத் தீவிரவாதி மார்டின் லூதர் கிங்கை துப்பாகியால் சுட்டான். அப்போது அவர் வயது 39. அவர் மறைவிற்கு உலக மக்கள் அனைவரும் அஞ்சலி செய்து அவரை கருப்பு காந்தி என்று அழைத்தார்கள்.
மரணத்திற்கு தயாராகும் போதும் அவர் நம்பிக்கையிழக்கவில்லை. "அவரது உரை முழுக்க விரவியிருக்கும் கருத்து: " நாம் பெருமைகொள்ள நிறைய இருக்கிறது" என்பதுதான். "நான் இறந்தாலும் , நல்ல வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு அருகில் நம்மை இட்டுச்செல்ல என்னால் முடிந்ததை செய்திருக்கிறேன்."//
சரித்திரம் படைத்த நல்ல மனிதர் வாழ்க!
வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.
==========================================================