சனி, 24 ஜனவரி, 2015

அருள்மிகு குக்கி சுப்பிரமணியர் திருக்கோவில்



நாங்கள் திருவருள் துணையுடன்  அண்மையில் மங்களூர் -தர்மஸ்தலம்- சுப்பிரமணியா- தங்க அன்னபூரணி- கடில் கனகதுர்க்கா.- சிருங்கேரி- மூகாம்பிகை - கோகர்ணம்- முருடேஸ்வர் - உடுப்பி என 6 நாட்கள் திருப்பயணம் செய்தோம்.

என் கணவர் பல வருடங்களாய் பாடல் பெற்ற சிவத்தலங்கள் பார்த்து வருகிறார்கள். அதில் அவர்கள் பார்க்க வேண்டிய இன்னும் இரண்டு தலங்கள் தான். அதில் ஒன்று கோகர்ணம் என்பதால் தான் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது.

ஈரோடு ரயில் நிலையத்தில் எங்களை அழைத்துச் செல்ல மனோகர் டிராவல்ஸ் கைடு   ராஜா அவர்கள்  வந்து இருந்தார்,  எங்களுடன் மேலும் இருவர் ஈரோட்டிலிருந்து வந்தார்கள். நாங்கள் ஐவரும்  ஈரோட்டிலிருந்து மாலை 5 மணிக்கு  வெஸ்ட்கோஸ்ட் ரயிலில் மங்களூர் புறப்பட்டோம்.  திருப்பூரில் 11 பேர் , கோவையில் நான்கு பேர்  சேர்ந்து கொண்டார்கள்  சென்னையிலிருந்து ஒருவர் ஆக 21 பேர்  ஆன்மீகச் சுற்றுலாவிற்கு ரயிலில் பயணித்தோம். காலை மூன்று மணிக்கு போய் சேர்ந்தோம் மங்களூர். அங்கு எங்களைத் தங்கும் விடுதிக்கு அழைத்துச்செல்ல   21 பேர் அமரும் மினி பஸ் ஏற்பாடு செய்து இருந்தது . அதில் ஏறி விடுதிக்கு வந்து சற்று ஓய்வு எடுத்தோம்.
இப்படி சுடவைக்கப்பட்ட தண்ணீர் வெந்நீராக குழாய் மூலம் அறைகளுக்கு  வருகிறது. எல்லா ஓட்டல்களிலும் இப்படித்தான்  வெந்நீர் தயார் ஆகிறது. 
என் கணவரும், எங்களை அழைத்துச் சென்ற கைடு திரு. ராஜாவும்
தங்கும் விடுதி வாசலில் மலர்ந்த ரோஜா



பாக்கு மரங்கள் சூழ  நாங்கள் தங்கி இருந்த விடுதி


சுப்பிரமணியாகோவில் போகும் வழியில் தர்மஸ்தலாவில் உள்ள மணிக் கூண்டு

ஓட்டலில் போய் காலை உணவை முடித்துக் கொண்டு  சுப்பிரமணியா கோவில் தரிசனம் செய்ய சென்றோம். கர்நாடக மாநிலத்தில் குக்கி சுப்பிரமணியா கோவில் மிக சிறப்பு வாய்ந்தது. ஐந்து தலை நாகருடன் சுப்பிரமணியர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்; இங்கு கால பைரவர் இருக்கிறார். ராகு, கேது தோஷநிவர்த்தி தலம் என்கிறார்கள்.
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் மதியம் 1.30 வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை.



              தேருக்குப் பின் புறம் தெரியும் கட்டிடம் தான் அன்னதானக் கூடம்.
                                        கோவிலின் முகப்புத் தோற்றம்.
கோவில் வாசலில்  அழகிய தேர்கள் இருந்தன.  வரிசையில் காத்திருந்து முருகனை வணங்கினோம். நம்மை கோகி , கோகி என்று விரட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.   வணங்கி வந்த பின்  எல்லோருக்கும் உணவு உண்டு.  கூட்டம், வரிசை அதற்கும். நாங்கள் அங்கு சாப்பிடவில்லை.  ஓட்டலில் தயிர் சாதம் சாப்பிட்டோம்.

 நாக தோஷநிவர்த்தி கோவில் ,பிள்ளைப்பேறு வேண்டுவோர்க்கு வரமளிக்கும் சுவாமி. 

சகல பிரார்த்தனைகளும் நிறைவேறக் கட்டணம் கட்டி வழிபடுவோர்களுக்கே பிரசாதங்கள். மற்றவர்கள் பார்த்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும்.

தேங்காய், கல்கண்டு பிரசாதம்
                                          மூட்டை மூட்டையாகத் தேங்காய்கள்
                             குமாரதாரா நதியும், ஆதி சுப்பிரமணியா கோவிலும். 

ஆதி சுப்பிரமணியா என்று இந்த பெரிய கோவிலின் அருகில் குமாரதாரா எனும் நதி ஓடிக் கொண்டு இருக்க, அதன் அருகில் அழகான கேரள பாணியில் கோவில் இருக்கிற்து. கோவிலின் உட்பிரகாரத்தில்  ஒரு அழகிய கிணறு இருக்கிறது. கிணற்றைச் சுற்றி சுவர் எழுப்பி அதில் அழகான ஓவியங்கள் வரைந்து இருக்கிறார்கள்.


ஆதி சுப்பிரமணியா கோவில் வாசலில் இப்படி அறிவிப்பு பலகை வைத்து இருக்கிறார்கள்.

தலவரலாறு:-
சுப்பிரமணியருக்கு வாசுகி எனும் ஐந்து தலைப் பாம்பு  குடை பிடித்து இருப்பதற்கு சொல்லப்படும் கதை:- 
காசியப முனிவரின் மனைவிகளான  கத்ரு, வினதா ஆகிய இருவரும் குதிரைகளைப் பற்றிய சர்ச்சையில் ஈடுபட , யார் கருத்து சரியானதோ அவர் வெற்றிபெற்றவர் என்றும்,  தோற்பவர் வெற்றிபெற்றவருக்கு அடிமையாக இருக்கவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. அப்படி தோற்று  அடிமையான கத்ருவின் குழந்தைகளான  நாகங்களுக்கு, வினதாவின் பிள்ளையாகிய கருடனால் தொந்திரவு ஏற்பட்டது,  அதனால் வருந்திய  பாம்புகள் வாசுகி என்ற பாம்பின் தலைமையில்  குமாரதாரா நதியின் அருகில் இருந்த குகையில் தங்கி. சிவபெருமானிடம்  தங்களைக் காக்கும்படி வேண்டின.   சிவபெருமான் அவர்களுக்கு காட்சி அளித்து  மகன் சுப்பிரமணியம் உங்களை காப்பாற்றுவார் என்று சொன்னார், நாகங்கள் குமராதாரா நதியில் நீராடி  சுப்பிரமணியரை வழிபட, பாம்புகளை  அவர் காப்பாற்றியதால் நன்றிக் கடனாக  வாசுகி என்ற ஐந்து தலைப் பாம்பு அவருக்குக் குடைவிரித்து இருக்கிறது. 

நாங்கள் போன போது தங்க கவசத்தில் ஐந்து தலைப் பாம்பும், முருகனும் தந்த அழகான காட்சி கண்டு மகிழ்ந்தோம்.
            கோவிலுக்கு வந்த பக்தர்களை  ஆசீர்வதிக்கும் கோவில் யானை
இது போல் தான் உள்ளே சுப்பிரமணியா இருப்பார்.

வாழக வளமுடன்.
----------------

புதன், 21 ஜனவரி, 2015

திருநாங்கூர் கருட சேவை -ஜனவரி 2015



அண்ணன் கோவில் (திருவெள்ளக்குளம்)
அண்ணன் கோவிலில் கருடாழ்வார் கிளம்புகிறார் நாராயணபெருமாள் கோவிலுக்கு
                                                                     மாதவப் பெருமாள்

                                           
மாதவப்பெருமாள் கோவில்              
                                         ஸ்ரீ வண்புருஷோத்தமப் பெருமாள் கோவில்
ஸ்ரீவண்புருஷோத்தமர்
                                                                     ஸ்ரீ  ராமானுஜர்

ஸ்ரீவண்புருஷோத்தமர் பின் அலங்காரம்







முன் அலங்காரம்
பின் அலங்காரம்

                                                            வைகுந்தநாதப் பெருமாள்

                                                             


                           குமுதவல்லியும்  திருமங்கையாழ்வாரும்

பஜனை பாடும் பெரியவர்களும் தாளத்திற்கு ஏற்ற மாதிரி ஆடும் சிறுவனும்
மணிமாடக் கோவில் நாராயணபெருமாள் கோவில்
கருடசேவை  திருவிழாக் கடைகள்
11 பெருமாள் குடைகள்
                                                            வாழ்க வளமுடன்.
                                                               ===============

சனி, 17 ஜனவரி, 2015

கீழச் சூரிய மூலை அருள்மிகு சூரிய கோடீஸ்வரர் ஆலயம்

பொங்கல் திருநாள் அன்று (15/01/2015) நாங்கள் கீழச்சூரிய மூலை என்ற ஊரில் உள்ள அருள்மிகு சூரிய கோடீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று இருந்தோம்.,
இக் கோயில் கும்பகோணத்தில் இருந்து 15.கி.மீ தொலைவில் உள்ளது. சூரியனார் கோவிலுக்கு அருகே கஞ்சனூர், திருலோகி கிராமங்களை அடுத்து இவ்வூர் அமைந்துள்ளது.

கீழச்சூரிய மூலை என்றகிராமத்தில் அருள்மிகு பவளக்கொடி அம்பிகை சமேத ஸ்ரீ சூரிய கோடீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.




 தன் வாழ்நாளெல்லாம் தமிழுக்கே தம்மை அர்ப்பணித்துக் கொண்டவரும் , ஓலைச்சுவடிகளிலிருந்து சங்க நூல்களையும் , காப்பியங்களையும் நூலாக அச்சிலேற்றி தமிழ் உலகுக்குத் தந்தவருமாகிய, தமிழ்த் தாத்தா டாக்டர் .உ.வே. சாமிநாதய்யர் பிறந்த ஊர் ,கீழச் சூரிய மூலையாகும். கோவிலில்  அவரின் ஓவியம் வரைந்து வைத்து இருக்கிறார்கள். அவர் வீடு இருந்த தெருவே இப்போது இல்லையாம்.

கீழச்சூரிய மூலைகோவிலின் சிறப்பு :--

கருவறையில் ஈச்வர லிங்கத்திற்கு மேல் ஓராயிரத்திற்கு மேலான “ஏகமுக”
ருத்திராட்சத்தினால் ஆன பந்தல் உள்ளது.
                அருள்மிகு  சூரிய கோடீஸ்வரர்                    
அருள்மிகு பவளக்கொடி அம்பிகை 
ஸ்வாமிக்கு நேரே  மண்டபத்தில் நந்தி இருக்கிறார்.

இங்குள்ள மூலவரை , காலை முதல் மாலைவரை சூரிய பகவான் தன் பொன்கதிர்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். அதற்கேற்ப சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை  மூலவரின் நிழல் சுவரில் தெரியுமாம். குருக்கள் கண்ணாடி வைத்து சூரிய ஒளியைக் காட்டினார். 


பிரதோஷ காலத்தில் சூரியன் இறைவனைத் தரிசிக்க அருள்புரிந்த ஸ்ரீ காலபைரவர்  மிகவும் விஷேசமானவர்.  இவர் சொர்ணபைரவர் என்று அழைக்கப்படுகிறார்.
இந்த பைரவருக்கு  தீபாராதனை காட்டும் போது அவரது கண்டத்தில் சிறிதாக  பவளமணி அளவில் சிவப்பு ஒளி வெளிப்படுகிறது. அது தீபாராதனையின் போது மெல்ல அசைவது போல் இருக்கும். இதைக் குருக்கள்  விவரித்து தீபாராதனை செய்து காட்டினார்.

இந்த பைரவரின் கண்டப்பகுதி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுவதும், பின் பழைய நிலையை அடைவதும் இததலத்தின் சிறப்பு. இத் தலத்தின் பைரவரை தரிசனம் செய்தால் பக்தர்களின் கண்டம் நீங்குமாம்.

பைரவரின் கழுத்தில் தெரியும் பவளமணியின் ஏழு ஒளிக் கிரணங்களின் மூலம் அனைத்து கோடி சூரிய , சந்திர மூர்த்திகளின் ஒளிக் கிரணங்களால் ஏற்படும் தோஷங்களையும் , பிணிகளையும் நிவர்த்தி செய்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாம்.

தெற்கு கோஷ்டத்தில் ஆனந்த தட்சிணாமூர்த்தி புன்னைகைத்த நிலையில் காட்சி தருகிறார். இவருக்கு மேலே உள்ள சர்ப்பத்தின் ஒரு தலையில் ஆஞ்சநேயரின் முகம் தெரிகிறது
இங்கு உள்ள துர்க்கைக்கு ஒரு பாதத்தில் மட்டும் மெட்டி உள்ளது. தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களை அம்மன் வலது காலை முன் வைத்து எழுந்து வரவேற்கிறாளாம்.


கோயிலைச்சுற்றி வந்தபின் தான் குருக்கள் சொன்னார் துர்க்கையின் சிறப்பை .முன்பே சொல்லி இருந்தால் கால் விரலை குளோசப்பில் எடுத்து இருக்கலாம்.
வெளிப்பிரகாரத்தில் பிள்ளையார், வள்ளி தெய்வானையுடன் முருகன், 






சுந்தர மஹாலக்ஷ்மி
சண்டேஸ்வரரின் கால் பகுதியில் சூரியஒளி

நவக்கிரகங்கள் தங்கள் வாகனத்துடன் இருக்கிறார்கள்








மேலும்  கோவிலின் சிறப்புகள்   ;-

ஸ்ரீ யாக்ஞவல்கியருடைய வேதமந்திர சக்திகளெல்லாம் ஸ்ரீ சூர்ய கோடீஸ்வரருடைய திருவடிகளிலே ஓர் அற்புத விருட்சமாய் மலர்ந்த
இலுப்பை  மரம்தான் இக்கோவிலின் தலவிருட்சமாகும்.

சூரிய தோஷம் , மனசஞ்சலம் உள்ளவர்கள் இங்குள்ள இறைவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்குமாம்.

பார்வைக்குறைகள், பலவிதமான கண் நோய் உடையவர்கள் பிரதோஷவழிபாட்டையும், ஞாயிற்றுக்கிழமை காலை 6-7 சூரிய ஹோரை நேரத்தில் பூஜையையும் செய்தால் கண்  நோய்களிலிருந்து தீர்வு பெறலாம் என்றும், அன்னதானம் செய்தால் நம் முன்னோர்களுக்கு நாம் செய்த பாவங்களும் அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகும் என்றும் குருக்கள் கூறினார்.

சுக்கிராச்சாரியார் தான் இழந்த கண்பார்வையை திரும்பவும் பெற, ஆதித்யஹ்ருதய  மந்திர ஹோம பூஜைகளைச் செய்த ஸ்தலம் இது.

ஸ்ரீராமர் தசரதருக்கு  ஈமக்கடன்களை ஆற்ற இயலாமற் போனதால் அதனால் ஏற்பட்ட தோஷம் நீங்க 108 புனித விருட்சங்களின்  கீழ் ஸ்ரீராமர் தர்ப்பணம் செய்தார். அப்படி இலும்பை மரத்துக்கு கீழ் செய்த தலம் கீழச்சூரிய மூலையாகும்.

 இத்தலத்தில் பித்ரு தர்ப்பணம் செய்வதால் பித்ரு சாப நிவர்த்தி கிடைக்கும்.
இக்கோவிலில் ஆதித்ய ஹ்ருதய மந்திரங்களை ஓதி வழிபட்டால் சாந்தமும், மனநிம்மதியும் கிடைக்கும்  என்று தலவரலாறு கூறுகிறது என்று சொன்னார் குருக்கள்.

கும்பகோனத்திலிருந்து  திருலோகி செல்லும் டவுன் பஸ் 38ல்  கோவிலுக்கு செல்லலாம். ஆடுதுறை, திருப்பனந்தாளிலிருந்து ஆட்டோ, கார் வசதிகள் உண்டு. அம்பிகா சர்க்கரை ஆலையிலிருந்து 2கி.மீ வடக்கே உள்ளது.

                                                           வாழ்க வளமுடன்

                                      =================================