ரயில் பயணத்தில் கண்ட காட்சிகளை இங்கு பதிவாக. என் சேமிப்பிலிருந்து. போகிற போக்கில் எடுத்தாலும் கிடைத்த காட்சி பிடித்து இருக்கிறது எனக்கு, உங்களுக்கும் பிடிக்கும்.
ரயிலில் எனக்கு ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்டு கடந்து போகும் காட்சிகளை காண்பது மிகவும் பிடித்தமானது, தூரத்தில் தெரியும் கோபுரம், மலைகள், ஏரிகள், வயல்கள், மாடுகள், ஆடுகள், பறவைகள், காலைச் சூரியன், மாலைச் சூரியன் கூடு செல்லும் பறவைகள், மரங்கள், செடி, கொடிகள் என்று இயற்கையை ரசித்துக் கொண்டே பயணம் செய்ய பிடிக்கும். முன்பு கண்களுக்குள் சிறை பிடித்தேன்
இப்போது அலை பேசி, காமிரா என்று சிறைபிடித்து பார்த்து மகிழ்ந்து கொள்கிறேன்.