சனி, 29 செப்டம்பர், 2018

காட்சி தந்த பெருமாள்


கன்னடிய பெருமாள்  திருக்கோவில் பழனியிலிருந்து தெற்குத் திசையில் கொடைக்கானல் செல்லும் பாதையில் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.மக்கள் அதிகம் செல்லாத சிறு திருக்கோவில்.இக் கோவில் ஒரு பெரிய பாறையின் மீது உள்ளது. இதைச் சிறு குன்று என்றும் சொல்லலாம்.

திருவிளையாடல் சினிமாவில் பார்வதி சிவன் விளையாடிய விளையாட்டை,
கோபித்துக் கொண்டு வந்த முருகனுக்குச் சொல்வார் , அதன் பின் முருகனைச் சமாதானம் செய்து அழைத்துப்  போவார். போகும் முன்  இனி
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பார் என்பார். அப்படிப் புகழ் பெற்ற பழனியில்  மாமன்   பெருமாளும்  இருக்கிறார்.அந்த இடம் தான் கன்னடிய பெருமாள் கோவில்

முற்காலத்தில் இத் திருக் கோவிலை அடையாளம் கண்டு செல்வது கடினமாக இருந்ததாம். பழனியிலிருந்து கொடைக்கானலுக்குச் சாலை வசதி செய்யப்பட்ட பின் இப்போது எளிதாகி விட்டது.கொடைக்கானல் செல்லும் பேருந்தில் ஏறி ஆசிரமம் என்னும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஆசிரமத்திற்கு எதிர்த் திசையில் ஒரு கிலோமீட்டர் மண் சாலையில் செல்ல வேண்டும்.வழியில் பாலம் இல்லாத ஓடையைக் கடக்க வேண்டும்.கார்,ஆட்டோவிலும் செல்லலாம்.மழைக்காலங்களில் செல்வது கடினம். ஓடையில் தண்ணீர் போகும் .
நாங்கள் ஆட்டோவில் சென்றோம்.கோவிலைச் சுற்றிலும் வயல்களும் நீர் நிலைகளும் காட்டுப் பகுதிகளும் அமைந்து அழகாகவும் அமைதியாகவும் இருக்கிறது.அருகில் எந்த ஊரும் கிடையாது.கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு வீடும் கிடையாது.

சனி, 22 செப்டம்பர், 2018

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கெருடசேவை

செளராஷ்டிர மக்கள் கட்டிய அழகிய கோவில்   ஸ்ரீ பிரசன்ன வெங்டேச பெருமாள்  கோவில்

நான் அடிக்கடி போகும் காளகத்தீஸ்வரர் கோவிலில் (இந்த கோவிலும் இவர்களது கோவில் தான்) ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில்  சனிக்கிழமை காலையில் கருடசேவை நடக்கும் என்று   நோட்டிஸ் ஒட்டி இருந்தார்கள்.  தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில்  இருக்கிறது இந்த கோவில். இந்த கோவிலை பார்த்தது இல்லை. அதனால்  இன்று காலை ஆட்டோக்காரரிடம் இந்த இடத்தையும்  கோவில் பேரையும் சொல்லி போக சொன்னால் நீங்கள் சொல்வது கூடல் நகர் பெருமாள் என்று சாதித்தார், இல்லை செளராஷ்டிர மக்களுக்கு சொந்தமான தனிக் கோவில் என்றவுடன் தேடிக் கொண்டுபோய் விட்டார்.  

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

கூடல் அழகர் தரிசனம்

அஷ்டாங்க விமானம்

மங்களா சாஸனம் :-
திருமங்கை யாழ்வார்
திருமழிசையாழ்வார்

//கோழியும் கூடலும்கோயில்கொண்டகோவலரேஒப்பர், குன்றமன்ன
பாழியந்தோளும் ஓர் நான்குடையர் பண்டு இவர்தம்மையும் கண்டறியோம்
வாழியரோ இவர் வண்ணம்  எண்ணில் மாகடல் போன்றுளர்,கையில்வெய்ய
ஆழியொன்றேந்தி ஓர் சங்குபற்றி அச்சோ ஒரு வரழகியவா!//
--திருமங்கையாழ்வார்.

அழைப்பான் திருவேங்கடத்தானைக்காண
இழைப்பான் திருக்கூடல்கூட- மழைப்பே
ரகுவிமணி வரன்றிவந்திழிய யானை
வெருவியரவொடுங்கும்வெற்பு.
-- திருமழிசையாழ்வார்.


ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

பெருமாள் தரிசனம்.

அருள்மிகு கூடல் நகர் திருக்கோயில்
நாங்கள் உள்ளே போகும்போது பந்தல் போட ஆரம்பித்தார்கள்.

வியாழன், 13 செப்டம்பர், 2018

பிள்ளையார் பிள்ளையார் !

மனிதர்களுக்குப் பிறந்தநாள் கொண்டாடுவது பிறந்த நட்சத்திரம் வைத்து. கடவுளர்களுக்குத் திதியை வைத்து.  ஆவணி சதுர்த்தி -பிள்ளையார் பிறந்த நாள். இப்படி இன்று காலையில் தொலைக்காட்சியில் 'இன்று நாள் எப்படி' என்று சொல்பவர் சொன்னார். பிள்ளையார் பிறந்தநாள் மிகச் சிறப்பாய்க்  கோலாகலமாய்க் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.  

.
பாதையோரம் இரட்டைப் பிள்ளையார்

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

பாரதியார் கவிதைகள்.





பாரதியின் நினைவு நாள். இன்று.
அவரை நினைவு கூர்வோம்.



                 காலைப் பொழுது (மாயவரம் மொட்டை மாடியில் எடுத்த படம்.)

பொழுது புலர்ந்தது, யாம்செய்த தவத்தால், 
புன்மை யிருட்கணம் போயின யாவும், 
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி 
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி, 
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குஉன் 
தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம 
விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே 
வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே! 

புதன், 5 செப்டம்பர், 2018

குழந்தைகள் உலகம் தனி உலகம்!

Image may contain: 2 people, people standing, tree and outdoor
சிறுவர்களின் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி!
கிராமத்தில் இருக்கும் குழந்தைகள் விளையாடி
மகிழ இந்த ஐயனார் குதிரைகளும் காத்து இருக்கிறதோ!
குழந்தைகளே மகிழ்ந்திருங்கள்! வாழ்க வளமுடன்.

சின்னஞ் சிறு வயதில் விளையாட்டில் மட்டுமே கவனம் இருக்கும்  எல்லா குழந்தைகளுக்கும் காலை முதல் இரவு வரை விளையாட்டுதான்.
புதுப் புது விளையாட்டுக்கள் , அலுக்காத விளையாட்டுக்கள்.

சனி, 1 செப்டம்பர், 2018

கிரிதர கோபாலா!


நடுவில் இருக்கும் மீரா என் மகன் வாங்கித் தந்தான் கொலுவுக்கு பல வருடங்களுக்கு முன். 
கண்ணன் ராதை, கண்ணன் இரண்டும் மாயவரம் நட்புகள் வாங்கித் தந்தது கொலுவுக்கு.