திருக்கடவூர்த் தலச்சிறப்பு:
சிவபெருமானது அஷ்ட வீரட்டானத்தில் ஒன்றாக திகழ்வது திருக்கடவூர். இப்போது திருக்கடையூர் என்கின்றனர். இக் கோவில் தருமபுர ஆதீனத்தை
சேர்ந்த்து. திருஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகி மூவரால் தேவாரம் பாடப்பட்ட சிறப்பு உடைய பாடல் பெற்ற ஸ்தலம்.பிஞ்சிலம்,
(ஒருவகை முல்லைகொடி) ,வில்வமரம் ஆகியவற்றைத் தல விருட்சமாக
கொண்டது. தேவர்களும் அசுரர்களும் பாற்கடல் கடைந்த போது
வினாயகரை வழிபடாத காரணத்தால் வினாயகர்
இந்த தலத்தில் அமிர்தகுடத்தை மறைத்து வைத்துவிட்டாராம்.
அந்த அமிர்தகுடமே சிவலிங்கமான காரணத்தால்
இங்குள்ள மூலவருக்கு அமிர்தம்+ கடம்= ”அமிர்தகடேஸ்வரர் ‘ என பெயர்.