செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

ஓவியர் மாருதி அவர்களின் பிறந்த நாள்.



ஓவியர் மாருதி அவர்கள்






அற்புத ஓவியர் மாருதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
(எனது 'கண்மணி' நாவலுக்கு அவர் வரைந்திருந்த அழகோவியம்!)

முகநூலில் கே.பி. ஜனார்த்தனன்  அவர்கள் ஓவியர் மாருதி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிஇருந்தார். அவர் கதைக்கு ஒவியர் மாருதி வரைந்த இந்தப் படத்தையும் போட்டு இருந்தார்.

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

பிறந்தநாள்! இன்று பிறந்த நாள்!

பேரன் அழைப்பது போல் மருமகள் செய்த கேக்  ஏ.டி தாத்தா என்று தான் அழைப்பான்.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

ஏரிக்கரையோரம்

'
கண்மாயிலிருந்து திரும்பி வரும் வழியில் கண்ட விழாப் படங்கள் அடுத்த பதிவில் என்று சொல்லி இருந்தேன்.

புதன், 22 ஆகஸ்ட், 2018

மாடக்குளம் கண்மாய்

மாடக்குளக் கண்மாய்  இருபக்கமும் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.

ஆடிப்பெருக்கும் கோவில் விழாக்களும் பதிவு படிக்கவில்லை என்றால் படிக்கலாம். 

 மாடக்குளக் கண்மாயைப் பார்த்துவிட்டு வரலாம் என்று  அப்படியே  போனபோது  கண்மாயின் நிலை,  வழியில் கண்ட விழாக்  கோலாகலம் , கபாலீஸ்வரி கோவில், மலையடிவாரத்தில் உள்ள கோயில் ஆகியவை அடுத்த பதிவில்  என்று  தொடரும் போட்டேன்.


--------------------------------------------------------------------------------------------------------------------------

புதன், 15 ஆகஸ்ட், 2018

பாரததேசம் என்று பெயர் சொல்லுவோம்.




புள்ளினம் ஆர்த்தன ; ஆர்த்தன முரசம்;
பொங்கியது எங்குஞ் சுதந்திரநாதம்.


பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி

-மகாகவி பராதியார்

அனைவருக்கும் இனிய சுதந்திர நல் வாழ்த்துக்கள்!










 வாழ்க வளமுடன்.
-----------------------------------------------------------------------------------

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

ஆடிப்பூரம்

ஆண்டாளின் வரலாறு சொல்லும் படம். (பக்தி ஸ்பெஷல் அட்டைப் படம்)
ஆண்டாள் திருவடிகளே சரணம்!

திருவாடிப்பூரத்தில்  பூமி தேவியின் அவதாரமாகக் கோதை அவதரித்தாள்.

அன்னவயல்புதுவையாண்டாள் அரங்கற்குப்
பன்னுதிருப்பாவைப்பல்பதியம் இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக்கொடுத்தாளைச்சொல்லு.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை
பாடியருளவல்லபல்வளையாய்!  - நாடி நீ
வேங்கடவற்குஎன்னைவிதியென்ற இம்மாற்றம்
நாம்கடவாவண்ணமேநல்கு.

- உய்யக்கொண்டார் அருளிச் செய்தவை



விகடனில் என் சேகரிப்பு.

துளசிவனம்
ஆண்டாள் அவதரித்த துளசி வனம் 
ஸ்ரீ வில்லிபுத்தூர்க் கோவில்  என்ற என் பழைய பதிவில் விரிவாக எழுதி இருக்கிறேன் படங்களும் நிறைய இருக்கிறது. படிக்காதவர்கள் படித்துப் பார்க்கலாம்.
                                                         வாழ்க வளமுடன்.

திங்கள், 6 ஆகஸ்ட், 2018

ஆடிப்பெருக்கும் கோவில் விழாக்களும்

மாடக்குள அய்யனார் கோவில்  பிள்ளையார், துணைவிகளுடன் அய்யனார் , முருகன்

ஆடிப்பெருக்கு அன்று காலை எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் அய்யனார் கோவில் போனோம். பூக்கார அம்மாவிடம் இந்த  ஊரில் ஆடிப்பெருக்கு சமயம் ஆற்றுக்குப்  போகமாட்டீர்களா என்று கேட்டேன் இங்கு பழக்கம் இல்லை  என்றார் .மாடக்குள கண்மாயில் தண்ணீர் இருக்கா என்று கேட்டேன் இல்லைம்மா ஆனால்  மாடக்குள அய்யனாரைப்  பார்த்து வாருங்கள் அம்மா இன்று நன்றாக இருக்கும் அலங்காரம். கோவிலில் கூட்டம் இருக்கும் என்றார். வெகு நாட்களாக போக வேண்டும் என்று நினைத்து இருந்த கோயில்.

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

அன்னையின் அருளே வா வா

                                      
அகத்தியர் சிவபூஜை செய்வதற்காகக் கமண்டலத்தில் கொண்டு வந்த நீரை விநாயகர் காகமாக உருக் கொண்டு சாய்த்துவிட, கமண்டலத்திலிருந்து வழிந்து  ஓடிய நீரே காவிரி ஆறு. அக் கதையை விளக்கும் படம். (கூகுளுக்கு நன்றி.)