சனி, 18 நவம்பர், 2023

கந்த வேள் முருகனுக்கு அரோகரா ! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !

முருகன் அருளால்  கந்தசஷ்டிக்கு ஆறு நாட்களும் பதிவு போட்டு விட்டேன். ஆறு நாட்களும் தொடர்ந்து வந்து படித்து கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி.

இந்த பதிவில் ஜோதி தொலைக்காட்சியில் நேரலையாக பார்த்த    திருச்செந்தூர் சூரசம்ஹாரம், மற்றும்  எஸ் . எஸ் காலனி பிள்ளையார்  கோவிலில் உள்ள முருகனை வணங்கி வந்த  படங்கள்  இடம்பெறுகிறது.

வெள்ளி, 17 நவம்பர், 2023

பழனி ஆண்டவரும் மகனின் வெகு நாள் ஆசையும்




என் கணவரின்  இஷ்ட தெய்வம் பழனி ஆண்டவர். 

ஓவியர் சில்பி அவர்கள் வரைந்த பழனி தண்டாயுதபாணி தெய்வ படம்.  தீபாவளி மலரில் வந்தபடத்தை அவர்கள் பழனி ஆண்டவர் கல்லூரியில் படிக்கும் போது தன் அறையில் வைத்து வணங்கியது.   எங்கள் பூஜை அறையில் நடுநாயகமாக இருப்பார்.

வியாழன், 16 நவம்பர், 2023

சுப்ரமணியம் சுப்ரமணியம் சண்முக நாதா சுப்பிரமணியம்


   பழமுதிர் சோலை  ஆறாவது படை வீடு. சுப்பிரமணிய சுவாமி

இன்று கந்த  சஷ்டி 4 ம் நாள்.கந்தசஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு சக்தியை கொடுப்பவை முருகன் பாடல்களும் முருகன் தரிசனமும் தான். மனது உற்சாகமாக இருக்க  முருகன் பாடல்களை பாடியும் கேட்டும் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள்.

தண்டபாணித் தெய்வமே சரணமய்யா!முதல் நாள்


ஆறுமுகனே வருவாய்!- மூன்றாம் நாள்

கந்தசஷ்டி சிறப்பு பதிவுகளில் முந்திய பதிவுகள் . படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

அரிசோனா மாகாணத்தில் உள்ள மகாகணபதி  ஆலயம் பற்றி   பல பதிவுகள் போட்டு இருக்கிறேன். அந்த ஆலயத்தில் நடக்கும் சூரசம்ஹாரத்திற்கு முருகன் அருளால்  மகன் சூரன் செய்து கொடுத்து இருக்கிறான். அந்த படங்களும் முருகன் பாடல்களும்  இந்த பதிவில் இடம்பெறும். 

புதன், 15 நவம்பர், 2023

ஆறுமுகனே ! வருவாய்




முருகபெருமான் சூரனை  சம்ஹாரம் செய்த இடம் திருச்செந்தூர்.  நிறைய தடவை போய் வந்த கோவில். திருநெல்வேலி மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதல் முடி காணிக்கை திருச்செந்தூர் முருகனுக்கு தான் கொடுப்பார்கள். உறவினர்களின் குழந்தைகளுக்கு   மொட்டையடித்து காது குத்தும் விழாவுக்கு அடிக்கடி கலந்து கொள்ள திருசெந்தூர் போய் இருக்கிறோம். நிறைய பதிவுகள் திருச்செந்தூர் பதிவுகள் பதிவு செய்து இருக்கிறேன். அப்போது பகிர்ந்து கொள்ளாத படங்களை இந்த பதிவில்  பதிவு செய்து இருக்கிறேன்.


முந்திய பதிவுகள் .

செவ்வாய், 14 நவம்பர், 2023

முத்தான முத்துக்குமரா முருகையா வா ! வா!

விராலி மலை சண்முகநாதர் கோவில்


கந்தசஷ்டி விழாவில்  முருகனை சிந்திப்போம் என்று  முருகன் பாடல்கள்  பகிர்வை  முருகன் அருளால் பதிவு செய்கிறேன். இன்று இரண்டாம் நாள்.  நேற்று 

திங்கள், 13 நவம்பர், 2023

தண்டபாணித் தெய்வமே சரணமய்யா!

 

கழுகு மலை குமரன் 

இன்று கந்தசஷ்டி விழா தொடக்கம். பல வருடங்களுக்கு முன் ஆறு நாளும் "முருகனை சிந்திப்போம்" என்று பதிவு போட்டேன். கந்தசஷ்டி காலத்தில் விரதம் இருப்பதும்,  "கந்த புராணம்" படிப்பதும் என்று இருப்போம். என் கணவர் ஆறு நாளும் சஷ்டி கவசத்தை 36 முறை படிப்பார்கள். மாதம் இரண்டு முறைவரும் சஷ்டி விரதம்  அதில் ஒரு முறை விரதம் இருப்போம்.இப்போது விரதம் இருப்பது இல்லை. 

ஞாயிறு, 12 நவம்பர், 2023

இறைவனுக்கு நன்றி.

 

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள். நான் தீபாவளி வாழ்த்து சொல்ல தயார் செய்தபடம்.

 இறைவன் அருளால் இந்த ஆண்டு மழை இல்லாமல் எல்லோரும் மகிழ்ச்சியாக வெடிகள் வெடித்து புத்தாடை அணிந்து மகிழ்ச்சியாக எங்கள் வளாகத்தில் கொண்டாடி விட்டார்கள்.நானும்  என்னால் முடிந்தவற்றை செய்து கொண்டாடி விட்டேன்.

உறவுகள், வலை உலக நட்புகள்,   மற்றும், திருவெண்காடு , மாயவரம் நட்புகள் வாழ்த்து அனுப்பினார்கள்., பேசினார்கள் அனைவருக்கும் நன்றிகள்.

ஞாயிறு, 5 நவம்பர், 2023

நண்பர்கள் வீட்டு நவராத்திரி விழா


மகன் இருக்கும் அரிசொனாவில்  அவன் நண்பர்கள் இல்லங்களில் வைத்த நவராத்திரி கொலு படங்கள் இந்த பதிவில் இடம் பெறுகிறது.

முந்தின பதிவு நவராத்திரி திருவிழா .
நவராத்திரி விழாவுக்கு வந்தவர்களை மறுநாளும் வர சொன்னேன்  அரிசோனா நண்பர்கள் வீட்டு  கொலு பார்க்க.


இவர்கள் வீட்டில் திருப்பதி கோவில் 

சனி, 4 நவம்பர், 2023

நவராத்திரி திருவிழா


அம்மன் சிவபூஜை செய்யும் காட்சி.

தீபாவளி வரப்போகிறது! இப்போது நவராத்திரி திருவிழா பதிவா? என்று நீங்கள் நினைப்பது  புரிகிறது.

 எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் அய்யனார் கோவில் நவராத்திரி கொலு படங்கள் மற்றும்  தெரிந்தவர்கள், உறவினர் கொலு படங்களை பதிவாக போட வலையேற்றி வைத்து இருந்தேன். அதனால்  இந்த பதிவு. வாங்க கொலு பார்க்கலாம்.