அம்மன் சந்நதி தனி கோபுரத்துடன் பெரிய பிரகாரம் கொண்ட அழகிய கோயில். திருக்கடவூர் மயானம் முதல் பகுதி
படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.
அம்மன் கோவில்
நடராஜர் சந்நதி.
கோவில் மணி இருக்கும் மண்டபம்
1928 ல் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது என்று கல்வெட்டு சொல்கிறது. கல்வெட்டில் அம்மனின் பெயர் "ஸ்ரீ வாடாமல்லிகை அம்பாள்" என்று போட்டு இருக்கிறது. மலர்குழல்மின்னம்மை என்று தல வரலாறு சொல்கிறது.
தற்போதைய பெயர்.
இணையத்தில் அம்மனின் பெயர் நிமலகுசாம்பிகை என்று போட்டு இருக்கிறது.
பிராகாரத்தில் உள்ள கிணறு இப்போது மோட்டார் போட்டு தண்ணீர் எல்லா சுவாமி சன்னதிகளிலும் கிடைக்கிறது. தண்ணீர் அபிஷேகத்திற்கு தூக்கி சுமக்க வேண்டாம்.
மாலை நேர சூரிய ஓளி எதிர்பக்கம் என்பதால் படங்கள் கொஞ்சம் இருட்டு. பிள்ளையார்
அம்மன் கோவில் விமானம்
அம்மன் பிராகரத்திலிருந்து சுவாமி பிரம்மபுரீசுவரர் கோயில் கோபுரம் தெரிகிறது.
விநாயகர், சண்டிகேஸ்வரி சந்நதிகள் பிரகாரத்தில் இருக்கிறது.
//அடுத்து அம்மன் சன்னதி போவோம். அதுவும் தனி கோயில் போல பெரிய சன்னதி .
அம்மன் கோயிலில் என்ன பார்த்தேன் என்பதையும் சொல்கிறேன்.//
இதற்கு முந்திய பதிவில் இப்படி சொல்லி இருந்தேன் நினைவு இருக்கும் உங்களுக்கு. அங்கு பார்த்தது கீழே.
"
இல்லம் தேடிக் கல்வி" என்ற தன்னார்வ தொண்டு கொரோனா பெருந்தொற்று சமயம் நடைபெற்று வந்து இருக்கிறது. இப்போதும் மாலை அரசு பள்ளி முடித்து வரும் குழந்தைகளை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கற்பிக்கும் பணி நடக்கிறதாம்.
மதினியும், தங்கையும்
நாங்கள் கோயிலுக்குள் போன போது குழந்தைகள் மட்டும் கோபுர வாசலில் தங்கள் புத்தகபைகளை வைத்து விட்டு உள்ளே வந்து அமர்ந்து இருந்தார்கள்.
அவர்களிடம் "என்ன கோயிலை பார்க்க அழைத்து வந்தார்களா? "என்று கேட்டேன். இல்லை நாங்கள் இந்த ஊர் பள்ளிகூடத்தில் படிப்பவர்கள் "வீடு தேடி கல்வி என்ற திட்டத்தில் மாலை வகுப்பு" என்று சொன்னார்கள்.
தன்னார்வலர்கள் பதிவு செய்து கொண்டு கற்பித்து வருகிறார்களாம். கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது.
//தன்னார்வலர்கள்..
- வாரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும் (அல்லது) பகுதி நேரமாகவும் தன்னார்வலராக இருக்கலாம்.
- கண்டிப்பாக குழந்தைகளுடன் உரையாட தமிழ் தெரிந்திருக்க வேண்டும்
- தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் கற்றுத்தர வேண்டும். (பயிற்சிகளும் உபகரணங்களும் வழங்கப்படும்)
- யார் நிர்பந்தமும் இன்றி தன்முனைப்பாக பங்கேற்க வேண்டும்
- குறைந்தபட்சம் 17 வயது நிரம்பி இருத்தல் அவசியம்//
இணையத்தில் இல்லம் தேடி கல்வியை பற்றி அறிந்து கொள்ள படித்த போது தெரிந்து கொண்டது.
ஆசிரியர் சின்ன பெண்ணாக இருந்தார் அனைவருடனும் சிரித்து அன்பாக பேசி கொண்டு இருந்தார்.
உயரமான விதானம். ஜன்னல்கள் இருந்தன.
பக்கத்தில் இருபுறமும் மண்டபம் வெவ்வால் நந்தி மண்டபம் என்று சொல்வார்கள் அது போல இருந்தது.
மாணவர்கள் அலங்காரம்.
கோவிலை வலம் வந்தவிட்டு திரும்பியபோது ஆசிரியர் வந்து விட்டார் . அவர் குழந்தைகளுக்கு உடை அணிவித்து கொண்டு இருந்தார். ஆசிரியருக்கு வணக்கம் சொல்லி என்ன விழா என்று கேட்டபோது நாடகம் நடித்து காட்ட போகிறார்கள் என்றார்கள்.
என்ன கதை என்று கேட்டேன்? "கண் தெரியாத ஒவியர் ஓவிய போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக படம் வரைவதும் அதற்கு அரசர் வந்து பரிசு அளிப்பாதான கதை என்று சொன்னார்." அரசர்தான் போட்டிக்கு அழைக்கிறார் போலும்.
நாடகம் பார்க்கலாம் என்றால் என் தங்கையின் 60 கல்யாண முதல் கால ஹோமம் 5.30க்கு ஆரம்பித்து விடும் என்பாதால் எல்லோரும் காரணத்தை சொல்லி, பிள்ளைகளை, ஆசிரியரை வாழ்த்தி விடைபெற்றோம்.
குழந்தைகளின் பெற்றோர்கள் நாடகத்தை பார்க்க வருவார்களா தெரியவில்லை. பார்வையாளர்கள் யாரும் இல்லை. ஆசிரியரும், குழந்தைகள் மட்டுமே இருந்தார்கள். நாடகம் தொடங்கும் போது வருவார்கள் என்று நினைக்கிறேன்.
//இந்த பணியில் ஈடுபடும் தன்னார்வலர்கள் 6 மாதம் தினமும் 1 மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவை மூலம் குழந்தைகளுக்கு புதுமையான முறையில் பாடம் கற்று கொடுப்பார்கள்.//
பாடதிட்டத்தில் உள்ள பகுதி நாடகம். என்று தெரிந்து கொண்டேன்.
பிரம்மபுரீஸ்வரர், மலர்குழல்மின்னம்மை இந்த குழந்தைகளை நல்ல படியாக வைக்க வேண்டும் அவர்கள் பண்பிலும் கல்வியிலும் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டோம்.
அடுத்து திருக்கடவூர் திருக்குளம், மார்க்கேண்டையர் கோவில் பார்க்கலாம்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------