மார்ச் 20 தேதி "உலக சிட்டுக்குருவி தினம் " ஒவ்வொரு ஆண்டும் பதிவு போடுவேன். இங்கு 19 ம் தேதி இரவு போட்ட தோழியின் "தலாட்டு பாடல்"இந்திய நேரப்படி 20ம் தேதி வந்து விட்டது. திண்டுக்கல் தனபாலன் அவர்கள் இன்று உங்களிடமிருந்து சிட்டுக்குருவி பதிவு வரும் என்று நினைத்து இருந்தேன் என்று சொன்னார்.
வசந்தகாலத்தில் குளிர் குறைந்து வெயில் தலைகாட்டத் தொடங்கியவுடன் பலூன்கள் காலை நேரம் நிறைய பறக்க ஆரம்பித்து விட்டது. எங்கள் வீட்டுக்கு அருகில் பறந்த பலூன்களை தோட்டத்திலிருந்து எடுத்தேன், அந்த படங்கள், காணொளி இந்த பதிவில் இடம் பெறுகிறது.
என் சிறு வயதில் சிவகாசியில் இருந்தோம். அந்த ஊரில் எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் நாட்டரசன் கோட்டையை சேர்ந்த நகரத்தார் குடும்பம் இருந்தார்கள். அவர்கள் அப்பா, அம்மா இருந்தவரை குடும்ப நண்பர்களாக இருந்தார்கள்.
அவர்கள் பெரிய பெண் முத்துமாரி அக்கா தாலாட்டு பாடல்களை சிலேட்டில் எழுதி மனப்பாடம் செய்வார்கள். "எதற்கு மனப்பாடம் செய்கிறீர்கள் அக்கா ?" என்று கேட்டால் தனக்கு குழந்தை பிறந்தால் குழந்தையை தூங்க வைக்க என்பார்கள்.
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ஒரு சமயம் அம்மன் போட்டு இருந்தது. அப்போது முத்துமாரி அக்கா தான் அவர்கள் அம்மா சமைத்து கொடுக்கும் உணவை கொண்டு வந்து தருவார்கள். அம்மன் போட்ட வீட்டுக்கு யாரும் வரக்கூடாது, கொடுப்பது, கொள்வது கூடாது என்பார்கள். ஆனால் முத்துமாரி அக்கா முத்துமாரி அம்மன் போல எங்கள் குடும்பத்திற்கு உதவி செய்தார்கள்.
அவர்கள் பாடிய பாட்டில் பட்டினத்தாரை அவர் தாய் தாலாட்டு பாடி தூங்க வைத்த பாடலும் அடக்கம். "சாயாவனம் பார்த்து முக்குளம் நீராடி உன்னை பெற்று எடுத்தேன்" என்ற வரி வரும். பட்டினத்தார் பிறந்த ஊர் திருவெண்காடு, திருவெண்காடர் என்ற பெயரும் பட்டினத்தாருக்கு உண்டு. திருவெண்காடு கோவில் முக்குளத்தில் நீராடி விரதம் இருந்து பெற்றாராம் அவர் அம்மா. பட்டினத்தாருக்கு கல்யாணம் பேசி முடிக்கும் விழா திருவெண்காடு கோவிலில் தான் நடக்கும்.
பட்டினத்தார் குழந்தை இல்லாமல் திருவிடைமருதூர் இறைவனை வணங்கி விரதம் இருக்கிறார்.
திருவிடைமருதூரில் வசிக்கும் சிவசர்மா தன் வறுமையை போக்க இறைவனை மனம் உருகி வேண்டுகிறார்.
திருவிடைமருதூர் இறைவன் குழந்தை "மருதவாணராக" ஏழை அந்தணர் சிவசர்மாவின் முன் தோன்றுகிறார். வறுமையை போக்க தன்னை பட்டினத்தாரிடம் கொடு , அவர் பொருள் கொடுப்பார் என்று சொல்லி மறைகிறார்.
ஒரே சமயத்தில் இருவரின் குறையை போக்குகிறார். அந்தணர் வறுமையை போக்கி, பட்டினத்தாருக்கு பிள்ளையை கொடுக்கிறார் இறைவன்.
பூம்புகார் அருகில் உள்ள பல்லவனீச்சுரத்தில் பட்டினத்தார் திருவிழா நடக்கும் ஆடி மாதம்.
பட்டினத்தார் குழந்தையின் எடைக்கு எடை தங்கம் கொடுத்து சிவசர்மாவிடம் வாங்கிய கதை பல்லவனீச்சுரத்திற்கு பக்கத்தில் இருக்கும் சாயாவன கோவிலில் "பிள்ளை இடுக்கி திருவிழா" என நடக்கும்.
நான் திருமணம் முடிந்து திருவெண்காடு வருவேன் என்றோ , கோவிலுக்கு அருகில் மடவிளாகத்தில் வீடு இருக்கும் என்றோ சாயாவனம் பார்ப்பேன் என்றோ, முக்குளம் நீராடி குழந்தைகளை பெற்றுக் கொள்வேன் என்றோ அன்று தெரியாது எனக்கு.
திருவெண்காட்டில் நகரத்தார் வீட்டில் குடி இருந்தேன், அவர்கள் வீட்டு மூத்தபெண் உமையாள் எனக்கு தோழி ஆனார். அவர் அப்பா, அம்மா எனக்கு அம்மா, அப்பாவாக இருந்தார்கள், அவர் தம்பி, தங்கைகள் எனக்கு உடன்பிறப்பு ஆனார்கள். என் குடும்பம் பெரிய குடும்பம் அனைவரையும் விட்டு திருவெண்காடு வந்த போது பிரிவு துயர் தெரியாமல் அரவணைத்த குடும்ப உறவு.
அம்மா எனக்கு செட்டி நாட்டு சமையல் முறை, மற்றும் சிக்கனம் , குழந்தை வளர்ப்பு முறை எல்லாம் சொல்லி தந்தார்கள்.
இன்றும் இறைவன் அருளால் அவர்கள் தொடர்பு இருக்கிறது. உமையாள் அப்பா, என் கணவருக்கு பழனி கல்லூரியில் படிக்கும் போது ஆசிரியர், கணவர் வேலை பார்த்த பூம்புகார் கல்லூரியில் பிரின்ஸ்பால்.
என் குழந்தைகளுக்கு பிரின்ஸ்பால் தாத்தா.
இப்போது கோவையில் இருக்கும் உமையாள் மற்றும் அவரின் தோழிகள் 6 பேருடன் வாட்ஸ் அப்குழுவில் மாலை 5 முதல் 6 வரை கூட்டு வழிபாடு செய்து வருகிறோம். தேவாரம், திருவாசகம், திருப்புகழ் பாடுவோம்.
முன் கதை சொல்லி விட்டேன், இப்போது கதைக்கு வருவோம்.
என் தோழி உமையாள் ரவி இரண்டு நாள் முன்பு இந்த பாடலை பாடி அனுப்பி முகநூலில் பகிர சொன்னார். அங்கு பகிர்ந்து விட்டேன். இப்போதும் இங்கும் பகிர்ந்து விட்டேன். கேட்டுப் பாருங்கள். உமையாளுக்கு முகநூல் கணக்கு இல்லை. நண்பர்கள் மட்டுமே படிக்க முடியும் என் முகநூலில் அவர் படிக்க முடியாது என்பதால் இங்கு போட்டு இருக்கிறேன்.
உமையாளின் உறவினர் ஒருவர் தாலாட்டு பாடல் கேட்டு இருந்தாராம், அவருக்கு பாடல் வரிகளை எழுதி அனுப்பி பாடியும் அனுப்பினேன் என்றார்.
பாட்டு படிக்க முடிகிறதா?
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில் போய் இருந்த போது துளசி விற்கும் அம்மா தன் குழந்தையை கொஞ்சி கொண்டு இருந்த போது எடுத்த படம். (2016ல் காளமேகப் பெருமாள் கோவில் போன போது எடுத்த படம்.)
சிறு வயதில் இருந்தே பக்தியை புகட்ட புராண கதைகளை தாலாட்டு பாடலாக பாடி குழந்தையை தூங்க வைத்து இருக்கிறார்கள்.
உமையாள் ஆடியோவாக அனுப்பி இருந்தார், அது வலை ஏற மறுத்து விட்டது. மகனிடம் சொன்னேன், அவன் அதை ஒரு படத்தை போட்டு வீடியோவாக மாற்றி தந்தான். அதை நான் யூ-டியூப் காணொளியாக மாற்றி போட்டு இருக்கிறேன்.
உமையாளின் பாட்டி பாடி பின் அவர் அம்மா பாடி இப்போது அவள் பேரகுழந்தைகளுக்கு பாடி மகிழ்ந்தது என்றார்.
என் முதல் கவிதை நேரம் இருந்தால் படிக்கலாம். எத்தனை பின்னூட்டங்கள் அவர்கள் எழுதிய கருத்துக்களை மீண்டும் படித்து மகிழ்ந்தேன். வயதானபின் நினைவுகளை அசை போடுதல் சுகம்.
2011ல் போட்ட பதிவு.
நானே எழுதி என் குழந்தைகளுக்கு பாடிய தாலாட்டு பாடல், பின்பு பேரனுக்கு பாடியது இருக்கும் இந்த பதிவில். வேறு என்ன பாடல்கள் பாடி தூங்க வைப்பேன் என்பதும் இருக்கும்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி குழந்தையை தூங்க வைப்பார்கள். சிலர் மடியில் போட்டு தட்டிக் கொடுத்து பாடி தூங்க வைப்பார்கள், சிலர் தோளில் சாய்த்து தட்டி தூங்க வைப்பார்கள், சிலர் தொட்டிலில் போட்டு வீசி வீசி ஆட்டி தூங்க வைப்பார்கள். அதில் குழந்தைக்கு யார் ஆட்டுவது என்று கூட தெரியும், தன் அம்மாவா, மற்றவர்களா என்று. வேறு யாராவது ஆட்டினால் அழ ஆரம்பித்து விடும். தங்கை பேரன் என் தங்கை ஆட்டினால்தான் தூங்குவான். அவன் அம்மா ஆட்டினால் அழுவான்.
என் கணவர் விசில் செய்து பாடி குழந்தைகளை தூங்க வைப்பார்கள், பேரன் பேத்திகளுக்கும் அப்படி கையில் வைத்து, தோளில் போட்டு தட்டிக் கொடுத்து விசிலில் பாடுவார்கள். பதிவு செய்து வைத்து கொள்ளவில்லையே என்று இப்போது நினைக்கிறேன்.
தாலாட்டில் ஆராரோ, ஆரிராரோ கண்ணே கண் உறங்கு , செல்ல கண்ணே நீ கண் உறங்கு! என்று மாமன் பெருமை, குலபெருமை என்று பாடுவார்கள்.
97 வயது பாட்டி பாடும் தாலாட்டு மதுரை அழகரை, சொக்கரை புகழ்ந்து பாடி , விரதம் இருந்து பெற்ற குழந்தை என்று பாடுகிறார். கல்கத்தா , இராமேஸ்வரம், காசி போய் என்று பாடுகிறார். பாட்டை பதிவு செய்பவர் போதும் என்று நிப்பாட்ட சொல்கிறார்கள். இல்லையென்றால் இன்னும் பாடுவார், 97 வயதிலும் பாடலை மறக்காமல் மடை திறந்த வெள்ளம் போல பாடுகிறார்.
என் தோழி இப்போது உள்ள பெண்கள் சினிமாவில் வரும் தாலாட்டு பாடல்களை போட்டுவிடுகிறார்கள், அதை கேட்டுக் கொண்டே தூங்கிவிடுகிறது குழந்தை என்று சொன்னார்.
அந்த வசதி இப்போது இருக்கே! இந்தக்கால தாலாட்டு பாடல்களும் நன்றாக இருக்கிறது.
முன்புகூட்டுக்குடும்பம், அப்புறம் தனி குடித்தனம், இப்போது உள்ள வேலைப்பார்க்கும் தாய்மார்கள், குழந்தைகளை வேலை செய்பவரிடம் விட்டு விட்டு வேலைக்கு போகும் போது அலைபேசி மூலம் தாலாட்டு பாடுவது என்று வைரமுத்து எழுதிய தனிப்பாடல். முதல் தலைமுறைக்கு சுசீலா பாடுகிறார்கள்,
தாலாட்டு பாடலில் காட்சி மாற்றம் அடைந்ததை காட்டும் பாடல். முதல் தலைமுறை அனைத்து சுற்றமும் குழந்தையை கொண்டாடும் காட்சி மகிழ்ச்சியை தரும், இரண்டாம் தலைமுறை தனிக்குடித்தனம்,
மூன்றாவது தலைமுறை பாடல் வேலைக்கு போகும் தாய்மார்கள் கஷ்டத்தை சொல்லும்.
உறவுகள் எல்லாம் வெளிநாடு, அப்பா வெளிநாடு என்று இப்போது உள்ள கால சூழ்நிலையை சொல்லும் கடைசி பகுதி.
மன்னுபுகழ் கோசலை தன் மணி வயிறு வாய்த்தவனே பாடல். - குலசேகர ஆழ்வார் பாசுரம்
பீனிக்ஸ் ஊரிலிருந்து 48 மைல் தூரத்தில் உள்ள பார்லெட் ஏரிக்கு ஞாயிற்றுக்கிழமை போய் இருந்தோம்.
பார்லெட் ஏரி அரிசோனாவில் உள்ள வெர்டே ஆற்றின் அணைக்கட்டினால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கம் . உப்பு நதி திட்டத்தால் 1936 -39 இல் கட்டப்பட்டது . இது டோன்டோ தேசிய வனப்பகுதியில் உள்ள பொழுது போக்கு இடம்.
குளிர்காலத்திற்கு பிறகு வசந்த காலத்தில் பூக்கும் "கோல்டன் பாப்பி" காட்டுப்பூக்கள் பூத்து அழகாய் காட்சி அளிப்பதை பார்க்கவும், ஏரியில் நீர் சறுக்கு மற்றும் மீன் பிடிக்கவும், படகு சவாரி செய்யவும் மக்கள் கூடினார்கள்.
நாங்கள் கோல்டன் பாப்பி மலர்களை பார்த்ததை போன பதிவில் பகிர்ந்து இருந்தேன்.
இதற்கு முன்பு போட்ட பதிவுடன் மயிலாடுதுறை கோவில்கள் நிறைவு பெற்றது.
இந்த பதிவில் மயிலாடுதுறை போய் விட்டு மதுரைக்கு திரும்பி வரும் போது தரிசனம் செய்த தஞ்சைக்கு அருகில் உள்ள "புன்னைநல்லூர் மாரியம்மன்" கோவில் இடம்பெறுகிறது.
மயூர நாதர் கோவிலுக்குள் நழைந்தவுடன் இடப்பக்கம் இருக்கும் தர்மபுரத்திற்கு சொந்தமான குமரக்கட்டளை முருகன் உற்சவ காலத்தில் இங்கு எழுந்தருளுவார்.அபிஷேக ஆராதனைகள் நடக்கும். கும்பாபிஷேகம் வேலைகளில் தர்மபுர ஆதீனத்தின் வேலைகள் நடந்து விட்டது. திவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான கோவில் . சுப்பிரமணியருக்கு மட்டும் தர்மபுர ஆதீனகட்டளை உள்ளது.
வெளிப்பிரகாரம் சுற்றி வரலாம்
இந்த பக்கம், மீனாட்சி, சொக்கநாதர் இருப்பார்.
சிறு தேரின் சக்கரமாக இருக்கும் என்று நினைக்கிறேன். பழமையை நினைவு படுத்த இன்னும் வைத்து இருக்கிறார்கள் போலும்
மயூரநாதர் கோவில் 5 பிரகாரங்களை ஒரு முறை அல்லது மூன்று முறை வலம் வந்தாலே போதும் நடை பயிற்சி என்று தனியாக செய்ய வேண்டாம். மாலை நேரம் வெளி பிரகாரத்தை வலம் வந்தால் பறவைகளின் ஒலியை கேட்கலாம், சுகமான சுத்தமான காற்றை சுவசிக்கலாம்.
கோயில் முழு தோற்றம் தெரியும்
மகன் எடுத்த படங்கள். நான் வெளிபிரகாரம் போகவில்லை. அம்மன் சன்னதியில் அமர்ந்து இருந்தேன். மகன் மட்டும் வெளி பிரகாரம் போய் படங்கள் எடுத்து வந்தான்.
ஸ்ரீ உச்சிஷ்ட ஞான கணபதி
இரட்டை பிள்ளையார்
மாணவ , மாணவிகளை தேர்வில் வெற்றிபெற வைப்பார் என்ற நம்பிக்கை . கும்பாபிஷேகம் நிறைவு பெற்றதும் இப்படி சுவரில் எழுதாமல் தங்கள் நம்பரை ஸ்ரீராமஜெயம் எழுதி மாலை செய்வது போல செய்து விநாயகருக்கு சாற்றலாம். அவர் இடம் சுத்தமாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் தினம் அபிஷேகம் செய்யும் போது அதை எடுத்து விடுவார்கள் என்று மாணவர்களுக்கு பயமாக இருக்கும், அதனால் அங்கு வருகை பதிவேடு மாதிரி வைத்து அதில் மாணவ மாணவிகள் தங்கள் நம்பரை எழுதி வைக்கலாம். கோவில் சுவர் சுத்தமாக இருக்கும்.
என் மகன் தன் நண்பர்களுடன் ஞாயிறு தோறும் இந்த கோவிலுக்கு போவான், கோவிலை வலம் வந்து திருக்குளத்துக்கு அருகே இருக்கும் ஆசனங்களில் அமர்ந்து கதை பேசி மகிழ்வார்கள்.
மகனிடம் கேட்டேன் இப்படி பிள்ளையாரிடம் " நீ உன் நம்பரை எழுதி இருக்கிறாயா" என்று இல்லை என்றான்.
மரங்கள் வெட்டப்பட்டு வேலை நடக்கிறது
ஓரு கொம்பு மட்டும் தெரியும் நந்தி வித்தியாசமாக இருக்கிறார். இன்னொரு கொம்பு அந்த பக்கம் இருக்கிறது.
நாதசர்மா இருக்கும் விமானம்
இந்த இடத்தில் தான் நாத சர்மா இருக்கிறார், போன பதிவில் இவரைப் பற்றி சொல்லி இருந்தேன்
இங்கு தானிய களஞ்சியம், கணக்கடி பிள்ளையார் இருக்கிறார்கள்
பிரகாரத்தில் தெரியும் சுப்பிரமணிய சாமி விமானம் . மழை அடிக்கடி பெய்து கொண்டே இருப்பதால் விரைவில் பாசம் பிடித்து விடும் .
தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான குமரக்கட்டளை சுப்பிரமணிய சாமி தேவஸ்தானம்
சிவன் , பார்வதி மகிழ்ச்சியாக ஊஞ்சலில் இருக்க ஒரு பக்கம் திருமால், மறுபக்கம் பிரம்மா, பிள்ளையார், முருகன் நந்தி, நாரதர் இருக்கிறார்கள். நந்தி சிவனின் வலது பாதத்தை கையில் ஏந்தி இருக்கிறார். அழகாய் இருக்கிறது. சித்திரம் வரைந்தவர்கள் என்று இரண்டு பேர் போட்டு இருக்கிறது. திரு . ராம்குமார் ஸ்தபதியை தெரியும் .சிறு வயதுதான் நிறைய கோவில்களுக்கு சிற்பங்கள் செய்து வருகிறார். முத்து ஸ்தபதி அவர் தம்பி. இந்த சித்திரம் கோவிலின் முன் வாசல் பக்கம் இருக்கிறது.
அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் அனைவருக்கும் எல்லா நலங்களையும் அருள வேண்டும்.
மயூரநாதர் பதிவுகள் இத்துடன் நிறைவு பெறுகிறது. இன்னும் மயிலாடுதுறையில் பார்த்த கோவில்கள் பகிர்வில் புனுகீஸ்வரர் கோவில் இருக்கிறது. இறையருளால் பார்ப்போம்.
இடம் பெறுகிறது . பாடல்பெற்ற சிவத்தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவரும் தேவாரம் பாடி இருக்கிறார்கள்.
போன பதிவில் திருக்குளம், மயூரநாத சன்னதியில் உள்ள உட்பிரகாரம் வரை வந்தோம். இந்த பதிவில் மூலவர் மயூரநாதரை தரிசனம் செய்த பின் உள் சுற்றில் உள்ள சுவாமிகள் விவரம் இந்த பதிவில்.