லில்லி மலர்கள்
மலர்கள் தரும் ஆனந்தம் சொல்லி முடியாது. மார்கழி மாதம் காலை வேலையில் இறைவழிபாடு, இளம் குளிரில் மலர்களின் ஆனந்த காட்சி மனதுக்கும் உடலுக்கு புத்தண்ர்வு கொடுக்கும்.
காலை எங்கள் வளாகத்தில் உள்ள பிள்ளையாரை வணங்கி அப்படியே எங்கள் குடியிருப்பு மலர்களை பார்த்து கொண்டு (ஒரு வலம் வந்து) வீட்டுக்கு வந்து விடுவேன்.
மார்கழி மாதம் கோவில்களுக்கு போய் வருவேன் முன்பு. இப்போது வளாகத்தில் இருக்கும் பிள்ளையாரை மட்டும் வணங்கி வருகிறேன் மார்கழி ஆராதனையாக.
இந்த பதிவில் வளாகத்தில் கீழ் வீட்டில் இருப்பவர்கள் வைத்து இருக்கும் செடிகளில் மலர்ந்து இருக்கும் மலர்களின் படங்கள் இடம்பெறுகிறது.