பூக்கடை ஒன்றும் பக்கத்தில் இல்லை அதனால் மண்டபத்தில் உள்ள கோழிக் கொண்டைப் பூவை எடுத்து அவர் உருவச்சிலைக்கு போட்டு வணங்குகிறார் என் கணவர்
வாழ்க்கை வரலாறு
நேரில் பார்ப்பது போல் ஓவியம்
ஹாலில் கடைசியில் நிற்பது போல் தோற்றம்
கக்கன் அவர்கள் உறவினர் (தம்பி மருமகள்) மணிமண்டபத்தை சுத்தமாய் பராமரிக்கிறார்
மணிமண்டபத்திற்கு எதிரில் இருக்கும் நூலகத்தைப் பராமரித்து வருபவர்
நூலகர் மணிமண்டபத்தின் சாவி வாங்கி வரும் வரை நூலகத்தில் நான் படித்த புத்தகம்
கைவிரல்களில் கலைமானின் வடிவம் கொண்டு வந்து, இது என்ன என்று கேட்கும் விளையாட்டு
நூலகத்தில் செய்தித்தாள் படித்துக் கொண்டு இருக்கும் அனபர்கள்
நாங்கள் மேலூர் வட்டம் தும்பைப் பட்டியில் உள்ள திரு .கக்கன்ஜி அவர்களின் மணி மண்டபத்திற்கு டிசம்பர் மாதம் கடைசியில் போய் இருந்தோம்.
நாங்கள் போன போது மண்டபம் பூட்டி இருந்தது . காலை 9 மணி இருக்கும் . யாரைக் கேட்கலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்த போது ஒருவர் வந்தார், மணி மண்டபத்தை பார்க்க வந்தீர்களா ?என்று கேட்டார் ஆமாம் என்றோம் . அவர்,” எதிரில் இருக்கும் நூலகத்தில் அமர்ந்து இருங்கள். மண்டபத்தை பார்த்து கொள்பவர் வீடு அருகில் தான் இருக்கிறது” என்று கூறி, சாவி வாங்கி வருவதாக சொல்லி சென்றார்.
சாவியுடன் ஒரு அம்மாவும் வந்தார்கள், அவர்கள் கக்கன்ஜி அவர்களின் தம்பி மருமகள் என்று சொன்னார்கள். நூலகரும், மருமகள் அவர்களும் உடன் வந்து திறந்து காட்டினார்கள். எல்லா தலைவர்களுடன் இருக்கும் படங்கள் உள்ளன . பதவியை தன் குடும்ப மக்களுக்கு பயன்படுத்திக் கொள்ளாத நேர்மையானவர் என்று தன் மாமாவின் பெருமைகளைச் சொன்னார் மருமகள்.
இருவருக்கும் நன்றி சொல்லி வந்தோம்.
இன்று அவர் பிறந்த நாள் இந்தச் சமயத்தில் தியாகச் செம்மலை ச்சென்று வணங்கி வந்ததைப் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தன்னலம் கருதாமல் நாட்டுக்கு உழைத்த தலைவரை வணங்குவோம்.
------------------------------
வாழக வளமுடன்.