செவ்வாய், 31 டிசம்பர், 2019

செவ்வாய், 24 டிசம்பர், 2019

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்


கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் என் வாழ்த்துக்கள்!
நம் அன்பு ஏஞ்சலுக்கு  வாழ்த்துக்கள்!


முன்பு கிறிஸ்தவ நட்புகளுக்கு புதுவருட கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை வாங்கி அனுப்பி மகிழ்வோம். இப்போது வாட்ஸப்பில் அழகிய படங்களுடன் கூடிய வாழ்த்தை அனுப்புகிறோம்.  போனில் வாழ்த்தை  சொல்லி விடுகிறோம். கடையில் போய் வாழ்த்துக்களைத் தேடித் தேடி எடுத்த காலங்கள் மிக அருமையானவை.

சனி, 21 டிசம்பர், 2019

அஷ்டமி சப்பரத் திருவிழா

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் அஷ்டமி சப்பரங்கள் திருவீதிஉலா வியாழக்கிழமை  19.12. 2019  தேதி அன்று நடைபெற்றது.


முரசு  அறைந்துகொண்டு முன்னே வரும் காளை

செவ்வாய், 17 டிசம்பர், 2019

மார்கழி மாத நிகழ்வுகள்


படம் கூகுள்

 மார்கழி மாதம் இறைவழிபாட்டுக்கு உள்ள  மாதம்

படம் கூகுள்

மார்கழி வந்து விட்டது. திருப்பாவையும், திருவெம்பாவையும் பாடி இறைவனை பூமாலையுடன், பாமாலையும் சேர்த்து சாற்றி வேண்டினால் வாழ்வில் எல்லா நலங்களும் பெறலாம். மனங்குளிர் மார்கழி என்று சொல்வது போல் உடம்பும் மனமும் குளிரக் குளிர குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பார்கள். குளிர்ந்த நீரில் குளித்தால் குளிர் போய் விடும் ஆனால் வெந்நீரில் குளித்தால் குளிர் தெரியும். என் அம்மா குளிர்ந்த நீரில் தான் குளிப்பார்கள். எங்களுக்கு எல்லாம் வெந்நீர் போட்டு கொடுப்பார்கள். குளித்து, கோலம் போட்டு, காலை கோவிலுக்குப் போய் இறைவனைக் கும்பிட்டு அங்கு தரும் வெண்பொங்கல் பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டு அப்பாவுக்குக் கொஞ்சம் எடுத்து வருவேன். 

வெள்ளி, 6 டிசம்பர், 2019

தருமபுரம் குருமகா சந்நிதானம் அவர்கள்

சகோ துரைசெல்வராஜூ அவர்கள் தளத்தில்   குருமகா சந்நிதானம் பற்றி எழுதி இருந்தார்கள்.   நாங்கள் சந்நிதானம் அவர்களைத் தரிசனம் செய்த செய்திகளைப்  பகிர்ந்து இருந்தேன் பின்னூட்டத்தில்.
நெல்லைத் தமிழன் அவர்கள், நீங்களும் பதிவு ஒன்றை வெளியிடுங்கள் , ஆதீனங்களைப் பற்றிய பதிவில் உங்கள் கணவரது கருத்துக்களும் இடம் பெறட்டும் என்றார்கள்.

கீதா சாம்பசிவம் அவர்களும் தருமைஆதீனத்துடன் உங்கள் கணவருக்கு  தொடர்பு உண்டே  ! என்று சொன்னார்கள். சார் அங்கு பணி புரிந்த நினைவு அவர்களுக்கு வந்து இருக்கிறது.

 நான் என் கணவரிடம் சொன்னேன், நேற்று முழுவதும் அவரைப் பற்றியே பேசிக் கொண்டு இருந்தார்கள். அதைப் பதிவாக்கச் சொன்னேன். முகநூலில் அவர்கள் பக்கத்தில் பதிவு செய்தார்கள்.


அதை இங்கே உங்கள் பார்வைக்கு.
              தருமபுர ஆதீனம் , 26ஆம்  குருமகா சந்நிதானம் அவர்கள் சித்தியடைந்த  நிலையில்     
                                                எனது நெஞ்சில் நிறைந்த நினைவுகள்

                                                  

வியாழன், 5 டிசம்பர், 2019

அன்புள்ள அப்பா

அப்பாவின் நினைவுகள் 

நான் எட்டாவது படிக்கும்போது என் அப்பா வாங்கிக் கொடுத்த ஃபாரின்
வாட்சைப்பற்றிப் பகிர்ந்து கொள்கிறேன்.


அப்பாவிற்கு நாங்கள் எல்லோரும் செல்லக் குழந்தைகள்தான்.  இருந்தாலும் என் தங்கைகள் சிறுமியாக இருந்ததால் என் அக்காவிற்கும், எனக்கும் வாட்ச் வாங்கித் தந்தார்கள்.  என் அக்கா பியூசி படித்துக் கொண்டு இருந்தார்கள்.  அப்பா வாங்கி வந்த  இரண்டு வாட்சில்  ஒன்று  வட்டம், மற்றொன்று சதுரம்.  அந்த காலக்கட்டத்தில்  சதுரம் தான் பேஷன்.  என் அக்கா சதுர வாட்சை எடுத்துக் கொண்டார்கள்.
அக்காவின் வாட்ச் கறுப்பு ஸ்ட்ராப், என் வாட்ச் தங்ககலர் ஸ்ட்ராப்.