வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

இராசிபுரம் அம்மன் கோயில்கள்


தம்பி மகள் (மறுவீட்டுக்கு 20. 2. 2019 )மாப்பிள்ளை வீட்டில்  திருமண வரவேற்பு வைத்து இருந்தார்கள். மாப்பிள்ளையின் ஊரான  இராசிபுரத்திற்குப் போய் இருந்தோம். மருமகளுக்கு அலங்காரம் செய்துகொண்டு இருந்தார்கள்.

உறவினர்களிடம் பேசிக்கொண்டு இருந்தபோது கோவில்களைப் பற்றி விசாரித்தேன்.  வரவேற்பு ஆரம்பிக்கும் முன்  வரும் வழியில் பார்த்த அனுமன் கோவில் போய் வருகிறோம் என்றோம், (வரவேற்பு நேரம் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை- நாங்கள் மீண்டும் ஊர் திரும்ப வசதியாக வைத்து இருந்தார்கள்.) அவர்கள் அந்தக் கோவில் சீக்கிரம்  அடைத்து விடுவார்கள், அதனால் நித்தியசுமங்கலி மாரியம்மன் கோவில் போய் வாருங்கள் அருமையான கோவில் என்றார்கள். அப்படியே  அங்காளபரமேஸ்வரி கோவிலும் போய் வாருங்கள் என்றார்கள், மாப்பிள்ளையின் அப்பா. எங்களை அழைத்துச் சென்று கோவில்களைக் காட்ட அவர் தம்பியை உடன் அனுப்பினார்கள்.
கிளம்பி விட்டோம் கோவிலுக்கு
நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில்

திங்கள், 11 பிப்ரவரி, 2019

100வது பசுமைநடையின் தொல்லியல் திருவிழா





பசுமை நடையின் 100 வது பயணம், தொல்லியல் விழாவாக நடந்தது. 10 .2. 2019 ம் தேதி. கீழ்க்குயில்குடி சமணர் மலையில்.  மதுரையில் இருந்து தேனி செல்லும் சாலையில் பத்து கி.மீ தொலைவில் சமணர் மலை அமைந்துள்ளது. காலை 6.30க்கு ஆரம்பித்தது விழா. மாலை 3.30 மணியிலிருந்து  மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்கக் கலை அரங்கத்தில் இரவு 9 மணிவரை நடந்து நிறைவு பெற்றது.

முதலில் இந்த விழா  இரண்டு மூன்று முறை தேதி மாற்றப்பட்டதாம். ஆனால் விழாவிற்கு அழைத்த அன்பர்கள் மாற்றப்படவில்லை அவர்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்புச் செய்து இருக்கிறார்கள்.


நான்  எப்போது 100வது நடைப்பயணம் வரும் என்று ஆவலாக இருந்தேன். ஆனால் இரண்டு மூன்று நடைப்பயணத்தில் கணுக்கால் வலியால் கலந்து கொள்ள முடியவில்லை. முகநூல் சகோதரி மீரா பாலாஜி அவர்கள் சொன்ன வைத்தியத்தைப் பின்பற்றினேன். அதனால் கால்வலி குறைந்து வருகிறது.  அவருக்கு நன்றி.

ஆண்டவன் சித்தம் நானும் இந்த 100வது நாள் விழாவில் கலந்து கொள்ளவேண்டும் என்று நினைத்து இருக்கிறார்.  


இந்தப் பதிவில் சமணர் மலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைப்  பகிர்கிறேன்.

ஐயனார் கோவிலும் தாமரைத் தடாகமும் அழகாகக் காட்சி அளிக்கும் கீழக்குயில்குடி

திங்கள், 4 பிப்ரவரி, 2019

அபிராமி அன்னைக்கு ஓர் அழகிய அங்கி





திருக்கடவூர்த் தலச்சிறப்பு:
சிவபெருமானது அஷ்ட வீரட்டானத்தில் ஒன்றாக திகழ்வது திருக்கடவூர். இப்போது திருக்கடையூர் என்கின்றனர். இக் கோவில் தருமபுர ஆதீனத்தை சேர்ந்தது.  திருஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகி மூவரால் தேவாரம் பாடப்பட்ட சிறப்பு உடைய பாடல் பெற்ற ஸ்தலம்.பிஞ்சிலம்,(ஒருவகை முல்லைகொடி) ,வில்வமரம் ஆகியவற்றைத் தல விருட்சமாக கொண்டது. தேவர்களும்அசுரர்களும்  பாற்கடல் கடைந்த போது வினாயகரை வழிபடாத காரணத்தால் வினாயகர் இந்த தலத்தில் அமிர்தகுடத்தை மறைத்து வைத்துவிட்டாராம். அந்த அமிர்தகுடமே சிவலிங்கமான காரணத்தால் இங்குள்ள மூலவருக்கு அமிர்தம்+ கடம்= ”அமிர்தகடேஸ்வரர் ‘ என பெயர்.