”வைகுண்ட ஏகாதசியும் ஆலயதரிசனமும் ”என்று ஜனவரி 19ஆம் தேதி நான் இட்ட பதிவின் தொடர்ச்சி.
வைகுண்ட ஏகாதசி அன்று நாங்கள் அடுத்ததாய்ச் சென்ற தலம் திருத்தெற்றியம்பலம் (பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோயில்)
திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்)
மூலவர் செங்கண்மால் ரங்கநாதன், ஸ்ரீலக்ஷ்மீரங்கர் என்றதிருநாமங்கள்,
4 புஜங்கள், புஜங்கசயனத் திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார்: செங்கமலவல்லி
தீர்த்தம்: சீரிய புஷ்கரிணி
விமானம்: வேத விமானம்
ப்ரத்யக்ஷ்ம்: நாச்சியார், அநந்தாழ்வார்.
மங்களாசாஸனம்: திருமங்கையாழ்வார் _ 10பாசுரங்கள்.
ஸ்ரீரங்கத்தில் உள்ளது போல் இங்கு பெருமாள் பள்ளிகொண்டு உள்ளார். பட்டர்,பெருமாளுக்கு அழகாய் அலங்காரம் செய்து இருந்தார் . உற்சவர் பூப் பந்தல் அலங்காரத்தில் இருந்தார்.
* * *
திரு அரிமேய விண்ணகரம்
இதனை குடமாடும் கூத்தர் கோயில் என்றே அழைக்கின்றனர்.
மூலவர் : குடமாடும் கூத்தர்(தைலக்காப்பு திருமேனி)
வீற்றிருக்கும் திருக்கோலம்(கிழக்கே திருமுக மண்டலம்)
உதஸவர் : சதுர்புஜகோபாலன்
தாயார் : அம்ருதவல்லி
தீர்த்தம் :கோடி தீர்த்தம், அம்ருத தீர்த்தம்
விமானம் : உச்சச்ருங்க விமானம்
ப்ரத்யக்ஷம் : உதங்க முனிவர்
மங்களாசாஸனம் : திருமங்கை ஆழ்வார்: 10 பாசுரம்.
நல்ல கம்பீரமான தோற்றத்தில் இடது காலை குடத்தின் மேல் வைத்த தோற்றத்தில் மிக அழகாய் இருக்கிறார். பட்டர் கீழே பாத தரிசனம் செய்து வைக்கிறார். குடத்திற்கும் பாதங்களுக்கும் வெள்ளிக் கவசம் சார்த்தப்பட்டு இருக்கிறது. கோவில் சமீபத்தில் கும்பாபிஷேகம் ஆனதால் பளிச் என்று அழகாய் இருக்கிறது.
வைகுண்ட ஏகாதசிக்கு நான் போட்ட கோலம்.
இப்படி நாங்கள் தாமரை கண்ணனின் தாமரைப் பாதங்களை தரிசனம் செய்து வந்தோம்.
திருமணிமாடக் கோயிலில் வரும் ஜனவரி 31ஆம் தேதி கருடசேவை நடைபெறவிருக்கிறது .தை அமாவாசைக்கு மறுநாள் 11 திவ்யதேசத்துப் பெருமாள்களும் கருடவாஹனங்களில் எழுந்தருளுவார்கள். திருநகரியிலிருந்து திருமங்கையாழ்வார் தன் மனைவி குமுதவல்லியுடன் வந்து மங்களாசாஸனம் செய்துஅருளுவார்.
பார்க்க வாய்ப்பு இருப்பவர்கள் பார்க்கத்தான் மறுபடியும் இந்த தகவல்.
வாழ்க வளமுடன்!
_______________________
வைகுண்ட ஏகாதசி அன்று நாங்கள் அடுத்ததாய்ச் சென்ற தலம் திருத்தெற்றியம்பலம் (பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோயில்)
திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்)
மூலவர் செங்கண்மால் ரங்கநாதன், ஸ்ரீலக்ஷ்மீரங்கர் என்றதிருநாமங்கள்,
4 புஜங்கள், புஜங்கசயனத் திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார்: செங்கமலவல்லி
தீர்த்தம்: சீரிய புஷ்கரிணி
விமானம்: வேத விமானம்
ப்ரத்யக்ஷ்ம்: நாச்சியார், அநந்தாழ்வார்.
மங்களாசாஸனம்: திருமங்கையாழ்வார் _ 10பாசுரங்கள்.
ஸ்ரீரங்கத்தில் உள்ளது போல் இங்கு பெருமாள் பள்ளிகொண்டு உள்ளார். பட்டர்,பெருமாளுக்கு அழகாய் அலங்காரம் செய்து இருந்தார் . உற்சவர் பூப் பந்தல் அலங்காரத்தில் இருந்தார்.
* * *
திரு அரிமேய விண்ணகரம்
இதனை குடமாடும் கூத்தர் கோயில் என்றே அழைக்கின்றனர்.
மூலவர் : குடமாடும் கூத்தர்(தைலக்காப்பு திருமேனி)
வீற்றிருக்கும் திருக்கோலம்(கிழக்கே திருமுக மண்டலம்)
உதஸவர் : சதுர்புஜகோபாலன்
தாயார் : அம்ருதவல்லி
தீர்த்தம் :கோடி தீர்த்தம், அம்ருத தீர்த்தம்
விமானம் : உச்சச்ருங்க விமானம்
ப்ரத்யக்ஷம் : உதங்க முனிவர்
மங்களாசாஸனம் : திருமங்கை ஆழ்வார்: 10 பாசுரம்.
நல்ல கம்பீரமான தோற்றத்தில் இடது காலை குடத்தின் மேல் வைத்த தோற்றத்தில் மிக அழகாய் இருக்கிறார். பட்டர் கீழே பாத தரிசனம் செய்து வைக்கிறார். குடத்திற்கும் பாதங்களுக்கும் வெள்ளிக் கவசம் சார்த்தப்பட்டு இருக்கிறது. கோவில் சமீபத்தில் கும்பாபிஷேகம் ஆனதால் பளிச் என்று அழகாய் இருக்கிறது.
தாயார் சன்னதி
உச்சச்ருங்க விமானம்
அமிர்தகடவல்லி
ஸ்வாமி விமானம்
*** ****
அடுத்தது - திருமணிக்கூடம்:-
திருமணிக்கூட வாசல்
திருமணிக்கூடம்
மூலவர் : வரதராஜப்பெருமாள் (மணிக்கூடநாயகன்)
நின்ற திருக்கோலம் , கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் : திருமாமகள் நாச்சியார்(ஸ்ரீதேவி), பூதேவி
தாயாருக்குத் தனிச்சந்நதி கிடையாது.
தீர்த்தம் :சந்திர புஷ்கரணி.
விமானம் : கனக விமானம்
ப்ரத்யக்ஷ்ம் : பெரிய திருவடி, சந்திரன்.
மங்களாசாஸனம் : திருமங்கை ஆழ்வார் : 10 பாசுரங்கள்
*** ***
திருச்செம்பொன்செய் கோயில்
மூலவர் :பேரருளாளன் , நின்ற திருக்கோலம்,
கிழக்கே திருமுக மண்டலம்
உத்ஸவர் : ஹேமரங்கர் , செம்பொன்னரங்கர்
தாயார் : அல்லிமாமலர் நாச்சியார்.
தீர்த்தம் : நித்யபுஷ்கரணி, கனகதீர்த்தம்
விமானம் : கனக விமானம்
ப்ரத்யக்ஷம் : ருத்ரன்
மங்களாசாஸனம் : திருமங்கை ஆழ்வார் : 10 பாசுரங்கள்.
வைகுண்ட ஏகாதசிக்கு நான் போட்ட கோலம்.
இப்படி நாங்கள் தாமரை கண்ணனின் தாமரைப் பாதங்களை தரிசனம் செய்து வந்தோம்.
திருமணிமாடக் கோயிலில் வரும் ஜனவரி 31ஆம் தேதி கருடசேவை நடைபெறவிருக்கிறது .தை அமாவாசைக்கு மறுநாள் 11 திவ்யதேசத்துப் பெருமாள்களும் கருடவாஹனங்களில் எழுந்தருளுவார்கள். திருநகரியிலிருந்து திருமங்கையாழ்வார் தன் மனைவி குமுதவல்லியுடன் வந்து மங்களாசாஸனம் செய்துஅருளுவார்.
பார்க்க வாய்ப்பு இருப்பவர்கள் பார்க்கத்தான் மறுபடியும் இந்த தகவல்.
வாழ்க வளமுடன்!
_______________________