தாய்லாந்து பயணத்தில் பார்த்த இடங்கள் தொடர் பதிவாக இடம் பெறுகிறது.
தாய்லாந்து அரசுக்கு சொந்தமான புத்த கோயில், பழங்கால கோயில் .மன்னர் முதலாம் ராமர் கட்டளைப் படி கட்டியது. இங்கு புத்த துறவிகள் தர்மத்தை படிப்பதற்காக கட்டப்பட்டது.
தாய்லாந்து நகரின் தலைநகரம் பேங்காங்கில் அமைந்துள்ளது இந்த மடாலயம்.
தாய்லாந்து பயணத்தில் பார்த்த இடங்கள் தொடர் பதிவாக இடம் பெறுகிறது.
தாய்லாந்து அரசுக்கு சொந்தமான புத்த கோயில், பழங்கால கோயில் .மன்னர் முதலாம் ராமர் கட்டளைப் படி கட்டியது. இங்கு புத்த துறவிகள் தர்மத்தை படிப்பதற்காக கட்டப்பட்டது.
தாய்லாந்து நகரின் தலைநகரம் பேங்காங்கில் அமைந்துள்ளது இந்த மடாலயம்.
புத்த மடாலயத்தில் பிரகாரத்தில் தோட்டம் இருந்தது, மரங்களுக்கும் செடிகளுக்கும் இடையில் அமர்ந்து யோகா செய்யும் சிலைகள் இருந்தது. அந்த சிலைகள் படம் இந்த பதிவில் .
இதற்கு முன் போட்ட பதிவின் சுட்டி. பார்க்கவில்லை என்றால் பார்க்கலாம்.
தாய்லாந்து பயணத்தில் பார்த்த இடங்கள் தொடர் பதிவாக இடம் பெறுகிறது.
தாய்லாந்து அரசுக்கு சொந்தமான புத்த கோயில், பழங்கால கோயில் .மன்னர் முதலாம் ராமர் கட்டளைப் படி கட்டியது. இங்கு புத்த துறவிகள் தர்மத்தை படிப்பதற்காக கட்டப்பட்டது.
கோயில் படங்கள் இடம்பெறுகிறது இந்த பதிவில்.
தாய்லாந்து நகரின் தலைநகரம் பேங்காங்கில் அமைந்துள்ளது இந்த மடாலயம்.
2026 ஆம் ஆண்டு உலக நீர் தினம், பாலின சமத்துவத்தில் நீரின் பங்கின் மீது கவனம் செலுத்தும்.
உலக நீர் தினம். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று ஜக்கிய நாடுகள் சபையால் உலகளவில் கொண்டாடப்படும் ஒரு தினமாகும்.
நீர் மற்றும் சுகாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதும், பாதுகாப்பான நீர் வசதியின்றி வாழும் 220 கோடி மக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருபொருள் இருக்கும்.
இந்த ஆண்டு , 2026 -ல் உலகநீர்தினத்தின் கருப்பொருள்
" நீர் பாய்கிறது, சமத்துவம் வளர்கிறது" இந்தக் கருப்பொருள்,
தண்ணீர் நெருக்கடியால் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது ஏற்படும் சமமற்ற தாக்கத்தை வலியுறுத்துவதோடு , மேலும் சமத்துவமான எதிர்காலத்திற்காக நீர் தலைமைத்துவம், மேலாண்மை மற்றும் முடிவெடுப்பதில் அவர்களின் முக்கியப் பங்க்கிற்காக வாதிடுகிறது.
நியூஜெர்சியில் மகன் வீட்டு தோட்டத்துக்கு வந்த சிட்டுக்குருவிகள்
மார்ச் 20 இன்று உலக சிட்டுக்குருவி தினம். ஒவ்வொரு ஆண்டும் பதிவு போடுவேன்.
இந்த ஆண்டு புதிதாக போட குருவிகள் எங்கள் வளாகத்திற்கு வரவில்லை.
வீட்டு இருபக்கமும் முன்பு காலி மனைகள் அதில் ஏராளமான மரங்கள், செடி, கொடிகள் இருந்தன. குருவிகளுக்கு கூடு கட்ட இலை தளைகளும், உணவாக புழு பூச்சிகளும் கிடைத்தன, அவை வந்து எங்கள் குடியிருப்புகளில் கூடு கட்டி மகிழ்வாய் இருந்தது.
எங்கள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள விநாயகருக்கு புதிதாக செய்யப்பட்ட செப்பு கவசம். ஜனவரி 25 ஆம் தேதி சாற்றப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அந்த படங்கள் இதில் இடம்பெருகிறது இந்த பதிவில்..
நாளை சங்கடஹர சதுர்த்தி அதனால் இந்த பகிர்வு.
தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் நன்கு தேர்வு எழுத பிரார்த்தனைகள்.
ரோஜா பதிவை படிக்க வரும் அனைவருக்கும் மலர் கொத்து கொடுத்து வரவேற்கிறேன்.
ரோஜா எந்த நிறந்தில் இருந்தாலும் அழகானதுதான், அதன் மணம் எந்த அளவில் இருந்தாலும் அது இறைவனின் அன்பை ஏந்தி வருவது.
- அன்னை அரவிந்தர்
மலர்களில் ராஜா என்று பாராட்டப்படும் மனம் கவர்ந்த ரோஜா பூக்களின் படங்கள் இந்த பதிவில். மலரே மலரே நீயார் ? என்று மலரிடம் கேட்டதற்கு மலர் சொல்லும் பதிலும் இருக்கிறது பதிவில்.
இந்த 77 வது குடியரசு தின அணிவகுப்பு விழா எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்தது. புது தில்லியில் கர்த்தவ்ய பாதையில் (முன்னாள் ராஜ பாதை) குடியரசுத் தலைவர் முன்னிலையில் நடைபெறும் அணிவகுப்பு விழாவில் என் பேத்தியும் கலந்து கொண்டு வந்தேமாதரம்பாடலுக்கு ஆடியது மிகவும் மகிழ்ச்சியை தந்தது.
புது தில்லியின் கர்த்தய பாதையில் (முன்னாள் ராஜபாதை)
நடைபெறும்
முன்பு என் அண்ணனின் மகளும் ஒரு வருடம் அணிவகுப்பில் கலந்து கொண்டாள் அப்போதும் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தோம்.
ஒவ்வொரு ஆண்டும் வீட்டிலிருந்து தொலைக்காட்சியில் அலங்கார ஊர்திகளையும் , கம்பீரமான துருப்புகளின் அணிவகுப்பையும் கண்டு களிப்போம்.
இந்த முறை பேத்தியும் கலந்து கொண்டதுமட்டற்ற மகிழ்ச்சி.
மெல்ல மெல்ல உதயமாகும் கதிரவன் (அரிசோனா) மகன் அனுப்பிய காணொளி
எங்கள் குடியிருப்பு வளாகத்தில் பொங்கல் விழா 11 ஆம் தேதி நடந்தது
கூடாரவல்லி அன்று பொங்கல் விழா நடந்தது
"கூடாரவல்லி வெல்லும் சீர் கோவிந்தா" பாடலின் கடைசி வரியில் ஆண்டாள் சொல்லுவது போல கூடியிருந்து குளிர்ந்தேலே ரெம்பாவாய் எல்லோரும் கூடியிருந்து பொங்கல் பிரசாதம் உண்டு மகிழ்ந்தோம்.
பொங்கல், கடலைமிட்டாய் ,ஜூஸ் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது.
பொங்கல் பானை ஏற்றியாச்சு
பால் பொங்கி விட்டது
எல்லோரும் பானையில் அரிசி இட்டோம்
கலந்து கொண்டவர்கள்
உற்சாகமாக கும்மி கொட்டினார்கள்
குடியிருப்பில் பணி புரிபவர்கள் , மற்றும் இஸ்லாமியர் , கிறிஸ்த்துவ மதத்தை சேர்ந்தவர்கள் என்று அனைவரும் உற்சாகமாக பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்கள்.
மாறுவேட போட்டியில் கலந்து கொண்ட குழந்தைகள் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் கொடுத்தார் இஸ்லாம் மதத்தை சேர்ந்த மருத்துவர்
இவர்களும் இஸ்லாம் தான். இந்த குழந்தை நன்றாக பேசினாள்
விவசாயி படும் கஷ்டங்களை சொன்னாள்
. "நாங்கள் சேற்றில் கால் வைத்தால் தான் நீங்கள் சோற்றில் கை வைக்கமுடியும். கரும்பு பயிர் செய்தேன் யாரும் வாங்கவில்லை, வாழை நட்டேன் யாரும் வாங்க வில்லை, மஞ்சள் நட்டேன் யாரும் வாங்க வில்லை கஷ்டத்தில் வயலை ப்ளாட் போட்டு விற்றால் வாங்க நான் நீ என்று ஓடி வருகிறார்கள் வயல் எல்லாம் ப்ளாட் ஆனால் நாளை உணவுக்கு எங்கு போவார்கள் என்ற கேள்வி எழுப்பினாள்." போரைவிட சோறுதானே முக்கியம் என்றாள்.
முகம் கை , கால் எல்லாம் சேறு பூசி கொண்டு மண்வெட்டியுடன் வந்து நன்றாக பேசினாள். சின்ன மலரின் அம்மா, பாட்டி, தாத்தா எல்லோரும் நன்றாக பேசினார்கள். பாட்டி கற்க கசடற திருக்குறளுக்கு விளக்கம் அழகாய் கொடுத்தார்கள் , தாத்தா நன்றாக நகைச்சுவையாக பேசினார்.
வட நாட்டு குழந்தைகள் கண்ணன் வேஷம் போட்டு வந்து நான் கண்ணன் வந்து இருக்கிறேன் என்று சொல்லி புல்லாங்ககுழல் ஊதி காட்டினான்.
முதலில் மைக் வைத்து கொண்டு நிற்பவர் புவனா சந்திரசேகரன் எழுத்தாளர் எங்கள்வீட்டு எதிர் வீடு அவர் தான் பொங்கல் விழாவை தொகுத்து வழங்கினார். கோலபோட்டியில்கலந்து கொண்டவர்களுக்கு புத்தகம் பரிசு அளித்தார்.
கோல போட்டியில் ஒருவர் போட்ட கோலம்
எல்லோரையும் சீட்டு எடுக்க வைத்து அதில் வருவதை பேச சொன்னார்கள்.
சிலருக்கு பாட்டு, சிலருக்கு நடனம், சிலருக்கு ஆண் போல பேசுவது, திருக்குறள் சொல்ல வேண்டும், தாலாட்டு பாட வேண்டும், ரமைஸ் சொல்ல வேண்டும் என்று எல்லாம் எழுதி வைத்து இருந்தார்கள்.
எனக்கு எது வேண்டுமென்றாலும் பேசலாம் என்றார்கள்.நான் முன்பு முதியோர்கள் இளையவர்களை வழி நடத்தி சென்றார்கள். இப்போது இளையவர்கள் முதியவரகளை வழி நடத்தி செல்கிறார்கள் . நான் இளையவர்கள் வழி நடத்துவதில் இப்போது இருக்கிறேன் என்றேன்.
மற்றும் வளாகத்தில் உள்ளவர்கள் எல்லாம் என்னை நன்கு பார்த்து கொள்கிறார்கள். வளாக பணியாளர்கள் எல்லாம் எப்போது என்ன உதவி வேண்டுமென்றாலும் செய்து தருகிறார்கள் இன்முகத்தோடு, அவர்களுக்கும், மற்றும் குடியிருப்பு நிர்வாக பொறுப்பில் இருப்பவரக்ள் எல்லாம் விழாவை சிறப்பாக நடத்தியதற்கும் பாராட்டி எல்லோருக்கும் நன்றி சொல்லி பொங்கல் வாழ்த்து சொன்னேன்.
என்னை கைபிடித்து அழைத்து சென்ற பெண் பேர் கேட்டேன் கோமதி என்றார்
வளாகத்திற்கு புதிதாக வந்து இருக்கிறார்.
பொங்கல் திருவிழாவே நன்றி சொல்லும் நாள் அல்லவா!
பொங்கல் திருவிழாவே நன்றி சொல்லும் திருவிழா முதல் நாள் சூரியனுக்கு
அடுத்த நாள் விவசாயிகளுக்கு , விவசாயத்திற்கு உதவும் மாடுகளுக்கும் உழவு கருவிகளுக்கும் நன்றி சொல்வோம் உழவர் திருநாளில் .
வாழ்க்கைக்கு வேண்டிய நல்ல நெறிகளை போதிக்க உலகப்பொதுமறையை கொடுத்த திருவள்ளுவருக்கு நன்றி சொல்லுவோம்.
நம் நலம் விரும்பும் உடன்பிறந்த சகோதர்களுக்கு நன்றி சொல்லி அவர்களுக்காக கனுப்பிடி வைத்து உற்றார், உறவுகள், மூத்தவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கும் நாள்.
உறியடி நடந்தது பெண்களுக்கு மூன்று பெண்கள் வெற்றி பெற்றார்கள்.
என் தம்பி பேரன், பேத்தி படிக்கும்பள்ளியில் அறிவியல் பொங்கல் என்று சிறப்பாக நடந்து இருக்கிறது. என் தம்பி மகள் அனுப்பிய படங்கள்.
அந்தக்கால விளையாட்டுகளை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து அவர்கள் விளையாடி மகிழ்ந்தார்கள் .
கல்லாங்காய்
குழந்தைகள் மாட்டு வண்டியில் ஏறி கொண்டு பொங்கலோ பொங்கல் என்று சொல்லி செல்கிறார்கள்
பனநுங்கு வண்டி ஓட்டும் தம்பி பேரன், பேத்தி.
பல்லாங்குழி
தாயம்
கிச்சு கிச்சு தாம்பூலம்
குழந்தைகள் எல்லாம் கைபேசியில் வீடியோ கேம் விளையாடாமல் இப்படி பராம்பரிய விளையாட்டுக்களை விளையாடுவது மனதுக்கும் , உடலுக்கும் உற்சாகம் மற்றும் ஆரோக்கியம் தரும். நினைவாற்றல், கவனம் சிதறாமல் விளையாடும் திறமையும் வளரும்.
இந்த பள்ளியில் அதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து இருப்பதை பாராட்ட வேண்டும். இந்த பள்ளியில் நவராத்திரி விழாவும் சிறப்பாக நடந்தது.
இன்று தொலைகாட்சி செய்திகளில் பள்ளிக்கூடம், கல்லூரிகளில் பொங்கல் விழாநடந்ததை காட்டினார்கள். ஒரு பள்ளியில் நெல்லை குத்தி அரிசியாக்கி புடைத்து உமி நீக்கி குழந்தைகள் பொங்கல் வைத்தார்கள். பராம்பரிய முறையை தெரிந்து கொள்கிறார்கள். குலவை சத்தம் போடுகிறார்கள் பால் பொங்கும் போது.
2022 ஆம் வருடம் பேரன் எங்கள் வீட்டு வாசலில் பொங்கல் கோலம் வரைந்து வாழ்த்து எழுதுகிறான், ஆங்கிலத்திலும்,தமிழிலும்.
இந்த வருடம் பேரன் போட்ட பொங்கல் கோலம்
அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள். உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள், வாழ்க வளமுடன்