இந்த 77 வது குடியரசு தின அணிவகுப்பு விழா எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்தது. புது தில்லியில் கர்த்தவ்ய பாதையில் (முன்னாள் ராஜ பாதை) குடியரசுத் தலைவர் முன்னிலையில் நடைபெறும் அணிவகுப்பு விழாவில் என் பேத்தியும் கலந்து கொண்டு வந்தேமாதரம்பாடலுக்கு ஆடியது மிகவும் மகிழ்ச்சியை தந்தது.
புது தில்லியின் கர்த்தய பாதையில் (முன்னாள் ராஜபாதை)
நடைபெறும்
முன்பு என் அண்ணனின் மகளும் ஒரு வருடம் அணிவகுப்பில் கலந்து கொண்டாள் அப்போதும் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தோம்.
ஒவ்வொரு ஆண்டும் வீட்டிலிருந்து தொலைக்காட்சியில் அலங்கார ஊர்திகளையும் , கம்பீரமான துருப்புகளின் அணிவகுப்பையும் கண்டு களிப்போம்.
இந்த முறை பேத்தியும் கலந்து கொண்டதுமட்டற்ற மகிழ்ச்சி.
.கட்டைவிரலை தூக்கி காட்டி புன் சிரிப்புடன் இருப்பவள் என் பேத்தி.
140 பரத நாட்டிய கலைஞர்களுடன் ஆடினாள். பாடல் வந்தேமாதரம் காணொளியில் கடைசியில் வரும் "வந்தே வந்தே மாதரம் "என்று ஒலிக்கும் பாடல்.
13 ஆம் தேதியிலிந்து ஒத்திகை நடைபெற்று இருக்கிறது.
குளிரில் சாக்ஸ் போட்டுக் கொண்டு ஆடிஇருக்கிறார்கள். பாரத பிரதமர், குடியரசு தலைவர் வரும் முன்பே அவர்களை கர்த்தவ்ய பாதையில் அமர வைத்து விட்டார்களாம் .( இரவே ஒப்பனைகளை முடித்து கொண்டு 2.30) குளிரில் தூக்கம் இல்லாமல் இருந்தாலும் அவர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்து முடித்து விட்ட மகிழ்ச்சி என்றாள்.
முதலில் வருகிறாள்
பேரன் கவின் காணொளியிலிருந்து எனக்கு எடுத்து அனுப்பினான்
இடது ஓரத்தில் கையை குவித்தபடி வருகிறாள்



.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக