. "நாங்கள் சேற்றில் கால் வைத்தால் தான் நீங்கள் சோற்றில் கை வைக்கமுடியும். கரும்பு பயிர் செய்தேன் யாரும் வாங்கவில்லை, வாழை நட்டேன் யாரும் வாங்க வில்லை, மஞ்சள் நட்டேன் யாரும் வாங்க வில்லை கஷ்டத்தில் வயலை ப்ளாட் போட்டு விற்றால் வாங்க நான் நீ என்று ஓடி வருகிறார்கள் வயல் எல்லாம் ப்ளாட் ஆனால் நாளை உணவுக்கு எங்கு போவார்கள் என்ற கேள்வி எழுப்பினாள்." போரைவிட சோறுதானே முக்கியம் என்றாள்.
முகம் கை , கால் எல்லாம் சேறு பூசி கொண்டு மண்வெட்டியுடன் வந்து நன்றாக பேசினாள். சின்ன மலரின் அம்மா, பாட்டி, தாத்தா எல்லோரும் நன்றாக பேசினார்கள். பாட்டி கற்க கசடற திருக்குறளுக்கு விளக்கம் அழகாய் கொடுத்தார்கள் , தாத்தா நன்றாக நகைச்சுவையாக பேசினார்.
வட நாட்டு குழந்தைகள் கண்ணன் வேஷம் போட்டு வந்து நான் கண்ணன் வந்து இருக்கிறேன் என்று சொல்லி புல்லாங்ககுழல் ஊதி காட்டினான்.
முதலில் மைக் வைத்து கொண்டு நிற்பவர் புவனா சந்திரசேகரன் எழுத்தாளர் எங்கள்வீட்டு எதிர் வீடு அவர் தான் பொங்கல் விழாவை தொகுத்து வழங்கினார். கோலபோட்டியில்கலந்து கொண்டவர்களுக்கு புத்தகம் பரிசு அளித்தார்.
கோல போட்டியில் ஒருவர் போட்ட கோலம்
எல்லோரையும் சீட்டு எடுக்க வைத்து அதில் வருவதை பேச சொன்னார்கள்.
சிலருக்கு பாட்டு, சிலருக்கு நடனம், சிலருக்கு ஆண் போல பேசுவது, திருக்குறள் சொல்ல வேண்டும், தாலாட்டு பாட வேண்டும், ரமைஸ் சொல்ல வேண்டும் என்று எல்லாம் எழுதி வைத்து இருந்தார்கள்.
எனக்கு எது வேண்டுமென்றாலும் பேசலாம் என்றார்கள்.நான் முன்பு முதியோர்கள் இளையவர்களை வழி நடத்தி சென்றார்கள். இப்போது இளையவர்கள் முதியவரகளை வழி நடத்தி செல்கிறார்கள் . நான் இளையவர்கள் வழி நடத்துவதில் இப்போது இருக்கிறேன் என்றேன்.
மற்றும் வளாகத்தில் உள்ளவர்கள் எல்லாம் என்னை நன்கு பார்த்து கொள்கிறார்கள். வளாக பணியாளர்கள் எல்லாம் எப்போது என்ன உதவி வேண்டுமென்றாலும் செய்து தருகிறார்கள் இன்முகத்தோடு, அவர்களுக்கும், மற்றும் குடியிருப்பு நிர்வாக பொறுப்பில் இருப்பவரக்ள் எல்லாம் விழாவை சிறப்பாக நடத்தியதற்கும் பாராட்டி எல்லோருக்கும் நன்றி சொல்லி பொங்கல் வாழ்த்து சொன்னேன்.
என்னை கைபிடித்து அழைத்து சென்ற பெண் பேர் கேட்டேன் கோமதி என்றார்
வளாகத்திற்கு புதிதாக வந்து இருக்கிறார்.
பொங்கல் திருவிழாவே நன்றி சொல்லும் நாள் அல்லவா!
பொங்கல் திருவிழாவே நன்றி சொல்லும் திருவிழா முதல் நாள் சூரியனுக்கு
அடுத்த நாள் விவசாயிகளுக்கு , விவசாயத்திற்கு உதவும் மாடுகளுக்கும் உழவு கருவிகளுக்கும் நன்றி சொல்வோம் உழவர் திருநாளில் .
வாழ்க்கைக்கு வேண்டிய நல்ல நெறிகளை போதிக்க உலகப்பொதுமறையை கொடுத்த திருவள்ளுவருக்கு நன்றி சொல்லுவோம்.
நம் நலம் விரும்பும் உடன்பிறந்த சகோதர்களுக்கு நன்றி சொல்லி அவர்களுக்காக கனுப்பிடி வைத்து உற்றார், உறவுகள், மூத்தவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கும் நாள்.
https://www.youtube.com/watch?v=rIML4bF0EoQ
உறியடி நடந்தது பெண்களுக்கு மூன்று பெண்கள் வெற்றி பெற்றார்கள்.
என் தம்பி பேரன், பேத்தி படிக்கும்பள்ளியில் அறிவியல் பொங்கல் என்று சிறப்பாக நடந்து இருக்கிறது. என் தம்பி மகள் அனுப்பிய படங்கள்.
அந்தக்கால விளையாட்டுகளை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து அவர்கள் விளையாடி மகிழ்ந்தார்கள் .
2022 ஆம் வருடம் பேரன் எங்கள் வீட்டு வாசலில் பொங்கல் கோலம் வரைந்து வாழ்த்து எழுதுகிறான், ஆங்கிலத்திலும்,தமிழிலும்.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள். உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள், வாழ்க வளமுடன்
பொங்குக பொங்கல்!
//பொங்குக பொங்குக பூரித்து உள்ளமெலாம்
எங்கும் நிறைந்த நம் ஏகாந்த நிலையறிந்து //
-வேதாத்திரி மகரிஷி
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
------------------------------------------------------------------------------------------------------------------------








.jpg)
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக