என் மாமா, என் கணவர் மற்றும் கணவரின் அண்ணா சிவ பூஜை செய்த படங்கள் இருக்கும்.
இந்த வருடம் என் கணவரின் அண்ணாவீட்டில் நாலு கால பூஜை படங்கள்
திருக்கேதீச்சரம் திருக்கோயில்
கேதீச்சரநாதனை கெளரிநாதர், கேதீச்சரர், மகா துவட்டாபுரநாதர், ஈழக்கைலாயநாதர், தென்கயிலாயநாதர், மத்யசேதுநிவசர், நாகநாதர், இராஜராஜேவரர், நித்தியமணவாளர், பெருந்துறை ஈசன், எனப் பல பெயரால் அழைக்கப்படுகிறார் இத்தலத்தின் புண்ணியதீர்த்தமாகிய பாலாவி ஆறு பற்றி சம்பந்தர் சுவாமிகள் அருளிய பதிகத்தில் “மாதோட்டத்து அத்தர் மன்னு பாலாவியின் கரையிற் கேதீச்சரம் அடைமின்னே” என்றும், சுந்தரர் அருளிய திருப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் ”பாலாவியின் கரைமேல்” என்றும் சிறப்பித்து கூறப்படுகிறது. ”பன்வினை போக்கும் பாலாவி” என்றும், ”பரம்பரன் உருவாய் உற்ற பாலாவி”என்றும் திருக்கேதீச்சரப்புராணம் கூறுகிறது.
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க!
சிவராத்திரி சிறப்பு பதிவாக திருக்கச்சூர் பதிவு போட்டு இருந்தேன் அதிலிருந்து ஒரு சிறு பகுதி :-
சுந்தரர் திருக்கழுக்குன்றம் சென்று விட்டுக் காஞ்சிபுரம் செல்லும் வழியில் திருக்கச்சூர் வந்தார். நீண்ட தூரம் வந்ததால் களைப்பாலும் பசியாலும் வாடினார். அவர் பசியைப் போக்க இறைவர் முதியவர் வேடத்தில் வந்து சுந்தரரிடம் 'இங்கேயே சிறிது நேரம் அமர்ந்து இருங்கள்! இதோ உணவுடன் வருகிறேன்' என்று சொல்லி திருவோடு ஏந்தி வீட்டு வீடாகச் சென்று உணவு பெற்று சுந்தரருக்கும் அவருடன் வந்த அடியார்களுக்கும் அமுது படைத்தார்.
முழுதும் படித்து பாருங்கள்.
தண்டபாணி தேசிகர் பாடிய பாடல்.
இறைவன் அடியாருக்கு இறங்கி வருவான் தாயாய் என்பதற்கு சான்று.
இறைவன் நந்தனார் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து கொடுத்த காட்சியை கண்டு நந்தனார் பரவசபட்டு பாடிய பாடல்
என்னப்பன் அல்லவா எந்தாயும் அல்லவா !
முன்பு சிவன் ராத்திரிக்கு கோயில் போய் வணங்கி வந்து பதிவுகள் போடுவேன், இப்போது வீட்டிலிருந்து ஜோதி தொலைக்காட்சியில் பல கோயில்களை தரிசனம் செய்கிறேன். அதனால் பழைய பதிவை பகிர்ந்து இருக்கிறேன். .
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-------------------------------------------------------------------------------------------------------------------------






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக