ஞாயிறு, 22 மார்ச், 2026

உலக தண்ணீர் தினம் - 2026

  

நன்றி-  கூகுள்

2026 ஆம் ஆண்டு உலக நீர் தினம், பாலின சமத்துவத்தில் நீரின் பங்கின் மீது கவனம் செலுத்தும்.


உலக நீர் தினம். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று ஜக்கிய நாடுகள் சபையால் உலகளவில் கொண்டாடப்படும் ஒரு தினமாகும்.

நீர் மற்றும் சுகாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதும், பாதுகாப்பான நீர் வசதியின்றி வாழும் 220 கோடி மக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.


ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு   கருபொருள் இருக்கும்.

இந்த ஆண்டு , 2026 -ல் உலகநீர்தினத்தின் கருப்பொருள்

"நீரும்  பாலினமும் " என்பதாகும்.அதன் முழக்கம்" எங்கே" என்பதாகும்

" நீர் பாய்கிறது, சமத்துவம் வளர்கிறது"  இந்தக் கருப்பொருள்,

தண்ணீர் நெருக்கடியால் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது ஏற்படும் சமமற்ற தாக்கத்தை வலியுறுத்துவதோடு , மேலும் சமத்துவமான எதிர்காலத்திற்காக நீர் தலைமைத்துவம், மேலாண்மை மற்றும் முடிவெடுப்பதில் அவர்களின் முக்கியப் பங்க்கிற்காக  வாதுடுகிறது.


// பேருலகில் வாழுகின்ற மக்களெல்லாம் பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில்
வேறு என்ன பெருமை இதைவிட எடுத்துப் பேசுவதற்கு //

இப்படிச் சொல்கிறார் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

இந்த ஆண்டு பெண்கள் , சிறுமிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நீரை பாதுகாப்பது போல பெண்களை, சிறுமிகளை பாதுகாக்க வேண்டும்.

உலகின் பல பகுதிகளில் வீட்டு உபயோகம் நீரைச் சேகரிப்பதில் நிர்வாகிப்பதிலும் பெண்களே  . ஆயினும் நீர் அமைப்புகளை நிர்வாகிக்கும் முடிவெடுக்கும்  செயல்முறைகளிலிருந்து  அவர்கள் பெரும்பாலும் விலக்கப்படுகிறார்கள்.  நீர் சேகரிப்பதில் சிலர் தங்கள் கற்றலையும் தொடர முடியவில்லை, பாதுகாப்பும் அவர்களுக்கு இல்லை.

பெண்களையும், சிறுமிகளையும் எவ்வாறு சமமற்ற முறையில் பாதிக்கிறது  என்பதை எடுத்து காட்டுகிறது.

மேலும் நாளைய தலைமுறையை பெற்று கொடுப்பவர்களுக்கு சுத்தமான, சுகாதாரமான நீரை கிடைக்க செய்வது அவசியம்.




இந்த ஆண்டு உலக நீர் தினத்தின் கருப்பொருள், வருங்கால சந்ததியினருக்காக நீரைப் பாதுகாக்கத் தேவையான மாற்றங்களை விரைவாகச் செயல்படுத்தும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது. மோசமான சுகாதாரம், போதுமான சுகாதார வசதியின்மை மற்றும் நீரினால் பரவும் நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் 8.2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறப்பதைத் தடுப்பதற்காக, ஐக்கிய நாடுகள் சபை 2030-ஆம் ஆண்டுக்கான சில நிலையான வளர்ச்சி இலக்குகளை வகுத்துள்ளது.

//பெண்கள், சிறுமிகள் , மற்றும் நலிவடைந்த நிலையில் உள்ளவர்களின் தேவைகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தி சுகாதாரம், மற்றும் தூயமை சேவைகளுக்கான சமமான மற்றும் போதுமான அணுகலை உறுதி செய்தல் மற்றும் திறந்தவெளியில்  மலம் கழிக்கும் பழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருதல். தண்ணீரின் தரத்தை  மேம்படுத்த வேண்டும்.

எல்லா இடங்களிலும் நீர் இழப்பைத் தடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கழிவறைகளில்  நீர் கசிவுகள்  உள்ளதா என்று அடிக்கடி சரிப்பார்க்க வேண்டும்.

குறுகிய  நேர குளியல்  மற்றும்  நீர் சேமிக்கும்  ஷவர் ஹெட்களை  பொறுத்துதல்

பல் துலக்கும் போது, சவரம் செய்யும் போது, பாத்திரம் துலக்கும் போது  காய்கறிகளை சுத்தம் செய்யும் போது தண்ணீரை தொடர்ந்து  ஓட விடுவதை தவிர்க்கவும். 

தானியங்கி  பாத்திரம்  கழுவும்  இயந்திரங்களையும், சலவை இயந்திரங்களையும்  முழுமையாக நிரம்பி இருக்கும் போது  பயன்படுத்தவும். 

தேவைப்படும் போது செடிகளை பராமரித்தல்//


செய்தி தொகுப்பு  https://www.pacehospital.com/world-water-day


மேலும் செய்திகளுக்கு இந்த சுட்டியில் படிக்கலாம்.


உலக தண்ணீர் தினம் (2023)



உலக தண்ணீர் தினம் (2022


இந்த பதிவில்  :-


இந்த பதிவில்  எங்கள் குடியிருப்பு பக்கம் ஏற்பட்டு இருக்கும் மாற்றம் . அதனால் பறவைகள் படும் துயரம் இவற்றை இந்த உலக தண்ணீர் தின நாளில் எழுதலாம் என்று எழுதி இருக்கிறேன் .





எங்கள் குடியிருப்பு வளாகத்துக்கு அருகில்  இருக்கும் இந்த மரங்கள் அடர்ந்த பகுதியில் தான்   பல வகை பறவைகள்  இருந்தன.  இந்த படத்தில் முள்ளு மரங்கள் வெட்டப்பட்டு விட்டது.  இன்னும் அதிகமாய் அடர்த்தியாக இருந்தது. காலை நேரம்  குயிலின் கீதம், செம்போந்து பறவையின் ஒலி  தவிட்டுக்குருவி, மைனா, புல் புல், செண்பகப் பறவை  என்று பறவைகளின் ஒலி அதிகாலை முதல் மாலை வரை கேட்கும்.  அங்கிருந்துதான் எங்கள் குடியிருப்புக்கு பறவைகள் வரும்.

போன பதிவு சிட்டுக்குருவி வரவில்லை இப்போது எங்கள் வளாகத்திற்கு என்று சொன்னதற்கு காரணம் இந்த பதிவில் இருக்கிறது.




உயிர்களைக் காக்க தண்ணீரைக் காப்போம்
இன்று சேமிக்கப்படும் தண்ணீர் நாளை துடைக்கப்படும் கண்ணீர்
அவசியம் அவசியம் நீர் பாதுகாப்பு அவசியம்
சேகரிப்போம் சேகரிப்போம் மழை நீரை சேகரிப்போம்

பள்ளி பிள்ளைகள் பாடிய முழு பாடலையும் படிக்க இந்த பதிவை படிக்கலாம்.
 



தண்ணீர் கஷ்டம் அவ்வளவாக இல்லாத அந்த காலத்தில் தண்ணீரை சிக்கனமாகத்தான் செலவழித்தார்கள். அதிகம் தண்ணீர் செலவழித்தால், அதிகம் காசு செலவழியும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். அப்போதெல்லாம் மோட்டார் கிடையாது. கிணற்றிலிருந்து நீர் இறைக்க வேண்டும். ஒரு வேளை அதற்காகவே இப்படி கூறினார்களோ என்று தோன்றும். இப்போது குழாயைத் திறந்தால் தண்ணீர் கொட்டுகிறது. அதனால் உடம்பு நோவதில்லை, தண்ணீரை சிக்கனமாக செலவழிக்க வேண்டும் என்றும் யாருக்கும் தோன்றுவதில்லை.

பானுமதி வெங்கடேஷ்வரன் பின்னூட்டத்தில் கூறியது





இந்த பதிவை 7411 பேர் படித்து இருக்கிறார்கள்.


தண்ணீர் சிக்கனத்தை விரும்புபவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதனால் இந்த பதிவை நிறைய பேர் படித்து இருக்கிறார்கள்.



//நீரின்றி அமையாது உலகு.  அதிகரித்துக்கொண்டே போகும் மக்கள் தொகைப் பெருக்கத்தில் தண்ணீரின் தேவையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.  மனிதன் சுயநலமாக பூமியை தோண்டி தண்ணீர் எடுத்துக் கொண்டே இருக்கிறான்.மண்ணைத்தோண்டி தண்ணீர் தேடாமல் தன்னைத் தோண்டி ஞானம் கண்டால் விழித்துக்கொண்டு தண்ணீரை சேமிக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பான்!  அடுத்த உலக யுத்தம் தண்ணீருக்காகத்தான் என்கிறார்கள். .  என்ன  ஆகுமோ எதிர்காலம்!//

ஸ்ரீராம் பின்னூட்டம். 

உலக தண்ணீர் தினம் (2023)




 நீர் சேமிப்பும் ,  நீர் நிலைகளை  சுத்தமாக வைத்து இருப்பதும்  அவசியமாகிறது.

பழைய பதிவுகளிலிருந்து படங்கள். குலதெய்வம் கோயில்  அருகில் இருக்கும் ஏரி



மாயவரம் வீட்டு மொட்டைமாடியில் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பேன் அப்போது எடுத்தது.

அனைத்து உயிர்களுக்கும் நீர் அவசியம்.

//நீர்இன்றி அமையாது உலகெனின் யார்யார்க்கு
வான் இன்று அமையாது ஒழுக்கு.//

திருவள்ளுவர் வாக்குப்படி நீர் இல்லாமல் உலகியல் வாழ்வு நடைபெறாது.
நீரை பாதுகாப்போம்.



வாழ்க வையகம் ! வாழ்க வையகம்!  வாழ்க வளமுடன்! 

  •  ------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக