புதன், 18 ஜூன், 2025

புத்த மடாலயம் (வாட்ஃபிரா சேதுபோன் விமோன் மங்கலராம் ராஜ்வரமஹாவிஹான். ) பேங்காக்

 


தாய்லாந்து பயணத்தில் பார்த்த இடங்கள் தொடர் பதிவாக இடம் பெறுகிறது.

 தாய்லாந்து அரசுக்கு சொந்தமான புத்த கோயில், பழங்கால கோயில்  .மன்னர்  முதலாம்  ராமர்  கட்டளைப் படி கட்டியது. இங்கு புத்த துறவிகள் தர்மத்தை படிப்பதற்காக கட்டப்பட்டது.

 கோயில் படங்கள் இடம்பெறுகிறது இந்த பதிவில்.

தாய்லாந்து நகரின் தலைநகரம் பேங்காங்கில் அமைந்துள்ளது இந்த மடாலயம்.



 முதலாம் மன்னர் ராமரின் சாம்பல்  (அஸ்தி) புத்தர் சிலைபீடத்தின் அடியில் வைக்கப்பட்டு இருக்கிறது.

வலது பக்கம் மகாராஜாவின் படம் இங்கும் இருக்கிறது

இந்த புத்தர் இருக்கும் அறை பெரிது, கீழே அமர்ந்து எல்லோரும் தியானம் செய்கிறார்கள்.

இந்த மடாலயத்தின் பேர் வாட்ஃபிரா சேதுபோன் விமோன் மங்கலராம் ராஜ்வரமஹாவிஹான். இது அரச மடாலயம் என்பதால் மன்னர் அரண்மனை பக்கம் அமைந்து  இருக்கிறது. சக்ரி வமசத்தின் முதல் மன்னர் ராமரின் ஆட்சி காலத்தில் மிக முக்கித்துவம் பெற்று விளங்கியதாம்.  அரச மடாலயமாக இருப்பதால் மீண்டும் மீண்டும் புதுபிக்கப்பட்டு புத்தம் புதிது போலவே இருக்கிறது. 


இந்த மடாலயம் கிராண்ட் பேலஸின் தெற்கே 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது, வடக்கே தாய் வாங் சாலை, கிழக்கே சனம் சாய் சாலை, தெற்கே செத்தகன் சாலை மற்றும் மேற்கே மஹாரத் சாலை ஆகியவை உள்ளன. சேதுபோன் சாலையில் ஒரு உயரமான வெள்ளைச் சுவரால் பிரிக்கப்பட்ட இந்த மடாலயம் இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது: புனிதமான (அல்லது ஒரு தேவாலயப் பிரிவு = புத்தவாஸ்) மற்றும் குடியிருப்பு (அல்லது துறவியின் வாழ்க்கைப் பிரிவு = சங்கவாஸ்).


மன்னர் அரண்மனை

இன்று பேரனுக்கு பிறந்த நாள் உங்கள் வாழ்த்துக்களை அவனுக்கு கொடுங்கள்.

சிறிய அறை முழுவதும் நிறைந்து இருக்கிறார், மேல் விதானம் அழகு

ஒளி வீசும் முகம்

கைவிரல்கள் எல்லாம் நீட்ட நீட்டமாய்


பின் பக்கம் போதி மரம்

பாம்பணை வித விதமாய் மலர்கள் வித விதமாய் உண்மையான மலர்கள்



எத்தனை புத்தர்கள் அமர்ந்து  தியானம் செய்கிறார்கள் 

 பரந்து விரிந்த கோயில் நின்றும், கிடந்தும் அமர்ந்தும் பல புத்தர்கள் நம் கண்ணையும், கருத்தையும் கவர்கிறார்கள்.


இன்னும் வரும்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் !

-----------------------------------------------------------------------------------------------

8 கருத்துகள்:

  1. புத்தர் கோயில் படங்கள் அழகு. புத்தர் மின்னுகிறார்.

    கோயிலின் பெயரும் அரசரின் பெயரும்தான் வாயில் நுழைவதற்கே கஷ்டமாகிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைதமிழன், வாழ்க வளமுடன்

      //புத்தர் கோயில் படங்கள் அழகு. புத்தர் மின்னுகிறார்.//

      நன்றி.

      //கோயிலின் பெயரும் அரசரின் பெயரும்தான் வாயில் நுழைவதற்கே கஷ்டமாகிருக்கிறது.//

      அரசர் பேர் எல்லாம் கடைசியில் ராமர் என்று முடியும் .ராமரை மட்டும் நினைத்து கொள்ள வேண்டும், முதலாம் ராமர், இரண்டாம் ராமர் என்று.

      நீக்கு
  2. பேரன் கவினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்வு சிறக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பேரன் கவினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்வு சிறக்கட்டும்.//

      பேரனுக்கு முதலில் வந்து வாழ்த்து சொல்லி ஆசீர்வாதம் செய்தமைக்கு நன்றி நெல்லை.

      நீக்கு
  3. கோமதிக்கா, முதலில் உங்களின் அன்பு செல்ல பேரனுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! கவின் விரும்பியதை எல்லாம் அடைந்து, படித்து வாழ்வில் மிளிர்ந்து, நல்ல மனிதராக , உங்க வீட்டுப் பெரியவர்கள் போன்று நிறைய நல்லது செய்திட இறைவனின் அருள் எப்போதும் இருந்திட வாழ்த்துகள், கோமதிக்கா.

    பின்னர் பதிவுக்கு வருகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்

      //கோமதிக்கா, முதலில் உங்களின் அன்பு செல்ல பேரனுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! கவின் விரும்பியதை எல்லாம் அடைந்து, படித்து வாழ்வில் மிளிர்ந்து, நல்ல மனிதராக , உங்க வீட்டுப் பெரியவர்கள் போன்று நிறைய நல்லது செய்திட இறைவனின் அருள் எப்போதும் இருந்திட வாழ்த்துகள், கோமதிக்கா.

      பின்னர் பதிவுக்கு வருகிறேன்.//

      உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கு நன்றி கீதா. பேரனிடம் சொல்கிறேன்.
      உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. புத்த மடாலய படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. மன்னரின் கட்டளைப்படி கட்டப்பட்ட கோவில்யாகையால், அதன் பராமரிப்பும் மிகப் பிரமாதமாக உள்ளது. மன்னர் அரண்மனையும் அழகாக இருக்கிறது.

    முதலில் உங்கள் பேரன் கவினுக்கு எங்கள் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். சீரும் சிறப்புமாக பல்லாண்டு காலம் வாழ்கவென மனம் நிறைந்து வாழ்த்துகிறேன். அவரிடமும் எங்கள் அன்பான வாழ்த்துகளைக் கூறுங்கள்.

    இன்று ஜூன் பதினெட்டு உங்கள் பேரனுக்கு பிறந்த நாள் என்றால், நாளை ஜூன் 19 தேதி எங்கள் பேத்திக்கு (மகள் வயிற்றுப் பேத்தி) பிறந்தநாள் வருகிறது. இப்படியும் நமக்குள் என்ன ஒற்றுமை என வியக்கிறேன். உங்கள் அன்பார்ந்த வாழ்த்துகளையும் அவளுக்குத் தாருங்கள்.

    புத்தர் கோவில் நன்றாக பளிச்சென உள்ளது. அமைதியான புத்தரின் தரிசனம் இன்று எனக்கு கிடைத்தது குறித்து மிகுந்த மகிழ்வடைந்தேன்.

    பாம்பணைமேல் ஒளி வீசியபடி அமர்ந்திருக்கும் புத்தரின் அமைதியான அழகு மனத்தை கவர்கிறது. புத்தர் கோவிலின் இருப்பிட வழிகளை குறிப்பிட்டு தந்தமைக்கு நன்றி.

    அமர்ந்தபடி தியானம் செய்யும் புத்தர்களையும் தரிசித்துக் கொண்டேன். மேலும் புத்த மடாலயத்தின் அழகை ரசிக்க உங்களுடன் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. புத்த மடாலய படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. மன்னரின் கட்டளைப்படி கட்டப்பட்ட கோவில்யாகையால், அதன் பராமரிப்பும் மிகப் பிரமாதமாக உள்ளது. //


      ஆமாம். நம்மிடம் கட்டணம் வசூல் செய்கிறார்கள். அதை பராமரிக்க.
      மக்கள் கூட்டம் தினம் அதிகமாக வ்ருகிறது. அதனால் சுத்தமாக அழகாய் வைத்து இருக்கிறார்கள்.



      //மன்னர் அரண்மனையும் அழகாக இருக்கிறது.//

      ஆமாம்.

      //முதலில் உங்கள் பேரன் கவினுக்கு எங்கள் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். சீரும் சிறப்புமாக பல்லாண்டு காலம் வாழ்கவென மனம் நிறைந்து வாழ்த்துகிறேன். அவரிடமும் எங்கள் அன்பான வாழ்த்துகளைக் கூறுங்கள்.//

      சொல்கிறேன் கவினிடம் உங்கள் அன்பான வாழ்த்துகளை, ஆசீர்வாதங்களை.

      //இன்று ஜூன் பதினெட்டு உங்கள் பேரனுக்கு பிறந்த நாள் என்றால், நாளை ஜூன் 19 தேதி எங்கள் பேத்திக்கு (மகள் வயிற்றுப் பேத்தி) பிறந்தநாள் வருகிறது. இப்படியும் நமக்குள் என்ன ஒற்றுமை என வியக்கிறேன். உங்கள் அன்பார்ந்த வாழ்த்துகளையும் அவளுக்குத் தாருங்கள்.//

      பேரனுக்கு ஜூன் 17ம் தேதி பிறந்த நாள். இங்கு நேற்று, அவர்களுக்கு இன்று.

      மகள் வயிற்றுப் பேத்திக்கு நேற்று ஜூன் 16 ம் தேதி பிறந்த நாள்.
      உங்கள் பேத்திக்கு ஜூன் 19 என்று அறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் பேத்திக்கு, வாழ்க வளமுடன். ஒத்த கருத்துக்களை உடையவர்களை இணைய வைத்தது போல குழந்தைகளின் பிறந்த நாளும் ஒரே மாதம் வருவது மகிழ்ச்சியான விஷயம்.
      பேத்திக்கு வாழ்த்துகள், ஆசீர்வாதங்கள்.

      //புத்தர் கோவில் நன்றாக பளிச்சென உள்ளது. அமைதியான புத்தரின் தரிசனம் இன்று எனக்கு கிடைத்தது குறித்து மிகுந்த மகிழ்வடைந்தேன்.//

      அந்த கோயில் முழுக்க புத்தர் தான் நமக்கு தரிசனம் செய்யும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

      //பாம்பணைமேல் ஒளி வீசியபடி அமர்ந்திருக்கும் புத்தரின் அமைதியான அழகு மனத்தை கவர்கிறது. புத்தர் கோவிலின் இருப்பிட வழிகளை குறிப்பிட்டு தந்தமைக்கு நன்றி.//

      வாயில்கள் நிறைய இருக்கிறது. ஒவ்வொரு வாயில்கள் வழியாகவும் வரலாம் கோயிலுக்கு.

      //அமர்ந்தபடி தியானம் செய்யும் புத்தர்களையும் தரிசித்துக் கொண்டேன். மேலும் புத்த மடாலயத்தின் அழகை ரசிக்க உங்களுடன் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      புத்தரை பற்றிய விவரங்கள் எல்லாம் அவர்கள் மொழியில் மட்டுமே இருக்கிறது. தொடர்வது மகிழ்ச்சி.
      என்னால் தான் உடனுக்கு உடன் பதிவு போட முடியவில்லை.
      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.

      நீக்கு