ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

வேலும் மயிலும் துணை



அரிசோனா மகா கணபதி கோயில் முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன்



இந்த வருட தைப் பூசத் திருவிழாவிற்கு மகன்  உற்சவர் முருகபெருமான்   வள்ளி தெய்வானையோடு அமர  வேல் திருவாச்சியோடு மயில்பீடம் செய்து கொடுத்து இருக்கிறான்  .
 .
பால் குடங்கள் தயார் செய்து வைத்து இருக்கிறார்கள். அங்கு 
நாளை தைப்பூசத் திருவிழா




இருபக்கமும் காவடிகளும் நடுவில் பால்குடமும்  வைத்து எடுத்த படங்களை மகனுக்கு கோயில் குருக்கள் அனுப்பி வைத்து இருக்கிறார். அதை மகன் எனக்கு அனுப்பி வைத்தான்.

வீட்டில் தயார் செய்து கொண்டு இருந்த போது   மகன்  எனக்கு அனுப்பி வைத்த படங்கள்



படி படியாக உருவாகும் போது நான் பார்க்க அனுப்பி கொண்டு இருப்பான் மகன்


கோயிலுக்கு போக   தயார் ஆகி விட்டது  பேரன் நிற்கிறான்

இலங்கையை சேர்ந்த அன்பர்  வாகீசன் பாடிய "வண்ணமயில் ஏறும் முருகன்" பாடல் சின்ன காணொளிதான் பாருங்கள். மகன் செய்த  வேலை பாட்டை காட்டும்  காணொளி பின்னனியில் இந்த பாடல் நாலுவரிதான் வரும்.

இதில் முழுவதும் கேட்கலாம்


இப்போது இந்த பாடலை   எல்லோரும் ஆடி மகிழ்கிறார்கள்.சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆடுகிறார்கள்.




தெய்வம் படத்தில் இடம் பெற்ற வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பாடல்.
பக்தர்கள் பால்குடங்களை எடுத்து கொண்டு போவதும், காவடிகளும்  இடம் பெறும்  தை பூசத்திருவிழாவை அப்படியே காட்டுவார்கள் இந்த பாடலில்.



//முருகா முருகா வேல்முருகா
முருகா முருகா வேல்முருகா

தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வரச்
செந்தில் வளர் கந்தனுமே கொலுவிருக்க
நங்கை மலர் தெய்வானை வள்ளியுடன்
நான் வணங்கும் திருக்கோலம் காணுங்களேன்(முருகா)

தேவரெல்லாம் கூடி நின்று வடம் பிடிக்க
தென்பழநி வலம் வரும் தங்கரதமாம்
தங்கரத மீதமர்ந்து கொலுவிருக்கும்
தண்டபாணித் தெய்வமே சரணமய்யா(முருகா)

பன்னீரும் சந்தனமும் பாற்குடமாம்
பஞ்சாமிர்தம் விபூதி அபிஷேகம்
கொஞ்சு தமிழ் பாலனுக்குப் பழநியிலே
கோடிக்கண்கள் வேண்டுமய்யா காண்பதற்கே(முருகா)

காவடிகள் உன்னைத் தேடி ஆடிவரும்
கால்நடையாய் பக்தர் கூட்டம் கோடிவரும்
சேவடியே சரணமென வாழ்பவர்க்கே
செல்வநலம் தந்தருளும் கந்தவேளே(முருகா)
கொக்கரக்கோ சேவல் ஒன்று கூவிவர
கோலமயில் நின்று நடமாடி வர
சுப்பையா நானடிமை பாடிவர
சொக்கன் மகன்நீ அதனைக் கேட்டுவர(முருகா)//

பாடல் வரிகள்  கூகுள்  நன்றி.


தைப்பூசத்திற்கு மக்கள் பக்தியோடு பாதயாத்திரை போகும் போது பாடி கொண்டு போவார்கள் இந்த பாடலை.

இந்த ஆண்டும் என் தம்பி பாதயாத்திரை போனான்.
பழனிமுருகனை தரிசனம் செய்து பஞ்சாமிர்தம் , விபூதி பிரசாதம் கொண்டு  வந்து கொடுத்தான்.
பழனி செல்லாமலே பிரசாதம் கிடைத்து விட்டது.




                                          வேலும் மயிலும் துணை   என்று நிற்கும் மகன்


தைபூச விழா   தைபூசம் 2023 ஆம் ஆண்டும் இது போல உற்சவருக்கு  செய்து கொடுத்தான்  மருமகள், நான், மருமகளின் அம்மா பால்குடம் எடுத்தோம். மகனும், பேரனும் காவடி எடுத்தார்கள்.



ஆறுபடை வீடு அழகா போற்றி!    
 

2024 ஆம ஆண்டு தைப் பூசத் திருவிழா விளம்பரங்கள் செய்து கொடுத்தான் 

இந்த பதிவுகள் படித்து இருப்பீர்கள். படிக்காதவர்கள் படிக்கலாம்.

முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்க பிரார்த்தனை செய்வோம். 

முருகா சரணம், கந்தா சரணம்.

தைப்பூசத் திருவிழா நல் வாழ்த்துக்கள்.


மேலே கைகளை கூப்பி கொண்டு இருப்பவள் மருமகள் நடுவில் இருப்பவர் ஆசிரியர். இரண்டு வருடமாக  பரத நாட்டியம் கற்றுக் கொண்டு வருகிறாள்.

இன்று நடந்த   குடியரசுதினவிழா  பேரன் அனுப்பி வைத்தான் படங்களை அதனால் சேர்த்து விட்டேன் இதில் .

குடியரசு தின விழாவில் மருகள் கலந்து கொண்டு ஆடினாள்.



வலது ஓரத்தில்   கைகளை தூக்கி  கொண்டு  சாய்ந்து இருக்கிறாள்



சின்ன பாடல் தான் மருமகள் நடனம் பாருங்கள்.


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக