இருபக்கமும் காவடிகளும் நடுவில் பால்குடமும் வைத்து எடுத்த படங்களை மகனுக்கு கோயில் குருக்கள் அனுப்பி வைத்து இருக்கிறார். அதை மகன் எனக்கு அனுப்பி வைத்தான்.

வீட்டில் தயார் செய்து கொண்டு இருந்த போது மகன் எனக்கு அனுப்பி வைத்த படங்கள்
முருகா முருகா வேல்முருகா
தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வரச்
செந்தில் வளர் கந்தனுமே கொலுவிருக்க
நங்கை மலர் தெய்வானை வள்ளியுடன்
நான் வணங்கும் திருக்கோலம் காணுங்களேன்(முருகா)
தேவரெல்லாம் கூடி நின்று வடம் பிடிக்க
தென்பழநி வலம் வரும் தங்கரதமாம்
தண்டபாணித் தெய்வமே சரணமய்யா(முருகா)
பன்னீரும் சந்தனமும் பாற்குடமாம்
பஞ்சாமிர்தம் விபூதி அபிஷேகம்
கொஞ்சு தமிழ் பாலனுக்குப் பழநியிலே
கோடிக்கண்கள் வேண்டுமய்யா காண்பதற்கே(முருகா)
காவடிகள் உன்னைத் தேடி ஆடிவரும்
கால்நடையாய் பக்தர் கூட்டம் கோடிவரும்
சேவடியே சரணமென வாழ்பவர்க்கே
செல்வநலம் தந்தருளும் கந்தவேளே(முருகா)
கோலமயில் நின்று நடமாடி வர
சுப்பையா நானடிமை பாடிவர
சொக்கன் மகன்நீ அதனைக் கேட்டுவர(முருகா)//
தைபூச விழா தைபூசம் 2023 ஆம் ஆண்டும் இது போல உற்சவருக்கு செய்து கொடுத்தான் மருமகள், நான், மருமகளின் அம்மா பால்குடம் எடுத்தோம். மகனும், பேரனும் காவடி எடுத்தார்கள்.
2024 ஆம ஆண்டு தைப் பூசத் திருவிழா விளம்பரங்கள் செய்து கொடுத்தான்
இந்த பதிவுகள் படித்து இருப்பீர்கள். படிக்காதவர்கள் படிக்கலாம்.
முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்க பிரார்த்தனை செய்வோம்.
முருகா சரணம், கந்தா சரணம்.
தைப்பூசத் திருவிழா நல் வாழ்த்துக்கள்.
மேலே கைகளை கூப்பி கொண்டு இருப்பவள் மருமகள் நடுவில் இருப்பவர் ஆசிரியர். இரண்டு வருடமாக பரத நாட்டியம் கற்றுக் கொண்டு வருகிறாள்.
இன்று நடந்த குடியரசுதினவிழா பேரன் அனுப்பி வைத்தான் படங்களை அதனால் சேர்த்து விட்டேன் இதில் .
வலது ஓரத்தில் கைகளை தூக்கி கொண்டு சாய்ந்து இருக்கிறாள்
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!










கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக