திங்கள், 27 அக்டோபர், 2025

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா



கந்த சஷ்டி சிறப்பு பதிவாக    தொடர்  பதிவு செய்து கொண்டு

இருக்கிறேன்.  

இன்று   கந்த சஷ்டி - ஆறாம் நாள் 

இன்று ஆறாம் படை வீடு  பழமுதிர்ச்சோலை இடம் பெறுகிறது.  

மதுரை வந்த பின் நிறைய தடவை பழமுதிர்ச்சோலை முருகனை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது,  ஆங்கில புத்தாண்டு, மற்றும் கிருத்திகை தோறும் தரிசனம் செய்து வருவோம்.



இதற்கு முன் போட்ட பதிவுகள் படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

ஸ்ரீ பாலதண்டாயுதபாணி நீலிக்கோணாம்பாளையம் -கந்த சஷ்டி முதல் நாள் பதிவு

திருப்பரங்குன்றம் திருப்புகழ் கந்த சஷ்டி  - இரண்டாம் நாள்  நாள் பதிவு

வேலை வணங்குவது எமக்கு  வேலை - மூன்றாம்  நாள்  பதிவு

சுவாமிமலை வாழும் குருநாதா சரணம் !-  நான்காம் நாள் பதிவு



திருத்தணி முருகா தென்னவர் தலைவா ! - கந்த சஷ்டி  - ஐந்தாம் நாள்  பதிவு திருத்தணிகை.


முருகனுக்கு கடைபிடிக்கும் விரதங்கள் மூன்று

1.  வாரா வாரம் செவ்வாய் கிழமை முருகனை நினைத்து  விரதம் இருப்பார்கள்

2. கிருத்திகை நட்சத்திரம் அன்று விரதம் இருப்பார்கள்

  3. ஒரு மாதம் வரும்  இரண்டு  சஷ்டியில்  விரதம் இருப்பார்கள் 
அதில் ஐப்பசித் திங்கள் வளர்பிறையில் வரும் சஷ்டியில் சூரபன்மனை சம்ஹாரம் செய்த நாள் 
அதனால் அது  மிகவும் சிறப்பு. 




 கலியுக வரதன் என்று போட்ட பதிவில் கந்த சஷ்டி ஆறாம் நாள்  நடைபெற்ற அபிஷேகம் , அலங்காரம், மற்றும் யாகசாலை பூஜைகள் இடம் பெற்று இருக்கும் அவற்றில் சில படங்கள் இங்கு பகிர்ந்து இருக்கிறேன் முழுமையாக அங்கு சென்று பார்க்கலாம்.










மகன் செய்த சூரன்கள் அரிசோனாவில் மகா கணபதி கோயிலுக்கு மகன் செய்து கொடுத்த சூரன்கள் வைத்து சூர சம்ஹாரம் நடந்த பதிவு.





அதிலிருந்து சில படங்கள் இங்கு இடம்பெற்று இருக்கிறது முழுமையாக படிக்க , பார்க்க  மேலை உள்ள சுட்டியில் பார்க்கலாம்.


















பழமுதிர்சசோலை திருப்புகழ்





வெற்றிவேல் முருகன் அனைவருக்கும் எல்லா நலங்களும், வளங்களும் அருள வேண்டும். இந்த ஆறு நாட்களும் முருகனை சிந்திதோம்,  ஆறு நாட்கள் வந்து படித்து கருத்துக்கள் கொடுத்து ஆதரவு அளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.

என் தோழி உமையாளுக்கு அவள் தங்ககை லட்சுமிக்கும் நன்றி . உமையாள் மற்றும் அவள் தோழிகளுடன் கூட்டு வழிபாட்டில் கந்தர் அனுபூதி, சண்முக கவசம், கந்த சஷ்டி கவசம், திருப்புகழ், முருகன் தனி பாடல்கள்
என்று பாடினோம்.,பாட வைத்தான் முருகன்.

அவள் தங்கை  கந்த சஷ்டி விழா அபிஷேகம், அலங்கார பூஜை படம் அனுப்பினாள்.

ஜோதி டிவியில் தினம் ஒரு முருகன் கோயில் பார்த்தேன்.
காலை எப் எம்  ரேடியோவில் ஆத்திசூடியில் நல்ல  நல்ல பாடல்கள் , முருகன் சிந்தனைகள், சஷ்டி கவசம் கேட்டேன்.

எல்லோருக்கும் நன்றி.

என் மடிகணினிக்கும் நன்றி இடை இடையே  மறைந்து மறைந்து மாயம் செய்தாலும் பதிவு போட அனுமதி அளித்தமைக்கு நன்றி.



வெற்றி வேல்   வீரவேல்!  வெற்றி வேல் வீரவேல்!

பகைவனுக்கும் அருள்வான் கந்தன்


ஆணவம், கன்மம், மாயை எனும் தீமைகளை அழித்து  நீலமயில் மீது எழுந்தருளி ஞாலமெல்லாம் வலம் வந்த வேலவனை வெற்றித் திருமகனை  கந்தனை, கடம்பனை சரவணனை, செங்ககோட்டு வெற்பனை குகனை ஷண்முகனை  -பாலதண்டாயுதபாணியை  ஆயிரம் கோடி திருநாமங்களால்  அர்ச்சித்து  அவரின் திருவருளை  பெறுவோம்.

சேவலும், மயிலுமாக  மாறிய சூரபத்மனுக்கு ஞானத்தை அளித்து ஆட்கொண்டு , சேவலை தேரிலும், மயிலை வாகனமாக  ஏற்று .அருளிய  முருகனை வணங்கி மகிழ்வோம்.
.

மூவிரு முகங்கள் போற்றி முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க  நின்ற ஈராறு தோள் போற்றி காஞ்சி
மாவடி  வைகும் செவ்வேள் மலரடி போற்றி அன்னான்
சேவலும் மயிலும்  போற்றி திருக்கை  வேல் போற்றி! போற்றி!



கந்தவேள் முருகனுக்கு அரோகரா 
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
------------------------------------------------------------------------------------------------------------


26 கருத்துகள்:

  1. பழமுதிர்ச் சோலை தலைப்பு பழமுதிர்ச் சோலையிலே தோழி... பாடலை நினைவுபடுத்தியது.

    முருகனின் படங்கள் காலையை மலரச் செய்தன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு வருஷம் 16 பாடல்தான் முதலில் நினைவுக்கு வந்ததது!!

      நீக்கு
    2. //பழமுதிர்ச் சோலை தலைப்பு பழமுதிர்ச் சோலையிலே தோழி... பாடலை நினைவுபடுத்தியது.

      முருகனின் படங்கள் காலையை மலரச் செய்தன//

      ஆமாம், எனக்கும் நினைவு வந்தது. நேற்று இந்த பாடல் இடம் பெற்ற 'குழந்தையும் தெய்வமும் " படம் வைத்தார்கள் பிரிந்த குடும்பம் பழனி மலையில் சேர்வார்கள்.
      முருகன் காலையில் இடம் பெற்று விட்டார் அவர் அருளால்

      நீக்கு
  2. மகன் செய்து கொடுத்த சூரனின் பதுமைகள் மிக அழகு. பொறுமையாகச் செய்திருக்கிறார்.

    கவினும் இதனைப் பின்பற்றி முயல்வான். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மகன் செய்து கொடுத்த சூரனின் பதுமைகள் மிக அழகு. பொறுமையாகச் செய்திருக்கிறார்.

      கவினும் இதனைப் பின்பற்றி முயல்வான். வாழ்த்துகள்.//

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி நெல்லை.

      நீக்கு
  3. பழமுதிர்சோலை அழகர்மலையிலேயே இருந்ததால் சிலமுறை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. 

    மதுரையிலேயே இரண்டு படைவீடுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      //பழமுதிர்சோலை அழகர்மலையிலேயே இருந்ததால் சிலமுறை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

      மதுரையிலேயே இரண்டு படைவீடுகள்.//

      ஆமாம், பழமுதிர் சோலை படங்கள் பகிர்ந்து இருந்தீர்கள் நினைவு இருக்கிறது.

      ஆமாம், இரண்டு படைவீடுகள் மதுரையில்

      நீக்கு
  4. ஆறு நாட்களும் பதிவு போட்டு சிறப்பித்து விட்டீர்கக்ள்.  பழைய பதிவுகளுக்கும் சென்று பார்த்தேன்.  பார்த்தகிருக்கிறேன் என்று தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆறு நாட்களும் பதிவு போட்டு சிறப்பித்து விட்டீர்கக்ள். பழைய பதிவுகளுக்கும் சென்று பார்த்தேன். பார்த்தகிருக்கிறேன் என்று தெரிந்து கொண்டேன்.//

      முருகன் அருளால் ஆறு நாட்களுக்கும் பதிவு போட முடிந்தது.
      பழைய பதிவுகளை போய் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  5. அபிஷேகத்தில் வேலுடன் முருகன் உருவம் தெரிவது நல்ல தரிசனம். அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அபிஷேகத்தில் வேலுடன் முருகன் உருவம் தெரிவது நல்ல தரிசனம். அழகு//

      அப்போது காமிராவில் எடுத்த படங்கள். தூரத்திலிருந்து எடுத்த படங்கள் அவை.
      வேலுடன் முருகனை பார்க்க முடிந்து இருப்பது மகிழ்ச்சி.

      நீக்கு
  6. அறுபடை வீடு என்று அல்லது திருப்புகழ் என்று யேசுதாஸ் ஒரு கேசெட் கொடுத்திருந்தார்.  அதில் அகரமுமாகி வேறு ராகத்தில் கேட்டிருக்கிறேன்.  என்னிடம் அந்த கேசெட் இருந்தது.  தரங்கிணி தயாரிப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அறுபடை வீடு என்று அல்லது திருப்புகழ் என்று யேசுதாஸ் ஒரு கேசெட் கொடுத்திருந்தார். அதில் அகரமுமாகி வேறு ராகத்தில் கேட்டிருக்கிறேன். என்னிடம் அந்த கேசெட் இருந்தது. தரங்கிணி தயாரிப்பு.//

      நாங்களும் வேறு ராகத்தில் பாடுவோம், இவர்கள் இருவரும் வேறு மாதிரிதான் பாடுகிறார்கள்.

      நீக்கு
  7. சூரசம்ஹாரம் பார்த்தால் திருமணமும் பார்க்க வேண்டும் என்று இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சூரசம்ஹாரம் பார்த்தால் திருமணமும் பார்க்க வேண்டும் என்று இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.//

      இன்று தேசமங்கையரசியும் அதையே சொல்லி பேசினார் சம்ஹாரம் முடிந்தவுடன் வீட்டுக்கு ஓடாதீர்கள் வள்ளி தெய்வானையோடு சப்பரத்தில் எழுந்து அருளி இருப்பதை பார்த்து விட்டு போங்க, வசதி இருந்தால் நாளை திருமணத்தைப்பார்த்து விட்டு போங்க என்று சொல்லி கொண்டு இருந்தார்.
      ஜோதி டிவி நேரலையில். முருகன் இரு மனைவி மாருடன் இருக்கும் போது மகிழ்வாய் சாந்தமாக இருப்பார் அப்போது கேட்கும் வரங்களை தருவார் என்று சொன்னார்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    இன்றைய கந்த சஷ்டி நிறைவு விழா பதிவு மிக அருமையாக உள்ளது. பழமுதிர்சோலை முருகனை தரிசித்துக் கொண்டேன். தங்கள் மகன் செய்து தந்த பதுமை சூரர்கள் அழகாக உள்ளனர். திறம்பட செய்த அவருக்கு என் வாழ்த்துகளை சொல்லுங்கள்.

    இவ்வருட கந்த சஷ்டியான ஆறுநாட்களும் உங்களுடன் பயணிக்க வைத்து ஆறுபடையிலிருக்கும் கந்தவேளை, முருகப்பெருமானை தரிசிக்க வைத்த உங்களுக்கும் நன்றி. தினமும் ஒவ்வொரு கோவிலாக விமர்சித்து, முருகன் பாடல்கள், திருப்புகழ் பாடல்களை தந்து சிறப்பாக செய்து விட்டீர்கள். எல்லாம் தெய்வ சங்கல்பம். எல்லாம் "அவனருள்" . அவனையே எந்நாளும் போற்றித் துதிப்போம். தினமும் முருகனை காண வைத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சகோதரி.

    இன்றைய பாடல்களை கேட்டு விட்டு பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //இன்றைய கந்த சஷ்டி நிறைவு விழா பதிவு மிக அருமையாக உள்ளது. பழமுதிர்சோலை முருகனை தரிசித்துக் கொண்டேன். தங்கள் மகன் செய்து தந்த பதுமை சூரர்கள் அழகாக உள்ளனர். திறம்பட செய்த அவருக்கு என் வாழ்த்துகளை சொல்லுங்கள்.//

      உங்கள் வாழ்த்துக்களை கண்டிப்பாய் சொல்கிறேன். இன்று மகன் செய்து கொடுத்த சூரனை வைத்துதான் சம்ஹாரம் நடந்தாம்.


      //இவ்வருட கந்த சஷ்டியான ஆறுநாட்களும் உங்களுடன் பயணிக்க வைத்து ஆறுபடையிலிருக்கும் கந்தவேளை, முருகப்பெருமானை தரிசிக்க வைத்த உங்களுக்கும் நன்றி. தினமும் ஒவ்வொரு கோவிலாக விமர்சித்து, முருகன் பாடல்கள், திருப்புகழ் பாடல்களை தந்து சிறப்பாக செய்து விட்டீர்கள். எல்லாம் தெய்வ சங்கல்பம். எல்லாம் "அவனருள்" . அவனையே எந்நாளும் போற்றித் துதிப்போம். தினமும் முருகனை காண வைத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சகோதரி.//

      நீங்கள் சொல்வது உண்மை அவனருள் தான் இல்லையென்றால் எதும் நடந்து இருக்காது.
      நீங்கள் எல்லோரும் வந்து படித்து தினம் உற்சாகம் கொடுத்ததால் இதை நிறைவு செய்ய முடிந்தது.

      //இன்றைய பாடல்களை கேட்டு விட்டு பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      வாங்க வாங்க கமலா



      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    முருகனின் திருமண காட்சி படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது.

    ஆம். சூரசம்ஹாரம் பார்த்தால், மறுநாள் முருகன் தெய்வானையுடனான திருமண வைபவத்தை பார்க்க வேண்டும். இன்றே அதையும் பார்த்தாகி விட்டது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

    /ஆணவம், கன்மம், மாயை எனும் தீமைகளை அழித்து நீலமயில் மீது எழுந்தருளி ஞாலமெல்லாம் வலம் வந்த வேலவனை வெற்றித் திருமகனை கந்தனை, கடம்பனை சரவணனை, செங்ககோட்டு வெற்பனை குகனை ஷண்முகனை -பாலதண்டாயுதபாணியை ஆயிரம் கோடி திருநாமங்களால் அர்ச்சித்து அவரின் திருவருளை பெறுவோம்.

    சேவலும், மயிலுமாக மாறிய சூரபத்மனுக்கு ஞானத்தை அளித்து ஆட்கொண்டு , சேவலை தேரிலும், மயிலை வாகனமாக ஏற்று .அருளிய முருகனை வணங்கி மகிழ்வோம்./

    நன்றாக சொல்லியுள்ளீர்கள். முருகனை தினமும் தவறாது பணிவோம். அவனருளை தப்பாது பெறுவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    தலைப்பில் வெற்றி வேல் என்பது ஓரெழுத்து கனிணியின் தவற்றால் மாறி "வே" என வந்துள்ளது. சுட்டிக் காண்பித்ததமைக்கு மன்னிக்கவும். நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைப்பை சரி செய்து விட்டேன் நன்றி

      நீக்கு
    2. கமலா அவசரமாக பப்ளிஸ் செய்து விட்டதால் கவனிக்கவில்லை, மன்னிப்பு எல்லாம் வேண்டாம் சுட்டிக் காட்டியது மகிழ்ச்சி.

      //முருகனின் திருமண காட்சி படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது.

      ஆம். சூரசம்ஹாரம் பார்த்தால், மறுநாள் முருகன் தெய்வானையுடனான திருமண வைபவத்தை பார்க்க வேண்டும். இன்றே அதையும் பார்த்தாகி விட்டது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.//

      நாளை போடலாம் என்று முதலில் நினைத்தேன், கணினி மூட் நல்லா இருக்கும் போது போட்டுவிடலாம் என்று போட்டு விட்டேன்.

      //நன்றாக சொல்லியுள்ளீர்கள். முருகனை தினமும் தவறாது பணிவோம். அவனருளை தப்பாது பெறுவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      ஆமாம், அனுதினமும் முருகனை பணிந்து அவனருளை பெறுவோம்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கமலா.


      நீக்கு
  10. ஆறாம்நாள் பழமுதிர் தரிசனம் பெற்றோம்.

    முருகன் படங்கள் அலங்காரங்கள் நன்றாக இருக்கின்றன.

    மகன் கோவிலுக்கு செய்து குடுத்த சூரசம்ஹாரம் மிகவும் அழகாக உள்ளன.

    கந்த சஷ்டி காலையில் உங்கள் முருகன் பதிவுகளை படித்து வணங்கிக் கொண்டோம் தொடர்ந்து பதிவூகள் தந்த உங்களுக்கு நன்றி. இறைவன் உங்களை நலமே வைத்திருக்க வேண்டுகிறேன்.

    ஓம் முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //ஆறாம்நாள் பழமுதிர் தரிசனம் பெற்றோம்.

      முருகன் படங்கள் அலங்காரங்கள் நன்றாக இருக்கின்றன.

      மகன் கோவிலுக்கு செய்து குடுத்த சூரசம்ஹாரம் மிகவும் அழகாக உள்ளன.

      கந்த சஷ்டி காலையில் உங்கள் முருகன் பதிவுகளை படித்து வணங்கிக் கொண்டோம் தொடர்ந்து பதிவூகள் தந்த உங்களுக்கு நன்றி. இறைவன் உங்களை நலமே வைத்திருக்க வேண்டுகிறேன்.

      ஓம் முருகா சரணம்.//

      ஆறு நாட்களும் தொடர்ந்து வந்து பதிவை பார்த்து கருத்துக்கள் தந்து
      எனக்காக இறைவனிடம் பிரார்த்தனையும் செய்து கொண்டது மகிழ்ச்சி நன்றி மாதேவி.
      ஓம் முருகா சரணம்

      நீக்கு
  11. கலியுக வரதன் என்றதைப் பார்த்ததும் - கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் காட்சி அளிப்பவன் பழனியிலே...பாடல் நினைவுக்கு வந்தது.

    மகன் செய்த சூரன்கள் //

    நினைவு இருக்கிறது அக்கா.

    ஓ சூரசம்ஹாரம் பார்த்தால் திருமணம் பார்க்க வேண்டும் என்ற வழக்கம் இருக்கு இல்லையா?

    திருப்புகழ், சுதா ரகுனாதன் பாடியது, வெற்றி வேல் பாடல் எல்லாம் கேட்டேன் அக்கா.

    படங்கள் எல்லாம் சூப்பர். முருகன் அழகு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //கலியுக வரதன் என்றதைப் பார்த்ததும் - கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் காட்சி அளிப்பவன் பழனியிலே...பாடல் நினைவுக்கு வந்தது.

      மகன் செய்த சூரன்கள் //

      நினைவு இருக்கிறது அக்கா.

      ஓ சூரசம்ஹாரம் பார்த்தால் திருமணம் பார்க்க வேண்டும் என்ற வழக்கம் இருக்கு இல்லையா?

      திருப்புகழ், சுதா ரகுனாதன் பாடியது, வெற்றி வேல் பாடல் எல்லாம் கேட்டேன் அக்கா.

      படங்கள் எல்லாம் சூப்பர். முருகன் அழகு.//

      நீங்கள் சொன்ன பாடலும் நன்றாக இருக்கும் முன்பு பகிர்ந்து இருக்கிறேன்.
      அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

      நீக்கு
  12. படங்களும் பகிர்வும் அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் ராமலக்ஷ்மி , வாழ்க வளமுடன்
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு