உலகமே உடலாய் அதற்குள்ளே உயிரது ஆகி விளங்கிடும் தெய்வம்
இலகும் வான் ஒளி போல் அறிவு ஆகி எங்கணும் பரந்திடும் தெய்வம்.
- பாரதி
பெளர்ணமி அன்று நிலவைபார்க்க தோட்டம் பக்கம் போனேன், அன்று நிலவு வரவில்லை ஆனால் வானம் மிக அழகாய் பொன்னிறமாக இருந்தது. அந்த வானில் தெரிந்த அழகிய காட்சிகளை காமிராவில் எடுத்து கொண்டு இருந்தேன், "அம்மா முன் பக்கமும் வானம் அழகாய் இருக்கு போய் பாருங்க" என்றான் மகன் பொன்னிற வானம் முன் பக்கம் தான் கிடைத்தது.
மாலை நேரம் எடுத்த வானின் படங்களும், கவிதைகளும் இடம்பெறுகிறது இந்த பதிவில்.