பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 10 ஜூன், 2024

கார்னிவல் ரேடியன்ஸ் குரூஸ் (CARNIVAL RADIANCE CRUISE ) பொழுது போக்கு நிகழ்ச்சிகள்


மே மாதம் 31ம் தேதி வெள்ளிக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ்  வந்து கப்பலில் மெக்ஸிகோ வரை   பயணம் செய்தோம் . அது இங்கு தொடர் பதிவாக இடம்பெறுகிறது.

  முதல் பகுதி  படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

இந்த பதிவில் கப்பலில் நடந்த பொழுது போக்கு நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது. நீங்கள் எல்லோரும் தொடர்ந்து வந்து படிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி அனைவருக்கும்.

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

வசந்த காலம்





                                          வசந்த கால மலர்கள். 

அரிசோனா எங்கும் இந்த கலர் காகிதப்பூ  மலர்கள்தான்  அலங்காரமாக  வீதி ஓரங்களில் மற்றும் வீட்டின் முன்புறம், பின்புறம் எல்லாம் வளர்க்கப்படுகிறது.
 
வெயில் வந்து விட்டால் மனிதன் மட்டும் தான் "என்ன வெயில், என்ன வெயில்  கொடுமை" என்கிறான். ஆனால் தாவரங்கள், மரங்கள் அதை நம்பி வாழும் உயிரினங்களுக்கு மகிழ்ச்சியான காலம். அவைகளுக்கு தண்ணீரும், உணவும் கிடைத்து விட்டால் அவை மேலும் மகிழும். தாவரங்களுக்கு உணவு தயார் செய்ய  சூரியஒளி வேண்டி இருக்கிறது.

இந்த இளவேனில் காலம் என்று அழைக்கப்படும் சித்திரை மாதம் இயற்கை தன்னை மேலும் அழகு படுத்திக் கொள்கிறது.
இன்பமலர்கள் பூத்து குலுங்கும் சிங்காரத்தோட்டமாக மாறிவிடுகிறது. 

குளிர்காலம் முடிந்து  கோடை காலம் ஆரம்பிக்கும் இந்த இளவேனில் காலத்தில் கண்களுக்கு  குளிர்ச்சியை மனதுக்கு மகிழ்ச்சியை  இயற்கை அள்ளி தருகிறது. பார்த்து மகிழ்வோம்.

இலையுதிர்காலமும் இலைகள் வண்ணமயமாக மாறி ஒரு அழகை கொடுத்து உதிர்ந்தது  இங்கு . அது  முடிந்து இளவேனில் காலம் சித்திரையில்   மரங்கள், செடிகள் துளிர்த்தது.  இப்போது  பலவிதமான மலர்கள் பூத்து குலுங்குகிறது.

திங்கள், 12 ஏப்ரல், 2021

சின்னக் குழந்தைகள் போல் விளையாடி


 சின்ன வீடு கட்டி சிங்கார வீடுகட்டி

பேரன் கட்டிய  வீடு. மேல் கூரை போட்டால் உள்ளே இருப்பதை காட்ட முடியாது என்று  இப்படி  மேல் கூரை இல்லா வீடு. குழந்தைகள் உலகத்தில் நம்மை சேர்த்துக் கொண்டார்கள் என்றால் அது ஆனந்தம் தான்.சின்ன குழந்தைகள் போல் விளையாடி சிரித்து களித்து இருப்போம் . பாட்டில் வருவது போல் பேரனுடன் அவன் கற்பனை விளையாட்டில்  கவலைகளை மறந்து களித்து இருக்கிறேன்.

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

கண்ணா நீ வாழ்க !

திருக்கண்ணபுரம்

நித்திய புஷ்கரணி, நிமிர்ந்த கோபுரம்.

கண்ணபுரம் செல்வேன் கவ்லையெல்லம் மறப்பேன்
கண்ணனின் சன்னிதியில் எந்நேரமும் இருப்பேன் - திரு
கண்ணபுரம் செல்வேன் கவ்லையெல்லம் மறப்பேன்
கண்ணனின் சன்னிதியில் எந்நேரமும் இருப்பேன்

வண்ண வடிவழகை கண்குளிரக் காண்பேன்
எண்ணமெல்லம் அவனின் இணையடியே என்பேன்
நித்திய புஷ்கரணி நீரினிலே குளிப்பேன்
நிமிர்ந்த கோபுரத்தை கண்டு கைகள் குவிப்பேன்
உத்பலா பதக விமானத்தையே நினைப்பேன்
உள்ளத்தில் அள்ளி வைத்தே உவகையிலே திளைப்பேன் ( )

கருட மண்டபத்தை கடந்து தொடர்ந்திடுவேன்
கண்ணாடி சேவை கண்டு கண்கள் கசிந்திடுவேன்
பெருமாள் சன்னிதிமுன் பித்தாகி நின்றிடுவேன்
பிறவிப்பிணி அறுத்து உலகை வென்றிடுவேன்
எட்டெழுத்தைக் சொல்லி கிட்டே நெருங்கிடுவேன்
ஒம் நமோ நாராயணா என்ற
எட்டெழுத்தை சொல்லி கிட்டே நெருங்கிடுவேன்
என்னை தெரிகிறதா என்றே கேட்டிடுவேன்
கட்டியணைத்தெனக்கு கைகொடுப்பான் கண்ணன்
கற்பூரம் மணக்கின்ற கால்பிடித்தே உய்வேன் ( )

காற்றினிலே வரும் கீதம்  வலைத்தளத்தில் பாடல்  எடுத்தேன்.  கண்னன் பாட்டுக்களை ஒரே இடத்தில் படிக்கலாம்.

முக நூலில்  திருக்கண்ணபுரம் படம் போட்ட போது வல்லி அக்கா கண்ணபுரம் சேவித்தேன்
கவலை எல்லாம் மறந்தேன் என்று சொன்ன வுடன். சீர்காழி கோவிந்த ராஜன் அவர்கள் பாடிய பாடல் இங்கு  மிகவும் பிடிக்கும் என்றேன். உடனே  எனக்கு அந்த பாடலை அனுப்பி கேட்க வைத்து மகிழ்ச்சி படுத்தி விட்டார்கள்.

நான் வரைந்த கண்ணன் (மார்கழி கோலம்)

Image may contain: 1 person, smiling, sitting and indoor

Image may contain: 1 person, smiling, sitting and indoor
கோலங்கள் பல செய்யும் கண்ணன்
Image may contain: 1 person, smiling, child and closeup

Image may contain: 1 person, smiling, standing, hat and closeup
பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம்
பரவசமிகவாகுதே.. கண்ணா
எங்கள் வீட்டுக் கண்ணன்
Image may contain: 1 person, sitting, standing and indoor

புல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்:
Image may contain: 1 person, sitting and indoor
                                   சின்னஞ்சிறு பதங்கள் சிலம்பொலித் திடுமே – அதைச்
                                                      செவிமடுத்த பிறவி மனங்களித் திடுமே
Image may contain: table and indoor

Image may contain: people standing
போன வருடம் இந்த உறியின் படம் முகநூலில் பகிர்ந்த போது அதற்கு
 ஸ்ரீராம்   எழுதிய கவிதை.

//கிண்ணங்களில்
வைக்காதீர்கள்!பாலையும், வெண்ணெயையும்..
உறி போலச் செய்து
கட்டித் தொங்க விடுங்கள்..
ஓடோடியும் வருவான் கண்ணன்!
அவனுக்கும் தெரியும்
திருடுவதில் உள்ள சுகம்
தானாகக் கிடைப்பதில் இல்லை என்று!//

கண்ணனின் குறும்பு  .
மருமகள்  வரைந்த கண்ணாடி ஓவிய தவழும் கண்ணன்

முறுக்கு, இனிப்பு, உப்பு சீடை, தட்டை  செய்வதை விட்டு வெகுகாலம் ஆகி விட்டது. அப்பம், அவல் பாயசம், வெண்ணெய், தயிர் வைத்து வணங்கி விடுவேன். இந்த முறை குடியிருப்பு வளாகத்திற்கு ஒரு பெரியவர், முறுக்கு, சீடை, அவல், கடலை எல்லாம் பாக்கெட் போட்டு விற்றார், மழையும் மாலையில் கடைக்குப் போக முடியாமல் பெய்து கொண்டு இருந்தது.

எளிமையாக அவல் பாயசம் மட்டும் வைத்து கொண்டாடும் எண்ணத்தில் இருந்தேன். சார் ஊருக்கு போய் இருந்தார்கள்  வரும் போது கண்ணனுக்கு போளி வாங்கி வந்தார்கள் ,  வாழைக்காய் சிப்ஸ்  வாங்கி இருந்தார்கள் , தம்பி வீட்டுக்கு வந்தவன் பழங்கள் வாங்கி வந்தான். 

வீட்டிலிருந்த முந்திரி, திராட்சை, பாதாம், வெண்ணை இவற்றை  வைத்து சிறப்பாக்கிக் கொண்டார்  கண்ணன்.
No automatic alt text available.
மயிற்பீலிக் கண்ணன்

                                               
மாணவிகள் கொடியை உடையில் குத்திக் கொண்டு சுதந்திரதினத்தை கொண்டாடி விட்டு திரும்புகிறார்கள். (சிறு வயதில் பள்ளியில் சுதந்திர தினம் கொண்டாடியது நினைவுக்கு வந்தது.)
                                                   
சிறுபையன் தன் அப்பா பின்னால் தேசியகொடியை எடுத்து செல்கிறான். நான் அலைபேசியை எடுத்து படம் எடுப்பத்தற்குள் வேகம் எடுத்து விட்டது வண்டி.

அனைவருக்கும் சுதந்திரதினவாழ்த்துக்கள்.

                                                                    வாழ்க வளமுடன்.