சனி, 29 அக்டோபர், 2022

வடிவேல் முருகா வருகவே!

 

முருகனை சிந்திப்போம் _5

முருகன் வருகைப் பாடல் :-
பொன்னே வருக பொன்னரைஞாண் பூட்ட வருக சிறுசதங்கை
புனைய வருக மணிப்பதக்கம் பூணவருக தவழ்ந்தோடி
முன்னே வருக செவிலியர்கண் முகத்தோடணைத்துச் சீராட்டி
முத்தமிடற்கு வருக எதிர் மொழிகண் மழலை சொல வருக
தன்னெறில்லா நுதற்றிலகந் தரிக்க வருக விழியினல்மை
சாத்தவருக மேலாகத் தானே வருக தேவர் தொழு
மன்னே வருக மாமாலின் மருகா வருக வருகவே
வளஞ்சேர் பழனிச்  சிவகிரி வாழ் வடிவேல் முருகா வருகவே.

கந்த சஷ்டி நாளில் முருகனைச் சிந்தித்து வருகிறோம்.  
இன்று 5 வது நாள்

இந்தப் பதிவில் இரண்டு பாடல்களைக் கேட்போம். இரண்டும் 
உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் தருவதற்கும் போகும் பாதையை
 நன்னெறிப் படுத்தவும்- இறைவன் வழிபாடு. கந்தன் அன்பும் 
கருணையும்  இந்த இருபாடலில் விளக்கமாய் இருக்கிறது, 
எது உண்மைப் பொருள் எது நிரந்தரமானது எல்லாம் இந்தப் பாடலில்
 விளக்கமாய் இருக்கிறது




தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீஞ்சுவை ஆகவில்லையே - முருகய்யா - தீஞ்சுவை ஆகவில்லையே!


எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல
இன்பம் ஏதும் இல்லையே - குமரய்யா - இன்பம் ஏதும் இல்லையே!

அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும்
அங்கம் மணக்கவில்லையே - முருகய்யா - அங்கம் மணக்கவில்லையே!


சித்தம் மணக்கும் செல்வக் குமரன் பெயரினைப் போல
சீர் மணம் வேறு இல்லையே - குமரய்யா - சீர் மணம் வேறு இல்லையே!

முத்தும் இரத்தினமும் முத்திறைப் பசும்பொன்னும்
முதற் பொருள் ஆகவில்லையே - முருகய்யா - முதற் பொருள் ஆகவில்லையே!


சத்திய வேல் என்று சாற்றும் மொழியினைப் போல
மெய்ப் பொருள் வேறு இல்லையே - குமரய்யா - மெய்ப் பொருள் வேறு
 இல்லையே!

எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும்
எண்ணத்தில் ஆடவில்லையே - முருகய்யா - எண்ணத்தில் ஆடவில்லையே!


மண்ணுக்குள் மகிமை பெற்ற மாமலை முருகன் போல்
மற்றொரு தெய்வமில்லையே - குமரய்யா - மற்றொரு தெய்வமில்லையே!

(தித்திக்கும் தேன் பாகும்)


முருகனருள்
//பாடல் வரிகள் தேடிடும் முருகன்டியார்க்கும்,
தமிழின்பம் நாடிடும்  அன்பருக்கும் உதவியாக... அவனருளால்//!
=நன்றி.

பாடியவர் டி.எம்.எஸ்  அவர்கள் யார் இசைஅமைத்தார்கள் என்று
 தெரியவில்லை, எழுதியது யார் என்று தெரியவில்லை.

//மறுபடியும் மறுபடியும் கேட்டாலும் திகட்டாத ஒரு பாடல் பகிர்வீர்கள் என்று
 எதிர்பார்க்கிறேன் அம்மா...//
என்று பின்னூட்டத்தில் நம் வலையுலக சித்தர் திண்டுக்கல் தனபாலன் 
அவர்கள் கேட்டு இருந்தார்கள். அவர்களின் விருப்பப் பாடல் 
இதுவாகத்தான் இருக்கும்  என்று நினைத்து இந்தப் பதிவில் போட்டு
 இருக்கிறேன். சரிதானா என்பதை அவர் சொல்ல வேண்டும்.

இன்று காலை அண்ணி வீட்டில் நடந்த காவேரி அம்மன் பூஜையில் கலந்து
 கொண்டு மாலைதான் வீட்டுக்கு வந்தேன்.
என்ன எழுதுவது என்று நினைத்துக் கொண்டு இருந்தேன் முருகன் அருள்
  திண்டுக்கல் தனபாலன் மூலம்  கிடைத்து விட்டது.

இனிக்கின்ற தேன்பாகும், அமுதமும் நாவிற்குச்  சுவையைத் தருவது
 இல்லை, கந்தன் என்று சொல்லும் போது அதைவிட இன்பம்.

நாம் எது எதுவோ  இன்பம் என்கிறோம்.  பொன் பொருள், எத்தனை 
 இருந்தாலும் மெய்ப் பொருளை அறிவது தான் இன்பம்  அதைத் 
தருவது முருகன் வழிபாடு.

                      தங்க மயம் முருகன்சாந்தி மயம் முருகன எழிற்கோலம்


தங்க மயம் முருகன் சன்னிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்!
அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம்
அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும்!!
(தங்க மயம் முருகன்)

எங்கும் மனம் பரப்பும் மாலைகளே!
அவன் ஈராறு கைகளாம் தாமரையே!
திங்கள் முகம் அரும்பும் புன்னகையே!
குகன் செவ்விதழ் சிந்துவது மின்னலையே!
(தங்க மயம் முருகன்)

கருணை மழை பொழியும் கருவிழிகள் - அந்தக்
காட்சியில் தோன்றுவதோ பெருவழிகள்!
அமுதம் ஊறி வரும் திருவடிகள் - அவை
அடைக்கலம் என்பார்க்கோ புதுநிலைகள்!
(தங்க மயம் முருகன்)

பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்.

நமக்கு வேண்டியது சாந்தி அதை தருவது முருகனின் சன்னிதானம்.

முருகன் எழில் கோலத்தைப் பார்த்தால் மனதில் சாந்தி  கிடைக்கும்.
 அவரின் கருணை மழையால்  உயிர்கள் தளைக்கும்.  நாம் போகக் 
கூடிய நல்ல வழி கிடைக்கும் அது உயர்ந்த வழி. அப்போது அங்கு
 ஆனந்தம் அது நித்தியானந்தம்.

மீள் பதிவு .


இன்று தவிர்க்க முடியாத காரணத்தால் பதிவு தாமதமாக  வருகிறது.
இன்று என் மனதுக்கு சாந்தி வேண்டும் மீள்பதிவும் சாந்தியை பற்றியே
பேசுகிறது. பதிவு எழுத மனம் இல்லை என்றாலும் முருகன்  சகோ
 துரை செல்வராஜூ அவர்கள் மூலம் கேட்கிறார். 

கந்த சஷ்டி ஐந்தாம் நாள் பதிவு என்ன ஆயிற்று?..

நலம் தானே!..


அதனால் இந்த  பதிவு. 2018 ம் ஆண்டு போட்ட பதிவில்
 திண்டுக்கல் தனபாலன் அவர்கள் கேட்ட பாடல்  புது இணைப்பாக
இடம் பெறுகிறது.





                               திண்டுக்கல் தனபாலன்

முதல் பாடல் மனதை உருக வைத்து தித்திக்கும் அம்மா...

இந்த இரு பாடல் உட்பட இன்னும் அழகான பாடல்கள் எனது கணினியில் உண்டு...

அடியேன் நினைத்தது : ஒரு சினிமா பாடல்... ஜானகி அம்மாவின் உன்னத குரலில் 




வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொன்ன பாடல் கண்டு பிடித்து விட்டேன். சிங்கார வேலனே தேவா 

பாடல்தானே
காலத்தை வென்ற பாடல் அடுத்த பதிவில் போட்டு விடலாம்.
நான் கேஸட் வைத்து இருக்கிறேன், சீர்காழி, டி.எம். எஸ் பழைய

 பாடல்கள் முருகன் பாடல்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

 


அருமை அருமை அம்மா...

உங்களின் கருத்துரை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது...

பல சிந்தனை பதிவுகளை எழுத வேண்டும் என்று என்றும் நினைக்க

 வைக்கும் பாட்டு... அரிதான பாடலா இன்னொன்றை கேட்டுவிடப்

 போகிறேன்... ஆனாலும் இதோ :-

அரியது கேட்கின் வரிவடி வேலோய்...

(https://www.youtube.com/watch?v=ISjor0G8gV8)   


திண்டுக்கல் தனபாலனின் அவர்களின்  விருப்ப பாடல்.
இன்று முருகன் இந்த பாடலை பகிர சொல்லி இருக்கிறார் போலும்.

                          வாழ்க வையகம்! வாழக வையகம்! வாழ்க வளமுடன்
------------------------------------------------------------------------------------------------------------------------

18 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. வடிவேல் முருகனின் பாடல்கள் இரண்டும் நன்றாக உள்ளது. முதல் பாடல் நான் இதுவரை கேட்டதில்லை. இப்போது கேட்டு மகிழ்ந்தேன். இரண்டாவது திரு சீர்காழி அவர்களின் பாடல் கேட்டுள்ளேன். இப்போதும் கேட்டு மகிழ்ந்தேன். அவர் பாடும் அநேக முருகனின் பாடல்கள் என்றுமே கேட்க திகட்டாதவை.

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் கேட்ட பாடலும் அருமையானவை. இன்று அவர் கேட்ட பாடலாக அரியது கேட்கின் பாடல் கே. பி. சுந்தராம்பாள் அவர்களின் கம்பீரமான குரலில் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதது .பாடலை விரும்பி கேட்ட அவருக்கும் நன்றி.

    கோவை சென்று விட்டு திரும்பி விட்டீர்களா சகோதரி. நடப்பவை என்றும் நடந்து கொண்டேதான் உள்ளது. தங்கள் மனதில் கவலைகள் இன்றி சாந்தி ஏற்பட இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

    இன்று தங்களை தங்களது இந்த மனக் கலக்கத்தில், சற்று தாமதமானாலும், எப்படியாவது ஐந்தாவது நாள் பதிவு போட வைத்த அந்த வடிவேல் முருகனின் கருணையை எண்ணி மனம் சிலிர்க்கிறேன். சகோதரர் துரை செல்வராஜ் அவர்களின் வடிவத்தில் வந்து தங்களைப் பதிவு போட வைத்தமைக்கு சகோதரருக்கும் என்னப்பன் முருகனுக்கும் மனம் நிறைந்த நன்றிகள். தங்களின் அருமையான பகிர்வுக்கும் என் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      சீர்காழி, டி.எம்.எஸ் பாடிய முருகன் பாடல்கள் எப்போது
      கேட்டாலும் மனதை உருக வைக்கும்.

      //சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் கேட்ட பாடலும் அருமையானவை. இன்று அவர் கேட்ட பாடலாக அரியது கேட்கின் பாடல் கே. பி. சுந்தராம்பாள் அவர்களின் கம்பீரமான குரலில் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதது .பாடலை விரும்பி கேட்ட அவருக்கும் நன்றி.//

      ஆமாம். நல்ல பாடலை விரும்பி கேட்டார்.

      //கோவை சென்று விட்டு திரும்பி விட்டீர்களா சகோதரி. நடப்பவை என்றும் நடந்து கொண்டேதான் உள்ளது. தங்கள் மனதில் கவலைகள் இன்றி சாந்தி ஏற்பட இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்//

      கோவை சென்று வந்து விட்டேன். அதிகாலை செனறு மாலை வந்து விட்டேன்.
      பிரார்த்தனைக்கு நன்றி.

      //இன்று தங்களை தங்களது இந்த மனக் கலக்கத்தில், சற்று தாமதமானாலும், எப்படியாவது ஐந்தாவது நாள் பதிவு போட வைத்த அந்த வடிவேல் முருகனின் கருணையை எண்ணி மனம் சிலிர்க்கிறேன்.//
      இப்படி உற்சாகம் ஊட்டும் பின்னூட்டங்கள் தான் எழுத வைக்கிறது அது இறைவன் கருணைதான்.
      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. // நடப்பவை என்றும் நடந்து கொண்டேதான் உள்ளது. தங்கள் மனதில் கவலைகள் இன்றி சாந்தி ஏற்பட இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்...//

    கமலாஹரிஹரன் அவர்களது கருத்தினை வழி மொழிகின்றேன்..

    கந்த சஷ்டி விரத காலத்தில் கந்தனது கமல மலர் பாதங்களில் சரணம்..

    கந்தா சரணம்..
    கடம்பா சரணம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. / நடப்பவை என்றும் நடந்து கொண்டேதான் உள்ளது. தங்கள் மனதில் கவலைகள் இன்றி சாந்தி ஏற்பட இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்...//

      ஆமாம், கமலா நன்றாக சொன்னார்கள். யாருக்காவும் காலம் நிற்பது இல்லை. நடப்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

      //கந்த சஷ்டி விரத காலத்தில் கந்தனது கமல மலர் பாதங்களில் சரணம்..

      கந்தா சரணம்..
      கடம்பா சரணம்..//
      கந்தா சரணம், கடம்பா சரணம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. சஷ்டி விரதத்தின் ஐந்தாவது பதிவு(ம்) சிறப்பு.  இனிமையான பாடல்கள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      பாடல்களை கேட்டு ரசித்து கருத்து சொன்னதற்கு.

      நீக்கு
  4. தங்கள் வீட்டில் ஏற்பட்ட இழப்பு ஈடுகட்ட முடியாதது.  முருகன் அதிலிருந்து உங்களை எல்லாம் மீண்டு வர அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னோரு சோகமும் இழப்பும் ஏற்பட்டு இருக்கிறது இன்று. சாரின் மாமா மகன் இறைவனடி சேர்ந்து விட்டார்.
      பழைய நினைவுகளை எல்லோர் கூட பேசி மனதை தேற்றிக் கொண்டு இருக்கிறேன்.
      உங்கள் ஆறுதல் வார்த்தைகளுக்கு நன்றி.

      நீக்கு
  5. "தித்திக்கும் தேன்பாகும்" பாடல் மனதை உருக வைத்து தாலாட்டும்...

    "அரியது கேட்கின் வரிவடி வேலோய்" பாடல் முதல் முதலாக சிறு வயதில் கேட்கும் போது, மிகவும் சிந்திக்க வைத்த வரிகள்... ஒவ்வொரு வரியிலும் "அதைவிட அதைவிட எது...?" என்று சிந்திக்க வைக்கும்...

    மிக்க நன்றி அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //"தித்திக்கும் தேன்பாகும்" பாடல் மனதை உருக வைத்து தாலாட்டும்...//
      உங்கள் அப்பா இந்த பாட்டை நன்றாக பாடுவார்கள் என்று ஒரு முறை சொல்லி இருக்கிறீர்கள்.

      //அரியது கேட்கின் வரிவடி வேலோய்" பாடல் முதல் முதலாக சிறு வயதில் கேட்கும் போது, மிகவும் சிந்திக்க வைத்த வரிகள்... ஒவ்வொரு வரியிலும் "அதைவிட அதைவிட எது...?" என்று சிந்திக்க வைக்கும்...//

      ஆமாம், நீங்கள் சொல்வது போல சிந்திக்க வைக்கும் வரிகள்.






      நீக்கு
  6. இன்னொன்றை சொல்ல மறந்து விட்டேன்... திருக்குறளில் சில சொற்கள், இந்தப் பாடலை நினைக்க வைக்கும்... எடுத்துக்காட்டாக "தலை"

    உழவே தலை - அதாவது உழவே முதன்மை... இது போன்று "தலை" என்று வரும் குறள்கள் நிறைய உள்ளன... அதற்கும் ஒரு கணக்கு உண்டு... அதைத் தான் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து கொண்டிருக்கின்றேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ஆய்வுகளை பதிவு செய்யுங்கள்.. நிகழ்காலத்தில் உங்கள் திருக்குறள் கணக்கியலை பாடமாக பள்ளியில் வைக்க வேண்டும். குழந்தைகள் எளிதாக கற்பதற்கு முன்பு போல சினிமா பாட்லும், திருக்குறளும் பதிவு போடுங்கள் தன்பாலன்.

      நீக்கு
  7. உங்களாலும் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களாலும் அருமையான முருகன் பாடல்களைக் கேட்க முடிந்தது. இந்தத் தித்திக்கும் தேன்பாகு சின்ன வயசில் நிறையக் கேட்டு உருகியது. உங்கள் மனம் சாந்தி அடைய அந்தக் குமரக்கடவுள் துணை வருவான். தைரியமாக இருங்கள். வேலுண்டு வினையில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      மீள் பதிவுதான் நீங்களும் முன்பு படித்து பாடல்களை கேட்டு மகிழ்ந்து இருக்கிறீர்கள்.
      //உங்கள் மனம் சாந்தி அடைய அந்தக் குமரக்கடவுள் துணை வருவான். தைரியமாக இருங்கள். வேலுண்டு வினையில்லை.//

      நீங்கள் சொன்னது போல குமரக் கடவுள் துணை வர வேண்டும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  8. அருமையான பாடல்கள் முன்பு கோயில்களில் அடிக்கடி போடுவார்கள்.

    இப்பொழுது குறைந்து விட்டது பெரும்பாலும் பக்தி பாடல்களுக்கு டி.எம்.எஸ். அவர்களே இசையமைத்து இருப்பார். இந்தப் பாடலும் இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி , வாழ்க வளமுடன்
      முன்பு அடிக்கடி கோயில்களில் போடும் பாடல்தான்.
      நீங்கள் சொல்வது போல டி.எம். எஸ் அவர்கள் இசை அமைத்த பாடலாக இருக்கலாம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு