புதன், 27 ஜனவரி, 2021

உல்லாசப்பணம் - பகுதி 5




செங்க்கோட்டை படமும் ,  தாஜ்மஹாலின் நாலு வாயில்களில்  ஒரு வாயில் படமும்



அடுத்த  பதிவில் தலைநகர் டெல்லியில்   காணச்சென்றக் காட்சிகளைப் பார்ப்போம் என்று  சொல்லி இருந்தேன். 




திவானி காஸ் முன்


ஜும்மா மசூதி முன்







அடுத்த பதிவில் இரண்டாம் நாள் டெல்லியில் பார்த்த இடங்களை பார்ப்போம்.

வாழ்க வளமுடன்
---------------------------------------------------------------------------------------------------------------------------

36 கருத்துகள்:

  1. அன்பு கோமதி நன்றி மா.
    என்ன விரிவான கட்டுரை.
    ஒரு பிழை இல்லாமல் சார் எழுதி இருக்கும் அழகு மிகச் சிறப்பு.

    புது தில்லியில் திரைப் படம் வேறு பார்த்திருக்கிறார்கள்;!!!!

    ஜனாதிபதி முன் அவர்கள் என்ன சொன்னார்கள் என்பது புரியவில்லை.
    தேவாரம் பாடினார்கள் என்பது மிக மிக மகிழ்ச்சி. நம் தமிழ் நாட்டவர்க்கு
    அதுவும் அந்தப் பேரறிஞர் முன்னிலையில் பாடியது மிகப்
    பெருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      ஆமாம், திரை படம் தூங்கி போய் இருக்கிறார்கள் நிறைய பேர்.

      ஜனாதிபதி அவர்கள் படிக்கும் படிப்பு பற்றி சொல்லி இருக்கிறார்கள். மெய்யுணர்வு இயல்(தத்துவம் ) உயிர் வாழ்க்கை தத்துவம் பற்றி படிக்கும் படிப்பு. அந்த படிப்பை பெரும்பாலோர் விரும்புவதில்லை என்று ஜனாதிபதி அவர்கள் சொல்கிறார்கள்.

      ஜனாதிபதியை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி தரும் விஷயம்தான்.




      நீக்கு
  2. செங்கோட்டை, அந்தக் கண்ணாடி கூரை
    எல்லாமே அவரது எழுத்துக்களில்
    அப்படியே சித்திரம் போல் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செங்கோட்டை அவர்களுடன் பார்த்தது நினைவில் வந்து செல்கிறது.

      நீக்கு
  3. பதில்கள்
    1. வணக்கம் ஆரூர் பாஸ்கர், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. சார் படத்தில் ஒல்லியாகத் தெரிகிறார்.
    கன்னாட்ப்ளேஸில் பொருட்கள் வாங்கிய மகிழ்ச்சி தெரிகிறது.

    திருமண மான பிறகு போயிருந்தால் உங்களுக்கும் ஏதாவது வாங்கி வந்திருப்பார்.
    மிக மிக சுவை மா.அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா, ஒல்லியாகத்தான் இருப்பார்கள் சிறு வயதில்.
      நாங்கள் சேர்ந்து கன்னாட்ப்ளேஸ் போய் இருக்கிறோம் ஊரில் உள்ள சொந்தங்களுக்கு டெல்லி நினைவு பரிசுகள் வாங்கினோம்.
      உங்கள் பின்னூட்டங்கள் மகிழ்ச்சி அளிக்கிறது.
      நன்றி நன்றி அக்கா.

      நீக்கு
  5. தில்லியில் முதல் நாள் பார்த்த இடங்கள் பற்றிய குறிப்புகள் நன்று.

    மாடி பஸ் - 90-கள் வரை இந்த மாதிரி பேருந்துகள் இருந்தன. நான் வந்த போதும் இப்படியான பேருந்துகளில் பயணித்திருக்கிறேன் - 84-ஆம் எண் கொண்ட பேருந்து! :) இனிய நினைவுகள் அவை.

    தில்லி நகரில் மேலும் என்ன பார்த்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்

      மாடி பஸ் நான் கல்கத்தா, திருவனந்தபுரம், சென்னையில் பயணம் செய்த நினைவுகள் இருக்கிறது.

      டெல்லியில் போனது இல்லை. நாங்கள் டெல்லி வரும் போது மாடி பஸ் இல்லை.

      உங்களுக்கு இனிய நினைவுகள் இருக்கிறது 84-ஆம் எண் கொண்ட பேருந்தில் மகிழ்ச்சி.

      உங்கள் பகிர்வுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  6. டில்லியில் விலை பேசும் கலை அந்தக் காலத்திலிருந்தே அப்படிதான் போல!  ரிதம் பட ஜோக் நினைவுக்குவ வருகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      விலை பேசும் கலை அன்றும் இன்றும் ஒன்றுதான் மாறவில்லை.
      ரிதம் படம் ஜோக் தெரியாது சொல்லி இருக்கலாம்.

      நீக்கு
  7. ரீகல் திரையரங்கில் லவ் இந்த டோக்கியோ பார்த்திருக்கிறார்.  மொஹம்மத் ரஃபி குரல் மனதில் ஒலிக்கிறது!   "ஜப்....பான்...    லவ் இந்த டோக்கியோ...   லே கயி தில்...."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டு நினைவுக்கு வந்து விட்டதா? காதில் ஒலிக்கிறதா? வெள்ளியில் பகிருங்கள்
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  8. செங்கோட்டை பற்றிய தகவல்கள் தொடர்ந்து வரும் பல தகவல்கள், அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய சிறப்பு வரலாற்றுத் தகவல்கள்...

    கடைத்தெரு, திரையரங்கு என் ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கங்கள் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      நிறைய வரலாற்றுத் தகவல்கள் இருக்கிறது அவர்கள் இருக்கும் போது பதிவை போட்டு இருந்தால் நிறைய தகவல்கள் கேட்டுச் சொல்லி இருக்கலாம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. நல்ல பகிர்வு. முந்தைய பதிவைப் படிக்கலைனு நினைக்கிறேன். அதையும் போய்ப் பார்க்கிறேன். அழகான கையெழுத்து! திருத்தமாக எழுதி இருக்கிறார். குடியரசுத்தலைவர் முன்னால் தேவாரம் பாடியது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      ஆமாம், முந்திய பதிவு நீங்கள் படிக்கவில்லை , நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.
      குடியரசுத் தலைவர் முன்னால் தேவாரம் பாடியது மகிழ்ச்சியானது தான். சம்பந்தர் பாடிய திருச்சிராப்பள்ளி பாடல்தான்.(தாயுமானவர் பாடல் )

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. அருமையாக எழுதியிருக்கார், நல்ல தமிழ்.

    டாக்டர் இராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேசியது ஆச்சர்யம்....

    ஒழுக்கமான மாணவர் குழு... பயணக்கட்டுரையை மிகவும் ரசிக்க வைத்தது.

    நான் தில்லி சில முறை போயிருந்தாலும் எதையும் பார்த்ததில்லை. அடுத்த முறையாவது முக்கியமானவற்றையாவது பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      அப்போது எல்லாம் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், மற்றும் பொது மக்கள் எல்லோரும் ஜனாதிபதியை பார்ப்பது ஒரு கடமையாக செய்தார்கள்.

      மாணவர்கள், ஆசிரியர்கள் பார்க்க விரும்புவர். சிறந்த பண்பாளர், தத்துவஞானி இல்லையா அவரை பார்த்தது மகிழ்ச்சியான செய்தி.

      என் கணவரும் கற்பித்தலை தொழிலாக கொண்டது மற்றொரு மகிழ்ச்சியான செய்தி.

      டெல்லி சுற்றுலா நிறைய நாள் தேவைபடும் பார்க்க வேண்டியது நிறைய இருக்கிறது.
      நாங்கள் பல வருடங்கள் பார்த்தோம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.



      நீக்கு
  11. ரசனையான பதிவு தொடர்கிறேன் சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கும், தொடர்கிறேன் என்பதற்கும் நன்றி.

      நீக்கு
  12. எவ்வளவு அழகான வர்ணனை. நாமும் கூடப்போய் பார்ப்பதைப் போல. எதையும்விடாது. எழுதினாலும் இப்படி இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரி

    இன்றைய பதிவும் அருமை. தாஜ்மஹால், செங்கோட்டை படங்களை கத்தரித்து ஒட்ட வைத்ததில் கூட நேர்த்தியாக வைத்துள்ளார். டில்லியில் அனைத்து இடங்களையும் சுற்றியது போன்ற நிறைவை தந்தது கட்டுரை. நானும் இதைப் பற்றியெல்லாம் படித்திருக்கிறேனே தவிர டில்லிக்கு இதுவரை நேரில் சென்றதில்லை. அந்த குறையை தங்கள் பதிவு போக்கி விட்டது. தங்கள் கணவர் அவ்வளவு தெளிவாக எழுதியிருக்கிறார்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி. அங்கு நீங்கள் இருக்கும் இருப்பிடத்தில் குளிர் எல்லாம் அதிகமாக உள்ளதா? தங்கள் உடல்நலனை கவனித்துக் கொள்ளுங்கள்.

    காலையிலேயே ஒரு கருத்துரை டைப்பிங் செய்தேன்.அதை அனுப்பும் போது கொஞ்சம் நெட் தொடர்பு குறைபாடில் அது எங்கோ போய் விட்டது. அதனால்தான் தாமதம். தாங்கள் என் பதிவுக்கும் வந்து கருத்துரைகள் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இனிதான் அனைவருக்கும் பதில் அளிக்க வேண்டும். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      எந்த வேலை செய்தாலும் நேர்த்தியாக செய்வார்கள்.
      நாங்கள் இருக்கும் இடத்தில் குளிர் அதிகம் தான் இப்போது. இரண்டு நாளாக பனி பொழிவும் இருக்கிறது.
      உடல் நலனை கவனித்துக் கொள்கிறேன். மகன், மருமகள், பேரன் நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள்.
      நெட் ஒழுங்காய் வேலை செய்யவில்லை என்றாக் அப்படித்தான் ஆகி விடுகிறது.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. ஆமாம் மகள் தில்லியில் இருக்கும் மோது அங்கு தங்க இருப்பீர்களே! மறந்தேவிட்டேன் மா.வாழ்க வளமுடன் அன்பு கோமதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருட வருடம் 10 நாள் இருப்பார்கள் மகள் வீட்டில் அப்போது ஒவ்வொரு இடமும் பார்த்து
      இருக்கிறோம். நன்றி அக்கா.

      நீக்கு
  15. விவரமான தகவல்கள். கல்லூரியிலும் uniform இருந்ததா? புகைப்படங்களில் பெரும்பாலோர் white & white உடுப்பு அணிந்துஇருப்பதால் இந்த சந்தேகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் Sri, வாழ்க வளமுடன்

      uniform இருந்ததா என்று தெரியவில்லை. ஜனாதிபதியை பார்க்க போவதால் எல்லோரும் ஒரே மாதிரி ஆடை அணிந்தால் நல்லது என்று சொல்லி இருப்பார்களோ என்று நினைக்கிறேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  16. டெல்லி பற்றிய தகவல்களை ரசித்து வாசித்தேன் மா ...
    அதிலும் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்துப் பேசியதை படிக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது ....எத்தகைய அனுபவங்கள் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
      //டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்துப் பேசியதை படிக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது ....எத்தகைய அனுபவங்கள் ...//

      ஆமாம், அவர்களுக்கு அது மகிழ்ச்சியான தருணம்.
      அவரை போலவே ஆசிரியர் தொழிலை மிகவும் மகிழ்ச்சியோடு செய்தார்கள்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. தில்லிக்குச் சுற்றுலா செல்கிறவர்களுக்கு உபயோகமாகும் வகையில் மிக விவரமான குறிப்புகள். டாக்டர் இராதாகிருஷ்ணன் முன் தேவாரம் பாடி பாராட்டுகளைப் பெற்றது மறக்க முடியாத அனுபவமாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      நீங்கள் சொல்வது சரிதான் டெல்லி போகும் நண்பர்கள் அவர்களிடம் என்ன என்ன இடம் பார்க்கலாம் எப்போது போனால் நல்லது என்று கேட்டு போவார்கள்.

      //டாக்டர் இராதாகிருஷ்ணன் முன் தேவாரம் பாடி பாராட்டுகளைப் பெற்றது மறக்க முடியாத அனுபவமாக இருந்திருக்கும்.//

      ஆமாம், அது மறக்க முடியாத அனுபவமாக இருந்திருக்கும் என்பது உண்மைதான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  18. மிக மிக சுவாரஸ்ய்மாக எழுத்தியிருக்கிறார் அக்கா. ஜனாதிபதியை காண்பதே கஷ்டம்.அதிலும் அவரைப்பார்த்து,பேசி,தேவாரம் பாடிவிட்டு வந்திருக்கிறார்கள் எனில் மறக்கமுடியாத சுற்றுலாவாக இருந்திருக்கும். சார் படம் பார்த்தாரா? அல்லது தூங்கினாரா? அழகாக எழுதியிருக்கிறார்.எந்த ஆண்டில் இந்தச்சுற்றுலா என முன்னாடி குறிப்பிட்டிருந்தீர்களா அக்கா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்

      //ஜனாதிபதியை காண்பதே கஷ்டம்.அதிலும் அவரைப்பார்த்து,பேசி,தேவாரம் பாடிவிட்டு வந்திருக்கிறார்கள் எனில் மறக்கமுடியாத சுற்றுலாவாக இருந்திருக்கும். //

      ஆமாம், அதற்கு காரணமாக இருந்த பெற்றோருக்கு நன்றி சொல்லி இருப்பார்கள்.

      சார் படம் பார்த்தேன் என்றார்கள்.
      ஆமாம், 1964ல் இந்த சுற்றுலா. 70ல் எம்.ஏ முடித்தவுடன் 71ல் வேலை பூம்புகாரில். மூன்று வருடம் கழித்து 1973 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ல் திருமணம். அப்புறம் படித்துக் கொண்டே இருந்தார்கள். முனைவர் பட்டம் வாங்கினார்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு