பொங்கல் வாழ்த்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொங்கல் வாழ்த்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 ஜனவரி, 2024

மார்கழி கோலமும் மகரிஷி கவிதையும் பகுதி -2



 

மார்கழி கோலமும்  மகரிஷி கவிதையும் -1 

நேற்று போட்ட பதிவு படிக்கவில்லையென்றால் படிக்கலாம்.

1958 ம் ஆண்டு  வேதாத்திரி மகரிஷி அவர்களின் துணைவி  மார்கழி மாதம்  கோலம் போடும் போது அக்கோலத்தைச் சுற்றி எழுத கவிதை கேட்டாராம்.  மகரிஷியும் தினம் தினம்  மனதில் தோன்றும் எண்ணங்களை கவிகளாய்  சொல்லுவராம்., அன்னை லோகாம்பாள் அவர்கள் கோலத்தைச்சுற்றி எழுதிய  அந்த கவிதைகள்  இந்த பதிவில்  இடம்பெறுகிறது. பாடல்கள் "மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து" என்று புத்தகமாய் வெளி வந்தது.

இந்த பதிவில் மேலும் சில கோலங்களும்  வேதாத்திரி மகரிஷிஅவர்களின்  கவிதைகள் இடம்பெறுகிறது.

வியாழன், 13 ஜனவரி, 2022

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

 


பேரனின் லெகோ பொங்கல்.

//லெகோ விளையாட்டுப் பொருளில் செய்த பெரிய பொங்கல் பானை பொங்குகிறது. முன்னால் அலங்கார மின் விளக்குகள் போட்டு இருக்கிறான் , வாசலில் வரவேற்கக் காத்து இருக்கிறான். பானை அருகில் கரும்பு நிற்க வைத்து இருக்கிறான். 

தாத்தா, ஆச்சி,  அப்பா, அம்மா மற்றும் உறவுகள், மற்றும் ஆடு மாடு  பூனை நாய் குதிரைகளுடன் பொங்கல் கொண்டாடுகிறான். அழைத்து இருக்கிறான் எங்களை. உங்கள் ஊரில் கேஸ் அடுப்பில் பொங்கல் .இங்கு பாரம்பரிய பொங்கல் வைக்கிறோம் வாருங்கள் என்கிறான் மகன்.//

பொங்கல் வருது ! பொங்கல் வருது ! கொண்டாடலாம் வாங்க  2020 ல் போட்ட பதிவு படித்து பாருங்கள் பேரனின் பொங்கல் பாடல், மற்றும் மகிழ்ச்சியான நினைவுகளின் பகிர்வு.



2015 ம் ஆண்டு மகன், மருமகள், மகள் பேரனுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தோம். இந்த முறை மகன் குடும்பத்தினர் இருக்கிறார்கள். அவர்களுடன் பொங்கல் பண்டிகை.



அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
 திருவள்ளுவர் தினம், காணும் பொங்கல் தின வாழ்த்துக்கள்.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்

--------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

பொங்கல் வாழ்த்துக்கள்




தை பொறந்தா வழி பொறக்கும் 
தாரணியில் எல்லோருக்கும் 
கைமேலே பலன் கிடைக்கும்
அம்மா வீரம்மா--- எங்கும்
களஞ்சியமா நெரஞ்சிருக்கும்
ஆமா மருதம்மா 

- பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் .


வலை உலக அன்பர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்! 

                                                   வாழ்க வளமுடன்!

வெள்ளி, 11 ஜனவரி, 2013

பொங்கலோ பொங்கல் !


பொங்கல் வாழ்த்து படம் வரைந்தவர் என் கணவர்


பொங்கிடுவோம்  உயிர் உணர்ந்து  புலனடக்க வாழ்வு பெற்றுப்
பொங்கிடுவோம்  நாடனைத்தும்  பொறுப்பாட்சி  வளம் கண்டு
பொங்கிடுவோம்  சமுதாயப் பொருள் துறையில் நிறைவு கண்டு
பொங்கிடுவோம்  மக்கள் குலம் போர் ஒழித்து அமைதி பெற.

                                                        ---வேதாத்திரி மகரிஷி

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை

                                                      ---- திருவள்ளுவர்.


முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச்சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கும் முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

                                                       ------திருவெம்பாவை

ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழிநீ ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

                                                    ------- திருப்பாவை 

இந்த இரு பாவைப்பாடல்களைப் பாடினால் மழை பொழியும்
என்பது நம்பிக்கை.


பொங்கல் திருநாள் இந்த ஆண்டு  முன்பு போல்   இல்லை.  பயிர் பச்சை செழிப்பாக வளரவில்லை.  தண்ணீர் இல்லை, மழை இல்லை என்று மக்களின் மனக்குறை. இதைப் போக்க என்ன வழி என்று தானே பார்க்க வேண்டும்.

திருநெல்வேலியில் சமீபத்தில் ஜானகி ராம் ஓட்டலில் தங்கி இருந்தோம். அவர்கள் வைத்து இருக்கும் மாருதி ஓட்டலில் தான் உணவு உண்டோம். அங்கு எழுதி இருந்த ஒரு வாசகம் என்னைக் கவர்ந்தது.

அது :  துணிப்பை என்பது எளிதானது.
            தூரஎறிந்தால் உரமாவது
            பிளாஸ்டிக் என்பது அழகானது
           விட்டு எறிந்தால் விஷமாவது 

என்று எழுதி வைத்து இருந்தார்கள்.

   பெய்யும் மழை பூமியில் சென்று ,தங்கி, நிலத்தடி நீராக மாறினால் தான் மக்களுக்குப் பயன்படமுடியும்.  மழை நீரை நிலத்துக்குள் புக விட மாட்டேன் என்கிறது பாலிதீன் பைகள்.   அதை அரசு தடை செய்தாலும் , மக்கள் பயன்படுத்துவது குறையவில்லை.  சில கடைகளில் பிளாஸ்டிக் பை கிடையாது, தயவு செய்து வீட்டில் இருந்து பை கொண்டு வரவும் ,என்று போட்டு இருக்கிறார்கள்.

தரிசு  நிலங்களில் கொண்டு போடும் குப்பைகளில் பெரும்பாலும் பாலிதீன் பைகள் தான்.   மரம், செடி கொடியெல்லாம் பிளாஸ்டிக் பூ பூத்தது போல்  இருக்கிறது. இந்த கவர்கள் தான் மரம் ,செடி, கொடிகளை அலங்கரிக்கிறது.

தூர் வாரப்படாத குளம், குட்டைகளில் குடிநீர் பாட்டில்களும்,  பாலீதீன் கவர்களும்தான் மிதக்கிறது.  அல்லியும்,  தாமரையும் வளர வேண்டிய குளத்தில் பாலீதீன் பைகள் நிரம்பிக் கிடக்கிறது.
கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில்  ஒரு பெரிய கிணறு இருக்கிறது அதில்  முன்பெல்லாம் மீன்களுக்குப் பொரி   போட்டுவிட்டு அந்தகவரை அப்படியே அதில் போட்டு விடுவார்கள்.  அப்படியே குடிநீர் பாட்டிலையும் போட்டுவிடுவார்கள். இந்த ஜனவரி 1ஆம்தேதி அங்கு போனபோது  அந்த



கிணற்றை பச்சை துணி வலையால் போட்டு மூடி  இருந்ததைப் பார்த்தோம்..  தண்ணீர் தூய்மையாக இருந்தது. அதைப் பார்த்தவுடன்  நீர் நிலைகளை இப்படிதான் காப்பாற்றவேண்டுமோ என்ற எண்ணம் வந்து விட்டது.

 நீர் ஆதாரத்தை பெருக்க, பாலீதீன் உபயோகத்தைக் கட்டுப்படுத்துவோம்.

மழைக்காக கூட்டு பிராத்தனைகள்  ,. மழை தவம் எல்லாம் நடக்கிறது.
இறைவனின் கருணை மழை பொழிந்து  உழவர்களின் கஷ்டங்கள் நீங்கி
மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழவேண்டும்.

உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும் இனிமை சேர்த்து, இன்பம் பெருக செழிப்புடன் வாழ்க வளர்க! வாழ்க வளமுடன்!

எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
                                                                ________

சனி, 14 ஜனவரி, 2012

பொங்கலோ பொங்கல்!



//பாட்டாளி மக்களெல்லாம் பல்லாண்டு வாழ்கவே!
வீட்டுக்கு வீடு செல்வம் விரைந்துயர்ந்து பொங்குகவே
நாட்டிலும் வீட்டிலும் நல்லோர் சொல் செயல்படுக!
ஏட்டறிவோடியற்கையறி வெங்கும் பொங்கித் திகழக!//

வலை உலக அன்பர்கள், நண்பர்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்.

புதன், 12 ஜனவரி, 2011

பொங்கல் வாழ்த்து








செய்யும் விளைந்தது;
தையும் பிறந்தது
செங்கதிர் கீழ்த்திசை கண்டோம்!-புதுச்
செங்கதிர் கீழ்த்திசை கண்டோம்!
பொய்கை புதர்செடி
பூக்கள் நிறைந்தன;
பொன்னொளி எங்கணுங் கண்டோம்!-புதுப்
பொன்னொளி எங்கணுங் கண்டோம்!

மாவும் சுளைப்பலா
வாழையும் செந்நெலும்
வந்து குவிந்தது வீட்டில்! - தை
வந்தது வந்தது நாட்டில்!
கூவும் குயிலினம்
கூவாக் குயிலினம்
தாவிப் பறந்தது மேல்வான்!- ஒளி
தாவிப் பறந்தது கீழ்வான்!

சிட்டுச் சிறுவரின்
செங்கைக் கரும்புகள்
தொட்டுப் பிசைந்தன பொங்கல்! -அதை
இட்டு மகிழ்ந்தனர் பெண்கள்!
வெட்ட வெளியெலாம்
மெல்லியர் பண்ணிசை
மேவும்; சிலம்பொலி கேட்கும்; - தமிழ்
வெற்றி முரசெங்கும் ஆர்க்கும்!

------கவிஞர் வாணிதாசன்.

பாட்டாளி மக்களெல்லாம் பல்லாண்டு வாழ்கவே!
வீட்டுக்கு வீடு செல்வம் விரைந்துயர்ந்து பொங்குகவே!
நாட்டிலும் வீட்டிலும் நல்லோர் சொல் செயல்படுக!
ஏட்டறிவோடியற்கையறி வெங்கும் பொங்கித் திகழ்க!

------- வேதாத்திரி மகரிஷி

வலை உலக அன்பர்களுக்கு உளங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்!

வாழ்க வளமுடன்.