புத்த மடாலயம் (வாட்ஃபிரா சேதுபோன் விமோன் மங்கலராம் ராஜ்வரமஹாவிஹான். ) பேங்காக் -1
புத்த மடாலயம் (வாட்ஃபிரா சேதுபோன் விமோன் மங்கலராம் ராஜ்வரமஹாவிஹான். ) பேங்காக்--பாகம் -2
தாய்லாந்து பயணத்தில் பார்த்த இடங்கள் தொடர் பதிவாக இடம் பெறுகிறது.
தாய்லாந்து அரசுக்கு சொந்தமான புத்த கோயில், பழங்கால கோயில் .மன்னர் முதலாம் ராமர் கட்டளைப் படி கட்டியது. இங்கு புத்த துறவிகள் தர்மத்தை படிப்பதற்காக கட்டப்பட்டது.
தாய்லாந்து நகரின் தலைநகரம் பேங்காங்கில் அமைந்துள்ளது இந்த மடாலயம்.
புத்த மடாலயத்தில் பிரகாரத்தில் தோட்டம் இருந்தது, மரங்களுக்கும் செடிகளுக்கும் இடையில் அமர்ந்து யோகா செய்யும் சிலைகள் இருந்தது. அந்த சிலைகள் படம் இந்த பதிவில் .
தொங்கு செடி மலர்கள் அழகு
செயற்கை அருவி
நீரை செடிகளுக்கு திறந்து விடுகிறவர் போல நிற்கிறார்
அருவியில் குளிக்க போவது போல நிற்கிறார்
இவரின் தாடியும் மீசையும் வித்தியாசமாக இருக்கிறது
அவரே தான் பன்றியை எட்டி பார்க்கிறார் போல காட்டு பன்றியா? நாட்டு பன்றியா ? என்று நாட்டுபன்றி போலதான் இருக்கிறது.

செடிகளுக்கு இடையில் நிற்கிற முனிவர் தெரிகிறாரா?
கால்களுக்கு மேல் புல் முளைத்து கிடக்கு
இது என்ன தியானம்
ஆசனம் பேர் யார் செய்கிறார்கள் எல்லாம் குறிப்பு இருக்கு போல நமக்கு படிக்க முடியவில்லை எல்லாம் தாய்லாந்து மொழியிலிருக்கிறது
மான் முகம் மனித உடல்
இவர் கையில் என்ன வைத்து கொண்டு இருக்கிறார் என தெரியவில்லை
இப்படி மரம் செடிகளுக்கு அடியில் மண் பாத்திரத்தில் நீர் வைத்து இருந்தார்கள் பறவைகளுக்கு என்று நினைக்கிறேன்.
கோபமாய் இருக்கும் இது பூனையா? புலியா?
ஆமையும் கொஞ்சம் கோபமாக இருப்பது போல இருக்கிறது, ஆமை ஓட்டு மேல் எழுத்துக்கள் எழுதியது போல இருக்கிறது.
இன்று மகாவீரர் ஜெயந்தி . நான் போட்டு இருக்கும் தொடர் பதிவு புத்த மடாலயம். புத்தர் பெளத்த மதம்
நாங்கள் பல வருடம் முன் சித்தன்ன வாசல் போன போது அருகில் இருந்த பூங்காவில் மகாவீரர் சிலை இருந்தது. அங்கு எடுத்த படம்.
சமண மதத்தின் 24-வது தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரரைன் பிறந்த நாள் இன்று. அகிம்சை, உணமை, மற்றும் கருணையை போதித்தார். இந்த நாளில் மக்கள் எல்லோரும் அமைதியாக அன்பும் கருணையுமாக இருக்க பிரார்த்தனை செய்து கொள்வோம்.மகாவீரர் போதித்த மதம் சமண மதம்.
எல்லா மதமும் அன்பும் கருணையைதான் போதிக்கிறது.
போரில்லா உலகம் வேண்டும்.
நாளை பங்குனி உத்திரம் எல்லோரும் குலதெய்வம் கோயிலை நோக்கி போகும் நாள். அவர் அவர் குலதெய்வங்களிடம் வேண்டிக் கொள்ளுங்கள். உலகம் அமைதியாக கருணையாக நலமோடு இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்வோம்.
அடுத்த பதிவில் பெரிய தங்க புத்தரை காணலாம்.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
படங்கள் யாவற்றையும் ரசித்தேன். விதம் விதமான செடிகொடிகள், பூக்கள், தவம் செய்பவர்கள்..
பதிலளிநீக்குஅந்த ஆமை கோபமாக இருப்பது போலதான் இருக்கிறது. அதன்மேல் ஏதோ சங்கீத அல்லது சங்கேத எழுத்துகள் போலவும் என்னவோ இருக்கிறது.
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் யாவற்றையும் ரசித்தேன். விதம் விதமான செடிகொடிகள், பூக்கள், தவம் செய்பவர்கள்..
அந்த ஆமை கோபமாக இருப்பது போலதான் இருக்கிறது. அதன்மேல் ஏதோ சங்கீத அல்லது சங்கேத எழுத்துகள் போலவும் என்னவோ இருக்கிறது.//
ஆமாம், ஆமை முதுகின் மேலே ஏதோ எழுத்துக்கள் தெரிகிறதா? உங்களுக்கும் ஆமை கொஞ்சம் கோபமாக இருப்பது தெரிகிறதா?
நீங்கள் படங்களை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம்.