மணிப்புறா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மணிப்புறா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 டிசம்பர், 2021

தோட்டத்திற்கு வந்த பல வித பறவைகள்


மணிப்புறா 

பறவைக்கு  பின்னால் தெரியும் செடியில் முன்பு பசுமையான சின்ன சின்ன இலைகளும் சிவப்பு பூவும் இருக்கும் இப்போது முட்கள் மட்டுமே !

இந்த பதிவில் மகன் வீட்டுத்தோட்டத்துப் பறவைகள்.

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

வசந்த காலம்





                                          வசந்த கால மலர்கள். 

அரிசோனா எங்கும் இந்த கலர் காகிதப்பூ  மலர்கள்தான்  அலங்காரமாக  வீதி ஓரங்களில் மற்றும் வீட்டின் முன்புறம், பின்புறம் எல்லாம் வளர்க்கப்படுகிறது.
 
வெயில் வந்து விட்டால் மனிதன் மட்டும் தான் "என்ன வெயில், என்ன வெயில்  கொடுமை" என்கிறான். ஆனால் தாவரங்கள், மரங்கள் அதை நம்பி வாழும் உயிரினங்களுக்கு மகிழ்ச்சியான காலம். அவைகளுக்கு தண்ணீரும், உணவும் கிடைத்து விட்டால் அவை மேலும் மகிழும். தாவரங்களுக்கு உணவு தயார் செய்ய  சூரியஒளி வேண்டி இருக்கிறது.

இந்த இளவேனில் காலம் என்று அழைக்கப்படும் சித்திரை மாதம் இயற்கை தன்னை மேலும் அழகு படுத்திக் கொள்கிறது.
இன்பமலர்கள் பூத்து குலுங்கும் சிங்காரத்தோட்டமாக மாறிவிடுகிறது. 

குளிர்காலம் முடிந்து  கோடை காலம் ஆரம்பிக்கும் இந்த இளவேனில் காலத்தில் கண்களுக்கு  குளிர்ச்சியை மனதுக்கு மகிழ்ச்சியை  இயற்கை அள்ளி தருகிறது. பார்த்து மகிழ்வோம்.

இலையுதிர்காலமும் இலைகள் வண்ணமயமாக மாறி ஒரு அழகை கொடுத்து உதிர்ந்தது  இங்கு . அது  முடிந்து இளவேனில் காலம் சித்திரையில்   மரங்கள், செடிகள் துளிர்த்தது.  இப்போது  பலவிதமான மலர்கள் பூத்து குலுங்குகிறது.

வியாழன், 4 மார்ச், 2021

பறவைகள்

வாழ்க வையகம் !  வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!

மகன் வீட்டுக்கு வரும் பறவைகளை பார்ப்பது  மனதுக்கு மகிழ்ச்சி தரும். அந்த பறவைகளை  அவைகளுக்கு தெரியாமல் எடுக்க வேண்டும். கதவை சத்தம் இல்லாமல் திறக்க வேண்டும்.   சிறிதளவு சத்தம் கேட்டாலும் அத்தனையும் பறந்து விடும். இந்த பதிவில் பறவைகளை பார்க்கலாம்.

மணிப்புறா