இன்று ஆடிப்பெருக்கு வீட்டில் காவேரி அம்மனை வழிபட்டு விட்டேன்.
ஆடி 18 காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் நாள். நீர் நிலை எல்லாம் மக்கள் கூடும் நாள். நீர் வளம் பெருகி பயிறு பச்சை செழித்து வாழ வேண்டுவோம்.
சாத்துக்குடி, மாதுளை, நெல்லிக்காய் விட்டில் இருந்தது, அவல் பாயாசம் வைத்து வணங்கி விட்டேன்.
புதிய பதிவு ஒன்றும் போடவில்லை சில நாட்களாக எழுதி எழுதி வைத்து இருக்கிறேன் ஒன்று பதிவாக்கவில்லை.
அதனால் பழைய ஆடிப்பெருக்கு பதிவுகளை படித்து அதிலிருந்து சில உங்களுக்கு நினைவூட்ட போட்டு இருக்கிறேன், உங்கள் பின்னூட்டம் இருக்கா என பார்க்கலாம் . நேரம் இருந்தால் படிக்கலாம்,
மாயவரம் வீட்டில் (பல ஆண்டு முன்) எடுத்த படம்.
மாயவரத்தில் பேரிக்காய், கொய்யாப்பழம், சீதாப்பழம், மாம்பழம் எல்லாம் வீட்டு வாசலுக்கே விற்பனைக்கு வந்துவிடும். இறைவன் கொடுத்த வளங்களை இறைவனுக்குப் படைத்து, "இந்த வளங்கள் என்றும் எப்போதும் இருக்க வேண்டும். நீர்வளம், நிலவளம் எல்லாம் செழிப்பாக இருக்க வேண்டும்.
நாடும், வீடும் நலம் பெற வேண்டும். தாயே!'' என வேண்டுவார்கள்.
ஆடிப்பெருக்கு : - 2009 முதன் முதலில் போட்ட ஆடிப்பெருக்கு பதிவு
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் என்பது போல் ஆறிருக்குமிடம் எல்லாம் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது . என்றாலும்
காவிரிக்கரைகளில் சிறப்பாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கன்னிப்பெண்கள் நல்ல கணவரை அடையவும், புதுமணத் தம்பதியர் தங்கள் வாழ்வு சிறக்கவும், மணமான பெண்கள் தங்கள் மணாளர் நீண்ட ஆயுள் பெறவும் ஆற்றுமண் எடுத்துக் காவிரியம்மன் உருவம் செய்து வழிபடுவார்கள்
ஒவ்வொரு ஆடிப்பெருக்கின் போதும் இதற்கு முந்தைய ஆண்டுகளில் எனது மகள் , மகனோடும் அக்கம்பக்கத்தாருடனும் ஆற்றுக்குப்போய் இவ்விழாவைக் கொண்டாடியதை நினைவுபடுத்திக்கொள்வேன்.
கொள்ளிட கரையில் நடந்த ஆடிப்பெருக்கு விழா படங்கள்
ஆற்றுக்குப் படைக்கவருபவர்களை ஆசீர்வாதம் செய்ய மினி வேனில் வந்த தச்சக்குள மாரியம்மன்.
கண்ணுக்கு இமைபோன்ற கண்ணாளன் கண்களில் தூசியா? விரைந்து போக்கும் அன்புக் கைகள்.(ஏரிக்கரையோரம் கிடைத்த பொக்கிஷம்)
கல்யாண சேலையில் , கல்யாண பட்டு வேட்டியில் ஆற்றுக்கு மாலைகளை கொண்டு விட வந்த தம்பதியினர்
அதிக பேர் படித்த பதிவு.
மலர்கள் பூத்துக்குலுங்கும் காட்சி. வசந்த காலம் வந்து விட்டது என்று சொல்கிறது.மரங்களில் தேனிக்களின் கூடு நிறைய இருந்தது. காரில் போய்க் கொண்டிருக்கும்போது சிலவற்றை எடுக்கமுடியவில்லை. மயில்கள் அடர்ந்த மரக் கூட்டத்தின் நடுவே இருந்து அகவியது அதின் நீண்ட தோகையை மட்டும் காட்டி மறைந்தது.
அலைகடல் போல பரந்து விரிந்த வீரநாராயண ஏரி
வந்தியதேவன் குதிரையில் வீரநாராயண ஏரிக்கரையின் மேல் ஏரியின் அழகை ரசித்துக்கொண்டு சென்றதுபோல் நாங்கள் அவ்வழியில் காரில் ரசித்துக்கொண்டே சென்றோம். கட்டுரை அடுத்த பதிவில் தொடரும்.
வீரநாராயண ஏரியும் பறவைகளும் :-
தொடரும் பதிவு வீரநாராயண ஏரியின் அழகை பார்க்கலாம். ஆடிப்பெருக்கு சமயம் கட்டுசாத மூட்டையுடன் குழந்தை குட்டிகளுடன் மகிழ்ச்சியாக நீர் நிலைகளுக்கு சென்று வருவார்கள். இந்த பதிவில் ஏரியின் அழகையும் பறவைகளையும் கண்டு களிக்கலாம். வீட்டில் இருந்தே!
சிறு தேர் உருட்டல் :-
ஆடிபெருக்கு சமயம் இது போல் ஆற்றுக்கு சிறுதேரை உருட்டி கொண்டு போய் விளையாடியவர்களுக்கு நினைவுகள் வரலாம்.
சிறு தேர் ஓட்டி ஆற்றுக்கு போகும் சிறுவன்
தண்ணீர் இல்லாத வறண்ட காவேரி படங்கள்.
இந்த பதிவில் ஆடிப்பெருக்கு சமயம் குலதெய்வ வழி படு செய்பவர்கள் பதிவு.
அன்னையின் ஊஞ்சல் சேவை பார்க்கலாம்.
அனைவருக்கு ஆடிப்பெருக்கு பண்டிகை வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
பாட்டு ஒவ்வொரு ஆடிப்பெருக்கு சமயமும் பாட்டு வைப்பார்கள் வானொலியில் கேட்டு இருப்பீர்கள்.
ஏரி ,குளம் , கிணறு , ஆறு ,எல்லாம் நிரம்பி வழிய
மாரி அளவாய்ப் பொழிய வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------
மீட்டெடுத்த நினைவுகள் தற்போதைய கனவுகள் என்று சேர்ந்து வந்த பதிவு தங்களுடைய எடிட்டிங் திறமையை சுட்டுகிறது. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கும் , வாழ்த்துகளுக்கும் நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குநலமா? தங்களின் இன்றைய தினத்திற்கான பதிவு அருமை . பழைய நினைவுகளை சேர்த்தெடுப்பது, நம் நினைவுக்குள் இருக்கும் பல விஷயங்களை திரும்பி பார்த்து மகிழ்வது மட்டுமின்றி, அவை அனைத்தையும் ஒரே நூலில் கோர்த்த மலர்ச்சரமாக மாற்றுவது மிகவும் சிறந்த விஷயம்.அந்த வகையில் திறமையாக பணி செய்திருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துகள் இதைச் செய்வதில் நம் மனதிற்கும் ஒரு புத்துணர்ச்சி வரும்.
தச்சக்குள அம்மனை வழிபட்டுக் கொண்டேன்.உங்களால் முடிந்த அளவு இன்று ஆடிப் பெருக்கு விழாவை வீட்டில் கொண்டாடியிருப்பது குறித்து மகிழ்ச்சி. தங்களின் பழைய பதிவுகளை ஒவ்வொன்றையும் படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குநான் நலம் , நீங்களும் உடம்பைப்பார்த்து கொள்ளுங்கள்.
பேத்தியை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டுமே!
//தங்களின் இன்றைய தினத்திற்கான பதிவு அருமை . //
நன்றி.
பழைய நினைவுகளை சேர்த்தெடுப்பது, நம் நினைவுக்குள் இருக்கும் பல விஷயங்களை திரும்பி பார்த்து மகிழ்வது மட்டுமின்றி, அவை அனைத்தையும் ஒரே நூலில் கோர்த்த மலர்ச்சரமாக மாற்றுவது மிகவும் சிறந்த விஷயம்.அந்த வகையில் திறமையாக பணி செய்திருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துகள்//
உங்கள் மனபார்ந்த பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
//இதைச் செய்வதில் நம் மனதிற்கும் ஒரு புத்துணர்ச்சி வரும்.//
ஆமாம், நினைவுகளை மீட்டிப்பார்பதில் புத்துணர்ச்சிதான்.
//தச்சக்குள அம்மனை வழிபட்டுக் கொண்டேன்.//
அம்மன் எல்லா நலங்களையும் அருள்வாள்.
//உங்களால் முடிந்த அளவு இன்று ஆடிப் பெருக்கு விழாவை வீட்டில் கொண்டாடியிருப்பது குறித்து மகிழ்ச்சி. தங்களின் பழைய பதிவுகளை ஒவ்வொன்றையும் படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
நீங்கள் சொன்னது போல என்னால் முடிந்தளவுதான் வீட்டில் கொண்டாடி இருக்கிறேன். எனக்கு வீட்டு வேலைகளில் உதவும் பெண்ணால் கொண்டாடி விட்டேன். எங்கள் இருவருக்கும் பாயாசம் செய்தேன்.
மகன் , மகளோடு நேர்காணலில் பூஜையை காட்டி மகிழ்ந்தேன்.
பதிவுகளை நேரம் கிடைக்கும் போது படித்துப்பாருங்கள்.உங்கள் கருத்துக்கு நன்றி.
ஆடி 18 வாழ்த்துகள். இந்த முறை காவேரித்தாய் ஏமாற்றவில்லை என்று நினைக்கிறேன். நிறைய நீர் ஓடுகிறது போல..
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//ஆடி 18 வாழ்த்துகள். இந்த முறை காவேரித்தாய் ஏமாற்றவில்லை என்று நினைக்கிறேன். நிறைய நீர் ஓடுகிறது போல..//
வாழ்த்துக்கு நன்றி ஸ்ரீராம்.
ஆமாம், இந்த முறை நிறைய நீர் ஓடுகிறது ஆறு, ஏரிகளில் மக்கள் மகிழ்வாய் கொண்டாடியதை செய்திகளில் பார்த்தேன்.
பழைய பதிவுகளை பார்க்கும்போது முன்னர் படித்த நினைவு வருகிறது. சாரை போட்டோவில் பார்ப்பது சந்தோஷம்.
பதிலளிநீக்கு//பழைய பதிவுகளை பார்க்கும்போது முன்னர் படித்த நினைவு வருகிறது. சாரை போட்டோவில் பார்ப்பது சந்தோஷம்.//
நீக்குநினைவுக்கு வந்து விட்டதா? நன்றி.
எனக்கும் பழைய நினைவுகளை தந்து மகிழ்ச்சியாக இருந்தது.
நாங்கள் கலவை சாதத்துடன் ஆடிப்பெருக்கை கொண்டாடினோம். எங்கள் வீட்டில் எப்போதுமே ஆற்றங்கரை சென்றதில்லை!
பதிலளிநீக்கு//நாங்கள் கலவை சாதத்துடன் ஆடிப்பெருக்கை கொண்டாடினோம். எங்கள் வீட்டில் எப்போதுமே ஆற்றங்கரை சென்றதில்லை!//
நீக்குநாங்களும் முன்பு வீட்டில் வடை, பாயசம் வைத்து கும்பிடுவோம்.
அம்மா சிறு வயதில் திருச்சியில் இருந்த போது அக்கம் பக்கத்து வீட்டினர் கூட ஆற்றுக்கு போய் இருக்கிறேன் என்பார்கள்.
அது போல நானும் மாயவரத்தில் இருக்கும் போது அக்கம் பக்கத்து நட்புகளுடன், கலவை சாதம் கலந்து எடுத்துக் கொண்டு வேளங்கண்ணி, பிச்சாவரம் மாயவரம் காவிரி பட்டித்துறைக்கு போய் இருக்கிறோம்.
பிள்ளைகள், மற்றும் எங்களுடன் ஆற்றுக்கு வந்த பிள்ளைகளும் திருமணம் ஆகி வேறு ஊருக்கு போன பின் நாங்கள் இருவரும் இப்படி வேறு ஊர்களுக்கு ஆடிப்பெருக்கு சமயம் போய் வருவோம். கலவை சாதங்கள் கலந்து எடுத்து செல்வேன்.
இன்று கொத்தமல்லி துவையல் சாதம், சோயாபீன்ஸ் சுண்டல்.சாமி கும்பிட்ட மாம்பழம், அவல் பாயாசம்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
ஆடிப் பெருக்கு பதிவு எனக்கும் என் பழைய நினைவுகளை மீட்டது, கோமதிக்கா
பதிலளிநீக்குமாமா ஏரியின் அணைக்கட்டு பாதையில் நடந்து செல்லும் போது எடுத்த புகைப்படம் ரொம்ப இயல்பாக இருக்கிறது.
3 ஆம் தேதி ரொம்ப டைட்டாக இருந்தது. வேலைப் பளுவால். நேற்று மாலை முடித்து அப்புறம் திருத்தங்கள் பார்த்து அனுப்பிய பிறகுதான் ஆசுவாசம்!!
கீதா
வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
நீக்கு//ஆடிப் பெருக்கு பதிவு எனக்கும் என் பழைய நினைவுகளை மீட்டது, கோமதிக்கா//
விழாக்களை எதிர்பார்த்தல், மற்றும் கொண்டாட்டம் எல்லாம் சிறு வயதில் தான் அதிகம். இப்போது அதுவும் ஒரு நிகழவாய் முடிந்து விடுகிறது .
//மாமா ஏரியின் அணைக்கட்டு பாதையில் நடந்து செல்லும் போது எடுத்த புகைப்படம் ரொம்ப இயல்பாக இருக்கிறது.//
நடந்து கொண்டு இருந்தவர்களை திரும்ப சொல்லி எடுத்தேன், ஏன் என்ற கேள்வியுடன் திரும்பும் காட்சி அது.
// 3 ஆம் தேதி ரொம்ப டைட்டாக இருந்தது. வேலைப் பளுவால். நேற்று மாலை முடித்து அப்புறம் திருத்தங்கள் பார்த்து அனுப்பிய பிறகுதான் ஆசுவாசம்!!//
ஒரு வேலையை எடுத்து கொண்டால் முடித்தால்தானே ஆசுவாசம்.
சிறப்பாக செய்து முடித்து இருப்பீர்கள்.
இப்ப வடை பாயாசம் நம்ம வீட்டில் செய்வதே இல்லை, அக்கா. சில வருடங்கள் முன் வரை செய்ததுண்டு. அதுவும் சென்னையில் இருந்தால் உறவினர் எல்லாம் இருப்பதால் நாங்க இனிப்பு சாப்பிடலைனாலும் அவங்களுக்காகச் செய்வதுண்டு இப்ப இங்கு அப்படி இல்லையே.
பதிலளிநீக்குவீட்டுப் பூஜை சூப்பர்! பழங்களுடன் பாயாசமும்!
கீதா
//இப்ப வடை பாயாசம் நம்ம வீட்டில் செய்வதே இல்லை, அக்கா. சில வருடங்கள் முன் வரை செய்ததுண்டு. அதுவும் சென்னையில் இருந்தால் உறவினர் எல்லாம் இருப்பதால் நாங்க இனிப்பு சாப்பிடலைனாலும் அவங்களுக்காகச் செய்வதுண்டு இப்ப இங்கு அப்படி இல்லையே.//
நீக்குநானும் வடை எல்லாம் செய்யவில்லை, பாயசம் மட்டும் பண்டிகை என்பதால் இறைவனுக்கு, அப்படியே எனக்கு உதவும் பென்ணுக்கு அவர் எதிர்பார்ப்பார்.
வீட்டுப் பூஜை சூப்பர்! பழங்களுடன் பாயாசமும்!
//வீட்டுப் பூஜை சூப்பர்! பழங்களுடன் பாயாசமும்!//
ஆடிப்பெருக்கு அன்று அந்த சீஸனில் கிடைக்கும் அத்தனை பழங்களும் இறைவனுக்கு படைப்பார்கள்.
வீட்டில் இருந்தவை மட்டுமே வைத்து இருக்கிறேன். ஆடிப்பண்டிகைக்கு என்று கடைக்கு போய் வாங்கவில்லை.
எனக்கு காய்கறி கொண்டு வந்து தருபவர் இரண்டு பழங்கள் கொடுத்தார். மார்கெட் போகும் போது சொல்லி இருந்தால் வாங்கி வந்து இருப்பார், நான் சொல்லவில்லை.
ஆற்றுக்குப் படைக்கவருபவர்களை ஆசீர்வாதம் செய்ய மினி வேனில் வந்த தச்சக்குள மாரியம்மன்.//
பதிலளிநீக்குபாருங்க அம்மனுக்கும் மினி வேன்!! ஆனாலும் இப்படியானவற்றை விடாமல் செய்கிறார்களே சிறப்பு!!
கீதா
//பாருங்க அம்மனுக்கும் மினி வேன்!! ஆனாலும் இப்படியானவற்றை விடாமல் செய்கிறார்களே சிறப்பு!!//
நீக்குஆற்றுக்கு வெகு தூரத்திலிருந்து வரவேண்டியது இருந்து இருக்கும் தூக்கி வர வேண்டுமே! அதுதான் மினி வேன்.
மாயவரத்தில் ஆற்றுக்கு அம்மனை பல்லாக்கில் தூக்கி வருவார்கள் எண்ணெய் , நலுங்குபொடி , வளையல், முளைகட்டிய பச்சை பயிறு, புத்தாடை இவைகளை சீர் தட்டு போல தூக்கி வருவார்கள்,
அம்மன் ஆற்றில் நீராடுவார் பின் அலங்காரத்தோடு பவனி வருவார்.
ஆமாம் அக்கா சிறு தேர் உருட்டிய நினைவுகள்...அதெல்லாம் ஒரு காலம்.
பதிலளிநீக்குகீதா
//ஆமாம் அக்கா சிறு தேர் உருட்டிய நினைவுகள்...அதெல்லாம் ஒரு காலம்.//
நீக்குபதிவை படித்து பல கருத்துக்களை அளித்தமைக்கு நன்றி கீதா.