புதன், 27 ஆகஸ்ட், 2025

கருணை புரிவாய் கணபதியே!




அனைவருக்கும்  விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.



எங்கள் வீட்டுப்பிள்ளையார் அலங்காரத்துக்கு முன் .

மாவிலை அலங்காரம் .  மாவிலை  பூஜை செய்த பின் கொண்டு வந்தார். மீண்டும் மாவிலை அலங்காரம். அடுத்து சிறிது நேரம் கழித்து எருக்கம்பூ மாலை கொண்டு வந்தார்


 

எருக்கம் பூ மாலை சாற்றிய பின் எடுத்த படம். மாலை மீண்டும் பூஜை செய்யவேண்டும்.



எங்கள் வீட்டுப் பிரசாதம்.

 சுண்டல், எள் உருண்டை, மோதகம் மட்டும் செய்தேன்.  இதை செய்ய இறைவன் பலம் கொடுத்தார்.  இதற்கு மேல் ஆசைப்படக்கூடாது. பச்சரிசி இட்லி ,இனிப்பு பிடி கொழுக்கட்டை, வடை, அப்பம் எல்லாம் செய்வேன் முன்பு . 


காய்கறி விற்பவர் பழங்கள் வாங்கி தந்தார்.  


வீட்டில் பூஜை முடித்தபின் எங்கள் வளாகத்தில் உள்ள  பிள்ளையாரைப்  தரிசனம் செய்து வந்தேன்.

கணபதி ஹோமம், அபிசேகம், அலங்காரம் என்று சிறப்பாக நடைப்பெற்றது.
ஹோம நெருப்பில் உங்களுக்கு என்ன காட்சி தெரிகிறது சொல்லுங்கள். எனக்கு கலைமான்  போல தெரிகிறது.






வீட்டில் பூஜை  செய்து விட்டு போனேன்.  ஹோமம், அபிஷேகம்  முடிந்து  அலங்கார பூஜையும் முடியும் தருவாயில் தான் போனேன். பூஜையை படம் எடுக்க முடியவில்லை.

மேலே உள்ள மூன்று படங்களும் கோயில் வாட்ஸப் குழுவில் அன்பர் அனுப்பியது. கீழே உள்ள படங்கள் நான் எடுத்தேன்.



வரசித்தி விநாயகர் அலங்காரம்

அங்கு வழங்கிய பிரசாதம் பஞ்சாமிருதம், அப்பம், சர்க்கரை பொங்கல், புளியோதரை, மோதகம்

அப்பம் நான் செய்யவில்லை என்று பிள்ளையார் கொடுத்து விட்டார்.



இந்த ஆண்டு பேரன் செய்த பிள்ளையார். மகன் செய்த  போட்டோ பூத் .

பல இடங்களில் வைக்கப்பட்டது. 150 இடங்களில்  குழந்தைகள் பிள்ளையார்கள் செய்தார்கள்.  மகா கணபதி கோயில் ஏற்பாட்டில்.


சிறு வயதில்  பேரன் செய்த பிள்ளையாரில் எனக்கு பிடித்த பிள்ளையார் 2017ல் செய்த பிள்ளையார். முன்பு முகநூலில் போட்ட பிள்ளையாரை காட்டி இன்று கேட்டது, அதுதான்  அன்றும் இன்றும் படம்.

களிமண் பிள்ளையார் செய்யும் வகுப்பில் போய் கற்றுக் கொண்டு செய்தான்.

தங்கை வீட்டு பிள்ளையார் கொலு தங்கை அனுப்பி வைத்த படம்.
 
பிள்ளையார் சதுர்த்தி அன்று நிறைய பிள்ளையார் பார்த்தீர்களா? 

முன்பு சிறு வயதில் கோயிலுக்கு போனால் பிள்ளையார் சதுர்த்தி அன்று எத்தனை பிள்ளையார் பார்த்தோம் என்று எண்ணி கொண்டு வருவோம் வீட்டுக்கு. 

இப்போது எண்ணில் அடங்கா பிள்ளையார்கள் ஊர்வலம்  என்று தொலைக்காட்சியில் பார்க்கிறோம். எளிமையான பண்டிகை இப்போது ஆரவாரமாக கோலாகலமாக  வெகு உற்சாகத்தோடு கொண்டாடப்படுகிறது.

பிள்ளையார் மிகவும் எளிமையானவர்  மஞ்சளில், மண்ணில் பிடித்து வைத்தாலும் அவர் வந்து கருணையுடன் அருள் புரிவார்.

மீண்டும் அனைவருக்கும் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!


-----------------------------------------------------------------------------------------------

38 கருத்துகள்:

  1. மாலை வணக்கம் அம்மா.....

    இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

    படங்கள் பார்த்து ரசித்தேன். இந்த வருடம் எங்களுக்கு பண்டிகைகள் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      உங்களுக்கு பண்டிகை இல்லை என்றாலும் ரோஷிணி மூலமாக கல்லூரியில் செய்த பிள்ளையார் உங்களைப் பார்க்க உங்கள் இல்லம் வந்து விட்டார்.
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் சகோ

    அழகிய விநாயகர் படங்களின் தரிசனம் கிடைத்தது நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை , வாழ்க வளமுடன்
      நலமா ?
      உங்கள் கருத்துக்கும் , வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
    2. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி

      நீக்கு
  3. தலைப்பைப் பார்த்ததும் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய 'கருணை செய்வாயே கல்யாணியே' பாடல் நினைவுக்கு வந்தது.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //தலைப்பைப் பார்த்ததும் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய 'கருணை செய்வாயே கல்யாணியே' பாடல் நினைவுக்கு வந்தது. //

      நல்ல பாடலை நினைவு படுத்தி விட்டீர்கள், நானும் நாளை கேட்கவேண்டும்.
      வெள்ளிக்கிழமை அம்மன் பாடல்களை கேட்பேன்.

      நீக்கு
  4. அட விநாயகா...   இத்தனை வருடங்களில் இந்த வருடம்தான் எங்களுக்கு விநாயகருக்கு சாற்ற எருக்கம் மாலையே கிடைக்கவில்லை. 

    பாருங்கள்..  உங்கள் பதிவிலுள்ள படத்தைப் பார்க்கும்வரை நினைவுக்கும் வரவில்லை. 

    ஸாரி விநாயகா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அட விநாயகா... இத்தனை வருடங்களில் இந்த வருடம்தான் எங்களுக்கு விநாயகருக்கு சாற்ற எருக்கம் மாலையே கிடைக்கவில்லை. //

      முதல் நாள் கிடைக்கவில்லை என்று மறுநாள் தாமதமாக வந்து கொடுத்தார். பிள்ளையார் வாங்கி வரும் போது பிள்ளையார் செய்பவர்களே எருக்க்ம் மாலையும் விற்பார்கள் வாங்கி அணிவித்து வீட்டுக்கு எடுத்து வருவார்கள் சார்.

      இப்போது பிள்ளையார் வாங்குவது இல்லை, வீட்டில் இருக்கும் கொலு பொம்மையை தான் சார் போன பின் வணங்கி வருகிறேன்.

      //பாருங்கள்.. உங்கள் பதிவிலுள்ள படத்தைப் பார்க்கும்வரை நினைவுக்கும் வரவில்லை.

      ஸாரி விநாயகா...//

      எளிமையான பூ எங்கும் கிடைக்கும் முன்பு அதனால் அவரும் எளிமையானவர் என்று அதை போட்டு வணங்கினார்கள்.
      ஆனால் இப்போது டன் கணக்கில் அவருக்கு பூக்களால் அலங்காரம்.
      கோவை புளிங்குளத்தில் உள்ள பிள்ளையாருக்கு 4 டன்னில் மலர் அலங்காரம்.

      விநாயகர் கோபித்து கொள்ள மாட்டார். சமீப காலத்தில் பிள்ளையாருக்கு சில இலைகள், பூக்கள், பழங்கள் இதை வைத்து கும்பிட்டால் பலன் கிடைக்கும் என்று "ஹரிகேசநல்லூர் ஜோசியர்" சொன்னதும் மக்கள் அந்த இலைகளுக்கும், பூக்களுக்கும் தவியாய் தவித்தது நடந்தது.
      ஓரு அருகம்புல் மட்டுமே போதும் அவருக்கு.

      நீக்கு
    2. பாஸும் மருமகளும் கோபித்துக் கொள்கிறார்கள்! எருக்கம் மாலை இருந்ததாம். நான் சரியாக கவனிக்காமல் சொல்கிறேனாம்!!!

      நீக்கு
    3. அதுதானே நீங்கள் அவர்கள் அலங்காரம் செய்ததை கவனிக்கவில்லை என்றால் கோபம் வராதா? பிள்ளையாரை கரைத்து விட்டீர்களா?
      இல்லையென்றால் மீண்டும் போய் பார்த்து
      அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விடுங்கள். (அதுதான் நல்லது கூட்டணி பலமானது.)

      நீக்கு
    4. கோமதிக்கா அவர் எளியவர் ஆனால் மக்கள் அவரை அப்படி ஆக்குகிறார்கள். நீங்க பூவைச் சொல்லியிருக்கீங்க. மும்பையில் அவருக்கு தங்கத்திலும் வைரத்திலுமாக மிகவும் பணக்காரப் பிள்ளையார் என்று இன்ஷுரன்ஸ் கூட எடுத்துருக்காங்களாம்!!!! பாருங்க. பாருங்க மனுஷன் புத்திய.

      ஸ்ரீராம் விநாயகர் கோச்சுக்க மாட்டார். நாம மனுஷங்களுக்குத்தன இதெல்லாம்!!!!!

      கீதா

      நீக்கு
  5. ஹோமாக்கினியில் ஒரு மகான் காவி உடையில் அமர்ந்து 'விட்டல விட்டல' என்று சொல்வது போல கைகளை உயர்த்திப் பிடித்திருப்பது போல தெரிகிறது.  தலை கைக்குப் பின்னே மறைந்திருக்கலாம்.  நீங்கள் சொன்ன கலைமான் காட்சியும் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஹோமாக்கினியில் ஒரு மகான் காவி உடையில் அமர்ந்து 'விட்டல விட்டல' என்று சொல்வது போல கைகளை உயர்த்திப் பிடித்திருப்பது போல தெரிகிறது.//

      ஓ! அருமை. கைகளை மேலே தூக்கி பாடும் அனுராதா போட்வால் பாடல் "ஜெய்கணேசா ஜெய்கணேசா" பாடல் நினைவுக்கு வருகிறது.


      //தலை கைக்குப் பின்னே மறைந்திருக்கலாம். நீங்கள் சொன்ன கலைமான் காட்சியும் தெரிகிறது.//

      அதையும் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. சென்ற வருட பிள்ளையார் பதிவுகள் கண்களை நிறைக்கின்றன. இந்த உடல்நிலையில் இத்தனை பிரசாதங்கள் செய்து விட்டீர்கள். சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சென்ற வருட பிள்ளையார் பதிவுகள் கண்களை நிறைக்கின்றன. இந்த உடல்நிலையில் இத்தனை பிரசாதங்கள் செய்து விட்டீர்கள். சூப்பர்.//

      பிள்ளையார்களை கொஞ்சம் எடுத்து வைத்து , கொஞ்சம் பிராசதங்கள் செய்தற்கு இரவு உடல்வலியில் துன்ப பட்டேன்.
      அதை மகனிடம் சொன்ன போது

      மகன் ஆறுதலாக மகரிஷியின்
      விநாயகர் வழிபாடு ஏன் வந்தது என்ற காரணத்தை அவர் சொன்னதை எனக்கு நினைவு படுத்த பகிர்ந்து இருந்தான்.

      //ஐம்பூதங்களையும் ஐங்கரத்தனாக (விநாயகராக) கண்கண்ட கடவுளாக வணங்கி , நலவாழ்விற்கு அதன் அருளை வேண்டுவதற்கும் கூடி மகிழ்வதற்கும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.
      எல்லாம் வல்ல யாவும் அறிந்த எங்கும் நிறைந்த காந்த சகதியே கடவுள். அதுவே ஐம்பூதங்களாகி , அனைத்து உயிர்களாகி , இயற்கையாக உள்ளதை உணர்ந்து இயற்கையை கடவுளாக மதித்து தனக்கும் பிறருக்கும் எல்லா உயிர்களுக்கும் நல்லதைச் செய்து , உடல் மன துன்பமில்லாமல் நலமாக வாழ்ந்தால் போதும்.

      பொருள் மற்றும் கால விரயம் இல்லாமலும் உடலை வருத்தாமலும் தியானம் செய்து இயற்கையை கடவுளாக அறிந்து இயற்கையின் இனிமை கெடாமல் இயற்கை இன்பங்களை துய்த்து துன்பமில்லாமல் வாழ்த்தெரிந்தவருக்கு , விநாயகர் சதுர்த்தி வழிபாடு வேண்டியதே இல்லை//

      நான் பழக்கத்தை விட முடியாமலும் வழக்கத்தை தொடர முடியாமலும் இருப்பதை சொன்னேன்.

      அவர் கேட்கவில்லை இத்தனையும் எனக்கு செய் என்று, நம் அம்மா செய்ததை அப்படியே செய்ய நினைக்கிறோம். அவர்கள் அவர்களின் முன்னோர் செய்ததை கடை பிடித்தார்கள்.

      மருமகளும் எங்கள் வீட்டில் அவர்கள் வீட்டில் செய்வதை செய்கிறாள்.

      முடிந்த போது செய்து முடியாத போது மனதை ஆறுதல் படுத்த இப்படி எண்ணிக் கொள்ள வேண்டியதுதான்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. கோமதிக்கா உடம்பு முடியலைனாலும் இத்தனையும் செஞ்சுருக்கீங்களே! ஆனா அதுக்கப்புறம் அயற்சி தெரிந்ததா அக்கா?

    அக்கா முடியலைனா தியானம் பண்ணுங்க போதும். கடவுள்/இயற்கை எதுவும் கோச்சுக்காது. நானும் உடலுக்கு ஒத்துக்கொள்ளாது என்பதால் பழங்களோடு முடித்துக் கொள்வதைத் தொடங்கி சில வருடங்களாகிவிட்டது.

    ஆனால் நேத்து கணவரின் சித்தப்பா சித்தி, அவங்க பெண் எல்லாரும் முதல் நாள் வந்து, நேத்து மதியம் தான் கிளம்பினாங்களா சென்னைக்கு. அதனால் அவங்க வந்திருந்ததால் செய்தேன். இல்லை என்றால் பழங்கள் மட்டுமே!!

    நம்ம உடம்புக்கும் உணவு ஒத்துக் கொள்ள வேண்டுமே இல்லையா?

    விநாயகர் படங்கள் எல்லாம் சூப்பர்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா உடம்பு முடியலைனாலும் இத்தனையும் செஞ்சுருக்கீங்களே! ஆனா அதுக்கப்புறம் அயற்சி தெரிந்ததா அக்கா?
      ஆமாம், அயற்சி தெரிந்தது. நாம் நமக்கு வயது ஆகவில்லை என்று நினைத்தாலும் நம் உடம்பு உனக்கு வயது ஆகி விட்டது என்று உணர்த்தி கொண்டு இருக்கிறது. பழைய நினைப்பில் வண்டி ஓடாது.

      //அக்கா முடியலைனா தியானம் பண்ணுங்க போதும். கடவுள்/இயற்கை எதுவும் கோச்சுக்காது. நானும் உடலுக்கு ஒத்துக்கொள்ளாது என்பதால் பழங்களோடு முடித்துக் கொள்வதைத் தொடங்கி சில வருடங்களாகிவிட்டது.//

      ஆமாம். அதுதான் செய்ய வேண்டும்.


      //ஆனால் நேத்து கணவரின் சித்தப்பா சித்தி, அவங்க பெண் எல்லாரும் முதல் நாள் வந்து, நேத்து மதியம் தான் கிளம்பினாங்களா சென்னைக்கு. அதனால் அவங்க வந்திருந்ததால் செய்தேன். இல்லை என்றால் பழங்கள் மட்டுமே!!//

      விருந்தினர் வருகையால் பிள்ளையாருக்கு யோகம்.

      //நம்ம உடம்புக்கும் உணவு ஒத்துக் கொள்ள வேண்டுமே இல்லையா?//

      ஆமாம் நமக்கு எது ஒத்துக் கொள்ளும் உணவோ அதை படைத்து உண்ண வேண்டியது அவசியம் தான்.

      அந்த அந்த சீஸனுக்கு கிடைக்கும் காய் கனிகள் விளையும் உணவு பொருட்களை கொண்டுதானே இறைவனுக்கு பிரசாதமாக படைக்கப்பட்டு இருக்கிறது.


      //விநாயகர் படங்கள் எல்லாம் சூப்பர்.//

      நன்றி கீதா.


      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தாமதமான பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.( என்றாலும், இப்போதெல்லாம் விழாவிற்கு பினவரும் நாட்களிலும் இந்த விழாவை மக்கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.)

    பிள்ளையார் படங்கள், பழைய நினைவுகள் இப்போதைக்கு மகன் தந்த விநாயகர் கோவிலுக்கு பங்களிப்பு என அனைத்துமே நன்றாக உள்ளது.

    தங்கை வீட்டு கொலுப்படம், தங்கள் வீட்டில் பிள்ளையாருக்கு நீங்கள் செய்த அலங்காரங்கள், நேவேத்தியங்கள் என அனைத்தையும் கண்டு ரசித்தேன். உடம்புக்கு முடியாத போதிலும் சிறப்பாக செய்துள்ளீர்கள். உங்கள் பதிவின் மூலம் நன்றாக பல பிள்ளையார்களை தரிசித்துக் கொண்டேன். சந்தேகமில்லாமல், உங்களுக்கு அந்த பலத்தை தந்தவன் பிள்ளையார்தான். அவன்தான் இனியும், நமக்கு மன வலிமையையும், உடல் பலத்தையும் தந்தருள வேண்டும். பிரார்த்தனை செய்து கொள்கிறேன். 🙏.

    ஆம். தங்கள் பேரன் முன்பு செய்த கலர் பிள்ளையார் அழகாக உள்ளார். வீட்டு வளாகத்தில் உள்ள பிள்ளையார் அலங்காரமும் நன்றாக உள்ளது. அந்த ஹோம தீபத்தில் பல பூக்கள் விநாயகரின் அருளால், நம் வேண்டுதலின் போது அதை அவர் ஆசிர்வதிப்பது போல, கீழே விழுவது போல தோன்றியது. தங்கள் அழகான கற்பனைப்படி கலைமானும் கண்ணுக்கு தெரிந்தன.

    இன்று நன்கு ஓய்வு எடுத்து உடல்நலம் பார்த்துக் கொள்ளுங்கள் சகோதரி பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      வணக்கம் சகோதரி

      //பதிவு அருமை. தாமதமான பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.( என்றாலும், இப்போதெல்லாம் விழாவிற்கு பினவரும் நாட்களிலும் இந்த விழாவை மக்கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.)//

      நம் வீடுகளிலும் முன்பு பிள்ளையார் மூன்று நாட்கள் இருப்பார், வெள்ளி, செவ்வாயாக இருந்தால் கூட இரண்டு நாட்கள் இருப்பார்.
      உடனே கரைக்க மாட்டார்கள். இப்போது தினம் பிரசாதம் செய்து படைக்க நேரம் இல்லை , வீட்டில் இருந்தால் பரவாயில்லை, எல்லோரும் வேலைக்கு போகிறார்கள் அது முடியாத போது உடனே கரைக்க வேண்டிய வேலையை செய்து விடுகிறார்கள்.

      பிள்ளையார் ஊர்வலம் நீரில் கரைக்கும் விழா நடந்து கொண்டு இருக்கிறது. நீங்கள் தாமதமாக சொன்னதாக நினைக்கவேண்டாம்.

      //பிள்ளையார் படங்கள், பழைய நினைவுகள் இப்போதைக்கு மகன் தந்த விநாயகர் கோவிலுக்கு பங்களிப்பு என அனைத்துமே நன்றாக உள்ளது.

      தங்கை வீட்டு கொலுப்படம், தங்கள் வீட்டில் பிள்ளையாருக்கு நீங்கள் செய்த அலங்காரங்கள், நேவேத்தியங்கள் என அனைத்தையும் கண்டு ரசித்தேன். உடம்புக்கு முடியாத போதிலும் சிறப்பாக செய்துள்ளீர்கள். உங்கள் பதிவின் மூலம் நன்றாக பல பிள்ளையார்களை தரிசித்துக் கொண்டேன். சந்தேகமில்லாமல், உங்களுக்கு அந்த பலத்தை தந்தவன் பிள்ளையார்தான். அவன்தான் இனியும், நமக்கு மன வலிமையையும், உடல் பலத்தையும் தந்தருள வேண்டும். பிரார்த்தனை செய்து கொள்கிறேன். 🙏.//

      அனைத்தையும் ரசித்தமைக்கும் , உங்கள் பிராத்தனைக்கும் நன்றி நன்றி.


      //தங்கள் பேரன் முன்பு செய்த கலர் பிள்ளையார் அழகாக உள்ளார். வீட்டு வளாகத்தில் உள்ள பிள்ளையார் அலங்காரமும் நன்றாக உள்ளது. அந்த ஹோம தீபத்தில் பல பூக்கள் விநாயகரின் அருளால், நம் வேண்டுதலின் போது அதை அவர் ஆசிர்வதிப்பது போல, கீழே விழுவது போல தோன்றியது. தங்கள் அழகான கற்பனைப்படி கலைமானும் கண்ணுக்கு தெரிந்தன.//

      பூக்கள் நம்மை ஆசீவதிப்பது போல கீழும் விழும் கற்பனை தோற்றம் தெரிந்தது மகிழ்ச்சி, நானும் அப்படியே நினைத்துப்பார்த்து கொண்டேன். கலைமானும் கண்ணுக்கு தெரிந்தது மகிழ்ச்சி.

      //இன்று நன்கு ஓய்வு எடுத்து உடல்நலம் பார்த்துக் கொள்ளுங்கள் சகோதரி பகிர்வுக்கு மிக்க நன்றி.//

      இன்று ஓய்வு எடுத்து கொண்டுதான் இருக்கிறேன், மகன் வீட்டு விநாயகர் சதுர்த்தி விழா நேர்லையில் பார்த்தேன்.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. தங்கை வீட்டு கொலு சூப்பர், கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தங்கை வீட்டு கொலு சூப்பர், கோமதிக்கா//

      என் தங்கையிடம் சொல்கிறேன் மகிழ்வாள்.

      நீக்கு
  10. ஹோம நெருப்பில் உங்களுக்கு என்ன காட்சி தெரிகிறது சொல்லுங்கள். //

    கைகளை மேலே தூக்கி பஜனையில் பாடுவாங்களே அப்படி.

    அப்படிப் பாருவதற்கு வலக்கை பக்கம் ஒரு யோகி/சித்தர் நடனம் ஆடுவது போலவும், வலக்கையில் ஏதோ ஒன்று இருப்பது போலவும் அதைக் கொத்த ஒரு நாரை வடிவம் இடப்பக்கம் பறந்து வருவது போன்றும் தோன்றியது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கைகளை மேலே தூக்கி பஜனையில் பாடுவாங்களே அப்படி.

      அப்படிப் பாருவதற்கு வலக்கை பக்கம் ஒரு யோகி/சித்தர் நடனம் ஆடுவது போலவும், வலக்கையில் ஏதோ ஒன்று இருப்பது போலவும் அதைக் கொத்த ஒரு நாரை வடிவம் இடப்பக்கம் பறந்து வருவது போன்றும் தோன்றியது//

      உங்கள் கற்பனை அருமை.
      நானும் நினைத்துப்பார்த்து கொண்டேன்.

      நீக்கு
  11. கவின் பெரியவராகி வளர்கிறார் என்று தெரிகிறது! அரும்பு மீசையுடன்! சின்னக் குழந்தையாக இருந்த கவின் இப்போது இப்படி வளர்ந்து நிற்கும் படங்களின் தொகுப்பு சூப்பர்.

    2017 ல் பேரன் செய்த பிள்ளையார் சூப்பர்!!!

    எல்லாமே நன்றாக இருக்கிறது கோமதிக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கவின் பெரியவராகி வளர்கிறார் என்று தெரிகிறது! அரும்பு மீசையுடன்! சின்னக் குழந்தையாக இருந்த கவின் இப்போது இப்படி வளர்ந்து நிற்கும் படங்களின் தொகுப்பு சூப்பர்.

      2017 ல் பேரன் செய்த பிள்ளையார் சூப்பர்!!!

      எல்லாமே நன்றாக இருக்கிறது கோமதிக்கா.//


      பதிவை ரசித்துப்படித்து கருத்துக்கள் வழங்கியதற்கு நன்றி கீதா.

      நீக்கு
  12. தாமதமான விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

    பிரசாதம் அருமை. இந்தத் தடவை மயிலாப்பூரில் இனிப்பு கொழுக்கட்டை இரண்டு இடங்களில் வாங்கினேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத தமிழன் , வாழ்க வளமுடன்

      வாழ்த்துக்கு நன்றி
      இனிப்பு கொழுக்கட்டை நன்றாக இருந்ததா ? சதுர்த்திக்கு இனிப்பு கொழுக்கட்டை சாப்பிட்டு விட்டீர்கள். பயணநடுவிலும் பதிவை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி

      நீக்கு
  13. கவினின் பழைய புகைப்படம் அருமை

    பஞ்சாம்ருதப் பிரசாதம் நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவினின் பழைய படத்தை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி. பஞ்சாமருதப்
      பிரசாதம் கொஞ்சமாக இருந்தாலும் உங்களை கவர்ந்து விட்டதே!
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. கோமதி அக்கா எப்படி இருக்கிறீங்கள் நலம்தானே? நலமாக இருக்க கணபதி அருள் புரிவார்.
    கொஞ்சம் நீண்ட இடைவெளி எடுத்து வந்திருக்கிறேன்.
    உங்க வீட்டுப் பிள்ளையார் அழகோ அழகு... ஆனா கொஞ்ச நேரத்தில அவரைக் கரைச்சிடுவீங்களெல்லோ? அதுதான் கவலையாக இருக்கெனக்கு.. கரைக்க மனம் வராது.

    இலங்கையில் இப்படிக் கரைக்கும் முறை இல்லை என்பதால் நான் எப்பவும் இப்படிப் பார்த்ததில்லை.

    நாங்கள் சந்தனம் மஞ்சளில் பிள்ளையார் செய்து வைப்போம் அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்

      //கோமதி அக்கா எப்படி இருக்கிறீங்கள் நலம்தானே?//

      நலம் அதிரா. நானும் உங்களை நினைத்து கொண்டே இருந்தேன் கணபதி அழைத்து வந்து விட்டார்.

      //நலமாக இருக்க கணபதி அருள் புரிவார்.//

      நன்றி அதிரா, நலம் வேண்டும் இப்பொழுது கால், இடுப்பு வலியில் அவதி படுகிறேன். நம்மைவிட மூத்தவர்கள் கை, கால் சுகத்தோடு நன்றாக இருங்க என்று வாழ்த்துவார்கள். அது போல நீங்கள் நலமாக இருக்க கணபதி அருள் புரிவார் என்று சொன்னது அருள்வாக்கு போல உள்ளது.

      //கொஞ்சம் நீண்ட இடைவெளி எடுத்து வந்திருக்கிறேன்.//

      இனி அடிக்கடி வாருங்கள். நீங்கள் வந்தால் தனி உற்சாகம் வந்து விடும்.

      //உங்க வீட்டுப் பிள்ளையார் அழகோ அழகு... ஆனா கொஞ்ச நேரத்தில அவரைக் கரைச்சிடுவீங்களெல்லோ? அதுதான் கவலையாக இருக்கெனக்கு.. கரைக்க மனம் வராது.//

      இல்லை நான் இப்போது கரைக்கும் பிள்ளையார் வாங்குவது இல்லை. கொரோனா காலத்தில் விட்டது அப்படியே விட்டுவிட்டேன்.

      மாமா இருந்தால் வாங்கி வருவார்கள்.

      மகன் வீட்டிலும் கரைப்பது இல்லை ஒவ்வொரு வருடம் செய்யும் பிள்ளையார்களை அப்படியே வைத்து வழி பட்டு விடுவான் பிள்ளையார் சதுர்த்தி அன்று.


      //இலங்கையில் இப்படிக் கரைக்கும் முறை இல்லை என்பதால் நான் எப்பவும் இப்படிப் பார்த்ததில்லை.//

      இந்தளவு கரைக்கும் முறை எங்கும் இருக்காது. மண் பிள்ளையார் என்றால் பராவாயில்லை இப்போது பெரிது பெரிதாக வண்ண பிள்ளையார்கள் கடலில் கொண்டு கரைத்து அவை கரையாமல் கடல்வாழ் ஜீவராசிகளுக்கு கெடுதல் செய்கிறது.

      //நாங்கள் சந்தனம் மஞ்சளில் பிள்ளையார் செய்து வைப்போம்//

      அவ்வளவுதான்.//

      நல்லது.

      நீக்கு
  15. நானும் இம்முறை சுண்டல், மோதகம் வடை மட்டுமே செய்து கொடுத்தேன் அவருக்கு.
    உங்கட தங்கச்சி வீட்டுப் பிள்ளையாரும் அழகு.. பேரனின் கைவண்ணமும்... முன்னேற்றமும் ரசிக்கிறேன், அவர் இப்படியே நல்லபடி வளர்ச்சியை எட்ட பிள்ளையார் துணை புரிவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நானும் இம்முறை சுண்டல், மோதகம் வடை மட்டுமே செய்து கொடுத்தேன் அவருக்கு.//

      அவருக்கு அக்கா வடை கொடுக்கவில்லை, தங்கை வடை கொடுத்து விட்டது மகிழ்ச்சி.

      //உங்கட தங்கச்சி வீட்டுப் பிள்ளையாரும் அழகு.//

      நன்றி. மகன் வீட்டிலும் இந்த மூரை பிள்ளையார் கொலு வைத்தான் ஒரு நாள் பதிவு போட வேண்டும்.

      . //பேரனின் கைவண்ணமும்... முன்னேற்றமும் ரசிக்கிறேன், அவர் இப்படியே நல்லபடி வளர்ச்சியை எட்ட பிள்ளையார் துணை புரிவார்.//

      உங்கள் ரசிப்புக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி.

      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா.

      நீக்கு
  16. பிள்ளையார் சதுர்த்தி வழிபாடு சிறப்பு. மகன் செய்த ஃபோட்டோ பூத் பல குழந்தைகளுக்கு மகிழ்வைத் தந்திருக்கும். பேரன் செய்த பிள்ளையார் அழகு. மகா கணபதியின் அருள் அனைவருக்கும் கிட்டட்டுமாக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //பிள்ளையார் சதுர்த்தி வழிபாடு சிறப்பு. மகன் செய்த ஃபோட்டோ பூத் பல குழந்தைகளுக்கு மகிழ்வைத் தந்திருக்கும்.//

      ஆமாம், அவர்கள் செய்த பிள்ளையாருடன் பூத் அருகில் நின்று படம் எடுத்து மகிழ்ந்தார்களாம்.

      //பேரன் செய்த பிள்ளையார் அழகு. மகா கணபதியின் அருள் அனைவருக்கும் கிட்டட்டுமாக.//

      உங்கள் கருத்துக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி.

      நீக்கு
  17. உங்கள் வீட்டு விநாயகர் சதுர்த்தி அலங்காரம் அழகாக இருக்கிறது.

    தங்கையின் கொலுவும் சூப்பர்.

    பேரன் சிறுவயதில் செய்த பிள்ளையார் கவர்கிறார்.

    மகனின் போட்டோ பூத் சிறப்பானது குழந்தைகளுக்கு பிடித்தமானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      //உங்கள் வீட்டு விநாயகர் சதுர்த்தி அலங்காரம் அழகாக இருக்கிறது.

      தங்கையின் கொலுவும் சூப்பர்.

      பேரன் சிறுவயதில் செய்த பிள்ளையார் கவர்கிறார்.

      மகனின் போட்டோ பூத் சிறப்பானது குழந்தைகளுக்கு பிடித்தமானது.//

      அனைத்தையும் பார்த்து ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி மாதேவி.

      நீக்கு