புதன், 29 ஏப்ரல், 2026

மலர் கோலங்கள் , மலர் அலங்காரங்கள், அழகர் வருகை



மகன் வீட்டுத்தோட்டத்தில் உள்ள மலர்களை கொண்டு மலர் கோலங்கள், மலர் அலங்காரங்கள் செய்தேன் . அவை இந்த பதிவில்.


மகன் வீட்டில் இருந்த போது    மலர் கோலங்கள் மூன்று  பதிவுகள் போட்டேன், இந்த பதிவு டிராப்பிட்டில் இருந்தது பகிராமல்  அதனால்  இன்று போட்டு விட்டேன். மலர் கோலங்கள்  நான்காவது பதிவு இது.

அழகர் படங்களும் இந்த பதிவில் இடம் பெறுகிறது.
































பூக்கள் குறைந்து விட்டதால் இலைகளால் அலங்காரம். பழுத்த இலைகள் (பத்திரம்)  இறைவனுக்கு உகந்தது என்பார்கள். மூன்று மூன்று இலையாய் வில்வ இலை போல் ஒரு மரம் இருக்கிறது மகன் வீட்டில், அதை வில்வமாக வைத்து அலங்காரம்.

 வெயில் அதிகமாகி விட்டதால் பூக்கள் குறைந்து விட்டது. வெள்ளையும் , ரோஸ் கலரும் நிறைய பூத்தன. இப்போது கொஞ்ச பூக்கள் பூக்கிறது.

சிவப்பு அலரி இப்போதுதான் வாங்கினோம் சிறு செடியாக இருக்கிறது . சூரியகாந்தி அணில் சாப்பிட்டது போக மீதி கிடைக்கிறது. செண்டு பூ இரண்டு செடி வாங்கினோம் , இரண்டு மூன்று பூ பூத்தது, அதையும் குருவிகள் அழித்து விட்டது.












இங்கு மீனாட்சி  சித்திரை திருவிழா  நடைபெற்றது.  காலையும் மாலையும்  ஜோதி தொலைக்காட்சியில்   நேரலையில் திருவிழாவை பார்த்து வருகிறேன். இன்று அழகர்  அழகர் மலையிலிருந்து மதுரைக்கு வந்து கொண்டு இருக்கிறார். அவரை எதிர் கொண்டு அழைக்கும்  "அழகர் எதிர் சேவை" நாளை நடைபெறும் அதை தொடர்ந்து 10 நாட்கள் அழகர் திருவிழா .

முன்பு  அழகரும் கண்ணனும் என்று எதிர்சேவை பதிவு போட்டு இருக்கிறேன்.
படித்துப்பார்க்கலாம். அழகரை பார்க்கலாம்.







 

இனி அழகர் திருவிழா முடிந்து  அழகர் மலைக்கு போகும் வரை மதுரை முழுவதும் இந்த பாடல் தான் முழங்கும்.

வாராரு வாராரு அழகர் வாராரு
சப்பரம் ஏறி வாராரு
நம்ம சங்கடம் தீர்க்க போராரு
உலகம் காக்க வாராரு

உலகத்தை காக்க வேண்டுவோம்.


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக