ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

திருக்கேதாரத் தலபயணம் -பகுதி 6




                             பகுதி-6

                        அநேகதங்காவதம்
                       (ANEKATHANGAVATHAM)
14.05.2012 
அதிகாலை 4.50க்கு உத்தரகாசியிலிருந்து  புறப்பட்டோம். தராசு, டெஹ்ரி, ஸ்ரீநகர் என்கிற ஊர்களின் வழியாக ருத்ரப் ப்ரயாகை அடைந்தோம். உலகிலேயே அதிக உயரத்தில் அமைந்த அணைக்கட்டு டெஹ்ரி அணைக்கட்டு என்றார்கள்.



டெஹ்ரி அணைக்கால்வாய்

டெஹ்ரி அணை

டெஹ்ரி நகரமும் மன்னர் கோட்டையும்


நெடுஞ்சாலைச் சுரங்கப்பாதை-ருத்ரப்ரயாகை
ருத்ரப்ரயாகையில் கங்கை நதியின் மூல நதியாகிய அலக்நந்தா ஆறும், மந்தாகினி ஆறும் கூடுகின்றன.
ருத்ரப் ப்ரயாகை

குப்தகாசி
ருத்திரப்ரயாகையிலிருந்து சுமார் 40 கி.மீ தூரத்தில் குப்தகாசி என்னும் நகரம் உள்ளது. நகரத்தில் நடுவில், ஒரு மலை மீது அமைந்திருக்கும் விஸ்வநாதர் திருககோயிலைச் சென்று பார்த்தோம். சுமார் 100 படிகள் ஏறவேண்டும். 

குபதகாசி கோயில் செல்லும் வழி

குப்தகாசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்லும் வழி




மகாபாரதப் போர் முடிவுக்கு வந்ததும், பஞ்சபாண்டவர்கள் உறவினர்களைக் கொன்ற பாவம் நீங்கவும், மோட்சம் அடையவும் சிவபெருமானைக் காசியில் வழிபட வந்தார்களாம். இதனை விரும்பாத சிவபெருமான் அவர்களுக்குக் காட்சி தராமல் குப்தகாசிக்கு வந்து நந்தி வடிவில் ஒளிந்திருந்தாராம். பஞ்சபாண்டவர்கள் இங்கு வந்து எப்படியோ கண்டுபிடித்து வணங்கி அருள் பெற்றார்களாம். குப்த என்ற சொல்லுக்கு ஒளிதல் என்று அர்த்தமாம். காசியிலிருந்து சிவபெருமான் இங்கு வந்து ஒளிந்திருந்ததால் இந்த இடத்திற்கு குப்தகாசி என்ற பெயர் வந்ததாம்.
குப்தகாசி விஸ்வநாதர் கோயில்

மூலஸ்தானத்தில் சிவலிங்கம். பின்னால் பார்வதி உருவம்.  அங்குள்ள பூசாரி இதனை சக்தி பீடங்களில் ஒன்று என்றார். விஸ்வநாதர்  கோயிலின் முனனால் ஒரு சிறிய நீர்த்தொட்டி(குளம்) அதன் ஒரு மூலையில் கோமுகி அமைப்பிலிருந்து நீர் விழுந்து கொண்டிருக்கிறது. 
திருக்கோயில் திருக்குளம்
இதனை மணிக்கர்ணகை குண்டு என்கிறார்கள். கோயிலின் ஒரு புறம் பெண்கள் அமர்ந்து கூட்டு வழிபாடு செய்து கொண்டு இருந்தனர். அர்த்தநாரீசுவரருக்கு தனிச்சந்நிதி உள்ளது. இங்கு அவ்வப்போது சிறுதூறல் இருந்தது. 
சீதாப்பூரில் நாங்கள் தங்கியிருந்த இடம்

வழியெல்லாம் சற்று வெப்பமாகவே இருநதது. மாலை 7.30 மணிக்கு சீத்தாப்பூர் சென்று சேர்ந்தோம். இங்கு தங்கும் இடம் வசதியாக இருக்கவில்லை. சீத்தாப்பூரில் நல்ல குளிர்.
சீத்தாப்பூர் தங்கும் விடுதியில் கொடிரோஜா

15.05.2012
அதிகாலை 4-30 மணிக்கு சீதாப்பூரிலிருந்து புறப்பட்டோம்.
சாலைகளில், மேலிருந்து கற்கள் சரியும் பகுதி-எச்சரிக்கைப்பலகை

கெளரி குண்ட்(அநேகதங்காவதம்)

காலை 7.00 மணிக்கு கௌரிகுண்ட் அடைந்தோம். நாங்கள் எங்களை அழைத்துச் செல்லும் வழிகாட்டி  ஆனந்திடம் முன்பே கூறி விட்டோம் - அநேகதங்காவதம் பாடல் பெற்ற ஸ்தலம் என்பதால் அதைப் பார்ப்பது எங்கள் பயணத்திட்டத்தில் முக்கியம், அதனால் அங்கு நீங்கள் நிறுத்திக் காண்பிக்க வேண்டும் என்று சொல்லி விட்டோம். அவர் கேதார்நாத் சீக்கீரம் போக வேண்டும்., தரிசனம் முடிந்து திரும்பி வருவதும் சீக்கிரம் வர வேண்டும். பாதை மோசமாக இருப்பதால் பெரிய பஸ் இரவு நேரத்தில் ஓடத்தடை விதித்திருக்கிறார்கள் .  நீங்கள் எல்லாம் வர வர உங்கள் எல்லோரையும் ஜீப்பில் தங்கும் இடத்திற்கு அனுப்பி விடுவேன் என்றார். சீக்கிரம் போனால் தான் டோலி  கிடைக்கும் என்றார். எப்படி என்றாலும் அநேகதங்காவதம் கோவிலைப் பார்ப்பதில் நாங்கள் உறுதியாக இருந்ததால், எங்களுக்கு அந்த இடத்தை காட்டி, சீக்கீரம் போய் வந்து விடுங்கள் என்றார். நாங்கள் அது போல் நாங்கள் விரைவாகச் சென்று தரிசித்து வந்தோம்.

இருப்பிடம்

கேதார்நாத் போக கொஞ்சதூரம் படியேற வேண்டும். படியேறும்போது. பாதி தூரத்தில் வலது புறம் திரும்பினால் கௌரிகுண்டம் உள்ளது. இது வெந்நீர்க்குளம். குளத்தின் ஒரு மூலையில் கோமுகியிலிருந்து வெந்நீர், குளத்தினுள் எப்போதும் விழுந்து கொண்டேயிருககிறது. பக்தர்கள் குளிக்க ஆண்களுக்குத் தனியாகவும் பெண்களுக்குத் தனியாகவும் இரண்டு வெந்நீர்க்குளங்கள் உள்ளன. தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக் கொண்டோம். 
கெளரிகுண்டம்-வெந்நீர் ஊற்று

கௌரிகுண்டத்திற்குத்  தென்புறம் கௌரி கோயில் உள்ளது. 
கெளரி தவம் செய்த இடம் இது என்று கூறப்படுகிறது. அநேகதங்காவதம் என்னும் பாடல் பெற்ற சிவத்தலம் இதுதான் என்று கருதப்படுகிறது.
(திருக்கயிலாயத்தின் கிழக்கு பரிக்கிரமத்தில் அமைந்துள்ள கெளரிகுண்டமே அநேகதங்காவதம் என்றும் சிலர் கூறுவார்கள்)

சூல முண்டுமழு வுண்டவர் தொல்படை சூழ்கடல்
ஆல முண்டபெரு மான்றன் அநேகதங் காவதம்
நீல முண்டதடங் கண்ணுமை பாகம் நிலாயதோர்
கோல முண்டள வில்லை குலாவிய கொள்கையே

என்று திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவனைப் பாடுகிறார்

இங்கு மூலஸ்தானத்தில் சிவபெருமான் இலிங்கவடிவில் அமைந்துளளார். 1 அடி உயரம்.  இங்கும் ஒரு சிறுகுளம் உள்ளது. அதில் கோமுகி உள்ளது.
திருஅநேகதங்காவதம் தேவாரப்பாடல் பெற்ற தலம்-கெளரிகுண்டம்


மூலஸ்தானம்

கெளரி குண்டத்தில் தீர்த்தம் சேகரித்துக் கொண்டு  சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தோம். அங்குள்ள பூசாரி, வந்தவர்களுக்காக ஆரத்தி காட்டாமல் இருந்த இடத்தில் இருந்து கொண்டு காணிக்கை மட்டும் கேட்கிறார்.
சுவாமி சன்னதிக்கு வெளியில் இருக்கும் அம்பாள் ஒற்றைக் காலில்  தபசு செய்யும்  காட்சி அழகாய் வடிக்கப்பட்டு இருக்கிறது.
ஒற்றைக்காலில் நின்று பார்வதி தேவி தவம்
கோவிலைச் சுற்றிலும் உள்ள சாதுக்கள் நம்மிடம் காசு கேட்கிறார்கள்.


.
கோவிலுக்கு போகும் பாதை எல்லாம் ஈரம் - காலை ஊன்றி நடக்க வேண்டும். இல்லையென்றால் விழநேரிடும்.


அநேகதங்காவதம் தரிசித்த பின் திருக்கேதாரம் செல்ல டோலி ஸ்டாண்ட் நோக்கிச் சென்றோம்.

திருக்கேதாரம் சென்று தரிசித்த செய்திகளை அடுத்த பதிவில் காணலாம்

 (தொடரும்)

23 கருத்துகள்:

  1. படங்களுடன் விளக்கங்களும் மிக மிக அற்புதம்
    பாடல் பெற்ற ஸ்தல்ம் என மட்டும் கூறிப்போகாமல்
    அந்தப் பாடலையும் பதிவாக்கித் தந்தது எதையும்
    நிறைவாகச் செய்யத் தாங்கள் எடுத்துக் கொள்ளும்
    அதீத முயற்சி பிரமிப்பூட்டுகிறது
    படஙகள் அனைத்தும் அற்புதம் என்றாலும்
    பார்வதி தவம் மிக மிக அற்புதம்
    நாங்களும் தொடர்ந்து உடன்பயணம் செய்வதைப்போல்
    உணர்கிறோம்.மனத்தில் நிறைவை ஏற்படுத்திப்போகும்
    அருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அழகான படங்கள்.
    அருமையான விளக்கங்கள்.

    புனிதப் பயணம் தினந்தோறும் எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் போய்க்கொண்டு இருக்கிறது.

    நம் திரு ரமணி சார் மேலே சொல்லியுள்ளதுபோலவே
    ’நாங்களும் தொடர்ந்து உடன்பயணம் செய்வதைப்போல் உணர்கிறோம்’

    பயணம் தொடரட்டும் .....

    பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. படங்களுடன் நல்ல விளக்கங்களும் அருமை. உஙகளோடு பயணம் செய்தது போல் அவ்ளவு தெளிவா எழுதியிருக்கிங்க. அருமை. நன்றி

    பதிலளிநீக்கு
  4. காசியிலிருந்து சிவபெருமான் இங்கு வந்து ஒளிந்திருந்ததால் இந்த இடத்திற்கு குப்தகாசி என்ற பெயர் வந்ததாம்.

    சிறப்பான படங்கள்
    தேவாரப்பாடல் பகிர்வுகள்
    அருமையான தகவல்கள் என அற்புதமாய் பதிவு. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  5. படங்களுடன் தகவல்களை சிரத்தையுடன் கேட்டறிந்து பகிர்ந்திருக்கும் விதம் சிறப்பு.

    டெஹ்ரி அணை, கொடி ரோஜாக்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  6. மிகவும் நல்ல பயண அனுபவம் உங்களுக்குமட்டுமில்லே எங்களுக்கும் கூட உங்க பதிவின் மூலமா கிடைக்கிரது நன்றி

    பதிலளிநீக்கு
  7. வாங்க ரமணி சார், உங்கள் முதல் வருகைக்கு நன்றி.
    என் கணவர் திருமுறை முற்றோதல் செய்வார்கள் அவர்களிடம் சம்பந்தர் பாடல் வேண்டும் என்று கேட்டேன் அவர்கள் எடுத்து தந்தார்கள்.
    தொடர்ந்து படித்து கருத்துக்கள் சொன்னதற்கும், தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார்,

    புனிதப் பயணம் தினந்தோறும் எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் போய்க்கொண்டு இருக்கிறது.//

    நீங்களும் எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் வந்து பின்னூட்டம் அளித்து உற்சாகப்படுத்கிறிரீகள்.

    உங்கள் மனகனிந்த பாரட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு
  9. வாங்க விஜி, உங்கள் வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வாங்க இராஜராஜேஸ்வரி, உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வாங்க ராமலக்ஷ்மி, பதிவு எழுத ஆரம்பித்தவுடன் சில கடமைகள் வந்து ஒட்டிக் கொள்கிறது. அதில் ஒன்று தகவல் சேகரிப்பது. நீங்கள் எவ்வளவு அழகாய் விஷயங்களை கொடுப்பீர்கள் நானும் கொஞ்சம் கற்றுக் கொண்டேன்.
    ரோஜாப்பூவை நீங்கள் ரசிப்பீர்கள் என்று நினைத்தேன், ரசித்துவிட்டீர்கள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வாங்க லக்ஷ்மி அக்கா, உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. ஆஹா... பதிவில் உள்ள அந்த ரோஜாப்பூக்களை போல் படங்கள் எல்லாம் அருமை...

    பதிவாக்கித் தந்தமைக்கு மிக்க நன்றி...

    வாழ்த்துக்கள்...(TM 3)

    பதிலளிநீக்கு
  14. படங்களும்,பதிவும் அருமை! நன்றி!

    இன்று என் தளத்தில்
    அஞ்சு ரூபாய் சைக்கிள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_20.html

    பதிலளிநீக்கு
  15. Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

    பதிலளிநீக்கு
  16. பல புனித தலங்களையும் தர்சிக்கக் கிடைத்தது. மிகவும் மகிழ்கின்றேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வாங்க இராஜராஜேஸ்வரி, உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
    உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. மாதேவி, புனித தரிசனம் கிடைத்தது எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
    உங்கள் வரவுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  19. அழகான படங்கள். இடம் விவரம் போன்றவற்றை போட்டோவின் பின் பக்கத்தில் குறித்து வையுங்கள். பிற்காலத்தில் நினைவலைகளில் மூழ்க உதவியாய் இருக்கும். எதுவும் மறந்தாலும் நினைவு படுத்தும்.

    பதிலளிநீக்கு
  20. வாங்க ஜி.எம். பாலசுப்பிரமணியம் சார், உங்கள் முன்பு எல்லாம் படம் எடுத்தால் ஆல்பம் செய்து நீங்கள் சொல்வது போல் வருஷம், தேதி இடம் எல்லாம் குறித்து வைத்தோம். இப்போது கம்யூட்டரில் ஆவணப்படுத்துக்கிறோம். ஒவ்வொன்றுக்கும் தலைப்பு கொடுத்து தேடி எடுத்துப் பார்த்துகொள்கிறோம் உறவினர், நண்பர்களுக்கும் காட்டுகிறோம்.

    முன்பு உள்ள ஆல்பம் பார்க்கும் சுவரசியம் இல்லைதான் இதில்.
    உங்கள் கருத்துக்கும் வரவுக்கும் நன்றி. மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  21. பாடல் பெற்ற ஸ்தலத்தை நீங்கள் தரிசித்தது மட்டுமின்றி எங்களுக்கும் தரிசிக்க கொடுத்தமைக்கு நன்றி. மிக அழகான பயணம். தொடரட்டும் பயணம்.

    பதிலளிநீக்கு
  22. குப்த என்றால் ஒளிதல் என்று பொருள்.

    திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற ஸ்தலம் அநேகதங்காவதம் பற்றிய அரிய தகவல்கள் புதிது.

    பதிலளிநீக்கு