செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

திருக்கேதாரத் தலப்பயணம் - பகுதி -1



                                                                           

               திருக்கேதாரத் தலப்பயணம்-பகுதி -1
                                             (KEDHARNATH)

நாங்கள் கேதார்நாத் , பத்ரிநாத் ,யமுனோத்திரி , கங்கோத்திரி ஆகிய 

இடங்களுக்குச் செல்ல  முடிவுசெய்து , ‘மனோகர் டிராவல்ஸ் ’ மூலம் 

திருவருள் துணையோடு 03.05.2012 வியாழன் அன்று, சார்தம் தரிசன் என்று அழைக்கப்படும்  ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டோம்.

மயிலாடுதுறை இல்லத்தில் இருந்து  காலை 10 மணிக்குப் புறப்பட்டு இரயில்வண்டி நிலையம் அடைந்தோம். 11.30 மணிக்கு சோழன் விரைவு வண்டியின் மூலம் சென்னை புறப்பட்டோம். மாலை 5.45 மணிக்கு எழும்பூரை அடைந்தோம். ஆட்டோ பிடித்து வேளச்சேரிக்கு இரவு 7.30 மணிக்குச் சென்றோம். கணவரின் அண்ணன் வீட்டில் தங்கி , மறுநாள் 04.05.2012 வெள்ளி காலை 6.20 மணிக்கு துரந்தோ விரைவு வண்டி மூலம் பயணித்தோம். 05.05.2012 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு டில்லி அடைந்தோம்.

டெல்லியில் எங்களின் மகள் இருப்பதால், இரண்டு நாட்கள் பெண் வீட்டில் பேரன், பேத்திகளுடன் மகிழ்ந்து இருந்தோம்.

08.05.2012 அன்று பிற்பகல் 3,00 மணிக்கு ஹரித்துவார் நோக்கிப் புறப்பட்டோம்.

எங்கள் மகள் ரயில் நிலையத்திற்கு வழி அனுப்ப வந்தாள். அங்கு ரயிலுக்கு காத்திருந்த போது  ஒரு குடும்பம் வந்து எங்கள் முன்பு அமர்ந்தார்கள் அவர்கள் குழந்தையை அங்கேயே குளிப்பாட்டி அழகுபடுத்திக் கொண்டிருந்தார்கள். குழந்தையின் பாட்டி,  பின் கண் திருஷ்டி கழித்தவிதம் வியக்க வைத்தது. ஒரு செருப்பை எடுத்து குழந்தையை அடித்து அதே செருப்பால் சுத்தினார்கள். 
ரயில் வரும் வரை அந்த குடும்ப பாசம் எங்களை அவர்களிடம் கட்டிப்போட்டு விட்டது.



                      வியக்க வைத்த குடும்பம்

ரயிலுக்கு காத்திருப்பு

ஹரித்வார் செல்ல சிலீப்பர் கோச்சில் முன்பதிவு செய்திருந்தோம்,
ஆனால் அதில் பதிவு செய்யாதோர் பலர் முன்பே வந்து எங்களின் இருக்கைகளில் வந்து அமர்ந்துகொண்டனர். வடஇந்தியாவில் இது வழக்கம் தான். இருந்தாலும் இரவுக்குள் ஹரித்துவார் சென்றுவிட்டபடியால் படுக்கையில் உறங்கும் அவசியம் இல்லாமல் போயிற்று. படுக்கை வசதி செய்த எங்களுக்கு அவர்கள் உட்கார இடம் கொடுத்ததே பெரிய விஷயம் தான். 

முன்னதாக டில்லி நிலையத்தில் மனோகர் டிராவல்ஸ் கைடு திருவாளர் ஆனந்த் அவர்களைச் சந்தித்தோம். டில்லியிலிருந்து 22 பேர் கொண்ட குழு புறப்பட்டது. எங்களைத் தவிர மற்றவர்கள் சென்னையில் இருந்து வந்திருந்தனர். வெவ்வேறு பெட்டிகளில் எங்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மூன்று, நான்கு மணி நேரப் பயணம் கடினமாக இருநதது.  அதன் பின்னர் கூட்டம் குறைந்து விட்டபடியால் பயணம் நன்றாக அமைந்தது. இரவு 9 மணி அளவில் ஹரித்துவார் சென்றடைந்தோம்.
ஹரித்வார் ரயில்நிலையம்
                                                 
ஆட்டோ பிடித்து ’ஓட்டல் கைலாஷ்’ சென்றடைந்தோம். அது ஸ்டேஷனுக்கு எதிரில் தான் இருக்கிறது. அங்கு அறைகள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன.  இந்தப் பயணத்திற்கு உணவு தயாரிப்பதற்கென மூவர் கொண்ட சமையலாளர் குழு கூடவே வந்தது.

சாப்பாடு தயார்
09.05.2012 அன்று காலை 7  மணியளவில் ஆட்டோவில் புறப்பட்டு ஹரித்துவார் ஆற்றங்கரை சென்று ஆற்றில் குளித்து, தங்கும் அறை மீண்டோம். கங்கைத் தண்ணீர் மிகக் குளிர்ந்து இருந்தது. அன்று காலை ஆட்டோ பிடித்து சண்டிதேவி கோயில், மானச தேவி கோயில் சென்று வந்தோம். இரண்டும் வெவ்வேறு இடங்களில் உள்ளன. இரண்டுக்கும் ரோப்கார் வசதி உள்ளது. இரண்டு இடங்களுக்கும் செல்ல ஒரே டிக்கட் தான்.



சண்டிதேவிகோயில் முகப்பு

சண்டிதேவி கோயில் அருகில் அஞ்சனாதேவி அம்மன் கோயிலும் உள்ளது. ரோப் காரில் சென்ற பிறகு கொஞ்சம் படிகள் ஏற வேண்டும். மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. ரோப் காருக்கு காத்திருந்து ஏற வேண்டியிருந்தது. தேவஸ்தானத்தின் ஏற்பாடுகள் நன்றாக இருந்தன. அஞ்சனாதேவி தன் மடியில் குழந்தை அனுமனை மடியில்  வைத்திருப்பது போல் உருவம்  மூலஸ்தானத்தில் உள்ளது. 


ரோப் காருக்கு காத்திருக்கும் பக்தர் கூட்டம்

மானசதேவி கோயிலுக்கு ரோப்கார்
மானசதேவிகோயிலின் நுழைவாயில்

பிற்பகல் சற்று ஓய்வு எடுத்தோம். மாலை 6 மணியளவில் கங்கைக்கரையில் கங்காதேவி சந்நிதிக்கு முன் ஆரத்தி பார்க்கச் சென்றோம். ஆட்டோவில் கொஞ்ச தூரம் சென்று பின் நடக்க வேண்டும். கூட்டம் அதிகம் இருப்பதால் கரைவரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

கரையில் கூட்டம் அதிகம். பாலம் வழியாக மறுகரை(தீவு போன்ற பகுதிக்குச்) சென்றோம். கங்காதேவியின் கோயிலுக்கு நேர் எதிரே மறுகரையில் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தோம். அமர்ந்து இருக்கும் போது அங்கே நன்கொடை ரசீது வைத்துக் கொண்டு பணம் கேட்கிறார்கள். அவர்கள் நிறைய பேர் சீருடை அணிந்து கொண்டு அடையாள அட்டைகள் சட்டையில் குத்திக் கொண்டு நம்மை சுற்றி வருகிறார்கள். கீழே அமர சீட் கவர் விற்பவர்கள் ஒருபுறம் நம்மை சுற்றி வருகிறார்கள். தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொண்டு ’தண்டா பானி!  தண்டா பானி’ என்று நம்மிடம் விற்கிறார்கள். சீறிப்பாயும் கங்கை நதியின் கரையில் இருந்தாலும் குடிதண்ணீருக்கு மினரல் வாட்டர் தான்! 

எங்கும்  ஒரே சத்தம்,. 

அங்கு மணிக்கூண்டு இருக்கிறது-பழைய டவர். கடிகாரம் நின்று பலகாலம் ஆகியிருந்தது. அது ஹரித்வாரின் அடையாளச்சின்னம்.

சீடர்களுடன் சங்கராச்சாரியர் அமர்ந்திருக்கும் உருவங்கள் அமைந்த மண்டபம் ஒரு புறம் அமைந்துள்ளது. நாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து ஆரத்தி பார்க்க முடியாது போலிருந்தது. எனவே அங்கிருந்து எழுந்து கொண்டோம். வேறு நன்கு பார்க்க முடிகிற இடம் பார்த்து அங்கு சென்றோம். 


மினரல் வாட்டர் வியாபாரம் படுஜோர்!


கங்காதேவிகோயில




மாலையில் சரியாக 7 மணிக்கு ஆரத்தி தொடங்குகிறது. கங்கை 

அம்மனுக்கும், கங்கை ஆற்றுக்கும் பெரிய அடுக்கு தீபாராதனைகள் 

நடைபெறுகின்றன.  தீபாராதனை நடக்கும் நேரத்தில்  பாலத்தில் 

போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.  ஆரத்தி நேரத்தில் மக்கள் சிலர் 
\
தீபாராதனைத் தட்டை ஏந்தி சுற்றி அவரவர்களாகவே வழிபாடு 

செய்கின்றனர்.  பின்னர் இலைத்தொன்னையில் அழகாய் 

பூக்களுடன் அகல்விளக்குகளை   கங்கையாற்றில் மிதக்க 

விடுகின்றனர்.  அவை அழகாக ஒளிவிட்ட வண்ணம்   மிதந்து 

செல்கின்றன. சுமார் அரை மணி நேரம் பூசை நடக்கிறது.  பார்க்க 

அழகாய் இருக்கிறது. அதை தரிசித்த பின்னர் விடுதிக்குத் 

திரும்பினோம்.  பெருங்கூட்டம்.  ஆட்டோ, ரிக்க்ஷா கிடைப்பது 

அரிது,  எப்படியோ ஒரு  ஆட்டோ பிடித்து விடுதிக்கு வந்து 

சேர்ந்தோம்.    மறுநாள் யமுனோத்ரிக்குப் புறப்பட்டோம்.
                                                                                                                                   (தொடரும்)

33 கருத்துகள்:

  1. உங்க கூடவே நாங்களும் பயணிக்குரமாதிரியே இருந்தது. நல்ல வர்ணனைகள் சுவாரசியமான எழுத்து. அடுத்து என்னன்னு எதிர்பார்ப்பு.சீக்கிரம் தொடருங்கள் வெய்டிங்க்

    பதிலளிநீக்கு
  2. அழகான ஆரம்பம். எத்தனை அருமையான விளக்கம் கோமதி. உங்கள் கண் வழியாக எல்லா இடங்களும் தரிசனம் செய்கிறோம்.
    அத்தனை புண்ணியமும் உங்களுக்குத் தான்.

    பதிலளிநீக்கு
  3. கட்டுரை நன்றாக இருக்கிறது. ரசித்தேன். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  4. அழகான படங்களுடன் கூடிய அருமையான ஆன்மீகப் பயணக்கட்டுரை.
    நானும் தங்களுடன் சேர்ந்து பயணித்தது போலவே உணர முடிந்தது.

    பாராட்டுக்கள்.

    தொடருங்கள்.

    அன்புடன்
    vgk

    பதிலளிநீக்கு
  5. பதிவு செய்யாதோர் பலர் முன்பே வந்து எங்களின் இருக்கைகளில் வந்து அமர்ந்துகொண்டனர்.

    நாங்களும் இப்படிச் சிரமப்பட்டோம்..

    பதிலளிநீக்கு
  6. வாங்க ல்க்ஷ்மி அக்கா, உங்கள் முதல் வருகைக்கும் உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

    எல்லோருக்கும் முதலில் சுதந்திரதின வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. வாங்க கவிஅழகன், நேரடி ஒளிபரப்பு போல் உள்ளதா!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வாங்க வல்லி அக்கா, உங்கள் வரவுக்கும் அன்பான பின்னூட்டத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வாங்க பழனிகந்தசாமி சார், உங்கள் வரவுக்கும், பதிவை ரசித்தமைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார், உங்கள் வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  11. வாங்க இராஜராஜேஸ்வரி, போனமுறை ஹரித்துவார், ரிஷிகேசத்திற்கு எல்லாம் பஸ்ஸில் போய் விட்டோம்.
    இந்தமுறை டிராவலஸ் மூலம் போனதால் ரயிலில் கஷடபட வேண்டியது ஆகி விட்டது.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. நல்ல ஆரம்பம் அம்மா சுவையாக எழுதுகிறீர்கள் அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன் நன்றி அம்மா பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  13. /அஞ்சனாதேவி தன் மடியில் குழந்தை அனுமனை மடியில் வைத்திருப்பது../

    அருமையான தரிசனமாக இருந்திருக்கும்.

    திருஷ்டி கழிப்பதில் எத்தனை விதங்கள்.

    விரிவாகவும் சுவாரஸ்யமாகவும் பகிர்ந்திருக்கிறீர்கள். தொடருங்கள். கூடவே வருகிறோம்.

    பதிலளிநீக்கு
  14. பல விசயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது...
    படங்கள் அருமை...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 2)

    பதிலளிநீக்கு
  15. வாங்க இந்திரா சந்தானம்,உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வாங்க ராமலக்ஷ்மி,நீங்கள் சொன்ன மாதிரி அருமையான தரிசனம் தான். சின்ன குட்டிஅனுமன் அழகு. நீங்கள் பயணங்களில் கூட வந்தால் மிகவும் மகிழ்ச்சி.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வாங்க திண்டுக்கல் . பயணங்கள் பல அனுபவங்களை தருகிறது. பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
    உங்கள் தமிழ்மண ஓட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  18. எங்கள் அனுபவப் படி வட இந்தியாவில் முன் பதிவு செய்த பெட்டிகளில் ஏறினாலும் நம் இருக்கையை ஆக்கிரமிக்க மாட்டார்கள். சில பயண அனுபவங்கள் மறக்க முடியாதவை. தொடருகிறேன்.

    பதிலளிநீக்கு
  19. சுவையாக எழுதுகிறீர்கள் நன்றி

    பதிலளிநீக்கு
  20. பயணத்தின் பரவசங்களையும் கஷ்டங்களையும் அழகாய்த் தொகுத்து அளிக்கிறீர்கள்...

    பதிலளிநீக்கு
  21. உங்கள் பயணத்தில் நாங்களும் வந்தோம்.

    கங்கை ஆரத்தி நாங்களும் கூடவே பாடி கங்கா மாதாவின் அருளைப் பெற்றுக் கொண்டோம். நன்றி.

    அருமை.

    பதிலளிநீக்கு
  22. மெகா சீரியல் போல தொடர் பதிவா? ம்..ம்..ம்.. ப்டித்துவிட்டு சொல்கிறேன்

    பதிலளிநீக்கு
  23. வாங்க ,ஜி.எம். பாலசுப்பிரமணியம் சார், சில பயணங்கள் மறக்க முடியாது தான்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வாங்க போளூர் தமிழ்ச்சங்கம், உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வாங்க கே.பி ஜனா, உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. வாங்க மாதேவி, கங்கா மாதாவின் ஆரத்தி பாடலை பாடி வழிபட்டு அருளை பெற்றது அறிந்து மகிழ்ச்சி.

    உங்கள் வரவுக்கு நன்றி மாதேவி.
    தொடர்ந்து வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  27. வாங்க சந்திரவம்சம், படித்து விட்டு சொல்லுங்கள் எப்படி இருக்கிறது என்று.
    உங்கள் வரவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  28. http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html

    தயவுசெய்து தங்களுக்கான விருதினை ஏற்றுக்கொள்ள்வும். அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  29. அழகான படங்க்களுடன்
    நேர்த்தியாக விளக்கிச் செல்வது நாங்க்களும்
    உடன் பயணிப்பது போன்ற உணர்வை
    ஏற்படுத்திப்போகிறது
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  30. வாங்க ரமணிசார், உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி சார்.
    தமிழ்மண ஓட்டுக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  31. திருஷ்டி சுத்துவதில் எத்தனை விதம்...

    கங்கா மையா ஆரத்தியும் ஹரித்வார் தரிசனமும் அருமை. எத்தனை முறை சென்றாலும் அலுக்காத ஒரு பயணம் ஹரித்வார் பயணம். மீண்டும் செல்லத் தூண்டுகிறது உங்கள் பயணம். தொடர்ந்து அடுத்த பகுதிகளையும் படித்து விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  32. ரயிலுக்குக் காத்திருப்பு போட்டோவைப் பார்க்கையிலேயே, தொடர் பயணத்தின் ஆரம்ப உணர்வு ஏற்பட்டு விட்டது.
    ஹரித்வாருக்கு அடையாளச் சின்னமான அந்த மணிக்கூண்டும், மானச தேவி கோயிலுக்கு ரோப் காரில் சென்றதும், நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு