திங்கள், 14 அக்டோபர், 2019

பயணத்தில் கண்ட காட்சிகள்

பயணத்தில் கண்ட காட்சிகளைக் காரின் பின் பக்கம் உட்கார்ந்து கொண்டு அலைபேசியில் எடுத்த  படங்கள். காரின் மூடிய ஜன்னல் வழியாக எடுத்த படங்கள்.

கோவைக்கு 12/10/19 அன்று குடும்ப விழாவிற்குப் போய் இருந்தோம். விழா முடிந்து 13ம் தேதி திரும்பி வரும் போது சில கோவில்களுக்கும் போனோம்.

கோவிலாகக் காட்டிக் கொண்டு இருந்தால் சிலருக்கு அலுப்பாக இருக்கும் என்பதால் பயணத்தில் எடுத்த எனக்குப் பிடித்த இயற்கைக் காட்சிகளின் பகிர்வு. உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

பயணத்தில்  மதிய உணவுக்காகப்  போன ஓட்டலில் பார்த்த சில காட்சிகள் இங்கே.

பசுமை போர்த்திக் கொண்ட மலையும்  பஞ்சுப் பொதிகளாக வெண்மேகங்களும் நீலவானமும்

வியாழன், 26 செப்டம்பர், 2019

சக்கரபாணி திருக்கோயில்



24,8.2019 ல் குடந்தையில் பார்த்த கோவில்கள் பதிவாக வந்து கொண்டு இருக்கிறது. இன்று சக்கரபாணி கோவில். இந்த கோவில்  காவிரிக் கரையின் தென் கரையில் அமைந்துள்ள கோவில். குடந்தை  பெரியகடைத்தெருவின் வட கோடியில் அமைந்து இருக்கிறது.
இந்த வாசல் முகப்பில் ஸ்ரீ சக்கர ராஜா இருக்கிறார் ஸ்ரீ சுதர்ஸனவல்லி,  ஸ்ரீ விஜயவல்லி தாயாருடன் இருக்கிறார்

நாங்கள்   காலை சீக்கீரம் வந்தோம். கடைகள் திறந்து விட்டால் காரை நிறுத்துவது கடினம் என்பதால் 7 மணிக்கே வந்து விட்டோம் கோவிலுக்கு.
இந்த நுழைவாயில் வழியாகக் கோவிலுக்குப் போனோம்.
உள்பக்கத்தில் பெருமாள் நின்ற கோலத்தில் - ஸ்ரீதேவி, பூதேவி அமர்ந்த கோலத்தில்

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

குடந்தைக் கோவில்கள் - பகுதி 2


இந்தத் திருக்கோயில் கும்பகோணத்தில் மகாமகக்  குளம் கீழ்க்கரையில் உள்ளது.

23.8.2019 அன்று கும்பகோணம் போனபோது  அங்கு பார்த்த கோவில்கள் பதிவுகளாய் வருகிறது.

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

குடந்தைக் கோவில்கள்

திருப்பனந்தாள் காசி மடத்தின் அன்பளிப்பாக இந்த மணிக்கூண்டு . இப்போது அதனைப் பராமரிப்பவர்கள் சிட்டி யூனியன் வங்கி

திருக்குடந்தை மங்களநாயகி பிள்ளைத் தமிழ் பதிவில் குடந்தையில் போன கோவில்கள்பதிவுகள் இனி அடுத்தபதிவில் என்றேன்.

வியாழன், 5 செப்டம்பர், 2019

திருக்குடந்தை மங்கள நாயகி பிள்ளைத்தமிழ்



ஸ்ரீ அமிர்தவல்லி சமேத ஸ்ரீ அபிமுகேஸ்வர பெருமான் கோயில்
இந்தக் கோவிலில் இருக்கும் மண்டபத்தில் தான் விழா நடந்தது.

திருக்குடந்தைத் திருமுறை மன்றம் 1973ல் ஆரம்பிக்கப்பட்டுச் சிறப்பாக நடந்து வ்ருகிறது. அந்த மன்றத்தின் 46 ஆம் ஆண்டு  நிறைவு விழாவில் தான் என் கணவர்  உரை எழுதிய "திருக்குடந்தை மங்களநாயகி பிள்ளைத் தமிழ் "
நூல் வெளியீடு நடந்தது.

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

லாடன் கோயில் - ஆனைமலை

யானை மலை மேல் பார்த்து விட்டு மலை அடிவாரத்தில்   நரசிம்மர் கோவில் அருகில் உள்ள 'லாடன் கோவில்' என்று அழைக்கப்படும் குடைவரை முருகன் கோவில் போனோம். அது அடுத்த பதிவில். என்று சொல்லி இருந்தேன்.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

வரலெட்சுமி, வருவாய் அம்மா!


பழைய பாடல் ராதா ஜெயலட்சுமி பாடிய  'வரலெட்சுமி வருவாய் அம்மா திருமாலின் தேவி கடைக்கண் பாரம்மா ' என்ற  பாடல் எங்கள் வீட்டு கேஸட்டில் இருக்கிறது.  முன்பு வானொலியில் வைக்கும் பாட்டை வீட்டில் கேஸட்டில் பதிவு செய்து வைத்து இருந்தது. அதை இன்று கேட்டேன். மிக நன்றாக இருக்கும், ஒவ்வொரு வரலெட்சுமி பண்டிகை  அன்றும் கேட்டு மகிழ்வோம், வீட்டில் பூஜை செய்யும் போது போட்டுக் கேட்போம். இங்கு பகிரலாம் என்று தேடினால் கிடைக்கவில்லை அந்தப் பாடல் . ஆனால் அந்த பாடலை  இவர் பாடியது கிடைத்தது.  அமைதியாக அழகாகப் பாடுகிறார்.