பறவைகளும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பறவைகளும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 மார்ச், 2022

மேகமலை பகுதி -2


மேகமலை இதற்கு முன் போட்ட பதிவு படிக்கவில்லையென்றால் படிக்கலாம்.

இந்த பதிவில்  மலைபாதை வளைவுகள், மேகமூட்டத்திற்கு இடையே சாலைகள், செக்போஸ்ட் அருகே பார்த்த பறவைகள், மேகமலையில் பார்த்த பறவைகள் இடம் பெறுகிறது. 

வியாழன், 10 ஜூன், 2021

மலைப் பாதை பறவைகளும், மலர்களும்



பெல்ராக் மலைப்பாதையில்   சைக்கிளில் போக தயார் நிலையில் நிற்கிறார்கள். 


அரிசோனாவில் "அன்னையர் தினத்தில்" சென்று வந்த இடங்களின் தொடர் பதிவு.  சென்ற பதிவு மலைதரிசனம்
தலைக்கவசம் அணிந்து பயணம்.  பாதையில் மரங்களின் வேர்களும், கற்களும் கிடக்கிறது. பாதுகாப்பு  தலைக்கவசம் அவசியம்தான்.

மலைக்கு பின் பகுதியில் பட்ட மரம் போல் இருக்கிறது அதில் சின்னக்குருவி
ஓங்கி வளர்ந்த பைன் மரத்தின் உச்சியில் அமர்ந்து இருக்கும் குருவி


பறவையின் மேல் பகுதி இறகு நீலவண்ணத்தில் இருக்கிறது
எங்களுக்கு பிடித்த மரம் என்று சொல்கிறதோ!

கரிச்சான் குருவியும் , இன்னொரு வகை குருவியும்

சூரிய ஒளியில் கரிச்சான் குருவியின் உடல் பள பள வென்று  மின்னுகிறது
ஒவ்வொரு  மரத்திலும் பறந்து பறந்து அமர்ந்த கரிச்சான்
கரிச்சான் குருவி என்றுதான் நினைக்கிறேன்
காற்றில் அதன் தலைமுடி பறக்கிறது




பைன் மரத்தில் கலர்க் குருவி


 காய்ந்த மரக்கிளையில் மஞ்சள் குருவி 

உச்சியில் கொண்டையுடன் ஒரு  குருவி
 பைன்மரத்தின் காய் பறவை போல் தோற்றம் கொடுத்து ஏமாற்றியது என்னை.
பைன் மரத்தில் தேன் சிட்டு அமர்ந்து இருந்தது,  ஜூம் செய்யும் போது  பறந்து விட்டது


இரண்டு Quail   பறவைகள் இந்த மரத்திற்கு கீழ் புதரில் கூடு கட்டி இருந்தது போல! உள்ளே போய் வந்து கொண்டு இருந்தது. படம்  எடுக்கலாம் என்று நினைத்த போது ஒன்று புதருக்குள் போய் விட்டது, ஒன்று மரத்தில் அமர்ந்தது.

பறவைகளை தேடித் தேடி படம் எடுப்பது மகிழ்ச்சியை தந்தது எனக்கு. அதன் ஒலிகள் மேலும் மகிழ்ச்சியாக இருந்தது.
பெல்ராக் மலையில் இருவர் ஏறி நின்று இருந்தார்கள். மிகவும் ஓரமாக நின்று பேசிக் கொண்டு இருந்தார்கள். 

                        வெகு தூரத்திலிருந்து எடுத்த படம். 

மரங்களின் இடைவெளியே தெரியும் சூரிய ஒளி எப்போது மகிழ்ச்சி தரும் காட்சி எனக்கு

மலை அருகே போக இன்னும் நடக்க வேண்டும் போல் இருந்தது, காலை 11 மணிக்கே வெயில் ஆரம்பித்து விட்டது. அதனால் அங்கிருந்து கிளம்பி விட்டோம். காலை உணவாக தோசையை  தக்காளி சட்னி, மிளகாய் பொடியுடன் சாப்பிட்டு விட்டோம். மதியத்திற்கு புளியம்சாதம், தயிர் சாதம் செய்து எடுத்துக் கொண்டோம். (எல்லாம் மருமகள்தான் செய்தாள்)


மலைக்கு போகும் பாதை அருகே  குட்டியாக பூக்கும் ரோஜா  பூச்செடிகள் வைத்து இருந்தார்கள். அதில் குட்டி சிவப்பு ரோஜாவில் தேனீ தேன் அருந்துகிறது.





எங்களை  இங்கு அழைத்து அமரவைத்து  கவின் அன்னையர் தின பரிசுகள் கொடுத்தான், எனக்கும், மற்றும் அவன் அத்தை, அம்மாவுக்கும்.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பரிசு கொடுத்து மகிழ்வித்தான்.😍 🎉🎉🎉🎁🎁🎁😍😍


நமக்கு அன்பான ஆதரவான வார்த்தைகள் போதும். ஆனால் அவர்களுக்கு இப்படி பரிசு கொடுப்பதில் மகிழ்ச்சி. அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன்.


வரும் வழியில்  உணவு சாப்பிட  சென்ற இடம் அடுத்த பதிவில்.
இயற்கை வளம் நிறைந்த இடம். ரசித்து அங்கு அமர்ந்து உணவு உண்டு விட்டு மாலை வீடு வந்தோம்.


வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் !
---------------------------------------------------------------------------------------------