கர்நாடகா பயணத் தொடரில் இந்தக் கோவிலும் உண்டு.குக்கி சுப்பிரமணியா கோவில் போய்விட்டு வழியில் உள்ள இந்த ராமர் கோவில் போனோம்.
ஸ்ரீ ராம ஷேத்ரா என்று அழைக்கப்படுகிறது. 1978 ல் ஸ்ரீ ஆத்மானந்த சரஸ்வதி என்பவர் மூன்றடுக்குகள் உள்ள இந்த கோவிலைக் கட்டி இருக்கிறார்.
இராமாயணம் பற்றிய சிற்பங்கள் முகப்பில் உள்ளன.
மங்களூரிலிருந்து 74 கி.மீ, தர்மஸ்தலாவிலிருந்து 3 1/2 கி.மி தூரத்தில் கன்யாடியில் ஸ்ரீ ராம க்ஷேத்ரா என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீராமர் கோவில் உள்ளது.
பட்டாபிஷேகக் காட்சியில் ராமர் அழகாய் கொலுவீற்று இருக்கும் கோவில்.
