ஸ்ரீசைலம் போய்விட்டுத் திரும்பி கர்நூல் வரும் முன் ஆலம்பூர் என்ற ஊரில் உள்ள நவப்பிரம்மா கோவில் பார்த்தோம். மிக அழகான கோவில்.
தொல்லியல் துறையின் பொறுப்பில் இருக்கிறது. சேதம் அடைந்து இருக்கிறது பல சிற்பங்கள், இருந்தாலும் மிச்சம் இருக்கும் சிற்பங்கள் பல அழகிய கலைவேலைப்பாடு நிறைந்தவை. பார்க்கப் பார்க்கப் பரவசம் தரும் அழகு.

இங்கு ஜோகுலாம்பாள் திருக்கோயில் உள்ளது. சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று
2002 ல் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. ஜோகுலாம்பாள் அம்மன் மிக அழகாய் அலங்காரமாகக் காட்சி தந்தார்கள். பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல அவ்வளவு அழகு. அப்போது அங்கு இருந்த தெலுங்கு பேசும் குடும்பத்தினர் குனிந்து மண்டியிட்டு அமர்ந்து அம்மனைப் பார்த்துக் கொண்டு பேசிக் கொண்டு இருந்தார்கள் .அவர்கள் பேசியது கொஞ்சம் புரிந்தது , அம்மனின் மூக்குத்தி ஜொலிப்பது கீழே மண்டியிட்டு அமர்ந்து பார்த்தால்தான் தெரிகிறது என்று எங்களைப் பார்த்து மீண்டும் தெலுங்கில் சொன்னார்கள். நாங்களும் பார்த்தோம் . மிக அழகாய் மூக்குத்தி ஜொலித்தது.
கோவிலைச் சுற்றி அகழி மாதிரி இருந்தது. குழாய்கள் இருந்தது. விழாக் காலங்களில் நீரூற்றுகள் இயங்கும் போலும். அம்மனுக்கு குங்குமார்ச்சனை நடக்கிறது தினமும். அழகிய நந்தவனம் இருக்கிறது. முன்பக்கக் கோபுரம் ஐந்து நிலைகளுடன் அழகாய் இருக்கிறது.
கொடிமரமும் பின் புறம் அம்மன் கோபுரமும்
கோவிலைச்சுற்றி அகழி
தூண்களில் அழகிய சிற்பங்கள்
அழகிய நந்தி மண்டபம்
சிதிலமடைந்த நந்தி, கோபுரங்கள்.
அடியும், முடியும் காண ,பிரம்மாவும், விஷ்ணுவும் போகும் கதை சித்தரிக்கப்பட்டு இருக்கிறது..
வாழைமரமும் குரங்கும், இரு தோழிகள்.
திரிபுரசம்ஹாரம்
அகோர வடிவம்
தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தை அழிக்க எடுத்த தோற்றம்.
இப்படி பல புராணக்கதைகளை கொண்ட அழகிய சிலைகள் அமைந்த கோவில். கோவில் நகரம் என்று அழைக்கப்படும் ஆலம்பூர் நவப்பிரம்மா கோவில்.
இந்தக் கோவிலின் அழகிய வேலைப்பாடு அமைந்த ஜன்னல்கள், கோவிலுக்குள் குடியிருக்கும் சிவலிங்கங்களின் காட்சி. மற்றும் கோவில் வளாகத்தில் அமைந்து இருக்கும் தர்க்கா ஆகியவை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.
வாழ்க வளமுடன்.
-----------------------

