வியாழன், 1 மே, 2025

இளநீர் குடிக்கும் அணில்கள்


சுவர்ணபூமி  தாய்லாந்து விமானநிலையம்


மருமகளின் அக்கா மகன் திருமணத்திற்கு தாய்லாந்து சென்று இருந்தோம். அப்போது திருமணம்   நடந்த இடத்தில் காலை உணவின் போது அலங்கரித்து வைத்து இருந்த மேஜை. நுங்கு வேண்டுமென்றால் வெட்டி தருவார்கள்  பழங்கள் அழகாய் வெட்டி வைத்து இருந்தார்கள்.

போன பதிவில் நெல்லைத்தமிழன் கேட்ட கேள்விக்காக இந்த பதிவு

//இளநீரும் அதை வெட்டித் தரும் விதமும் மிக அழகாக இருக்கும். இளநீரும் ருசியாஇருக்கும். விலை கேட்டீர்களா?//

இளநீர் ஜஸ்கீரீம் விலை

மார்கெட் போய் இருந்த போது கடை வாசலில் வைத்து இருந்த விலை விவரம். நாங்கள் இளநீர்தான் குடித்தோம்.

இந்த படத்தில் தென்னைமரம் எட்டிப்பார்க்கிறது 

தாய்லாந்து கடற்கரை பின்னனியில் மேடை அமைத்து திருமணம். திருமணம் முடிந்த பின் பின்னால் வாணவேடிக்கை போட்டார்கள். கடல் அலையின் ஆரவாரம், கல்யாணத்திற்கு வந்தவர்கள்  மகிழ்ச்சி ஆரவாரம் என்று மிகவும்  நன்றாக இருந்தது.

கடற்கரை பின்னனியில்   மேடை  காலையில் வருணபகவான்   வந்து விட்டார்.


உங்கள் ஆசீர்வாதங்களை தாருங்கள் மணமக்களுக்கு.


கல்யாண வீட்டிலும் எல்லோருக்கும் இளநீர் கொடுக்கப்பட்டது .



அயுதயா" (Ayutthaya) என்று அழைக்கப்படும் 

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது .

பழைய  புத்தர் ஆலயம் பார்க்க போன இடத்தில் இளநீர் அணில்களுக்கு கொடுத்து கொண்டு இருந்தார்கள் மக்கள்.

இந்த இடத்தின் படங்கள் தனி பதிவாக பின்னர் வரும். இந்த பதிவுக்கு இளநீர், நுங்கு  மட்டும்.

இளநீர்விலை 50 என்று நினைக்கிறேன் அங்கு விலைபட்டியல் இருக்கிறது மகனுக்கு பின்னால் கடையில் விலை தெரிகிறது.

இப்படியும் அழகாய் வெட்டி மூடி கொடுக்கிறார்கள். மகன் எனக்கு கொடுக்க வந்த போது படம் எடுத்து கொண்டு பின் வாங்கினேன்.



நவம்பர் மாதம் அப்படியும் வெயிலும், மழையும் இருந்தது.

அணிலுக்கும் மதிய நேரம் தாகம் எடுக்கிறது.






 







அணிலுக்கு கீழே உள்ள பச்சையை  சீவ வில்லை மேல் பகுதியை மட்டும் பெரிதாக சீவி கொடுக்கிறார்கள்.


நடந்து கொண்டே குடிக்க வசதியாக  கப்பில் ஊற்றி மூடி கொடுக்கிறார்கள்


இப்படி வாயை பெரிதாக மதில் மேல் வைத்தால் அணில் குடிக்க வசதியாக இருக்கிறது.

கோடையில்  குளிர்பானங்களை தவிர்த்து இயற்கையில் கிடைக்கும் இளநீரை வாங்கி பருகலாம்.  

இளநீருக்கு இந்த பதிவு கோடைக்கு ஏற்ற பதிவு.

அடுத்த பதிவில் பழமையான புத்தர் ஆலயம் பார்க்கலாம்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

--------------------------------------------------------------------------------------------------

50 கருத்துகள்:

  1. நுங்கு சீவாமல் அப்படியே தயாராக இருப்பது போல வாழை தாரோடு இருப்பது போல மற்ற பழங்களையும் சிறிய போன்சாய் மரம் போல அமைத்து அதில் தொங்க விட்டிருக்கலாமோ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //நுங்கு சீவாமல் அப்படியே தயாராக இருப்பது போல வாழை தாரோடு இருப்பது போல மற்ற பழங்களையும் சிறிய போன்சாய் மரம் போல அமைத்து அதில் தொங்க விட்டிருக்கலாமோ...!//

      உங்கள் யோசனை நன்றாக இருக்கே! அடுத்த கல்யாணத்திற்கு சொல்லிவிடலாம்.

      நீக்கு
  2. இளநீர் பாயசம் சாப்பிட்டிருக்கிறேன்.  ஐஸ்க்ரீம் சாப்பிட்டதில்லை.  போகப்போக இளநீர் ரைஸ் என்று வழுக்கை எல்லாம் போட்டு வந்து விடுமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இளநீர் பாயசம் சாப்பிட்டிருக்கிறேன். ஐஸ்க்ரீம் சாப்பிட்டதில்லை. போகப்போக இளநீர் ரைஸ் என்று வழுக்கை எல்லாம் போட்டு வந்து விடுமோ!//

      நான் இள்நீர் பாயசமும் குடித்தது இல்லை. இள்நீர் ரைஸ் வந்தாலும் வரலாம்.

      நீக்கு
  3. கடற்கரையும், எட்டிப்பார்க்கும் தென்னை மரமும் அழகு. அழகான இடத்தைத் தேர்வு செய்திருக்கிறார்கள். திருமணத்துக்குச் செல்பவர்களும் உற்சாகமாக உணர்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கடற்கரையும், எட்டிப்பார்க்கும் தென்னை மரமும் அழகு. அழகான இடத்தைத் தேர்வு செய்திருக்கிறார்கள். திருமணத்துக்குச் செல்பவர்களும் உற்சாகமாக உணர்வார்கள்.//

      ஆமாம், மணமகன், மணமகள் இருவரும் தேர்வு செய்த இடம்.

      பேரன் நல்லவேளை பார்க்காத இடத்தில் திருமணம் என்று சொன்னான். திருமணத்திற்கு இரண்டு மூன்று நாள் முன்பே போய் ஊரை சுற்றிப்பார்த்து விட்டோம்.

      திருமணத்திற்கு வந்தவர்கள் மிகவும் உற்சாகமாக அனுபவித்தார்கள் அந்த சூழலை. நிறைய வயதானவர்களும் வந்து இருந்தார்கள். சடங்குகள் செய்ய ஒரு இடம், சாப்பாட்டுக்கு ஒரு இடம், நிகழச்சிகள் நடக்க ஒரு இடம் என்று இருந்தது அங்கு எல்லாம் வயதானவ்ர்கள் செல்ல பேட்டரி கார் வசதி இருந்தது. அந்த இடமே நன்றாக இருந்தது.

      நீக்கு
  4. வருணனும் வந்தானோ வதுக்களை ஆசீர்வதிக்க?  மழையும் வாழ்த்தியதோ மணமக்களை...  வாழ்க பல்லாண்டு மணமக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வருணனும் வந்தானோ வதுக்களை ஆசீர்வதிக்க? மழையும் வாழ்த்தியதோ மணமக்களை... வாழ்க பல்லாண்டு மணமக்கள்..//

      வருணம் இரவு முதல் , காலை வரை பெய்து திருமண நேரத்தை மாற்றி அமைத்து ஆசீர்வாதம் செய்து விட்டார்.
      உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

      நீக்கு
  5. அயுதயா கவர்கிறது.  அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.  அம்மா..  எத்தனை படிகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அயுதயா கவர்கிறது. அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன். அம்மா.. எத்தனை படிகள்...//

      முன்பு ஏரி இருப்பார்கள், இப்போது ஏற அனுமதி இல்லை, அங்கு படிகளில் அமர்ந்து கூட படம் கூட எடுக்க கூடாது.

      நீக்கு
  6. இந்த மாதிரி இளநீர் வெட்டுவதை காணொளிகளில் பார்த்திருக்கிறேன்.  அழகழகாக பேக் செய்வார்கள்.  எப்படி அப்படி ஒழுங்காக வெட்டுகிறார்கள், சீவுகிறார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கும்.  

    பிராக்டீஸ்.  

    நான் அரிவாளை எடுத்து வெட்டினால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இடத்தில் வெட்டு விழுகிறது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்த மாதிரி இளநீர் வெட்டுவதை காணொளிகளில் பார்த்திருக்கிறேன். அழகழகாக பேக் செய்வார்கள். எப்படி அப்படி ஒழுங்காக வெட்டுகிறார்கள், சீவுகிறார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கும்.

      பிராக்டீஸ். //

      ஆமாம், எதற்கும் பயிற்சி வேண்டும் அதுவும் ஒரு கலையாக ரசித்து செய்தால் வேலையில் ஒழுங்கு வரும்.

      //நான் அரிவாளை எடுத்து வெட்டினால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இடத்தில் வெட்டு விழுகிறது!!//

      பழக்கம் இல்லை , பழக்கம் இருந்தால் நன்றாக செய்வீர்கள்.

      நீக்கு
  7. அணில்கள் இளநீர் குடிப்பது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.  தலை உள்ளே மாட்டிக் கொள்ளுமோ என்று கவலையாகவும் இருக்கிறது.  பெரிதாகத்தான் வெட்டிக் கொடுக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்.  கப்பில் எடுத்த இளநீருக்கு மவுசு குறைந்து விடுகிறது என்று எனக்குத் தோன்றும்.  அதன் சக்தி குறைந்து விடுவதாக தோன்றும்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அணில்கள் இளநீர் குடிப்பது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. தலை உள்ளே மாட்டிக் கொள்ளுமோ என்று கவலையாகவும் இருக்கிறது. //


      என்ன தான் வாய் பெரிதாக வெட்டப்பட்டு இருந்தாலும் அணிலுக்கு கொஞ்சம் முகத்தில் கீறல் ஏற்படும் என்பது என் எண்ணம்.


      //பெரிதாகத்தான் வெட்டிக் கொடுக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். கப்பில் எடுத்த இளநீருக்கு மவுசு குறைந்து விடுகிறது என்று எனக்குத் தோன்றும். அதன் சக்தி குறைந்து விடுவதாக தோன்றும்!!//

      பெரிதாக வெட்டி கொடுப்பதாலும், காய் கனமாக இருப்பதாலும் தூக்கி கொண்டு சுற்ற முடியாது நின்று குடிக்கலாம் என்றால் நேரம் இருக்காது ஒரே மூச்சில் அத்தனையும் குடிக்க முடியாது. அதனால் இப்படி கப்பில் ஊற்றி வாங்கி குடித்துக் கொண்டே செல்லலாம். வெகு நேரம் வைத்து கொள்ள கூடாது .

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  8. நுங்கு விபரங்கள் சிறப்பு
    படங்கள் வழக்கம் போல அழகாக இருக்கிறது.

    மணமக்களுக்கு எமது வாழ்த்துகளும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //நுங்கு விபரங்கள் சிறப்பு
      படங்கள் வழக்கம் போல அழகாக இருக்கிறது.

      மணமக்களுக்கு எமது வாழ்த்துகளும்...//

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. படங்கள் வழக்கம் போல துல்லியம். முதல் படமே (விமான நிலையம்) ஈர்க்கிறது. இரண்டாவது திருமண வீட்டில் வைத்துள்ள சீர் வரிசை படமா?காய் பழங்களுடன், அருமையாக உள்ளது.

    திருமண மேடை சூப்பர். மணமக்களுக்கு என் அன்பான, மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    அங்கு இளநீர் சீவித்தரும் முறையும் அழகு. அணில்கள் இளநீர் அருந்துவதை பார்க்க அவ்வளவு மகிழ்வாக உள்ளது. அது எதையுமே பொறுமையாக சாப்பிடும் அழகே தனிதான். இப்போது இளநீரையும் சுவைத்து அருந்துகிறது.

    அயுதயா புத்த கோவிலையும் காண ஆவலுடன் இருக்கிறேன். நீங்கள் நல்ல படங்களுடன்,அதை தெளிவாக எல்லாவற்றையும் விவரித்து தருவதே உங்களின் பதிவுக்கு ஒரு சிறப்பு. அதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். தொடர்கிறேன் சகோதரி. அழகான இடங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //வணக்கம் சகோதரி

      பதிவு அருமையாக உள்ளது. படங்கள் வழக்கம் போல துல்லியம். முதல் படமே (விமான நிலையம்) ஈர்க்கிறது.//
      நன்றி.


      //இரண்டாவது திருமண வீட்டில் வைத்துள்ள சீர் வரிசை படமா?காய் பழங்களுடன், அருமையாக உள்ளது.//

      சாப்பிடும் இடத்தில் மேஜை அலங்காரம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அல்ங்காரம். நான் எடுத்து கொண்ட கோடை க்கு ஏற்ற நுங்கு இருந்தது அதனால் இந்த படம் போட்டேன்.


      //திருமண மேடை சூப்பர். மணமக்களுக்கு என் அன்பான, மனம் நிறைந்த வாழ்த்துகள்.//

      உங்கள் மணம் நிறைந்த வாழ்த்துகளுக்கு நன்றி.

      //அங்கு இளநீர் சீவித்தரும் முறையும் அழகு. அணில்கள் இளநீர் அருந்துவதை பார்க்க அவ்வளவு மகிழ்வாக உள்ளது. அது எதையுமே பொறுமையாக சாப்பிடும் அழகே தனிதான். இப்போது இளநீரையும் சுவைத்து அருந்துகிறது.//

      ஆமாம், மதில் மேல் இளநீரை வைத்தவுடன் மரத்திலிருந்து குடு குடு என்று இறங்கி பயமில்லாமல் அவை குடிப்பது அழகு.

      //அயுதயா புத்த கோவிலையும் காண ஆவலுடன் இருக்கிறேன். நீங்கள் நல்ல படங்களுடன்,அதை தெளிவாக எல்லாவற்றையும் விவரித்து தருவதே உங்களின் பதிவுக்கு ஒரு சிறப்பு. அதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். தொடர்கிறேன் சகோதரி. அழகான இடங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி.//

      உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.
      பதிவை ரசித்து படித்து நீங்கள் விரிவான கருத்து சொல்வதே எழுத உற்சாகம் அளிக்கிறது.

      நீண்ட நேரம் அமரவோ, எழுதவோ மிடியவில்லை அதனால் கொஞ்சம் படம், கொஞ்சம் செய்தி என்று பதிவு போட்டு கொண்டு இருக்கிறேன்.

      நீக்கு
  10. ரிசப்ஸன் மேடை மிக அழகாக இருக்குது. இன்னும் கொஞ்சம் சூம் பண்ணி எடுத்திருந்தால் தென்னைப்பிள்ளை தெரிஞ்சிருக்காது. மணமக்கள் நீடூழி காலம் சீரும் சிறப்புமாக வாழ இறைவன் அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்

      //ரிசப்ஸன் மேடை மிக அழகாக இருக்குது. இன்னும் கொஞ்சம் சூம் பண்ணி எடுத்திருந்தால் தென்னைப்பிள்ளை தெரிஞ்சிருக்காது. மணமக்கள் நீடூழி காலம் சீரும் சிறப்புமாக வாழ இறைவன் அருள் புரியட்டும்.//

      இது ரிசப்ஸன் மேடை இல்லை அதிரா. இங்கு தான் கல்யாணம்.
      ரிசப்ஸன் ஹால் உள்ளே ! அதற்கு தனி அலங்காரம் இரவு நடந்தது.
      ஆட்டம், பாட்டம், கேக் வெட்டுதல் என்று சிறப்பாக நடந்தது.
      முதல் நாள் மருதாணி இடும் விழா, நலுங்கு என்று போனது.

      மணமக்களை வாழ்த்தியதற்கு நன்றி அதிரா.

      நீக்கு
    2. நீங்கள் சொன்னது சரிதான் அதிரா, சூம் பண்ணி எடுத்த படங்களில் தென்னம்பிள்ளை இல்லை.

      நீக்கு
    3. நீங்கள் சொன்னது சரிதான் அதிரா, சூம் பண்ணி எடுத்த படங்களில் தென்னம்பிள்ளை இல்லை.

      நீக்கு
  11. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழனுக்குப் பதில் தாய்லாண்டுப் பாசையில் கொடுத்திருக்கிறீங்க கோமதி அக்கா, அவர் இப்போ மொழி படிக்கப் போயிருக்கிறார் ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஹா ஹா ஹா நெல்லைத்தமிழனுக்குப் பதில் தாய்லாண்டுப் பாசையில் கொடுத்திருக்கிறீங்க கோமதி அக்கா, அவர் இப்போ மொழி படிக்கப் போயிருக்கிறார் ஹா ஹா ஹா.//

      அதுதான் இன்னும் காணவில்லையோ நெல்லையை. இப்போது எல்லாம் இணையத்தில் இருக்கே! மகனும் கார்டிரைவரும் அவர் தாய் மொழியில் டைப் செய்வார், மகன் அதை மொழி பெயர்த்து புரிந்து கொண்டு தாய் மொழியில் டைப் செய்து அவருக்கு கொடுப்பான்.

      நீக்கு
    2. நான் மனைவியோடு தாய்லாந்து சென்றிருக்கிறேன் (எனக்கு அது பிஸினெஸ் மற்றும் கான்ஃபரன்ஸ் பயணம்). ரொம்பவே ரசித்தோம். ஒரு நாள் அந்தப் பதிவைப் படங்களுடன் பகிரணும் (மசாஜ் செய்துகொண்டேன் எனபதையும் சொல்லிவிடுகிறேன்)

      நீக்கு
    3. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //நான் மனைவியோடு தாய்லாந்து சென்றிருக்கிறேன் (எனக்கு அது பிஸினெஸ் மற்றும் கான்ஃபரன்ஸ் பயணம்). ரொம்பவே ரசித்தோம். ஒரு நாள் அந்தப் பதிவைப் படங்களுடன் பகிரணும் (மசாஜ் செய்துகொண்டேன் எனபதையும் சொல்லிவிடுகிறேன்)//

      ரசித்துப்பார்க்க நிறைய இடங்கள் இருக்கிறது.
      திருமணத்திற்கு முந்தின நாள் காலை ஒரு சடங்கில் வந்து இருந்த அனைவருக்கும் பாத மசாஜ் செய்ய ஏற்பாடு செய்து இருந்தார்கள். எட்டு பெண்கள் எல்லோருக்கும் சிரித்த முகத்தோடு அனைவருக்கும் பாத மசாஜ் செய்தார்கள் பயண களைப்பாய் இருந்தவர்களுக்கு புத்துணர்வு கிடைத்தது.

      நீக்கு
  12. இளநி, அதைக் குடிக்கும் அணில் அனைத்தும் அழகு... பேரன் உயர்ந்துவிட்டமையால நீங்க குட்டியாகிட்டீங்களோ ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இளநி, அதைக் குடிக்கும் அணில் அனைத்தும் அழகு... பேரன் உயர்ந்துவிட்டமையால நீங்க குட்டியாகிட்டீங்களோ ஹா ஹா ஹா.//

      ஆமாம், புத்த விஹாரை பார்க்க வேண்டுமே என்று மனம் இல்லாமல் நகர்ந்தோம் அந்த அளவு அழகாய் இருந்தது அணில் இளநீர் குடித்தது. மக்கள் எல்லோரும் ரசித்துப்பார்த்து கொண்டு இருந்தார்கள்.

      ஆமாம், நான் குட்டியாகி வருகிறேன் அவர்கள் வளர்வதால்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.

      நீக்கு
  13. நான் கேட்டதிற்காக இளநீர் பற்றிய பதிவுக்கு நன்றி

    நான் பிலிப்பைன்ஸில் இளநீர் சாப்பிட்டிருக்கிறேன். மிக மிகப் பெரிது. அதுபோலவே தாய்லாந்திலும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நான் கேட்டதிற்காக இளநீர் பற்றிய பதிவுக்கு நன்றி

      நான் பிலிப்பைன்ஸில் இளநீர் சாப்பிட்டிருக்கிறேன். மிக மிகப் பெரிது. அதுபோலவே தாய்லாந்திலும் இருக்கிறது.//

      ஆமாம் நீங்கள் சொல்வது போல பிலிப்பைன்ஸ் இளநீர் போல

      இலங்கை, அந்தமான், மலேஷியா பத்துமலை முருகன் கோயில், சிங்கபூர் எல்லா இடத்திலும் இளநீர் மிக பெரிதுதான்.

      நீக்கு
  14. தாய்லாந்து இளநீர், பலாப்பழம் பஹ்ரைனில் சூப்பர் மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும். அழகாக வெட்டியிருப்பார்கள். அந்த நினைவு வந்துவிட்டது. பலாப்பழச் சுளைகளையும் பாக்கெட்டில் வைத்து விற்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தாய்லாந்து இளநீர், பலாப்பழம் பஹ்ரைனில் சூப்பர் மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும். அழகாக வெட்டியிருப்பார்கள். அந்த நினைவு வந்துவிட்டது. பலாப்பழச் சுளைகளையும் பாக்கெட்டில் வைத்து விற்பார்கள்.//

      தாய்லாந்திலும் பாக்கெட்டில் போட்டு வெளியே தெரிவது போன்ற பாக்கெட், பலாபழம், தர்பூஸ், சுரைக்காய், பப்பாளி, ஆப்பிள் எல்லா வற்றையும் அப்படி பிளாட்பாம் கடைகளில் வைத்து இருக்கிறார்கள் அதையும் படம் எடுத்தேன், ஒரு பதிவில் போடுகிறேன்.

      நீக்கு
  15. கவின் நல்ல உயரம். நல்ல அமைதியான சிரித்த முகம். வாழ்க வளமுடன்.

    திருமண மேடை படங்கள், அதிலும் மேலே கலர்ப்புகையோடு எடுக்கப்பட்டிருக்கும் படம் மிக மிக அழகாக இருக்கிறது.

    அதுபோல இளநீர் படங்களில் தொட்டி போல அழகாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கவின் நல்ல உயரம். நல்ல அமைதியான சிரித்த முகம். வாழ்க வளமுடன்.//

      உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி நெல்லை

      //திருமண மேடை படங்கள், அதிலும் மேலே கலர்ப்புகையோடு எடுக்கப்பட்டிருக்கும் படம் மிக மிக அழகாக இருக்கிறது.//

      காணொளி எடுத்தான் மகன், அது இன்னும் நன்றாக இருக்கும். நான் படம் மட்டும் எடுத்தேன். இரவு கையில் சுற்றிக் கொண்டு வாணவேடிக்கை காட்டினார்கள், வாயில் இருந்து கல கலராக தீயை பரவ விட்டார்கள் அவை எல்லாம் மேடைக்கு பின் புறம் கடற்கரை மணலில் .

      //அதுபோல இளநீர் படங்களில் தொட்டி போல அழகாக இருக்கிறது//

      ஆமாம், அழகாய் வைத்து இருக்கிறார்கள்.

      நீக்கு
  16. மணமக்கள் நல்ல சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் வாழட்டும். இறைவன் அருள் உண்டு.

    ஆயுத்தயா படம் ரொம்பவே அழகு. பழைமையைப் பறை சாற்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மணமக்கள் நல்ல சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் வாழட்டும். இறைவன் அருள் உண்டு.//

      உங்கள் ஆசீர்வாதம், கிடைத்தது மகிழ்ச்சி. இறைவன் அருளால் நலமாக சந்தோஷமாக வாழட்டும்.

      //ஆயுத்தயா படம் ரொம்பவே அழகு. பழைமையைப் பறை சாற்றுகிறது.//

      பழமையை பாதுகாக்கிறார்கள் மிக அழகான இடம்.

      இது போல நிறைய இடங்கள் இருக்கிறது. நாங்கள் பார்த்த இடமே மிக பெரிது அதற்கே நேரம் சரியாகி விட்டது. எனக்கும், சம்பந்தி அவர்களுக்கும் கால்வலி வேறு, மருமகளும், மகனும் மட்டும் வேறு சில இடங்கள் போய் வந்தார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  17. மணமக்களுக்கு வாழ்த்துகள், கோமதிக்கா.

    படங்கள் எல்லாமே சூப்பர். கடற்கரையில் திருமணம்! அந்த மேடைக்கு மேலே ஏதோ கலர்கலராகப் புகை செல்வது போல உள்ளது அப்படி அமைச்சிருந்தாங்களோ?

    தென்னை தெரிகிறது எட்டிப் பார்ப்பது போல!. தலைமட்டும் ஃப்ரேமுக்குள்... இன்னும் ஜூம் செய்திருந்தீங்கனா அதுவும் தெரிந்திருக்காது.

    மேடை அமைப்பு எல்லாமே நல்லாருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //மணமக்களுக்கு வாழ்த்துகள், கோமதிக்கா.//

      நன்றி கீதா

      //படங்கள் எல்லாமே சூப்பர்.//

      நன்றி

      // கடற்கரையில் திருமணம்! அந்த மேடைக்கு மேலே ஏதோ கலர்கலராகப் புகை செல்வது போல உள்ளது அப்படி அமைச்சிருந்தாங்களோ?//

      தாலி கட்டியவுடன் வாணவேடிக்கை போட்டார்கள் அதுதான் வண்ணமயமாக மேலே நின்றது.

      //தென்னை தெரிகிறது எட்டிப் பார்ப்பது போல!. தலைமட்டும் ஃப்ரேமுக்குள்... இன்னும் ஜூம் செய்திருந்தீங்கனா அதுவும் தெரிந்திருக்காது.//

      அமாம், கீழே ஜூம் செய்த படத்தில் இருக்காது தென்னை.

      //மேடை அமைப்பு எல்லாமே நல்லாருக்கு.//

      ஒவ்வொரு சடங்கிற்கும் ஒவ்வொரு மாதிரி மேடை அலங்காரம் செய்து இருந்தார்கள்.

      நீக்கு
  18. என்னைக் கவர்ந்த விஷயம் அணில் இளநீர் குடிப்பதுதான்.

    படங்கள் செமையா இருக்கு. இளநீர் வெட்டும் விதம் அழகு.

    மிகப் பெரிய இளநீர் போல இருக்கிறது பார்க்க. 50 ரூ நம்மூர் பண மதிப்பா அக்கா? அப்படினா இப்ப ஒகே தான். அதுவும் பெரிய இளநீர். இங்கு சின்ன இளநீரே 60 ரூ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என்னைக் கவர்ந்த விஷயம் அணில் இளநீர் குடிப்பதுதான்.//

      ஆமாம் ரசிகர் பட்டாளம் இருந்தது அன்று.

      //படங்கள் செமையா இருக்கு. இளநீர் வெட்டும் விதம் அழகு.//

      ஆமாம்.

      //மிகப் பெரிய இளநீர் போல இருக்கிறது பார்க்க. 50 ரூ நம்மூர் பண மதிப்பா அக்கா?//

      தெரியவில்லை மகனிடம் கேட்க வேண்டும்.

      //அப்படினா இப்ப ஒகே தான். அதுவும் பெரிய இளநீர். இங்கு சின்ன இளநீரே 60 ரூ...//

      இங்கும் இரண்டு டம்பளர் நீர் இருக்கும் இளநீர் 60 ரூபாய்தான்

      நீக்கு
  19. அணில் படங்கள் எல்லாமே சூப்பர் எடுட்துக் கொஞ்சவேண்டும் போன்று இருக்கு.

    இளநீர் வழுக்கை இருந்ததா அக்கா?

    வாயைப் பெரிதாக வெட்டி வைத்திருக்கும் படம் - என்னவோ பெரிய பெரிய குண்டான் அடுக்கி வைச்சிருப்பது போல இருக்கு! பேசாமல் காலியாகும் இளநீர் தேங்காயை கை வேலைப்பாடு செய்து அதில் தண்ணீர் கூட சேமித்து வைக்கலாம் போல! அல்லது சமையல் செய்ததை எடுத்து இதில் போட்டு மூடி வைக்கலாம் போல இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அணில் படங்கள் எல்லாமே சூப்பர் எடுட்துக் கொஞ்சவேண்டும் போன்று இருக்கு.,,

      அவை நம் கைக்குள் அடங்க வேண்டுமே! தம்பி மகள் வீட்டு கல்யாண மண்டபத்தை பார்த்து கொள்ளும் குடும்பத்தினர் குழந்தை அணிலோடு விளையாடியதை முன்பு வீடியோ எடுத்து போட்டேன்.

      //இளநீர் வழுக்கை இருந்ததா அக்கா?//

      இளம் தேங்காயாக இருந்தது நாங்கள் இளநீர் மட்டும் குடித்தோம், தேங்காயை வெட்டி தர சொல்லவில்லை.


      //வாயைப் பெரிதாக வெட்டி வைத்திருக்கும் படம் - என்னவோ பெரிய பெரிய குண்டான் அடுக்கி வைச்சிருப்பது போல இருக்கு! பேசாமல் காலியாகும் இளநீர் தேங்காயை கை வேலைப்பாடு செய்து அதில் தண்ணீர் கூட சேமித்து வைக்கலாம் போல! அல்லது சமையல் செய்ததை எடுத்து இதில் போட்டு மூடி வைக்கலாம் போல இருக்கு.//

      ஆமாம், அழகான மூடி போட்ட டப்பாவாக பெயிண்ட் செய்து வைக்கலாம்.

      நீக்கு
  20. ஆமாம் கோடைக்கு ஏற்ற பதிவு.

    படங்கள் விவரங்கள் எல்லாமே ரசித்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆமாம் கோடைக்கு ஏற்ற பதிவு.

      படங்கள் விவரங்கள் எல்லாமே ரசித்தேன் கோமதிக்கா//

      அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா

      நீக்கு
  21. படங்களும் பகிர்வும் சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் , வாழ்க வளமுடன்

      //படங்களும் பகிர்வும் சிறப்பு//

      நன்றி.

      நீக்கு
  22. கடல் பின்னணியில் திருமண மேடை.. beautiful!
    அணில் இளநீர் குடிக்கும் படம் வெகு அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

      //கடல் பின்னணியில் திருமண மேடை.. beautiful!
      அணில் இளநீர் குடிக்கும் படம் வெகு அழகு!//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  23. மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!//

      உங்கள் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு