திங்கள், 28 ஏப்ரல், 2025

சஃபாரி வேர்ல்ட் பாங்காக் மிருகக்காட்சிசாலை பாகம் - 3





சஃபாரி வேர்ல்ட் பாங்காக் மிருகக்காட்சிசாலை பாகம் -1


சஃபாரி வேர்ல்ட் பாங்காக் மிருகக்காட்சிசாலை பாகம் -2


இதற்கு முன்பு போட்ட பதிவுகள்.  திறந்தவெளி  மிருககாட்சிசாலையில் பார்த்த காட்சிகள் தொடர் பதிவாக இங்கு  வந்து கொண்டு இருக்கிறது.
பூங்காவிற்குள் மன்னர் படம்


அழகான மரச்சிற்பங்கள்




மரத்துண்டுகளால் செய்யப்பட்ட யானை


மரசிற்பம் நீர் யானை


பயமில்லை  வாயில் கை வைக்கலாம் 


டால்பின்கள்  செய்யும் சாகசம் பார்க்க பேரன்  போய் வந்தான். நாங்கள் போகவில்லை  நீண்ட நடை, நிறைய படிகள் ஏறி இறங்க வேண்டும்.


நீர் காகம் 

கருப்பு நிற அழகான  நீண்ட கழுத்து வாத்து


மரத்தால் செய்த மனிதர்கள் தாங்கும் கூரை, விலங்குகளுக்கு நிழற் கூரை

பரிதாபமாக காட்சி தரும் ஓட்டகம்





கருப்பு, வெள்ளைப்புறாக்கள், புள்ளிமான், வரிக்குதிரை

குடை அலங்கார விதானம்

வென்றால் பரிசு ,விளையாட்டு போட்டிகள் நடத்தும் கடைகள்


சிறிய பாலம் அதில் நடந்து போகும் போது பாலத்துக்கு  அடியில் போகும் நீரோடையில் அழகிய காட்சிகள்.

நிஜ மனிதர்கள் படகில் இருப்பது போலவே காட்சி அளிக்கும்  சிலைகள் நடுவில் படகு வீடு, சுற்றி செடி விற்கும் படகு, இளநீர் விற்கும் படகு,  மண்பானைகள் விற்கும் படகு,  காய் விற்கும் படகு, உணவு செய்து விற்கும் படகு இருந்தது.

பக்கவாட்டிலிருந்து எடுத்த படங்கள்
உணவு தயார் 
செடிகள் விற்கும்  பையன்
இளநீர்  அழகு, அதை விற்கும் பெண்ணும் அழகு, நீரில் தெரியும் இளநீர் பிம்பம்

மூங்கிலில் செய்த பொருட்கள் படகு வீட்டில் தொங்குகிறது பாய்கள், குடங்கள் ,அரிக்கேன் விளக்கும் இருக்கிறது





படகு வீட்டில் கூரையில் அழகான கொடிமலர் படர்ந்து இருக்கிறது


                                   கிளி பார்க்கப் போகிறோம்



சிலையோ என்ற மயக்கத்தை கொடுக்கும் 


மதியம் வெயிலுக்கு  நிழல் தேடி அமர்ந்து இருக்கிறது






நாகலிங்க மர நிழலில் நாகலிங்க மலர் தெரிகிறதா?


மரத்துக்கு அடியில் அலுமனிய தகடு ஏன் அடித்து வைத்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை


உனக்கு நான், எனக்கு நீ




சிறிய காணொளிதான் பாருங்கள்.


கிளி பேச்சு கேட்கலாம் இந்த காணொளியில். பெரிய மரபீப்பாய்களில் துளையிட்டு வைத்து இருக்கிறார்கள் அதற்குள்ளும் கிளிகள் போய் இருக்கும் போல முட்டையிட வசதி என்று நினைக்கிறேன். கிளிகள் பொதுவாய் மரபொந்துகளில் தான் வாழும்.


கடல் வாழ் ஜீவராசிகளை  பற்றி சொல்லும் காட்சி கூடத்திற்கு அழைக்கும் பெண்கள்


இப்படி நிறைய நிகழ்ச்சிகள் இருக்கிறது நம் நேரத்திற்கு எது ஒத்து வருகிறதோ பார்த்து மகிழலாம்.




காலை முதல் மாலை வரை சுற்றிப்பார்த்து விட்டோம். உணவு கூடத்திற்கு போகிறோம்.  நாம் கொடுத்த பணத்திற்கு உணவு உண்டு. 


அருமையான சுவையான உணவு  ப்ஃபே சிஸ்டம் நமக்கு வேண்டுமென்பதை நாம் போய்ப்பார்த்து எடுத்து கொள்ள வேண்டும். பழங்கள், ஜஸ்கீரீம், இனிப்பு வகைகள்,  சாம்பார்போல தேங்காய் பாலில்  காய்கள் நிறைய போட்ட குழம்பு , காய்கள் நிறைய போட்ட நூட்ல்ஸ் சூப்,  காய், கூட்டு ,  என்று  வயிற்றை கெடுக்காத சாப்பாடு.

இத்துடன் சஃபாரி வேர்ல்ட்  பதிவு நிறைவு பெற்றது.

அடுத்து  தாய்லாந்தில் சென்ற  வேறு  இடங்களைப்பார்க்கலாம்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்

50 கருத்துகள்:

  1. அட்வென்ச்சர் அயர்லாந்து படமும், மரச்சிற்பங்களும்,  மன்னரும் நல்ல வரவேற்பு. யானை, நீர்யானை...   அருமை. 

    நீர்க்காகம் முதன்முறை பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //அட்வென்ச்சர் அயர்லாந்து படமும், மரச்சிற்பங்களும், மன்னரும் நல்ல வரவேற்பு. யானை, நீர்யானை... அருமை. //

      அயர்லாந்தா? தாய்லாந்து ஸ்ரீராம்.

      //நீர்க்காகம் முதன்முறை பார்க்கிறேன்!//

      நிறைய பதிவுகளில் நீர் காகம் போட்டு இருக்கிறேன் ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பரிதாபமாகத்தான் இருக்கிறது ஒட்டகத்தைப் பார்க்க.. மனிதர்களுக்கு காட்சிப் பொருளாக பொருந்தா இடத்தில் வாசம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பரிதாபமாகத்தான் இருக்கிறது ஒட்டகத்தைப் பார்க்க.. மனிதர்களுக்கு காட்சிப் பொருளாக பொருந்தா இடத்தில் வாசம்!//

      ஆமாம், நாம் பார்த்து ரசிக்க என்று நிறைய விலங்குகளின் வாழ்க்கை முறை, உணவு முறைகளை மாற்றியதால் அவை படும் இன்னல்கள் நிறைய.

      சில பொருந்தி கொள்ளும் ,சில பொருந்தாமல் கஷ்டப்படும்.

      நீக்கு
  3. கொஞ்சும் கிளிகள் அழகு. நாகலிங்க மலர் தெரிகிறது. கிளியின் வசிப்பிடம் அழகு. காணொளி சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கொஞ்சும் கிளிகள் அழகு. நாகலிங்க மலர் தெரிகிறது. கிளியின் வசிப்பிடம் அழகு. காணொளி சுவாரஸ்யம்.//

      பீர் பீப்பாய்களை இரண்டாக வெட்டி அவற்றை கிளிகளுக்கு நிழற்குடை அமைத்து இருந்தார்கள்.
      கிளிகள் அதற்கு கீழ் அமர்ந்து கொண்டு பேசி கொண்டு இருந்தன.
      காணொளி பார்த்தது அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
  4. உணவு - பழ வகைகள், காய்கள் சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விடும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உணவு - பழ வகைகள், காய்கள் சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விடும்!//

      ஆமாம். தாய்லாந்து உணவில் தேங்காய் பாலில் காய்கறிகளை போட்ட நம் ஊர் சொதி போல இருக்கும் . நிறையகாய்கறிகள் போட்ட நூடுல்ஸ் சூப் இவைகளை சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும்.

      நீக்கு
  5. மொத்தத்தில் அழகிய படங்கள் மூலம் எங்களையும் அங்கு சுற்றிப்பார்க்க வைத்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மொத்தத்தில் அழகிய படங்கள் மூலம் எங்களையும் அங்கு சுற்றிப்பார்க்க வைத்து விட்டீர்கள்.//

      சுற்றிப்பார்த்து கருத்துக்கள் பல சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. எல்லாப் படங்களுமே மிக அழகு

    கிளிகளை எத்தனை நேரம் வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //எல்லாப் படங்களுமே மிக அழகு//

      நன்றி.

      //கிளிகளை எத்தனை நேரம் வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டிருக்கலாம்.//

      ஆமாம்.

      நீக்கு
  7. இந்த மாதிரி உயிரியல் காட்சிகளில், இருக்கும் விலங்குகளைப் பார்க்க பரிதாபமாக ருக்கும்.

    தங்கள் இயற்கை வாழ்விடத்தை விட்டு இங்கு வசிக்கின்றனவே என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்த மாதிரி உயிரியல் காட்சிகளில், இருக்கும் விலங்குகளைப் பார்க்க பரிதாபமாக ருக்கும்.

      தங்கள் இயற்கை வாழ்விடத்தை விட்டு இங்கு வசிக்கின்றனவே என்று.//

      ஆமாம். அவைகளுக்கு பழக்கப்பட்ட இடம், உணவுகள், தட்ப, வெப்ப காலநிலையும் காரணம்தான்.

      நீக்கு
  8. இளநீரும் அதை வெட்டித் தரும் விதமும் மிக அழகாக இருக்கும். இளநீரும் ருசியாஇருக்கும். விலை கேட்டீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இளநீரும் அதை வெட்டித் தரும் விதமும் மிக அழகாக இருக்கும். இளநீரும் ருசியாஇருக்கும். விலை கேட்டீர்களா?//

      அடுத்த பதிவில் வரும் இளநீர் படங்கள். இளநீரை அழகாய் வெட்டி அணில்களுக்கு வைப்பதும் அவை வந்து குடிப்பதும் பார்க்க அழகு.
      விலை மகனிடம் கேட்டு சொல்கிறேன்.

      நீக்கு
  9. அரபு தேசங்களில் ஒட்டகத்திற்கு அவ்வளவு மதிப்பு மரியாதை.

    சௌதியில் ஒட்டகத்தின் மீது கார் மோதிவிட்டால் தாங்கமுடியாதளவு ஃபைன் போடுவார்கள். செத்தால் சொத்தையே கொடுக்கவேண்டியிருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அரபு தேசங்களில் ஒட்டகத்திற்கு அவ்வளவு மதிப்பு மரியாதை.

      சௌதியில் ஒட்டகத்தின் மீது கார் மோதிவிட்டால் தாங்கமுடியாதளவு ஃபைன் போடுவார்கள். செத்தால் சொத்தையே கொடுக்கவேண்டியிருக்கும்.//

      நம் ஊர் ஆட்கள் நல்லவேலை என்று அரபு நாடுகளுக்கு அழைத்து போய் ஓட்டகம் மேய்க்க என்று அவஸ்தை படுவதை சினிமாக்கலில் பார்த்து இருக்கிறேன், ஓட்டகத்திற்கு கொடுக்கும் மரியாதையை மனிதனுக்கு கொடுக்கவில்லை அதில். ஓட்டகத்தின் மதிப்பும் மரியாதையும் தெரிகிறது.

      நீக்கு
    2. நான் அப்படி ஒட்டகம் மேய்ப்பவர்களை பஹ்ரைனில் பார்த்திருக்கிறேன். ஒட்டகத்தின் மேல் ஏறி போட்டோவும் எடுத்துக்கொண்டுள்ளேன். அவங்க ஒட்டகத்தை ரொம்ப ஜாக்கிரதையாப் பார்த்துக்கணும். கடைகளில் ஒட்டகப் பால் விற்பாங்க (நம்ம பாலைப்போல. ரொம்பவும் விலை கிடையாது)

      நீக்கு
    3. //நான் அப்படி ஒட்டகம் மேய்ப்பவர்களை பஹ்ரைனில் பார்த்திருக்கிறேன். ஒட்டகத்தின் மேல் ஏறி போட்டோவும் எடுத்துக்கொண்டுள்ளேன். //

      தரங்கம்பாடியில் அழகாய் அலங்கரித்த ஓட்டங்கள் இருந்தன , கடற்கரைக்கு வரும் மக்கள் அதில் ஏறி படம் எடுத்து கொள்வதை பார்த்து இருக்கிறேன்.

      //அவங்க ஒட்டகத்தை ரொம்ப ஜாக்கிரதையாப் பார்த்துக்கணும். கடைகளில் ஒட்டகப் பால் விற்பாங்க (நம்ம பாலைப்போல. ரொம்பவும் விலை கிடையாது)//

      மீண்டும் வந்து விவரங்கள் சொன்னதற்கு நன்றி நெல்லை.



      நீக்கு
  10. என்னாது... சஃபாரி வேர்ல்டில் நம்ம ஊர்ச் சாப்பாடா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என்னாது... சஃபாரி வேர்ல்டில் நம்ம ஊர்ச் சாப்பாடா?//

      கிட்டதட்ட நம் ஊர் சாப்பாடு போல் தான் சாம்பார் போல ஒரு குழம்பு, நம் ஊர் சொதி போல தேங்காய்பால் குழம்பு , காய்கறி நூடுல்ஸ் சூப் என்று இருந்தது. காரட் பொரியல். பால் பாயாசம் மிகவும் பிடித்தது, ஜவ்வரிசி, சேமியா பால் பாயாசம்.

      உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  11. அக்கா தொடக்கத்தில் அந்த மரச் சிற்பங்கள் ஆகா போட வைக்கின்றன... அப்படியே கவர்கின்றன கொஞ்ச நேரம் நிற்க வைத்து விடும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

      //அக்கா தொடக்கத்தில் அந்த மரச் சிற்பங்கள் ஆகா போட வைக்கின்றன... அப்படியே கவர்கின்றன கொஞ்ச நேரம் நிற்க வைத்து விடும்.//

      ஆமாம். நன்றாக மனதை கவரும் மரச்சிற்பங்கள் தான்.

      நீக்கு
  12. மரத்துண்டுகளால் யானை! நல்ல கற்பனை...

    காண்டாமிருகம் ...பேரன் கை வைத்து போஸ் கொடுப்பது அழகு! இந்த வயதிற்கே உரிய ஆர்வம்.

    நீர்காகம்...சின்ன நீர்காகம் போல கறுப்பா ---shag னு சொல்ற நீர்காகம் போல....இங்கும் இப்படி நிறைய இருக்கு ஏரிகளில்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மரத்துண்டுகளால் யானை! நல்ல கற்பனை...//

      ஆமாம்.


      //காண்டாமிருகம் ...பேரன் கை வைத்து போஸ் கொடுப்பது அழகு! இந்த வயதிற்கே உரிய ஆர்வம்.//

      ஆமாம். சின்ன குழந்தைகள் கைகள், தலை முதலியவை வைத்து படம் எடுக்க போச் கொடுக்கிறார்கள்.

      //நீர்காகம்...சின்ன நீர்காகம் போல கறுப்பா ---shag னு சொல்ற நீர்காகம் போல....இங்கும் இப்படி நிறைய இருக்கு ஏரிகளில்//

      ஏரிகளில் நிறைய இருக்கும் மர துண்டுகள் மேல் அமர்ந்து பார்ப்பது அவைகளுக்கு பிடித்தமானது. தென்காசி பதிவில் நிறையபறவைகள் மரத்துண்டு மேல் அமர்ந்து இருக்கும் படங்களை போட்டு இருக்கிறேன் பதிவில்.

      நீக்கு
  13. நீண்ட கழுத்து சிவப்பு அலகு, உடலில் இறக்கைகள் செதில் செதிலாக போல இருப்பதைப் பார்க்கறப்ப கறுப்பு அன்னம் போன்று தெரியுது அக்கா

    மரத்தால் செய்த மனிதர்கள் அந்தக் கூரை அழகா இருக்கு.

    ஒட்டகம் பாவம்.

    படங்கள் எல்லாமே அழகு. அந்த பாலத்தின் அடியில் நீர் அதில் படகுகள் அதுவும் பொம்மைகளாய்,,,சுற்றுலா பயணிகளைக் கவர என்னவெல்லாம் செய்யறாங்க! ஆனா ரொம்ப அழகா இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நீண்ட கழுத்து சிவப்பு அலகு, உடலில் இறக்கைகள் செதில் செதிலாக போல இருப்பதைப் பார்க்கறப்ப கறுப்பு அன்னம் போன்று தெரியுது அக்கா//

      அன்னம் என்றும் சொல்லலாம் கீதா இப்போது அன்னம் இல்லை, எல்லாம் வாத்து என்று தான் சொல்கிறார்கள்.

      //மரத்தால் செய்த மனிதர்கள் அந்தக் கூரை அழகா இருக்கு.//

      ஆமாம் , நீங்கள் ரசிப்பீர்கள் என்றுதான் இந்த பகிர்வு.

      //ஒட்டகம் பாவம்.//

      பாவம் தான்.

      //படங்கள் எல்லாமே அழகு. அந்த பாலத்தின் அடியில் நீர் அதில் படகுகள் அதுவும் பொம்மைகளாய்,,,சுற்றுலா பயணிகளைக் கவர என்னவெல்லாம் செய்யறாங்க! ஆனா ரொம்ப அழகா இருக்கு//

      சுற்றுலா பயணிகளை அடிக்கடி வர செய்ய வேண்டும் தானே!

      நீக்கு
  14. இளனீர் விற்கும் பெண் செடிகள் விற்கும் பையன் என்று எல்லாமே ரொம்ப அழகா வடிவமைச்சிருக்காங்க. உருவாக்கினவங்களைப் பாராட்டி வாழ்த்த வேண்டும்/.

    மூங்கிலில் செய்யப்பட்டவை வாவ் போட வைக்கின்றன தத்ரூபமாக இருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இளனீர் விற்கும் பெண் செடிகள் விற்கும் பையன் என்று எல்லாமே ரொம்ப அழகா வடிவமைச்சிருக்காங்க. உருவாக்கினவங்களைப் பாராட்டி வாழ்த்த வேண்டும்/.//

      ஆமாம், பாராட்டி வாழ்த்திவிடுவோம் கீதா, பாராட்டுகள், வாழ்த்துகள்.


      //மூங்கிலில் செய்யப்பட்டவை வாவ் போட வைக்கின்றன தத்ரூபமாக இருக்கின்றன.//

      ஆமாம்.

      நீக்கு
  15. கிளிகள் பெயின்ட் அடிச்சாப்ல இருக்கு!! பறவைகளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். கிளிகள் உட்பட.

    சிவப்பு நீலம்னு உடைகளைக் கட்பண்ணி தொங்கவிட்டுப் போட்டிருப்பது போல இருக்கு. இப்படித்தானே பலரும் இப்ப போட்டுக்கறாங்க.

    கிளிகளின் குரலுடன் காணொளியை ரசித்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கிளிகள் பெயின்ட் அடிச்சாப்ல இருக்கு!! பறவைகளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். கிளிகள் உட்பட.//

      ஆமாம், சில பெயிண்ட் செய்த சிலை போலவே இருந்தது.

      //சிவப்பு நீலம்னு உடைகளைக் கட்பண்ணி தொங்கவிட்டுப் போட்டிருப்பது போல இருக்கு. இப்படித்தானே பலரும் இப்ப போட்டுக்கறாங்க.//

      இந்த கலர் சர்க்கஸ் செய்பவர்கள் நிறைய போட்டுக் கொள்வார்கள், பளிச் என்று இருக்கும், கண்ணை கவரும்.

      //கிளிகளின் குரலுடன் காணொளியை ரசித்தேன் கோமதிக்கா//

      நன்றி கீதா.

      நீக்கு
  16. கடல்வாழ் ஜீவராசிகளைப் பற்றி என்பதால் அவங்களும் நீல நிற உடை போட்டிருக்காங்க போல,

    உணவு எல்லாம் நல்லாருக்கே...

    எல்லாம் ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  17. //கடல்வாழ் ஜீவராசிகளைப் பற்றி என்பதால் அவங்களும் நீல நிற உடை போட்டிருக்காங்க போல,//

    ஆமாம், அப்படித்தான் இருக்கும்.

    //உணவு எல்லாம் நல்லாருக்கே...

    எல்லாம் ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா//

    அனைத்தையும் ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  18. படங்களும் பகிர்வும் மிக அருமை.

    மரத்துண்டுகளால் ஆன யானை, பெங்களூரில் பார்த்த nut, bolt, gear, pulley போன்றவற்றால் செய்த ஒட்டகம், எருது ஆகியவற்றை நினைவூட்டியது.

    நம் ஊர்களில் சர்க்கஸ் நடத்துபவர்கள் வைத்திருக்கும் ஒட்டகங்களும் இப்படியே பரிதாபமாகக் காட்சி அளிக்கும்.

    நீர்க்காகங்கள் வீட்டுக்கு அருகிலிருக்கும் ஏரியில் அதிகம் உண்டு. பகிர்ந்திருக்கிறேன். பொதுவாகக் கூட்டமாக அமர்ந்திருக்கும். இங்கே தனியாக அமர்ந்துள்ளது.

    கூரையைத் தாங்கிப் பிடிக்கும் மனிதத் தூண் சிற்பங்கள், குடை அலங்கார விதானம் அருமை.

    இளநீர் விற்கும் பெண் படம் ஓர் அழகிய கவிதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்


      படங்களும் பகிர்வும் மிக அருமை.//

      மரத்துண்டுகளால் ஆன யானை, பெங்களூரில் பார்த்த nut, bolt, gear, pulley போன்றவற்றால் செய்த ஒட்டகம், எருது ஆகியவற்றை நினைவூட்டியது.//

      ஆமாம், நீங்கள் பதிவு போட்டீர்கள் அல்லவா?

      //நம் ஊர்களில் சர்க்கஸ் நடத்துபவர்கள் வைத்திருக்கும் ஒட்டகங்களும் இப்படியே பரிதாபமாகக் காட்சி அளிக்கும்.//

      ஆமாம்.

      //நீர்க்காகங்கள் வீட்டுக்கு அருகிலிருக்கும் ஏரியில் அதிகம் உண்டு. பகிர்ந்திருக்கிறேன். பொதுவாகக் கூட்டமாக அமர்ந்திருக்கும். இங்கே தனியாக அமர்ந்துள்ளது.//

      நானும் கூட்டமாகத்தான் பார்த்து இருக்கிறேன், இது ஏகாந்ததை ரசிக்கிறது போலூம்

      //கூரையைத் தாங்கிப் பிடிக்கும் மனிதத் தூண் சிற்பங்கள், குடை அலங்கார விதானம் அருமை.//

      ரசிப்புக்கு நன்றி

      //இளநீர் விற்கும் பெண் படம் ஓர் அழகிய கவிதை.//

      நீங்கள் கவிதை வடித்து விடுவீர்கள்.

      நீக்கு
  19. தேங்காய்பால் சேர்ந்து செய்யப்படும் “Thai curry" இங்குள்ள தாய் ரெஸ்ட்ரான்ட்களிலும் பிரபலம். நிறைய காய்கள், குறிப்பாக மூங்கில் குருத்துகள் போட்டு செய்திருப்பார்கள். பருப்பு போடாத சொதி போன்றதொரு சுவையில் இருக்கும் :).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தேங்காய்பால் சேர்ந்து செய்யப்படும் “Thai curry" இங்குள்ள தாய் ரெஸ்ட்ரான்ட்களிலும் பிரபலம். நிறைய காய்கள், குறிப்பாக மூங்கில் குருத்துகள் போட்டு செய்திருப்பார்கள். பருப்பு போடாத சொதி போன்றதொரு சுவையில் இருக்கும் :).//

      ஆமாம், நீங்கள் சொன்னதை சாப்பிட்டு இருக்கிறேன்.
      சைவமாய் இருப்பதால் தாய் ரெஸ்ட்ரான்ட்களில் நமக்கு கொஞ்சம் உணவு கிடைக்கும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  20. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது.

    அவ்வூர் மன்னரின் படம், மரச்சிற்பங்களின் படங்கள், மரத்துண்டுகளால் செய்யப்பட்ட யானை எல்லாமே பார்க்க நன்றாக உள்ளது.

    கழுத்து நீண்டு பெரிதாக இருக்கும் வாத்து வித்தியாசமாக இருக்கிறது. நீர் காகமும் அருமை.

    நீரோடையில் நிஜ மனிதர்களைப் போலவே அமைத்திருக்கும் படங்கள் நன்றாக உள்ளது. நான் கூட படங்களை பார்த்து வருகையில் நிஜ மனிதர்கள் என நினைத்து விட்டேன். பிறகு பதிவை படிக்கையில் எல்லாமே சிலைகள் என தெரிந்து கொண்டேன். நன்றாக செய்துள்ளனர்.

    தங்கள் பேரன் கவின் பயமின்றி அது முதலையாரா? அதன் வாய்க்குள் கையை விட்டு நிற்கும் படமும் நன்றாக உள்ளது.

    கிளிகளின் படங்கள் அனைத்தும் அருமையாக இருந்தது. கிளிகளின் அழகை எவ்வளவு நேரமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். காணொளியும் கண்டேன்.

    அங்குள்ள உணவுகளும் வித்தியாசமாக இருக்கிறது. நீங்கள் சொன்னபடி காய்கறிகள் நிறைய எடுத்துக் கொண்டால் வயிறு நிறைந்து விடும். தாய்லாந்தின் சிறப்பு உணவே நூடுல்ஸ்தான் இல்லையா?

    நீங்களும் அங்குள்ள இடங்களை நன்றாகவும், அருமையாகவும் படங்கள் எடுத்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். உங்களால் நானும் பாங்காங் மிருககாட்சிசாலையை சுற்றிப்பார்த்து நிறைவைக் பெற்றேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமையாக உள்ளது. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது.

      அவ்வூர் மன்னரின் படம், மரச்சிற்பங்களின் படங்கள், மரத்துண்டுகளால் செய்யப்பட்ட யானை எல்லாமே பார்க்க நன்றாக உள்ளது.

      கழுத்து நீண்டு பெரிதாக இருக்கும் வாத்து வித்தியாசமாக இருக்கிறது. நீர் காகமும் அருமை.//

      நன்றி.

      //நீரோடையில் நிஜ மனிதர்களைப் போலவே அமைத்திருக்கும் படங்கள் நன்றாக உள்ளது. நான் கூட படங்களை பார்த்து வருகையில் நிஜ மனிதர்கள் என நினைத்து விட்டேன். பிறகு பதிவை படிக்கையில் எல்லாமே சிலைகள் என தெரிந்து கொண்டேன். நன்றாக செய்துள்ளனர்.//

      ஆமாம்.

      //தங்கள் பேரன் கவின் பயமின்றி அது முதலையாரா? அதன் வாய்க்குள் கையை விட்டு நிற்கும் படமும் நன்றாக உள்ளது.//

      நீர்யானை

      //கிளிகளின் படங்கள் அனைத்தும் அருமையாக இருந்தது. கிளிகளின் அழகை எவ்வளவு நேரமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். காணொளியும் கண்டேன்.//

      மகிழ்ச்சி, நன்றி.


      //அங்குள்ள உணவுகளும் வித்தியாசமாக இருக்கிறது. நீங்கள் சொன்னபடி காய்கறிகள் நிறைய எடுத்துக் கொண்டால் வயிறு நிறைந்து விடும். தாய்லாந்தின் சிறப்பு உணவே நூடுல்ஸ்தான் இல்லையா?//

      ஆமாம். அரிசியில் செய்யப்பட்ட பலவித உணவுகள் உண்டு. மோதக கொழுக்கட்டை போல , இடியாப்பம் போல


      //நீங்களும் அங்குள்ள இடங்களை நன்றாகவும், அருமையாகவும் படங்கள் எடுத்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். உங்களால் நானும் பாங்காங் மிருககாட்சிசாலையை சுற்றிப்பார்த்து நிறைவைக் பெற்றேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      நீங்களும் பதிவில் அனைத்தையும் ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி கமலா.






      நீக்கு
  21. படங்கள் அழகு, தாய்லாந்தில் எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது.
    பேரனுக்கு மீசை முளைத்துவிட்டதே ஹா ஹா ஹா எப்படி கிடுகிடுவென வளர்கிறார்கள் பாருங்கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்

      //படங்கள் அழகு, தாய்லாந்தில் எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது.
      பேரனுக்கு மீசை முளைத்துவிட்டதே ஹா ஹா ஹா எப்படி கிடுகிடுவென வளர்கிறார்கள் பாருங்கோ.//

      ஆமாம், எல்லாம் வித்தியாசம் தான் நாடுக்கு நாடு வித்தியாசமாக இருக்கும் தானே!
      ஆமாம், மீசை முளைத்து விட்டது என்றால் கோபம் வரும் பேரனுக்கு.
      அவனுக்கு இன்னும் சின்னவராக இருக்கத்தான் ஆசை.
      வளர்ந்து விடுகிறார்கள் குழந்தைகள். என்றும் குழந்தைகளாக இருக்க ஆசைதான்.

      நீக்கு
    2. ஆஆஆ என்ன கோமதி அக்கா, உங்கள் பேரன் வித்தியாசமாக இருக்கிறார், எங்கள் வீட்டில், பெரியாளாகிட்டார் என்றால் தான் ஹப்பி, சின்னப்பிள்ளை என்றால் பிடிக்காது, மீசை முளைத்தபோதெல்லாம் பெரிய சந்தோசம் அவர்களுக்கு, தான் பெரியாளாகிட்டேன் என..

      நீக்கு
    3. அவனுக்கு என்றும் சின்னவராக இருக்க ஆசை அதிரா . சிறு வயதில் குழந்தைகள் பெரிய செருப்பைப் போட்டுக் கொண்டு, மீசை வரைந்து கொண்டு மகிழ்வார்கள்.
      மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி அதிரா

      நீக்கு
  22. ஒட்டகம், மான் எல்லாம் மெலிஞ்சிருக்கு, சரியான புல் கிடைக்கவில்லையோ, ஒட்டகம் வைக்கலில் இருக்கு, அதுக்குப் பிடிக்காதுதானே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஒட்டகம், மான் எல்லாம் மெலிஞ்சிருக்கு, சரியான புல் கிடைக்கவில்லையோ, ஒட்டகம் வைக்கலில் இருக்கு, அதுக்குப் பிடிக்காதுதானே.//

      ஆமாம், அதற்கு புல், கற்றாழை, தளிர் இலைகள் உணவாக கிடைத்தால் மகிழும். தண்ணீரை சேமிக்க வேண்டாம் அது மட்டும் கிடைக்கிறது.

      நீக்கு
  23. ஆஹா கிளிகள் கொள்ளை அழகு, நேரில் எனில் பார்த்துக்கொண்டே இருக்கலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆஹா கிளிகள் கொள்ளை அழகு, நேரில் எனில் பார்த்துக்கொண்டே இருக்கலாம்...//

      ஆமாம், அழகுதான். ஆனால் அவை போடும் சத்தம் கேட்க முடியவில்லை, அடி தொண்டையில் கத்துகிறது.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.

      நீக்கு
  24. சபாரி வேல்ட் படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன.

    பலதையும் கண்டு களிக்கநல்ல பொழுதுபோக்கான இடம். படத்தை பார்க்கவே பிடித்துள்ளது. எதை சொல்வது ....எதை விடுவது... போட்டிங் வீடுகள் அழகு.

    கிளிகள் எல்லாம் வண்ணமாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //சபாரி வேல்ட் படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன.//

      நன்றி

      //பலதையும் கண்டு களிக்கநல்ல பொழுதுபோக்கான இடம். படத்தை பார்க்கவே பிடித்துள்ளது. எதை சொல்வது ....எதை விடுவது... போட்டிங் வீடுகள் அழகு.

      கிளிகள் எல்லாம் வண்ணமாக இருக்கின்றன.//

      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு