மார்கழி மாதம் நிறைவு பெற்று தை மகள் வரப் போகிறாள் நாளை.
மார்கழி மாதம் சின்ன கோலங்கள் போட்டேன். மார்கழி சிறப்பை காட்ட கொஞ்சம் வண்ணங்கள் கொடுத்தேன். அவை இந்த பதிவில் இடம் பெறுகிறது.
அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள் .
கேட்க முடியவில்லை என்றால்
இந்த காணொளி நன்றாக கேட்க முடியும்.
சிறு வயதில் பேரன் பாடிய பொங்கல் பாட்டு
இந்த வருடம் புதிதாக வண்ணபொடிகள் வாங்கவில்லை இருக்கும் பொடிகளை வைத்தே கோலம் போட்டு விட்டேன்.
பழைய மாதிரி கோலங்கள் போட முடியவில்லை, இருந்தாலும் கோலம் போடாமல் இருக்க மனம் இல்லை அதனால் சின்ன சின்ன தாக போட்டு திருப்தி பட்டு கொண்டேன்.

இந்த புத்தாண்டில் தம்பியின் மணிவிழாவிற்கு திருக்கடையூர் சென்று வந்தேன் உறவுகளுடன். அபிராமியை தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்தது தம்பியால்.
புதிய யானை அபிராமி
மாயவரம் எங்கள் மன்ற (மனவளக்கலை) அன்பரை அங்கு பார்த்து உரையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
மலரும் நினைவுகள் வந்து போனது.
அனைவருக்கும் போகி பண்டிகை, தைப்பொங்கல், கனுமாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் வாழ்த்துகள்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
--------------------------------------------------------------------------------------------------
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. மார்கழி கோலங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. சின்ன கோலங்களாக இருந்தாலும் அனைத்தையும் மிக அழகாகவும், பொறுமையாகவும் போட்டுள்ளீர்கள். நடுவில் போட்ட இழை கோலங்களும் அழகாக இருக்கிறது.
திருவாதிரையாகிய இன்று திருக்கடையூர் கோவில் கோபுர தரிசனம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இறைவனை தரிசித்துக் கொண்டேன். உங்கள் தம்பியின் மணிவிழா நன்றாக, சிறப்பாக நடந்திருக்கும் நினைக்கிறேன். இறைவன் அவர்களுக்கு நல்ல உடல்/ மன ஆரோக்கியத்தையும், சிறப்பான வாழ்வையும் தர வேண்டுமென மனதாற பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன்.
நாங்களும் சென்ற வருட இறுதியிலும், இவ்வருட முதலிலும், இறைவன் அருளால் சில கோவில்களுக்கு சென்று வந்தோம். இவ்வருட ஆரம்பத்தில் ஒரு கோவில் (அன்னபூர்ணேஸ்வரி கோவில்) பற்றி பதிவு எழுதியுள்ளேன். தாங்கள் என் இனிப்பு பதிவுக்கு வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. நேற்றும் ஒரு பெருமாள் கோவில் சென்று வந்தோம். அதனால்தான் நேற்று உடனே அனைவருக்கும் பதில் கருத்து தர நேரம் இல்லாமல் போய் விட்டது. இன்று போகிப் பண்டிகை வேலைகள் முடிந்து இப்போதுதான் கைப் பேசியை எடுத்து வைத்துக் கொண்டேன்.
தங்கள் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் மகன், மகள் குடும்பத்தினருக்கும் என் இனிய போகி, மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமை. மார்கழி கோலங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. சின்ன கோலங்களாக இருந்தாலும் அனைத்தையும் மிக அழகாகவும், பொறுமையாகவும் போட்டுள்ளீர்கள். நடுவில் போட்ட இழை கோலங்களும் அழகாக இருக்கிறது.//
நன்றி கமலா.
//நாங்களும் சென்ற வருட இறுதியிலும், இவ்வருட முதலிலும், இறைவன் அருளால் சில கோவில்களுக்கு சென்று வந்தோம். இவ்வருட ஆரம்பத்தில் ஒரு கோவில் (அன்னபூர்ணேஸ்வரி கோவில்) பற்றி பதிவு எழுதியுள்ளேன்
//திருவாதிரையாகிய இன்று திருக்கடையூர் கோவில் கோபுர தரிசனம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.இறைவனை தரிசித்துக் கொண்டேன்.//
தங்கை இருந்த ஓட்டல் அறை ஜன்னல் வழியாக காலை எடுத்தது கோபுர படம். இரண்டு நாளும் அதிகாலை கோபுர தரிசனம் செய்தேன்.
//உங்கள் தம்பியின் மணிவிழா நன்றாக, சிறப்பாக நடந்திருக்கும் நினைக்கிறேன். இறைவன் அவர்களுக்கு நல்ல உடல்/ மன ஆரோக்கியத்தையும், சிறப்பான வாழ்வையும் தர வேண்டுமென மனதாற பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன்.//
மணிவிழா சிறப்பாக நடந்தது. உங்கள் வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி.
//நாங்களும் சென்ற வருட இறுதியிலும், இவ்வருட முதலிலும், இறைவன் அருளால் சில கோவில்களுக்கு சென்று வந்தோம். இவ்வருட ஆரம்பத்தில் ஒரு கோவில் (அன்னபூர்ணேஸ்வரி கோவில்) பற்றி பதிவு எழுதியுள்ளேன்//
இறைவன் அருளால் கோவில்கள் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.
//தங்கள் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் மகன், மகள் குடும்பத்தினருக்கும் என் இனிய போகி, மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//
உங்கள் கருத்துக்கும், குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்து சொன்னதற்கும் நன்றி.
கோலங்கள் அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
கவின் காணொளி கேட்டேன்.
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குகோலங்கள் அழகாக இருக்கிறது.//
நன்றி.
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
கவின் காணொளி கேட்டேன்.//
மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
கோலங்கள் அனைத்தும் அழகு. விதவிதமான வண்ணக்கோலங்கள்.
பதிலளிநீக்குதிருக்கடையூர் அபிராமி தரிசனமும் நன்று. எல்லாம் தெய்வச் செயல்.
மாயவரம் என்றதும், இந்தத் தடவையாவது காளிகாம்பாள் உணவகத்தில் சாப்பிட்டுப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//கோலங்கள் அனைத்தும் அழகு. விதவிதமான வண்ணக்கோலங்கள்.//
நன்றி.
//திருக்கடையூர் அபிராமி தரிசனமும் நன்று. எல்லாம் தெய்வச் செயல்.//
ஆமாம், நடக்க முடியவில்லை என்று போகாமல் இருக்க முடியவில்லை, தம்பி, தங்கைகள் , தம்பி மனைவிகள், மாமாபெண் பார்த்து கொண்டார்கள் என்னை. அவர்கள் உதவியில் பத்திரமாக நடந்தேன். எல்லாம் தெய்வச்செயல்தான்.
மாயவரம் என்றதும், இந்தத் தடவையாவது காளிகாம்பாள் உணவகத்தில் சாப்பிட்டுப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.
காளியாகுடி ஓட்டல். பேரூந்து நிலையம் அருகில் தான். மாயவரம் மணிக்கூண்டு பக்கம். சாப்பிட்டு பாருங்கள் நன்றாக இருக்கும்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. இரண்டு மூன்று பதிவுகளுக்கு உங்களால் வர முடியவில்லை.
உங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதைத்திங்கள் நல்ல சேதிகளைக் கொண்டுவரட்டும்.
//உங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
நீக்குதைத்திங்கள் நல்ல சேதிகளைக் கொண்டுவரட்டும்.//
ஆமாம், எல்லோருக்கும் நல்ல சேதிகளை கொண்டு வரட்டும். மகளுக்கு இது தலை பொங்கல் அல்லவா? அவர்களுக்கு வாழ்த்துகள்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
பொங்கல் பாட்டு அருமை...
பதிலளிநீக்குஅழகான கோலங்கள்...
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்கு//பொங்கல் பாட்டு அருமை...//
நன்றி தனபாலன்
//அழகான கோலங்கள்...
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...//
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி தனபாலன்
பொங்கல் திருநாள் வாழ்த்துகள் கோமதிக்கா.
பதிலளிநீக்குகவின் என்று தெரிந்துவிட்டது பார்த்ததுமே. ரசித்துப் பார்த்தேன். யுட்யூபிலும் பார்த்துவிட்டேன் கோமதிக்கா.
கீதா
வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//பொங்கல் திருநாள் வாழ்த்துகள் கோமதிக்கா.
கவின் என்று தெரிந்துவிட்டது பார்த்ததுமே. ரசித்துப் பார்த்தேன். யுட்யூபிலும் பார்த்துவிட்டேன் கோமதிக்கா.//
கவின் பாட்டை ரசித்து கருத்து சொன்னதற்கும் பொங்கல் வாழ்த்துகளுக்கும் நன்றி கீதா
என்னகக சொல்லறீங்க பழைய மாதிரி போட முடியலை என்றா! நல்லா சொன்னீங்க போங்க. என்ன அழகா போட்டிருக்கீங்க. சின்னது ஒன்றும் இல்லை மிக அழகாக இருக்கின்றன. ரசித்துப் பார்த்ததோடு என் பழைய நினைவுகளும்.
பதிலளிநீக்குகீதா
//என்னகக சொல்லறீங்க பழைய மாதிரி போட முடியலை என்றா! நல்லா சொன்னீங்க போங்க. என்ன அழகா போட்டிருக்கீங்க. சின்னது ஒன்றும் இல்லை மிக அழகாக இருக்கின்றன.//
நீக்குகீதா , நிறைய புள்ளிகள் வைத்து போட முடிவது இல்லை. முழுதாக வண்ணம் கொடுக்க முடியவில்லை. மார்கழி மாதம் எனக்கு வேர்க்கிறது. கோலங்களை அழகாய் இருக்கு என்று சொன்னதற்கு நன்றி.
//ரசித்துப் பார்த்ததோடு என் பழைய நினைவுகளும்.//
நீங்கள் கோலம் போட்ட பழைய நினைவுகளா? வீட்டிலும் போட்டு கோவில் போய் அங்கும் போடுவீர்கள் என்று சொல்லி இருக்கிறீர்கள்.
தை பொங்களுக்கு கோவில் போகாமல் இருக்க மாட்டேன். இப்போது துணை இல்லாமல் எங்கும் போக முடியவில்லை. அதனால் போகவில்லை.
3, 4, 5, 8, 11, 12, 13, கடைசி கோலங்கள் செமையா இருக்கு...
பதிலளிநீக்குஅபிராமி தரிசனம் கிடைத்தது மிகவும் மகிழ்வான விஷயம் கோமதிக்கா,.
அபிராமி ஆனை!! அழகு செல்லம்.
கீதா
//3, 4, 5, 8, 11, 12, 13, கடைசி கோலங்கள் செமையா இருக்கு...//
நீக்குபிடித்த கோலங்களை சொல்லி ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி
//அபிராமி தரிசனம் கிடைத்தது மிகவும் மகிழ்வான விஷயம் கோமதிக்கா,.//
ஆமாம்.
//அபிராமி ஆனை!! அழகு செல்லம்.//
படம் எடுக்க கூடாது என்று நான் எடுத்த பின் சொன்னார், அவர் ஒன்று சொல்லவில்லை என்றால் இன்னும் நிறைய பக்கத்தில் போய் எடுத்து இருப்பேன்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
.
கோலங்கள் யாவும் அருமை. பெரும்பாலும் பேச புக்கிலும் பார்த்தேன். இந்த வயதிலும் இப்படி பொறுமையாக வண்ணக்கோலம் இடுவது பாராட்டத்தகுந்தது. எதையும் விட்டுக் கொடுப்பதில்லை நீங்கள். இனிய பொங்கல், காணும் பொங்கல் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//கோலங்கள் யாவும் அருமை. பெரும்பாலும் பேச புக்கிலும் பார்த்தேன். //
ஆமாம், லைக் போட்டு இருந்தீர்கள் நன்றி.
//இந்த வயதிலும் இப்படி பொறுமையாக வண்ணக்கோலம் இடுவது பாராட்டத்தகுந்தது. எதையும் விட்டுக் கொடுப்பதில்லை நீங்கள். //
கோலம் போட மனம் இருக்கு வயது உன்னால் முடியாது சிரமபடுத்தாதே எங்கிறது.
//இனிய பொங்கல், காணும் பொங்கல் வாழ்த்துகள்.//
உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
முன்னால் அமர்ந்திருக்கும் சிறுவர்கள் மறைக்கவில்லை என்றால் கவின் அப்போது வேஷ்டி கட்டி இருந்தது நன்கு புலனாகி இருக்கும். அந்த டியூன் அருமை. மழலையில் சொல்லும்போது சுகம். கால்கள் மெல்ல தாளமிடுகின்றன!
பதிலளிநீக்கு//முன்னால் அமர்ந்திருக்கும் சிறுவர்கள் மறைக்கவில்லை என்றால் கவின் அப்போது வேஷ்டி கட்டி இருந்தது நன்கு புலனாகி இருக்கும்.//
நீக்குஆமாம், சின்ன வயதிலிருந்து நம் பண்டிகைகளுக்கு வேஷ்டி அணிந்து கொள்வான்.
//அந்த டியூன் அருமை. மழலையில் சொல்லும்போது சுகம். கால்கள் மெல்ல தாளமிடுகின்றன!//
அவன் பாடும் போது லேசாக ஆடி கொண்டு கால்களில் தாளம் போட்டு கொண்டு தான் பாடுகிறான்.
திருக்கடையூர் மூன்று முறை சென்றிருக்கிறேன்.பழைய அபிராமி இல்லையோ இப்போது? நினைவில்லை. சமீபத்தைய சோகம் நெல்லை யானை காந்திமதி.
பதிலளிநீக்கு//திருக்கடையூர் மூன்று முறை சென்றிருக்கிறேன்.பழைய அபிராமி இல்லையோ இப்போது? நினைவில்லை. சமீபத்தைய சோகம் நெல்லை யானை காந்திமதி.//
நீக்குபழைய அபிராமி இல்லை. பழைய அபிராமி நல்ல உயரமாக இருப்பாள்.
காந்திமதி பார்த்த்தேன் செய்திகளில் பார்த்து வருத்தமாக இருந்தது.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
கோலங்கள் மிக அழகு. கலர் பொடி வாங்கவில்லை, இருப்பதை வைத்து போட்டேன் என்றிருக்கிறீர்கள், அதுவே இத்தனை அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
நீக்கு//கோலங்கள் மிக அழகு. கலர் பொடி வாங்கவில்லை, இருப்பதை வைத்து போட்டேன் என்றிருக்கிறீர்கள், அதுவே இத்தனை அழகாக இருக்கிறது.//
ஆமாம், ஒவ்வொரு வருடமும் வண்ணப்பொடிகள் மார்கழி மாதம் வாங்கி விடுவேன். இந்த முறை முன்பு வாங்கிய பொடிகளை வைத்தே கோலங்களுக்கு வண்ணம் கொடுத்து விட்டேன்.
தங்கை பொங்கல் சமயம் வந்தவள் நிறைய வண்ணபொடிகள் வாங்கி வந்தாள்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
நீங்கள் போட்ட மார்கழி கோலங்கள் அழகு. வண்ணங்கள் கவர்கின்றன.
பதிலளிநீக்குகவினின் பொங்கல் பாட்டு அருமை.
உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் இனிய தைத் திருநாள் வாழ்த்துகள்.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்கு//நீங்கள் போட்ட மார்கழி கோலங்கள் அழகு. வண்ணங்கள் கவர்கின்றன.
கவினின் பொங்கல் பாட்டு அருமை.//
கவினின் பொங்கல் பாட்டை கேட்டது மகிழ்ச்சி.
//உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் இனிய தைத் திருநாள் வாழ்த்துகள்.//
உங்கள் கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி மாதேவி.