திங்கள், 14 மார்ச், 2016

அருள்மிகு சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில்,திருவெண்காடு.

                    


            
                              முன் கோபுர வாசல்.


 கொடி மரமும் நந்தியும் முன் பக்கம் சிறு மண்டபத்தில் 


கொடி பிள்ளையார்

கொடி மரத்திற்கு பக்கத்தில் அக்கினி தீர்த்தம்
அக்கினி தீர்த்தம் அருகில் பிரகாரத்தில் சூரிய தீர்த்தம்

சூரிய தீர்த்தம் அருகில் என் கணவர்
 கொடிமரம், நநதி,  கல்யாணமண்டபம்,  சுவாமி சன்னதிக்கு போகும் வழி



உள் கோபுர வாசல்

அம்மன் சன்னதி கோவில் வேலை நடந்து கொண்டு இருக்கிறது. புதன் சன்னதியும் இங்கு இருக்கிறது

                     அகோரமூர்த்தி சன்னதிக்கு போகும் வழி

                                                உள் புறம்



நடராஜர் இருக்கும் சபை



அகோரமூர்த்தி உற்சவர் இருக்கும்   மண்டபம்.
                             
அகோரமூர்த்தி உற்சவர்


அகோரமூர்த்தி மாசி மாதம் பூரநட்சத்திரத்தன்று  தன் இருப்பிடத்தை விட்டு வெளியே வருவார். இந்த முறை குடமுழுக்கு  வேலைகள் நடப்பதால் திருவிழா இல்லை அவர் படி இறங்கவில்லை இருப்பிடத்திலேயே பூஜை. 


 சந்திர தீர்த்தம் அருகில் கொன்றை மரமும் ஒரு தலவிருட்சம்


நந்தி, அகோரமூர்த்தி, மருத்துவாசுரன், பிரம்மா தன் இரு துணையுடன்


திருவிழா சமயத்தில் இந்த மண்டபங்களில் கட்டளைக்காரார்கள் கூட்டமாய் பிரசாதம்,மற்றும்  பட்டு சாற்றுவதற்கு  தட்டு சாமான்களுடன் கூடி நிற்பார்கள்.  இங்கு நந்நீர் கிணறும், பிள்ளையாரும் கணபதியும் உள்ளனர் (காசி துண்டி விநாயகர் என்று பெயர்)இவர்களை வணங்கினால் காசியை  கும்பிட்ட பலனை விட வீசை பலன் அதிகம் கிடைக்குமாம். துர்க்கை அம்மன் சன்னதியும் உள்ளது. துர்க்கை பக்கத்தில் உள்ள மண்டபத்தில் நவக்கிரங்கள் ஒரே திசையில் பார்த்து இருக்கும்.
எதிரில் ஆதிசிவன், சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது



 அம்மன் சன்னதி முன்பு இருக்கும் சந்திரதீர்த்தம்
எதிரில் இருக்கும்  ஆலமரம் அதன் பக்கத்தில்  , ருத்திரபாதமும்  இருக்கிறது.
                                                         

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டம், திருவெண்காடு அருள்தரும் பிர்மவித்யாம்பிகை உடனுறை அருள்மிகு சுவேதாரண்யேசுவர சுவாமி திருக்கோயில் .

திருவெண்காடு  இத் தலம் சோழவள நாட்டில் காவிரிக்கு வடகரையில்  அமைந்த பதினோராவது தலமாகும்.  காசிக்கு சமமான ஆறு தலங்களுள் திருவெண்காடும் ஒன்று.

ஆதி சிதம்பரம் என்றும் சொல்லுவார்கள். சிதம்பரத்தில் அம்மனை தரிசிக்க கஷ்டப்பட வேண்டும் இங்கு அம்மனையும்  நடராஜரையும் அழகாய் பார்க்கலாம். சிதம்பரரகசியத்தையும் பூஜையின் போது சிரமப்படாமல் பார்க்கலாம்.

சிதம்பர நடராஜரையும், திருவெண்காடு நடராஜரையும் செய்தவர்  ஒருவரே என்பார்கள்.  சிதம்பரத்தில் நடராஜர் சபை பொன்னால் வேயப்பட்டு இருக்கும் இங்கு செம்பால் வேயப்பட்டு இருக்கும்.

சந்திர தீர்த்தம், சூரியதீர்த்தம், அக்கினி தீர்த்தம் என்ற மூன்று குளங்கள்,  அழகாய் அமைந்து இருக்கிறது.

சுவேதாரண்யேஸ்வரர், நடராஜர், அகோரமூர்த்தி என்ற மூன்று மூர்த்திகளை கொண்டது.
நால்வரால் பாடப்பெற்ற தலம்.

சுவேதாரண்யேசுவர சுவாமி முன் இருக்கும் நந்திக்கு உடம்பில்  நிறைய  இடங்களில் வெட்டுப்பட்ட அடையாளங்கள் இருக்கும் , மருத்துவர் என்ற அசுரனுடன் நந்தி போரிடச்சென்ற போது  ஏற்பட்ட காயங்கள் என்பார்கள். அப்புறம் தான் சுவாமி அகோரமூர்த்தி வடிவம் எடுத்து  மருத்துவனை அழித்தார் என்பது புராணம் கூறும் வரலாறு.

அகோரமூர்த்தி கம்பீரமாய் பெரிய தோற்றத்துடன் காணப்படுவார். அவர் எதிரில் உள்ள மண்டபத்தில் மருத்துவ சம்ஹார கதை  சித்திரமாய் தீட்டப்பட்டு இருக்கும். சரஸ்வதி, இலக்குமி, பாலமுருகன் இருக்கிறார்கள்., மஹாலட்சுமி சுதைவடிவில் பெரிய தோற்றத்துடன் இருப்பார்.

அகோரமூர்த்திக்கு எதிரில் காளி நிறைய கைகளுடன் காட்சி அளிப்பார்..
அருகில் இருக்கும் மண்டபத்தில் நால்வர், அங்காளபரமேஸ்வரி, சுவேதவனப்பெருமாள் ஆகியோர் இருப்பார்கள்.


அம்மன் பிர்மவித்யாம்பிகை சகல நன்மைகளையும் அருளும் தாய். அம்மனை வேண்டிக் கொண்டு முக்குளத்தில் நீராடி வேண்டிக் கொண்டால் மகப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. அம்மன் சன்னதியில் இரட்டை பிள்ளையார், பிள்ளை இடுக்கி அம்மன் , ஆடிப்பூர அம்மன், பைரவர் இருக்கிறார்கள்.

அம்மன் சன்னதிக்கு பக்கத்தில் புதனுக்கு தனி சன்னதி உண்டு. திருவெண்காடு கோவில், அகோரமூர்த்தி கோவில், சுவேதாரண்யேஸ்வர் கோவில் என்று முன்பு அழைத்தார்கள் இப்போது புதன் கோவில் என்று அழைக்கிறார்கள் மக்கள். நவக்கிரக தலத்தில் ஒன்றாகி விட்டது.  புதன் சன்னதி அருகில் பிரம்மசமாதி  உள்ளது.

ஆடி அமாவாசை, தை அமாவாசை சமயம் காவிரிப்பூம்பட்டினத்தில் கடலில் சங்கமத்தில் குளித்து விட்டு, திருவெண்காடு முக்குளத்திலும்  குளிக்க பக்தர்கள் கூட்டம் அதிகமாய் வருவார்கள்.

பட்டினத்தார் திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.  பட்டினத்தார்க்குத் திருமணப் பேச்சுவார்த்தை இக் கோவிலில் நகரத்தார் சமூத்தினர்களால் இன்றும் நடத்திக் காட்டப்படும். பட்டினத்தாரை, முக்குளம் நீராடிப் பெற்றதாய் தாலாட்டுப்  பாடல் பாடுவார்கள்.  பட்டினத்தார் சிவதீட்சைஇங்குதான் பெற்றாராம்.

மெய்கண்டார் இங்குதான் அவதரித்தார். சைவசித்தந்த முதல்நூலை எழுதியவர்.

சிறுத்தொண்டர் என்று அழைக்கப்பட்ட பரஞ்சோதியாரின்  மனைவியார் திருவெண்காட்டு நங்கையும், சந்தனத்தாதியும் இங்குதான் பிறந்தார்கள்.
திருவெண்காட்டுக்கு வட எல்லையில் அமைந்து இருக்கும் மணிகர்ணிகா நதிக்கரையில்  ஸ்ரீபரமசிவேந்திரசரஸ்வதி சுவாமிகளின் சமாதி உள்ளது.

இந்திரன், ஐராவதம், சிவப்பிரியர், வேதராசி, சுவேதகேது, சுவேதன், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் வழிபட்ட சிறப்பு உண்டு இக் கோவிலுக்கு.


திருவெண்காட்டு தலபுராணம் எழுதியவர் சைவ எல்லப்ப நாவலர். அவர் எழுதிய பாடல் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் பாடப்படும்.

கருநிறமும் மணிமாலை புனையழகும்
வளையெயிறும் கவினைச் செய்ய
எரிசிகையும் நுதல்விழியும் நடைக்கோல
இணையடியும் இலக எட்டுக்
கரநிலவ மணிபலகை  வெண்டலைவாள்
கடிதுடியேர் சூல மேற்று
வெருமருத் துவனையடர் அகோரசிவன்
துணைப்பதச் சீர் விளம்புவாமே.

முன்பு நாங்கள் அங்கு இருந்த போது ஞாயிறு இரவு 7.30க்கு பூஜை நடக்கும்.அப்போது நடக்கும். இப்போது எப்படியோ தெரியவில்லை.

தலவிருட்சமும் மூன்று இங்கு உள்ளது. ஒரு தல ஆலமரத்தின் கீழே ருத்திரபாதம் இருக்கிறது.

சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் பங்குனி மாதம், 28- ஆம் தேதி (11.4.2016)
திங்கட்கிழமை  காலை மணி 9.50க்கு மேல், 10.30க்குள் திருக்குடமுழுக்கு நடக்கப்போகிறது. முடிந்தவர்கள் சென்று தரிசிக்கலாம்.

நாங்கள் போனமாதம் போன போது குடமுழுக்கு வேலைகள் நடந்து கொண்டு இருந்தது. குருக்கள் பத்திரிக்கை அனுப்புவதாய் சொன்னார், இரண்டு நாட்களுக்கு முன்பு அனுப்பி வைத்தார். அதனால் இந்த பதிவு.


                                                    வாழ்க வளமுடன்


திங்கள், 11 ஜனவரி, 2016

ஸ்ரீவில்லிபுத்தூர்க் கோவில்

பெரியாழ்வார் கட்டிய 11 நிலைக் கோபுரம்
  ஸ்ரீவில்லிபுத்தூர்  கோபுரம்  நம் அரசின் அடையாள சின்னம்.

மார்கழி என்றாலே பாவை நோன்பும், திருப்பாவையும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளும் எல்லோருக்கும் நினைவில் வரும் இல்லையா?


கோதை பிறந்த ஊர் கோவிந்தன்  வாழும் ஊர் என்று சொல்லப்படுகிற ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு போய் இருந்தோம் போன மாதம்.  சிவகாசியில் அப்பா பணி புரிந்த போது அடிக்கடி வீட்டுக்கு வரும் உறவினர்களுடன் ஆண்டாள் தரிசனம் செய்யப்  போவோம். பல வருடங்கள் கழித்து மீண்டும் தரிசனம். மலரும் நினைவுகள்  வந்து சென்றது. 

கோவிலில் பல மாற்றங்கள். வழி எல்லாம் பால்கோவா கடைகள்,(அம்மனுக்குத் திரட்டுப்பால்தான் பிரசாதம்) துளசி மாலை வாங்கச் சொல்லி துரத்திக் கொண்டே வரும் பெண்கள், ஆண்கள்.  முதலில் எங்கு போகவேண்டும் எப்படித் தரிசனம் செய்ய வேண்டும் என்பதையும் அவர்களே சொல்கிறார்கள். 

         
                     



                                                       ஆடிப்பூரக் கொட்டகை  
 நன்றி - பக்தி ஸ்பெஷல் அட்டைப் படம்

 முதலில் ஆண்டாள் சன்னதி. ”நாச்சியார் திருமாளிகை” என்று அழைக்கப்படுகிறது. அவள் சிறுவயதில் ஆடி, ஓடிக்களித்த இடமே இப்போது ஆண்டாள் சன்னதி. துளசி மாலைகள் வாங்கிக் கொண்டு உள் நுழைகிறோம். உள்ளே நுழைந்தவுடன் பிரகாரத்தில்  லட்சுமிஹயக்கீரவர் . அங்குள்ள பட்டர் வாங்க பெரியாழ்வார் கும்பிட்ட ஸ்வாமி முதலில் இவரை வணங்கி விட்டு போங்கள் என்கிறார்.

அப்புறம் ஆண்டாள் தரிசனம். 

ஆண்டாள் சன்னதிக்குள் செல்ல சிறப்பு கட்டணம் டிக்கட் வாங்கி உள்ளே சென்றோம்.   ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் ஒரே வரிசையில் நிற்கிறார்கள்.  மூலவர்கள் போலவே  மூன்று உற்சவ மூர்த்திகளும்  முன்புறம் உள்ளனர், இவர்கள்  இருக்கும்  இடம்   முத்துப் பந்தல் என்று அழைக்கப்படுகிறது. பட்டர் ஆரத்திக் காட்டிவிட்டு   சுருக்கமாய்த் தலவரலாறு  சொல்கிறார்.

  உற்சவர்கள்  பின்புறம் இருக்கும்   மூலவர்களை மறைக்கிறார்கள். உற்று உற்றுத் தான் பார்க்கவேண்டும் மூலவர்களை. முதலில் ஆண்டாளைப் பார்த்தேன்,  ஆண்டாள் கையில் கிளி இருக்கிறதா என்று? ஏன் என்றால்    தினம் தினம் புதிதாக இலைகளால் செய்யப்பட்ட கிளி , மாலையில் சார்த்தப்பட்டுக் காலை வரைதான் இருக்குமாம் ஆண்டாள் கைகளில் , அப்புறம் பக்தர்களுக்குக்  கொடுத்து விடுவார்களாம். 
                              
               முன்பு ஆனந்தவிகடனில் வந்த படத்தைக் கிழித்து வைத்து இருந்தேன்.

                      நமது வேண்டுதலைக் கண்ணனிடம் சேர்க்கும் கிளி

 நாம் கொடுக்கும் துளசி மாலையை ஸ்வாமிக்குப் போட்டு விட்டு  ஆரத்தி காட்டி விட்டுத் துளசி மாலையை எடுத்து  கொடுத்தவர் கழுத்தில் போட்டு விடுகிறார்கள்.  அதைப் போட்டுக் கொண்டே கண்ணாடிக் கிணறுக்கு போகிறார்கள். பெண்கள் மாலையைப் போட்டுக் கொண்டு சுற்றி வந்தால் கல்யாணம் ஆகுமாம். 

அடுத்த தரிசனம்  ஆண்டாள் ஸ்வாமிக்கு பெரியாழ்வார் தொடுத்த மாலையை தன் கழுத்தில் போட்டு அழகு பார்த்த கண்ணாடிக் கிணறு. இப்போது கண்ணாடிமூடியால் மூடி ஒரு உண்டியல் பெட்டியாக மாறி விட்டது . நான்கு பக்கம் வாசல் வைத்து அதன் வழியாகப் பணம் போடப்படுகிறது , டாலர் எல்லாம் அதில் இருந்தது. (பணம் தண்ணீரில் விழாது.  அது போன்று அமைத்து இருக்கிறார்கள்). கிணற்றைப் பார்க்க முடியவில்லை. சின்ன சதுரமாய்த் தெரிகிறது கிணறு  மிக கவனமாய்ப் பார்த்தாலும் தண்ணீர் தெரியவில்லை. அடுத்து கண்ணாடி அறை நடுவில்  ஆண்டாள் படம்  வைத்து இருந்தார்கள்.சுற்றி வர கண்ணாடி  வைத்து இருந்தார்கள். கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டு சுற்றி வந்து வணங்கி வெளியில் வந்தோம். இங்கும் கட்டணம் உண்டு.

பின் ஆண்டாள் சன்னதி சுற்றி வரும் போது உள்ளே உள்ள உற்சவர்கள் போலவே சுவற்றில் திருவுருவங்கள் இருக்கிறது- ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார். அதன் பக்கத்தில் உள்ள வயதான பட்டர் நமக்குக் கதை சொல்கிறார்,  கோதை பிறந்த கதை, விஷ்ணு சித்தர் கருடாழ்வாராக அவதாரம் எடுத்தகதை , மற்ற கோவில்களில் எதிரில் இருக்கும் கருடன்  இங்குமட்டும் தான் உடன் இருக்கிறார்.  அதற்குக் காரணம் ரங்கமன்னாருக்கு அவர் மாமனார் என்பதாலாம்.  மூவரும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளாம். ஆண்டாள் சன்னதி பிரணவ மந்திர  அமைப்பில் கட்டப்பட்டு இருக்கிறதாம். ஆண்டாள் சன்னதியில் 108 திவ்ய தேசங்களின் படம் வரையப் பட்டு இருக்கிறது -அழகாய். இருக்கிறது.
                     
                                         ஆண்டாள் அவதரித்த துளசி வனம்.

அடுத்து ஆண்டாள் பிறந்த துளசிவனம். பெரியாழ்வாரின் துளசி தோட்டத்தில்  செவ்வாய்க்கிழமை திருவாடிப்பூரத்தில்  பூமி தேவியின் அவதாரமாக கோதை அவதரித்தாள். கோதை தோன்றிய இடம் அழகாய் இருக்கிறது. ஒரு தொட்டியில் துளசிச்செடி முன்புறம்  வைத்து இருந்தார்கள். பின் புறம் ஆண்டாள் அழகாய் அலங்காரம் செய்து இருந்தார்கள்,  பட்டர் ஆரத்தி காட்டினார்.

 சன்னதியைச் சுற்றி அழகிய துளசிச் செடிகளும் மரங்களுமாகிய அழகிய தோட்டம்.


                                           
அழகிய துளசி வனம்
ஆண்டாள் கோவில் யானை -பெயர் தெரியவில்லை

 வடபத்திரசாயி ரங்கமன்னாருக்குத் தான் கோபுரம் பெரிதாக இருக்கிறது.   மூலவரைப் பார்க்கப் போக ஒரு பத்துபடி ஏறிப்போக வேண்டும்., பிடித்துக் கொண்டு ஏற  வசதியாக  கைப்பிடி இருக்கிறது.  பெருமாள் சயனகோலத்தில்  ஸ்ரீதேவி, பூதேவியுடன் அழகாய்க்  காட்சி அளிக்கிறார்.  பின்புறம் உள்ளே இருக்கும் மற்ற தெய்வங்கள் அழகிய வர்ணத்தில் இருக்கிறார்கள்.  பட்டர் பெரிய மூங்கில் தட்டில் துளசியை வைத்துக் கொண்டு வரும் பக்தர்களுக்கு  கொடுத்தார்.  ஆரத்தி காட்டவில்லை.

பெருமாள் சன்னதி எதிரில்  உள்ள (கோபாலவிலாசம்)  மண்டபத்தில் அழகிய மரவேலைப்பாட்டுக் கூரை,  
வடபத்திரசாயி சன்னதி செல்லும் வழி
உடமைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் வசதிக்காக புதிய இடம் கட்டி வருகிறார்கள் 
வாசல் முகப்பு
உள் பிரகாரம், நல்ல வெளிச்சம் வருவது போல் கட்டிட அமைப்பு
ஆண்டாளின்  வரலாறு சித்தரிக்கப்பட்டு உள்ளது விமானத்தில்

பெருமாள் சன்னதியிலிருந்து கோபுர தரிசனம்.
மரவேலைப்பாடு போல் கல்லில் அழகாய்ச் செய்த வேலைப்பாடு.   இருபுறமும் கடைகள் உள்ளன.


ஜனவரி 20 (2016) ஆம் தேதி  இக் கோவிலுக்கு கும்பாபிஷேகம்  நடைபெறப்போகிறது.  16ம் தேதி யாகசாலை பூஜைகள் துவக்கம். அம்மன் சன்னதி விமானத்திற்கு தங்கத்தகடுகள் பொருத்தி உள்ளனர். வாய்ப்பு இருப்பவர்கள் கண்டு களிக்கலாம்.
                                                         -----------------------------------------

பொங்கலுக்கு ஊருக்குப் போவதால்  முன்பே  பொங்கல் வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன் எல்லோருக்கும். 


நான் வரைந்த கோலங்கள்.

காணும்பொங்கல் அன்று நாங்கள் செய்யும் சிறுவீட்டுப்பொங்கல் 


அனைவருக்கும்   பொங்கல் திருநாள், மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள்  வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.
----------------------------


திங்கள், 4 ஜனவரி, 2016

கங்கை கொண்ட சோழபுரம்- பகுதி -2

கங்கை கொண்ட சோழபுரத்தில்  படங்கள் நிறைய  எடுத்தேன்  .  நீங்களும் கண்டு மகிழ இங்கு  மேலும் சில படங்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறேன். 
கங்கை கொண்டசோழபுரம் முதல் பகுதி பார்க்காதவர்கள் பார்க்கலாம்.


சுவாமி விமானம்
புன்சிரிப்பாய் நடராஜர்
திருமால்
தட்சிணாமூர்த்தி
சிவபெருமான் சண்டீசப்பதம் தந்த காட்சி.(கொன்றை மாலை சூட்டிய காட்சி)

//அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு அதிபன் ஆக்கி அனைத்து நாம்
உண்டகலமும்  உடுப்பனவும்  சூடுவனவும்  உனக்காகச்
சண்டீசனும் ஆம் பதம் தந்தோம் என்று அங்கு அவர் பொன் தட முடிக்குத்
துண்ட மதிசேர் சடைக் கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார்.//

சேக்கிழார்  அருளிய திருத் தொண்டர்புராணத்தில்  சண்டேஸ்வர
புராணப்பாடல்.
திருமகள்
சுவாமியும், அம்மனும்



காலை நேர பூஜை மணி ஒலிக்கிறது

ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள்.
பிச்சாடனர் (கைகள் தனியாக செய்து பொருத்திய வேலைப்பாடு, இப்போது கைகள் இல்லாமல் பொருத்திய துவாரம் தெரிகிறது)

வாசல் இடதுபுறம்  தெரியும் காட்சி

சுவாமி  தரிசனம் செய்து விட்டு  வரும் வாசல் மேல் பகுதியில் அழகிய வேலைப்பாடு உள்ள கருங்கல் ஜன்னல்
 (மற்றொரு வாசல்  )துவாரபாலகர் சிரிப்பது போல் இருக்கிறது அல்லவா?
 இரண்டு கிளிகள் வருகிறவர்களை பார்வையிட்டுக் கொண்டு இருக்கிறது
கழுத்தைச் சாய்த்து ஒரு பார்வை

அர்த்தநாரீஸ்வரர்
கோவிலில் கோழியும், சேவலும் சுற்றி திரிந்து கொண்டு இருந்தது

நிறைய சிலைகளை  மண்டப வாசலில் நிறுத்தி வைத்து விட்டார்கள்.

வாழ்க வளமுடன்
=============