ஏப்ரல் 11ம் தேதி அமெரிக்க பயணம். எட்டு மாதம் ஆன பேரனைப் பார்க்க.
19 மணி நேரம் பயணித்து வந்த கஷ்டம் எல்லாம் பேரன் மலர் போல சிரித்த முகத்துடன்
மலர் செண்டு கொடுத்து வரவேற்றவுடன் மறந்து விட்டது.
அவனின் கள்ளமில்லா சிரிப்பில் எங்களை மறந்தோம்.
இரண்டு நாள் சுவை மறந்த நாக்குக்கு புத்துயிர் கொடுத்தாள் மருமகள்.
இந்த புத்தாண்டு மகன், மருமகள், பேரனுடன்.
முக்கனியில் ஒன்று குறைந்தாலும் மற்ற பழங்கள் கிடைத்தன,’விஷுகனி காணல்’
சிறப்பாய் நடந்தது.
ஆசிர்வாதம் செய்து கை நீட்டம் அளித்தார் என் கணவர்.இந்த புத்தாண்டு வாழ்வில் இனிமை சேர்க்கும் புத்தாண்டு.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எல்லோரும் எல்லா நலமும் பெற்று வாழ இறைவன் அருள்புரிய வேண்டும்.
ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் என்ற ராமகிருஷ்ணர் கருத்திலிருந்து-
எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்
எல்லோரும் நோய்களிலிருந்து விடுபடட்டும்
எது நன்மை என்பதை எல்லோரும் உணரட்டும்
யாரும் துன்பத்திற்கு ஆளாகாமல் இருக்கட்டும்.
வியாழன், 15 ஏப்ரல், 2010
ஞாயிறு, 14 மார்ச், 2010
தண்ணீர் சிக்கனம் வேண்டும் இக்கணம்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
துப்பாய தூஉம் மழை.
உண்பவர்களுக்குச் சிறந்த உணவுகளை உருவாக்கிக் கொடுத்து அவற்றை உணபவர்களுக்குத்
தானும் உணவாக இருப்பது மழையாகும்.
மழை நீர் அமிழ்தமாக உயிர்களை வாழவைக்கிறது.இத்தகைய நீரை மாசு படுத்துவதை மக்கள்
உணரவில்லை.குளங்கள் எல்லாம் தாமரையும்,அல்லியும் மலர்ந்துகாணப்படவில்லை.பாலீதீன் கவர்களும்,மற்றும் வீட்டுக் கழிவு குப்பைகளும் தான் நிறைந்து காணப்படுகிறது துர் வாடை வீசி சுற்றுப்புறத்தை நாசமாக்கிக் கொண்டு இருக்கிறது.சில குளங்களில் ஆகாசத் தாமரை படர்ந்து குளத்து நீரையே மறைத்துள்ளது. ஏரி, குளங்கள் எவ்வளவு இருக்கிறது என்று கணக்கெடுத்து அவற்றைத் தூர்வாரி, மழைக் காலத்தில் மழை நீரை சேகரித்து கோடை காலத்தில் தண்ணீர்ப் பற்றாகுறையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தண்ணீர் சுத்தமாய் இல்லை என்று காய்ச்சி வடிகட்டிய தண்ணீருடன் பயணம் செய்கிறோம்.
குடி தண்ணீர் மூலம் தான் நோயகள் பரவுகின்றன. பஞ்சபூதத்தையும்கெடுத்து விட்டோம்.
சுற்றுச் சூழலைமாசு படுத்துபவர்களைத் தண்டிக்க வேண்டும் தொழிற்சாலைக் கழிவுகளைஆறு,குளங்களில் கலக்காமல் பார்த்துக்கொள்ள தீவிர கண்காணிப்புத் தேவை.நீர் மேலாண்மை பற்றிய விழிப்புண்ர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.
7 தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைத்துப் பயன் இல்லை.இயற்கை வளத்தைக் காப்பாற்றி அவர்களிடம் கொடுக்க வேண்டும்.இயற்கை வளத்தை பாதுகாக்கா விட்டால் உயிர்கள் வாழ்வதற்குத் தகுதியில்லாமல் போய்விடும் இந்த உலகம்.
சிலர் தண்ணீரை வீணடிப்பதை பார்த்தால் பாரதியாரின் நெஞ்சு பொறுக்குதில்லையே பாடல் நினைவுக்கு வருகிறது.சிக்கனத்துக்கு பெயர் பெற்ற பெரியார் அவர்கள் தங்கை வீட்டுக்கு சாப்பிடப் போயிருந்தாராம் சாப்பிட்டு முடிந்தவுடன் தங்கச்சி மகன்(ஈரோடு சாமி)மாமாவுக்கு கை கழுவ தண்ணீரை நிறைய ஊற்றிக்கொண்டே இருந்தாராம் பெரியார் பொட்டுன்று ஒர் அடி அடித்து ஏன் அடித்தேன்னு கேளு அப்படின்னாராம் “ஏன் அடிச்சிங்க?”ன்னு கேட்டார் தங்கச்சி மகன். அதுக்கு பெரியார்”இது தண்ணியா இருக்கிறதுனாலே தானே இப்படி தாராளமாக ஊத்தறே. நெய்யா இருந்தா இப்படி ஊத்துவியா? தண்ணியா இருந்தாலும் அதை அளவோடதான் செலவு பண்ணனும் வீணக்கப்புடாது” என்று சொன்னாராம். இந்தக்காலத்துக்கும் எந்தக் காலத்துக்கும் தேவையான் ஒர் அறிவுரை.
பணத்தை தண்ணீர் மாதிரி செலவு செய்கிறார்கள் என்பார்கள். அதை மாற்றி தண்ணீரை பணம் மாதிரி செலவு செய் என்று சொல்ல வேண்டும். நிலத்தடிநீர் என்பது உலகமக்களின் சொத்து. ஆறுகள் வரண்டு போனால் நிலத்தடி நீர் எங்கு இருக்கும்.குழாய்ப் போட்டு உறிஞ்சி எடுத்து கொண்டே இருந்தால் ’சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’ நிலத்தடி நீர் வளத்தை பெறுக்க மரங்கள் வளர்ப்போம்.மரம் வளர்த்து மழை பெறுவோம்.மழை நீரைச் சேமிப்போம்.நீர் இல்லாத ஏரி குளங்களில் வீடு கட்டுவதைத் தவிர்ப்போம்.
இரசாயன் உரத்தைக் கொட்டி, உயிர்க்கொல்லிகளைக் கொட்டி நிலத்தை நஞ்சாக்கி விட்டோம் இயற்கை உரங்களைப் போட்டு நிலத்தை நல்ல நிலமாக மீட்டால் நந்நீர் பெறலாம்.
நல்ல மண் இருந்தால் தான் மரம் வளர்க்க முடியும்,மரங்கள் இருந்தால் தான் மழை பொழியும்.மழை பொழிந்தால் தான் மனிதன் மற்றும் பிற உயிர்கள் வாழ முடியும்.
விவசாயத்திற்குச் சொட்டு நீர்ப் பாசனம் இருந்தால் நீர் தேவையின்றி ஆவியாவது தடுக்கப் படும். வேருக்குச் சொட்டு நீர்ப் பாசனம், நீர் சிக்கனத்தைத் தருவது போல இலைகளுக்குத் தெளிப்பு நீர்ப் பாசனம் நன்மை தரும். நீர்ப் பற்றாக்குறைக்கு மக்கள் தொகைப் பெருக்கம்,நகர் ஆக்கம்,காலநிலை மாறுபாடு,மாசுபாடு,வணிகம் ஆகியவை காரண்ம்.
நீர்ப் பற்றாக் குறை காரணமாக அண்டை வீடுகளுக்கும், அண்டை வயல்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும், அண்டை நாடுகளுக்கும் பிரச்சினைகள் ஏற்படுகினறன. கி.மு 2500ல் சுமேரியாவில் இருந்த லகாஷ்,உம்மா ஆகிய நாடுகளுக்கு இடையே நதி நீரைப் பிரித்துக் கொள்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் போர்கள் நிகழ்ந்திருக்கின்றன. அப்போதே நிலமை இப்படி இருந்தால் இப்போது கேட்கவா வேண்டும்?
ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 தேதியன்று உலக தண்ணீர் தினமாக உலகெங்கும் கடைப்பிடிக்கபப்டுகிறது. இந்த வருடம் சுத்தமான் நீரின் அவசியம் பற்றி மக்களிடையே”சுத்தமான் நீரினால் ஆரோக்கியமான ஒரு உலகம்”’ என்று தலைப்பிட்டு விழிப்புணர்வை தர உள்ளனர்.
” ஏரி, குளம்,கிணறு,ஆறு எல்லாம் நிரம்பி வழிய,
மாரி அளவாய் பொழிக,
மக்கள் வளமாய் வாழ்க”
வாழ்க வளமுடன்!!
இப்பதிவினை மண் மரம் மழை மனிதன் பதிவில் மரவளம் வின்சென்ட் அவர்கள் எழுதியிருந்த வேண்டுகோளைத் தொடர்ந்து இங்கே பதிவிட்டிருக்கிறேன்.
ஞாயிறு, 7 மார்ச், 2010
மகளிர் தின வாழ்த்துக்கள்
” பேருலகில் வாழுகின்ற மக்களெல்லாம்
பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில் வேறு என்னபெருமை
இதைவிடப் பேசுதற்கு”
-மாக்கோலம்.
” மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா”
கவிமணி தேசியவினாயகம் பிள்ளை அவர்கள்.
காதலொருவனைக் கைபிடித்தே யவன்
காரியம் யாவினுங் கைகொடுத்து
மாதரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி.
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கியிவ் வையந் தழைக்குமாம்
பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா
பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா
என்றெல்லாம் பெண்மையை ஆண்கள் போற்றி புகழ்ந்து சொல்கிறார்கள்.
பெண் முதலில் தன் பெருமையை உணர வேண்டும்.ஆண்களுக்கு உடல்
பலம் என்றால் பெண்களுக்கு மன பலம்.சின்ன விஷயங்களுக்கும் உடைந்து போகாமல்
தன்னைக் காத்துக் கொண்டு,தன் குடும்பத்தையும் பேணுபவளே பெண்.
பெண்கள் சமமாக எல்லாத் துறையிலும்முன்னேறி வர வேண்டும்.பெண்களினுடைய முன்னேற்றம்தான் குடும்பத்தினுடைய முன்னேற்றம்.பெண்களினுடைய முன்னேற்றம்தான் நாட்டினுடைய முன்னேற்றம்.
அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!!
பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில் வேறு என்னபெருமை
இதைவிடப் பேசுதற்கு”
-மாக்கோலம்.
” மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா”
கவிமணி தேசியவினாயகம் பிள்ளை அவர்கள்.
காதலொருவனைக் கைபிடித்தே யவன்
காரியம் யாவினுங் கைகொடுத்து
மாதரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி.
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கியிவ் வையந் தழைக்குமாம்
பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா
பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா
என்றெல்லாம் பெண்மையை ஆண்கள் போற்றி புகழ்ந்து சொல்கிறார்கள்.
பெண் முதலில் தன் பெருமையை உணர வேண்டும்.ஆண்களுக்கு உடல்
பலம் என்றால் பெண்களுக்கு மன பலம்.சின்ன விஷயங்களுக்கும் உடைந்து போகாமல்
தன்னைக் காத்துக் கொண்டு,தன் குடும்பத்தையும் பேணுபவளே பெண்.
பெண்கள் சமமாக எல்லாத் துறையிலும்முன்னேறி வர வேண்டும்.பெண்களினுடைய முன்னேற்றம்தான் குடும்பத்தினுடைய முன்னேற்றம்.பெண்களினுடைய முன்னேற்றம்தான் நாட்டினுடைய முன்னேற்றம்.
அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!!
புதன், 3 மார்ச், 2010
இளமைப் பருவம்
பருவங்கள் பலவகைப் படும் அவை: காப்பு பருவம்,செங்கீரை பருவம்,தாலப் பருவம் சப்பாணிப் பருவம்,முத்தப் பருவம்,வருகை பருவம்,அம்புலிபருவம்,அம்மானை பருவம்,நீராடற்பருவம்,ஊசற்பருவம் ஆகியவை பெண்களுக்கு உரியவை.ஆண்களுக்கு கடைசியில் உள்ள மூன்று பருவத்திற்கு பதிலாக சிற்றில் பருவம்,சிறுபறை பருவம் சிறுதேர்பருவம் ஆகிய மூன்றும் உரியவை.இவை எல்லாமே இளமை கொஞ்சும் பருவங்கள்.
குழந்தைப் பருவம் மிகவும் அற்புதமானது,கள்ளம் கபடு தெரியாத பருவம்.என்றும் குழந்தையாக இருந்திருக்கலாமே என்று ஒவ்வொருவரும் நினைக்க வைக்கும் பருவம்.
பாரதியார் பாப்பா பாட்டில் பாடியது போல் மாலை முழுவதும் விளையாட்டு தான்.
என் இளமை பருவம் முழுவதும். மிகவும் இனிமையானது,அந்த பொழுதுகள் இனி திரும்பி வராது,ஆனால் நினைத்து மகிழலாம்.
எங்கள் வீடு எப்போதும் அண்ணனின் நண்பர்கள்,என் தோழிகள்,தம்பி,தங்கைகள் விளையாட்டு சகாக்கள் என்று நிறைந்து இருக்கும். வீட்டில் கேரம் போர்டு,டிரேடு,சீட்டு எல்லாம் விளையாடுவோம்.கோவையில் நாங்கள் இருந்த வீட்டுக்கு முன்பு பெரிய விளையாட்டு திடல் உண்டு.அதில் நெட் கட்டி ரிங்பால் விளையாடுவோம்.ஓட்ட பந்தையம்,உயரம் தாண்டுதல் போட்டி எல்லாம் வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு சேர்த்து வைத்த காசில் பரிசுகள் வாங்கி கொடுப்போம். சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டதும் அங்கு தான்.14 வீடுகள் உள்ள குடியிருப்பு எல்லோருக்கும் அவர்கள் வயதுக்கு ஏற்ற விளையாட்டு துணை கிடைத்தது.பெரியவர்களும் நாள் கிழமைகளில் தங்கள் வீட்டு பலகாரங்களை ஒருத்தருக்கு ஒருத்தர் கொடுத்து மகிழ்வார்கள்.(தீபாவளி பண்டிகை,கிறிஸ்துமஸ்,ரம்ஜான்)கோவையில் இருந்த 5வருடமும் பொற்காலம் தான்.
மாலை 6 மணி ஆகிவிட்டது என்று அம்மா கூப்பிடும் போது சிணுங்கலுடன் தான் வீட்டுக்குள் ஆஜர்.(இப்போதும் என் பேத்தியை பார்த்து என் மகள் கேட்கும் கேள்வி, விளையாட்டு முடித்து வீட்டுக்கு வா என்று கூப்பிட்டால் ஏன் மூஞ்சியை தூக்குகிறாய்? என்பதுதான்)
பள்ளியில் தோழிகள் அமராவதி,புவனேஸ்வரி,யோகேஸ்வரி,சரஸ்வதி,பிரேமா என்று அறுவர்
கூட்டணி வைத்திருந்தோம்.நாங்கள் எப்போதும் சேர்ந்தே விளையாடுவோம்,சாப்பிடுவோம்.
பள்ளியில் சுற்றுலா சென்றால் முதலில் பேர் கொடுப்பது இந்த அறுவர் கூட்டணி தான்.பள்ளி விழாக்களில் ஆடுவதற்கும், மாறு வேட போட்டியில் கலந்துகொள்வதற்கும் பேர் கொடுப்பதில் நான் தான் முதல். படிப்பில் முதல் இல்லை! பிரேமா வீடு பள்ளி பக்கத்தில் இருக்கும். அதனால் மதியம் உணவு முடிந்த வுடன் அவள் வீட்டுக்கு போய் அரிநெல்லிக்காய் பறித்து உண்போம்.கோவையில் பள்ளியின் வாசலில் மாங்காய் அழகாய் வெட்டி, மிளகாய்ப் பொடிதூவி விற்பார்கள். வாங்கி தோழிகள்எல்லோரும் கண்சிமிட்டாமல் உண்போம் (இப்போது முடியுமா) பிரேமாவின் வீட்டில் ஞாயிறு தோறும்” சின்மயாமிஷனின் பாலவிஹார்’நடை பெறும். பஜனைப் பாடல்கள்,திருப்புகழ்,பஜகோவிந்தம்,பகவத்கீதை எல்லாம் சொல்லித்தருவார்கள். என் அப்பாவும் அவள் அப்பாவும் சின்மயாமிஷன் நண்பர்கள். தோழிகள் சாப்பாடு கொண்டு வரவில்லை என்றால் நான் தனியாக சாப்பிடமாட்டேன். பிரேமா வீட்டிற்கு போய்விடுவேன். அங்கு அவள் அம்மா அவர்கள் வீட்டு உணவைத் தருவார்கள்.பிரேமாவின் பக்கத்து வீட்டில் பின்னணிப் பாடகி கோவை கமலா இருந்தார்கள். சுந்தராம்பாள் மாதிரி பாடுவார்கள்.நாங்கள் பிரேமா வீட்டுக் கொலுநிகழ்ச்சியின் போது பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்வோம்.
என் அண்ணன் சபர்பன் பள்ளியில் படித்தார்கள்.அவர்களுடன் ரெங்கராஜ் என்பவரும் படித்தார். பள்ளியின் அருகில் தான் அவர் வீடு. அண்ணனும் அவரும் பள்ளி விட்டதும் அரட்டை அடித்து விட்டு தான் வருவார்கள்.அவர் தான் பின்னாளில் சத்தியராஜ் என்ற நடிகரானார்.
என் இளமைப் பருவம் கோவையில் உள்ள ஐயப்பன் சமாஜம், ராமர்கோவில், பாலவிஹார் என்றுதான் கழிந்தது.ஐயப்பன் சமாஜத்தில் நடக்கும் பாட்டு கச்சேரி,சிவானந்தவிஜயலட்சுமியின்
தொடர் சொற்பொழிவுகள், சின்மையானந்தர்,தயானந்தர்,கிருபானந்தவாரியார்,பாலகிருஷ்ண சாஸ்திரிகள் ஆகியோரின் சொற்பொழிவுகள் என்று ஆன்மீகம் சார்ந்தே இருந்தது.
சிறியவயதிலே திருமணம் ஆகிவிட்டது.திருமணம் ஆனபின் பள்ளியில் சேர்ந்து படித்தேன்.நான் 11வது படிக்கும் போது துணை முதல்வரின் மனைவி துர்க்கா அவர்கள், 10வது படித்தார்.பிறகு நான் B.A பொருளாதாரம் படித்தேன்.மதுரை காமராஜர் திறந்த வெளி பல்கலை கழகத்தில்.புள்ளியியல் எடுக்கும் ஆசிரியர்,என்னிடம் மேடம்,மேடம் இந்த கணக்கை போட்டு காட்டுங்கள் என்று கேட்பார், நான் பெரிய மேதைஎன்று நினைத்து.புள்ளியியலில் கணக்குகள் அதிகம் வரும்.கணக்கிற்கும் எனக்கும் வெகுதூரம்.அதனால் புள்ளியியலும் எனக்கு தூரமாகிவிட்டது.முதலாம் ஆண்டு படிப்புடனே அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்.
பிறகு ஆங்கிலத் தட்டச்சு,தமிழ்த் தட்டச்சு,தையல் என்று படித்து ,பின் யோகாவில் ஆசிரியர் பயிற்சி என்று என் கற்றல் தொடர்கிறது.இப்போது என் குழந்தைகளின் மூலமாக கம்யூட்டர் பற்றி படிக்கும் எனது கல்வி தொடர்கிறது. அதனால் இன்றும் என் இளமைப்பருவம்
நீடித்துவருகிறது.
பதின்மப் பருவமே ஒருவருடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியான காலகட்டமாகும்.
வல்லி அக்கா அவர்கள் இளமைப் பருவத்தைப் பற்றி எழுதுங்கள் என்றார்கள். எழுதி விட்டேன்.
குழந்தைப் பருவம் மிகவும் அற்புதமானது,கள்ளம் கபடு தெரியாத பருவம்.என்றும் குழந்தையாக இருந்திருக்கலாமே என்று ஒவ்வொருவரும் நினைக்க வைக்கும் பருவம்.
பாரதியார் பாப்பா பாட்டில் பாடியது போல் மாலை முழுவதும் விளையாட்டு தான்.
என் இளமை பருவம் முழுவதும். மிகவும் இனிமையானது,அந்த பொழுதுகள் இனி திரும்பி வராது,ஆனால் நினைத்து மகிழலாம்.
எங்கள் வீடு எப்போதும் அண்ணனின் நண்பர்கள்,என் தோழிகள்,தம்பி,தங்கைகள் விளையாட்டு சகாக்கள் என்று நிறைந்து இருக்கும். வீட்டில் கேரம் போர்டு,டிரேடு,சீட்டு எல்லாம் விளையாடுவோம்.கோவையில் நாங்கள் இருந்த வீட்டுக்கு முன்பு பெரிய விளையாட்டு திடல் உண்டு.அதில் நெட் கட்டி ரிங்பால் விளையாடுவோம்.ஓட்ட பந்தையம்,உயரம் தாண்டுதல் போட்டி எல்லாம் வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு சேர்த்து வைத்த காசில் பரிசுகள் வாங்கி கொடுப்போம். சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டதும் அங்கு தான்.14 வீடுகள் உள்ள குடியிருப்பு எல்லோருக்கும் அவர்கள் வயதுக்கு ஏற்ற விளையாட்டு துணை கிடைத்தது.பெரியவர்களும் நாள் கிழமைகளில் தங்கள் வீட்டு பலகாரங்களை ஒருத்தருக்கு ஒருத்தர் கொடுத்து மகிழ்வார்கள்.(தீபாவளி பண்டிகை,கிறிஸ்துமஸ்,ரம்ஜான்)கோவையில் இருந்த 5வருடமும் பொற்காலம் தான்.
மாலை 6 மணி ஆகிவிட்டது என்று அம்மா கூப்பிடும் போது சிணுங்கலுடன் தான் வீட்டுக்குள் ஆஜர்.(இப்போதும் என் பேத்தியை பார்த்து என் மகள் கேட்கும் கேள்வி, விளையாட்டு முடித்து வீட்டுக்கு வா என்று கூப்பிட்டால் ஏன் மூஞ்சியை தூக்குகிறாய்? என்பதுதான்)
பள்ளியில் தோழிகள் அமராவதி,புவனேஸ்வரி,யோகேஸ்வரி,சரஸ்வதி,பிரேமா என்று அறுவர்
கூட்டணி வைத்திருந்தோம்.நாங்கள் எப்போதும் சேர்ந்தே விளையாடுவோம்,சாப்பிடுவோம்.
பள்ளியில் சுற்றுலா சென்றால் முதலில் பேர் கொடுப்பது இந்த அறுவர் கூட்டணி தான்.பள்ளி விழாக்களில் ஆடுவதற்கும், மாறு வேட போட்டியில் கலந்துகொள்வதற்கும் பேர் கொடுப்பதில் நான் தான் முதல். படிப்பில் முதல் இல்லை! பிரேமா வீடு பள்ளி பக்கத்தில் இருக்கும். அதனால் மதியம் உணவு முடிந்த வுடன் அவள் வீட்டுக்கு போய் அரிநெல்லிக்காய் பறித்து உண்போம்.கோவையில் பள்ளியின் வாசலில் மாங்காய் அழகாய் வெட்டி, மிளகாய்ப் பொடிதூவி விற்பார்கள். வாங்கி தோழிகள்எல்லோரும் கண்சிமிட்டாமல் உண்போம் (இப்போது முடியுமா) பிரேமாவின் வீட்டில் ஞாயிறு தோறும்” சின்மயாமிஷனின் பாலவிஹார்’நடை பெறும். பஜனைப் பாடல்கள்,திருப்புகழ்,பஜகோவிந்தம்,பகவத்கீதை எல்லாம் சொல்லித்தருவார்கள். என் அப்பாவும் அவள் அப்பாவும் சின்மயாமிஷன் நண்பர்கள். தோழிகள் சாப்பாடு கொண்டு வரவில்லை என்றால் நான் தனியாக சாப்பிடமாட்டேன். பிரேமா வீட்டிற்கு போய்விடுவேன். அங்கு அவள் அம்மா அவர்கள் வீட்டு உணவைத் தருவார்கள்.பிரேமாவின் பக்கத்து வீட்டில் பின்னணிப் பாடகி கோவை கமலா இருந்தார்கள். சுந்தராம்பாள் மாதிரி பாடுவார்கள்.நாங்கள் பிரேமா வீட்டுக் கொலுநிகழ்ச்சியின் போது பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்வோம்.
என் அண்ணன் சபர்பன் பள்ளியில் படித்தார்கள்.அவர்களுடன் ரெங்கராஜ் என்பவரும் படித்தார். பள்ளியின் அருகில் தான் அவர் வீடு. அண்ணனும் அவரும் பள்ளி விட்டதும் அரட்டை அடித்து விட்டு தான் வருவார்கள்.அவர் தான் பின்னாளில் சத்தியராஜ் என்ற நடிகரானார்.
என் இளமைப் பருவம் கோவையில் உள்ள ஐயப்பன் சமாஜம், ராமர்கோவில், பாலவிஹார் என்றுதான் கழிந்தது.ஐயப்பன் சமாஜத்தில் நடக்கும் பாட்டு கச்சேரி,சிவானந்தவிஜயலட்சுமியின்
தொடர் சொற்பொழிவுகள், சின்மையானந்தர்,தயானந்தர்,கிருபானந்தவாரியார்,பாலகிருஷ்ண சாஸ்திரிகள் ஆகியோரின் சொற்பொழிவுகள் என்று ஆன்மீகம் சார்ந்தே இருந்தது.
சிறியவயதிலே திருமணம் ஆகிவிட்டது.திருமணம் ஆனபின் பள்ளியில் சேர்ந்து படித்தேன்.நான் 11வது படிக்கும் போது துணை முதல்வரின் மனைவி துர்க்கா அவர்கள், 10வது படித்தார்.பிறகு நான் B.A பொருளாதாரம் படித்தேன்.மதுரை காமராஜர் திறந்த வெளி பல்கலை கழகத்தில்.புள்ளியியல் எடுக்கும் ஆசிரியர்,என்னிடம் மேடம்,மேடம் இந்த கணக்கை போட்டு காட்டுங்கள் என்று கேட்பார், நான் பெரிய மேதைஎன்று நினைத்து.புள்ளியியலில் கணக்குகள் அதிகம் வரும்.கணக்கிற்கும் எனக்கும் வெகுதூரம்.அதனால் புள்ளியியலும் எனக்கு தூரமாகிவிட்டது.முதலாம் ஆண்டு படிப்புடனே அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்.
பிறகு ஆங்கிலத் தட்டச்சு,தமிழ்த் தட்டச்சு,தையல் என்று படித்து ,பின் யோகாவில் ஆசிரியர் பயிற்சி என்று என் கற்றல் தொடர்கிறது.இப்போது என் குழந்தைகளின் மூலமாக கம்யூட்டர் பற்றி படிக்கும் எனது கல்வி தொடர்கிறது. அதனால் இன்றும் என் இளமைப்பருவம்
நீடித்துவருகிறது.
பதின்மப் பருவமே ஒருவருடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியான காலகட்டமாகும்.
வல்லி அக்கா அவர்கள் இளமைப் பருவத்தைப் பற்றி எழுதுங்கள் என்றார்கள். எழுதி விட்டேன்.
திங்கள், 8 பிப்ரவரி, 2010
அம்மாவின் பொக்கிஷங்கள்

என் அம்மா பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்து இருந்த நிறைய பாடல்கள்,கடவுள் பாடல்,தேசபக்தி பாடல்கள் எல்லாம் அவர்கள் கைப்பட எழுதிய நோட்டு மூலம் கிடைத்தது.
கிழிந்து போய் இருக்கிறது. தீபா கோவிந்த் ஒரு முறை என்னிடம் //அம்மா நீங்கள் ஸ்கூல்லே படிச்ச காலத்திலே நோட்டுப் புத்தகத்திலே கிறுக்கினதை,இனிமேல் வலைப் பதிவுகள் மூலமாக பதியுங்கள் இது கிழியாது,செதிலரிக்காது எப்பவுமே பர்மனெணட்//
என்றார்கள். நான் என் அம்மா எழுதி வைத்து இருந்ததை பதிவு செய்கிறேன். யார் எழுதிய பாடல்கள் என்று தெரியவில்லை நன்றாக இருந்தது,அதனால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
தாயே
-------
என்னைப் பெற்ற என் தாயே
இனிய பண்டம் தருவாயே
சொன்ன தெல்லாம் கேட்பேனே
சோம்பலின்றிக் கற்பேனே
கற்றதெல்லாம் சொல்வேனே
கடவுள் பாதம் பணிவேனே
குற்றம் ஒன்றும் செய்யேனே
கொஞ்சி முத்தம் தருவாயே
தாயைப்பற்றி குழந்தை பாடும் பாடலை கற்பனை செய்து பாருங்களேன்,அம்மாவை கொஞ்சி
அம்மாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தம் கேட்கும் உங்கள் குழந்தையின் முகம் தெரியவில்லை!!
சைக்கிள் பாட்டு
---------------
தங்கையே பார் தங்கையே பார்
சைக்கிள் வண்டி இதுவே பார்
சிங்காரமான வண்டி
சீமையிலே செய்தவண்டி
இரும்பாலே செய்த வண்டி
எங்கெங்கும் ஓடும் வண்டி
மாடில்லை குதிரையில்லை
மாய மதாய்ப் பறந்திடும் பார்
தீயுமில்லை புகையுமில்லை
தீவிரமாய்ச் சென்றிடும் பார்
காலாலே மிதிப்பதால்
கடும் விசையில் போயிடும்பார்
ஒன்றன் பின் ஒன்றாக
உருளும் பைதாக்களை பார்
அக்காளும் தங்கையும் போல்
அவை போகும் அழகை பார்.
முதல் முதலில் சைக்கிள் புதிதாக வாங்கி அதை ஆசை தீரப் பார்த்து, தன் தங்கையிடம் அதைப் பற்றி சொல்லி, நம் இருவரைப் போல் ஒற்றுமையாய் போகும் அழகைப் பார் என்று
சொல்லும் அக்காள் தெரிகிறாள்,இந்த பாடலில்.
முதற் சிகிட்சை
-----------------
வா வா முருகா! ஓடிவா-நம்
வகுப்பாசிரியரை அழைத்துவா
அப்துல் மயங்கி விழுந்திட்டான் -அவன்
அண்ணன் தம்பி நாம் தாண்டா
தண்ணீர் மொண்டு வா தாசு!
தம்பி மோசை!நீ வீசு
சுற்றும் வளைத்து நில்லாதீர்-இங்கே
தூய காற்றைத் தடையாதீர்
முகத்தில் நீரை தெளித் தங்கம்!-குடிக்க
முடியுமானால் கொடு கொஞ்சம்
ஆகா!அப்துல் பிழைத்திட்டான்
அதோ பார் கண்ணை விழித்திட்டான்
ஆசிரியர் பதறி வருகின்றார்-அவர்
அச்சம் அகற்றி மகிழ்வோம் நாம்.
பள்ளிக் கூடத்தில் முதல் உதவி செய்யும் முறை,முருகா,அப்துல்,மோசை,தாசு,என்று எல்லாமத குழ்ந்தை பெயர்களை கூப்பிட்டு ,அண்ணன் தம்பி நாம் தாண்டா என்று மத ஒற்றுமை பற்றியும்,விளக்கப் படுகிறது.பொறுப்புடன் செயல் படுவது பெண் தான் என்பதை விளக்க தங்கம் என்ற பெண்ணை அழைத்து முகத்தில் நீரை தெளி,குடிக்க கொடு என்று சொல்வது பேணுவது பெண் தான் என்பதையும்,அச்சத்துடன் வரும் ஆசிரியரை நாங்களே முதல் உதவி செய்து விட்டோம் என்று மகிழ்விக்கும் மகிழ்ச்சி பொரு ந்திய மாணவர்கள் முகத்தையும் இந்தபாடல் நம் கண் முன்னே கொண்டு வருகிறது.
கப்பல்
------
கப்பல் துறையில் வந்தது
கடலில் நாளை சென்றிடும்
அப்பா கூட ஏறவே
ஆசை கொண்டு நிற்கிறேன்
அறைகள் அதிலே உண்டுமாம்
அழகுப் பண்டம் கிடைக்குமாம்
நிறையக் கூட்டம் இருக்குமாம்
நினைத்த இடங்கள் செல்லவே
பட்டணம் போல இருக்குமாம்
பல இனத்து மக்களும்
இட்டமாயிதில் சென்று தான்
ஏனை நாட்டின் சரக்கினை
அந்த நாட்டின் பொருளெல்லாம்
அதிகம் இங்கே இறக்குமாம்
ஊர்கள் யாவும் பார்க்கலாம்
பாரில் இந்தக் கப்பல்கள்
பயனைப் பெருக்க வந்ததாம்.
கப்பலைப் பற்றி அப்பா சொன்னதை நமக்கு சொல்லி,கப்பலில் வாணிபம் செய்வதை விளக்கி
கப்பல் ஓட்டிய வ.உ. சிதம்பரனாரை நம்மை நினைக்க வைக்கிறது இந்த பாடல்.//அடி மேலைக் கடல் முழுதுங் கப்பல்விடுவோம்.// என்ற பாரதியார் பாடல் நினைவுக்கு வரும்.
எனக்கு என் அப்பாவுடன் தூத்துக்குடியில் ’சார்லஸ்’ என்ற பெரிய கப்பலைப் பார்த்த நினைவு வருகிறது.பின் என் மனத்திரையில் அண்ணனுடன் ராமேஸ்வரத்தில் கப்பலை என் குழந்தைகளுடன் பார்த்தது ,மலரும் நினைவுகளாய் மலருகிறது.
அலை
--------
கடலுடுத்த நிலமகளின்
காற் சிலம்பாம் அலையே!
படமெடுத்து வருவதற்கு
படபடப்பதேனோ?
முத்தெறிந்து விளையாடி
முட்டியோடும் அலையே
பித்தனை போல் பின்னும் பின்னும்
பிதற்றி நிற்ப தேனோ?
ஞாயிறு கடலில்- நின்று
நன்றாய் எழுவது பார்
தாமரை கங்கை உளம்-மகிழ்ந்து
தண்ணெனும் தேன் சுமந்து
காமரப் பாடகரின் -இன்னிசை
கண்டு விருந்திடல் பார்
முற்றம் தெளித்திடலாம் -அதை
கற்ற பல கோலம்- வரைந்து
கண்டு களித்திடலாம்
காலைக் கடன் முடித்தே-இறைவன்
காலைப் பணிந்திடலாம்
வேலைகளிற் புகலாம் உறக்கம்
விட்டே எழுந்திரம்மா!
அலையின் அழகையும்,கடலில் தோன்றும் கதிரவனின் அழகையும்,காலையில் இறைவனை
பணிந்து கடமையை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் இப் பாடல் அழகாய் விளக்குகிறது.
அம்மா எழுதிய பாடல்கள் இப்போதும் படிக்க படிக்க இனிக்கிறது.
வெள்ளி, 5 பிப்ரவரி, 2010
வாழ்க்கைத் துணைநலம்
//வாழ்க்கைத் துணை-இறைவன் கொடுத்த வரமே:
தனக்குக் கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி தம்பதியர் யாருக்கும் குறையிருக்கத் தேவையில்லை.”பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டார்கள்,பிடாரியைக் கட்டி வைத்து விட்டாகள்”
என்பனவெல்லாம் அறியாமையே. அவரவர்களுடைய அடிமனமே வாழ்க்கைத துணைவரைத் தேர்ந்தெடுக்கிறது. அவரவர்கள் மனத்தின் தரத்தைக் கொண்டு அவர்களுக்கு வாழ்நாளில் என்னென்ன இன்பம்,துன்பம் வர வேண்டுமோ அதற்குச் சரிபங்கேற்க ஒரே ஒருவரால் தான் முடியும்.அந்த ஒருவரை அவரவர் அடிமனமே தேர்ந்தெடுக்க அது பல் பேர் மனதில் பிரதிபலிக்க,மற்றவர்கள் வெறும் கருவிகளாகத் திருமணத்தை நடத்திவைப்பார்கள்.இதையே”
’மனம்போல் மாங்கல்யம்’ என்றும் ‘திருமணம் சொர்க்கத்தில் நிச்சியிக்கப்ப்டுகிறது’என்றும்
கூறுவர்.சொர்க்கம் என்பது சுவர்+அகம்.’சுவரென்றால் உயிர்;’அகம்’என்றால் உள்ளம்,அடிமனம்.இந்த தத்துவத்தைப் புரிந்து கொண்டு வாழ்க்கைத் துணைவருக்குத் தகுந்த மதிப்பளித்து வாழ வேண்டும். தமிழர்கள் உயர்ந்த பண்பாட்டிலே வாழக் கூடியவர்களாக இருப்பதால்தான் துணைவியைத் ‘தேவி’என்று அழைக்கும் வழக்கம் இங்கே,தமிழ்நாட்டிலே ஏற்பட்டது.’தெய்வி’என்ற வார்த்தையே மருவி’தேவி’என ஆயிற்று. தெய்வமே என்று அழைப்பதற்குப் பதிலாக தெய்வி;அதே போல் வாழ்க்கைத்துணைவரை
‘தெய்வா’என்பது ‘தேவா’என்று ஆயிற்று. இதை தமிழ் நூல்களில் பார்க்கிறோம்.
இருவர் இணைய சமுதாய ஒப்புதல்:
மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஒத்துக்கொள்ளவேண்டும். அதாவது பொருத்தம் இருக்க வேண்டும்.அதன் பிறகு மணமக்களின் பெற்றோர்கள் அனுமதி கொடுக்க வேண்டும்.ஏன்?இது வரைக்கும் அவர்களை வளர்த்து ஆளாக்கி வேண்டியவற்றை யெல்லாம் செய்து வந்ததால் அவர்களுடைய நன்மையைக் கருதக் கூடியவர்கள் பெற்றோர்கள் அல்லவா? ஆகையால் பெற்றோர்கள் ஒப்புக்கொள்ள் வேண்டும்.அடுத்துச் சமுதாயம் சாட்சியாக அமைய வேண்டும்.இந்த மூன்றும் திருமணச்சடங்குகளில் உள்ள முக்கியமான் அம்சமாகும்.இன்றைய சமுதாய அமைப்பினிலே பல்வேறு விதமான திருமண முறைகள் இருப்பினும் மணமக்கள் திருமண மேடையில் சுற்றி வரும்போது சமுதாயத்திலே இன்னார் பெண்,இன்னார் பிள்ளை,இவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக பார்த்துக் கொள்கிறார்கள்.அதற்குப்பின் பெற்றோருக்கு பாதபூஜை செய்யும் சடங்கு மூலமாகப் பெற்றோர்கள் அனுமதி அளித்தார்கள் என்று அர்த்தம். பிறகு இரண்டு பேரும் ஒருவரை யொருவர் ஒத்துக்கொண்டார்கள் என்று அர்த்தம்.ரிஜிஸ்தர் ஆபீஸில் கூடப் பதிவுத் திருமணம் எனற முறையில் படிக்கப்ப்டுகிறது. அதாவது இன்னார் பிள்ளையை நான் கணவனாக ஏற்றுக்கொள்கிறேன் என்று பெண் படிக்கவும், அதேபோல் மாப்பிள்ளையானவன் இன்னார் மகளை நான் மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன் என்று படித்துவிட்டுப் பின் இருவரும் கையெழுத்துப் போடுகிறார்கள்.இதற்கு எல்லாம் ஈடாகச் சடங்குளிலேயே வைத்துள்ளார்கள.//
இவ்வாறு அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி திருமணத்தைப் பற்றி சொல்கிறார்.
வாழ்க்கைத் துணை இறைவன் கொடுத்த வரமாகவும் ,சமுதாய ஒப்புதலுடனும், எனக்கு பிப்ரவரி 7ம் தேதி திருமணம் நடந்தது.
தனக்குக் கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி தம்பதியர் யாருக்கும் குறையிருக்கத் தேவையில்லை.”பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டார்கள்,பிடாரியைக் கட்டி வைத்து விட்டாகள்”
என்பனவெல்லாம் அறியாமையே. அவரவர்களுடைய அடிமனமே வாழ்க்கைத துணைவரைத் தேர்ந்தெடுக்கிறது. அவரவர்கள் மனத்தின் தரத்தைக் கொண்டு அவர்களுக்கு வாழ்நாளில் என்னென்ன இன்பம்,துன்பம் வர வேண்டுமோ அதற்குச் சரிபங்கேற்க ஒரே ஒருவரால் தான் முடியும்.அந்த ஒருவரை அவரவர் அடிமனமே தேர்ந்தெடுக்க அது பல் பேர் மனதில் பிரதிபலிக்க,மற்றவர்கள் வெறும் கருவிகளாகத் திருமணத்தை நடத்திவைப்பார்கள்.இதையே”
’மனம்போல் மாங்கல்யம்’ என்றும் ‘திருமணம் சொர்க்கத்தில் நிச்சியிக்கப்ப்டுகிறது’என்றும்
கூறுவர்.சொர்க்கம் என்பது சுவர்+அகம்.’சுவரென்றால் உயிர்;’அகம்’என்றால் உள்ளம்,அடிமனம்.இந்த தத்துவத்தைப் புரிந்து கொண்டு வாழ்க்கைத் துணைவருக்குத் தகுந்த மதிப்பளித்து வாழ வேண்டும். தமிழர்கள் உயர்ந்த பண்பாட்டிலே வாழக் கூடியவர்களாக இருப்பதால்தான் துணைவியைத் ‘தேவி’என்று அழைக்கும் வழக்கம் இங்கே,தமிழ்நாட்டிலே ஏற்பட்டது.’தெய்வி’என்ற வார்த்தையே மருவி’தேவி’என ஆயிற்று. தெய்வமே என்று அழைப்பதற்குப் பதிலாக தெய்வி;அதே போல் வாழ்க்கைத்துணைவரை
‘தெய்வா’என்பது ‘தேவா’என்று ஆயிற்று. இதை தமிழ் நூல்களில் பார்க்கிறோம்.
இருவர் இணைய சமுதாய ஒப்புதல்:
மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஒத்துக்கொள்ளவேண்டும். அதாவது பொருத்தம் இருக்க வேண்டும்.அதன் பிறகு மணமக்களின் பெற்றோர்கள் அனுமதி கொடுக்க வேண்டும்.ஏன்?இது வரைக்கும் அவர்களை வளர்த்து ஆளாக்கி வேண்டியவற்றை யெல்லாம் செய்து வந்ததால் அவர்களுடைய நன்மையைக் கருதக் கூடியவர்கள் பெற்றோர்கள் அல்லவா? ஆகையால் பெற்றோர்கள் ஒப்புக்கொள்ள் வேண்டும்.அடுத்துச் சமுதாயம் சாட்சியாக அமைய வேண்டும்.இந்த மூன்றும் திருமணச்சடங்குகளில் உள்ள முக்கியமான் அம்சமாகும்.இன்றைய சமுதாய அமைப்பினிலே பல்வேறு விதமான திருமண முறைகள் இருப்பினும் மணமக்கள் திருமண மேடையில் சுற்றி வரும்போது சமுதாயத்திலே இன்னார் பெண்,இன்னார் பிள்ளை,இவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக பார்த்துக் கொள்கிறார்கள்.அதற்குப்பின் பெற்றோருக்கு பாதபூஜை செய்யும் சடங்கு மூலமாகப் பெற்றோர்கள் அனுமதி அளித்தார்கள் என்று அர்த்தம். பிறகு இரண்டு பேரும் ஒருவரை யொருவர் ஒத்துக்கொண்டார்கள் என்று அர்த்தம்.ரிஜிஸ்தர் ஆபீஸில் கூடப் பதிவுத் திருமணம் எனற முறையில் படிக்கப்ப்டுகிறது. அதாவது இன்னார் பிள்ளையை நான் கணவனாக ஏற்றுக்கொள்கிறேன் என்று பெண் படிக்கவும், அதேபோல் மாப்பிள்ளையானவன் இன்னார் மகளை நான் மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன் என்று படித்துவிட்டுப் பின் இருவரும் கையெழுத்துப் போடுகிறார்கள்.இதற்கு எல்லாம் ஈடாகச் சடங்குளிலேயே வைத்துள்ளார்கள.//
இவ்வாறு அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி திருமணத்தைப் பற்றி சொல்கிறார்.
வாழ்க்கைத் துணை இறைவன் கொடுத்த வரமாகவும் ,சமுதாய ஒப்புதலுடனும், எனக்கு பிப்ரவரி 7ம் தேதி திருமணம் நடந்தது.
வியாழன், 28 ஜனவரி, 2010
நலம் ,நலம் அறிய ஆவல்
நான் இங்கு சுகமே நீஅங்கு சுகமா?
கடிதத்தை,’மடல்,திருமுகம்,முடங்கல்,ஓலை’எனறெல்லாம் அக்காலத்தில் குறிப்பிட்டார்கள் .
இலை என்ற பத்திரத்திலும்,பனைஓலையிலும் கடிதங்கள் வரைவார்கள்.ந.மு வேங்கடசாமி நாட்டார் முடங்கல் பற்றி எழுதியது:// பல்லாயிர ஆண்டுகளாகப் பனுவல்களும்,ஆவண்ங்களும்,பிறவும்,இந்நாட்டிலே பனையோலையிற்
றீட்டப் பெற்றுவந்தன. ஓரிடத்திலிருந்து பிறிதோரிடத்திற்குச் செய்தி தெரிவிக்க வேண்டின் அதனைப் பனையோலையில் எழுதிச் சுருள் செய்து, காப்பிட்டு ஏவலாளர் முதலாயினார் கைகொடுத்துச் செல்லவிடுவது வழக்கம். அதனை ஓலையென்றும்,முடங்கலென்றும் கூறுவர். ஓலையில் எழுதப்படுதலின் ஓலையென்பது பெயராயிற்று;இலை என்னும் பொருளுடைய பத்திரத்தில் வரையப்படுதலின் பத்திரமென்பது பெயராயினாற்போல,பிற்காலத்தே ஓலையென்பது மங்கலமல்லாத செய்தி வரைந்ததாகப் பொருள் படுவதாயிற்று. செய்தி வரைந்த ஓலையை வளைத்துச் சுருள் செய்தலின்,அது முடங்கல் எனவும் பெயர் பெறும். முடங்கல்-வளைதல். முடங்கல் வரைதலைப்பற்றிய வேறு சில செய்திகளும் பின் காட்டுவனவற்றால் அறியலாகும்.
சிலப்பதிகாரம்,புறஞ்சேரியிறுத்த காதையில்,மாதவி தீட்டிய முடங்கலொன்றைக் கோவலன் பெற்ற வரலாறு காணப்படுகிறது. மாதவி திருமுகமெழுதக் கொண்ட கருவிகள் :சண்பகம் மாதவி,பச்சிலை,பித்திகை,மல்லிகை,செங்கழுநீர் என்பவற்றால் நெருக்கத தொடுதத மாலையின் இடையே கட்டிய, முதிர்ந்த தாழம்பூவின வெள்ளியதோடும் ,அதற்கு அயலதாகிய
பித்திகையின் முகையும்,செம்பஞ்சிக் குழம்பும் ஆகும்.பித்திகை அரும்பை எழுது கோலாகக் கொண்டு ,செம்பஞ்சிக் குழம்பிலே தோய்த்துத் தாழையின் வெண்டோட்டில் எழுதினளென்க.//
சைவசமயத்தில் சிவபெருமான் பாணபத்திரரின் வறுமை தீர்க்க சேர அரசனுக்குக் கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது.அப்பாடல் சைவத்திருமுறைகளில் காணப்படுகிறது.
சுவாமி சிவானந்தா எழுதிய கடிதங்கள் தத்துவங்களை விளக்குகின்றன. அக்கடிதங்களின்
தொகுப்பு,epistles of sivananda என்ற தலைப்பில் நூலாக வெளிவந்திருக்கிறது.
சிறந்த கருத்துக்களைக்கூற டாக்டர் மு.வ. அவர்கள் கடிதவடிவத்தை எடுத்துக் கொண்டு
தம்பிக்கு, தங்கைக்கு என்று புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
நேரு,காந்தி போன்ற தலைவர்களின் கடிதங்கள் இலக்கியமாகவும்,வரலாறாகவும் அமைந்தன என்பார்கள்.மெக்காலே எழுதிய கடிதங்கள் ஆங்கில இலக்கியமாகக் கருதப்படுகின்றன.
சிலப்பதிகார காலத்திலிருந்து கொஞ்சகால முன்பு வரை கடிதம் எழுதும் பழக்கம் நன்றாக
இருந்து வந்தது.தொலைபேசி வந்தபிறகு கொஞ்சம் குறைந்தது.கைபேசி வந்தபின் மிக,மிக குறைந்து விட்டது.
அன்புள்ள என்று ஆரம்பித்து ,பேரோ அல்லது கண்ணே மணியே என்றோ ஏதோ எழுதி, இங்கு நாங்கள் எல்லோரும் நலம் அங்கு எல்லோரும் நலமா?நலம் நலம் அறிய ஆவல் என்று
அந்த காலத்தில் கடிதம் இப்படித்தான் நலம் விசாரித்து எழுதிக் கொள்வார்கள். இங்கு மழை பெய்கிறது,அங்கு மழை உண்டா? மாடு கண்ணு போட்டுதா,வெள்ளாமை எப்படி இருக்கு? என்று ஊர் நடப்பு,நாட்டு நடப்பு எல்லாம் கேட்டுக் கொள்வார்கள்.
பழைய கடிதத்தை எடுத்துப்பார்த்தால் அந்த அந்த காலக்கட்டங்களின் நிலை புரியும்.
ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டாலும் நலமா என்றும் செளக்கியமா என்றும் நல்லா இருக்கிறீர்களா? என்றும் கேட்டுக் கொள்வார்கள். விஞ்ஞானம் வளர்ச்சி பெற்றதில் நாம் இழந்தவை ஏராளம்,அதில் கடிதப்போக்குவரத்தும் ஒன்று. திருவள்ளுவர்:
//அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லைபொருள் இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.//
என்று சொன்னார் ,ஆனால் இப்போதைய குறள்:
’செல் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை
மடிக்கணிணி இல்லாருக்கு எவ்வுலகும் இல்லை.” என்றாகிவிட்டது
யாருக்கும் கடிதம் எழுதவோ ,அதை ஆசை ஆசையாய் படிக்கவோ நேரம் இல்லை.
போகிற போக்கில் செல்லில் பேசிக்கொள்வதுதான்! வண்டி ஓட்டிக் கொண்டு ,அப்படிப் பேசுவதால் நடக்கும் விபரீதங்கள் எத்தனை எத்தனை?
வாழ்க்கையில் நிறைய நல்ல விஷயங்களை இழந்தோம்.
திருமணம் ஆன பின் அப்பா அம்மாவிடமிருந்து எனக்குக் கடிதம் வந்தால் குதுகலம்.
அம்மா சமையல் குறிப்பு,கோலம், பூஜை முறைகள் எல்லாம் எழுதி அனுப்புவார்கள்.
குழந்தைப் பேறுக்கு அம்மாவின் வீட்டுக்குப்போன போது, கணவர் என் நலம்,குழந்தை நலம்
கேட்டு எழுதும் போது பெருமிதமான குதுகலம்.குழந்தை வளர்ப்பு எல்லாம் அக்கா அம்மாவிடம் கடிதத்தில்கேட்டுத் தான் .அண்ணன் அக்கா எல்லாம் கடிதம் எழுதும் போது
புதிதாக என்ன சினிமா பார்த்தாய்? புதிதாக என்ன கோவில் போனாய் என்று கேட்பார்கள்
தங்கை ,தம்பி அம்மாவிடம் பள்ளி டூர் போக சிபாரிசு செய்யச் சொல்லி எழுதுவார்கள்.
தோழிகள் எப்போது இனி சந்தித்து கொள்வது எப்போது என்றெல்லாம் கேட்டு எழுதுவார்கள்.எனது மாமனார் வாராவாரம் கடிதம் எழுதுவார்கள்.அவர்கள் எங்களை ஒவ்வொரு பண்டிகைக்கும் வந்து சேருங்கள் என்று எழுதுவார்கள். வாராவாரம் கடிதம் எழுதவில்லையென்றால் உன்னிடமிருந்து கடிதம் இல்லையே அம்மா கவலைப்படுகிறாள்
என்று என் கணவருக்குக் கடிதம் வரும்.என் அப்பாவிடமிருந்தும் நாலுநாளைக்கு ஒருதடவை கடிதம் எழுது என்று கடிதம் வரும்.சின்மையானந்த்ர் நடத்திய தொடர் சொற்பொழிவு விபரம் எல்லாம் அதில் இருக்கும்.
என் மகள் திருமணமாகி இரண்டு கடிதங்கள் எழுதியிருப்பாள்,அப்புறம் எல்லாம் போன் தான்.
மகன் வேலைக்குப் போன புதிதில் ஒரு கடிதம் எழுதினான் அப்புறம் போன்.இப்போது
இண்டர் நெட் சாட் தான்.
மின்னஞ்சலில் கடிதங்களை எழுதித் தாள்களை மிச்சப்படுத்தி மரங்களைப் பாதுகாத்து மழைவளம் பெறுவோம் என்பது இப்போதைய சுலோகம் .
கடிதம் எழுதச் சோம்பல் படும் நமக்கு இது ஒரு நல்ல கருத்தாகவே படுகிறது.
எப்படி இருந்தாலும் ஏதாவதொரு வடிவில் கடிதங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும்
இல்லையா?
வாழ்க வளமுடன்!
கடிதத்தை,’மடல்,திருமுகம்,முடங்கல்,ஓலை’எனறெல்லாம் அக்காலத்தில் குறிப்பிட்டார்கள் .
இலை என்ற பத்திரத்திலும்,பனைஓலையிலும் கடிதங்கள் வரைவார்கள்.ந.மு வேங்கடசாமி நாட்டார் முடங்கல் பற்றி எழுதியது:// பல்லாயிர ஆண்டுகளாகப் பனுவல்களும்,ஆவண்ங்களும்,பிறவும்,இந்நாட்டிலே பனையோலையிற்
றீட்டப் பெற்றுவந்தன. ஓரிடத்திலிருந்து பிறிதோரிடத்திற்குச் செய்தி தெரிவிக்க வேண்டின் அதனைப் பனையோலையில் எழுதிச் சுருள் செய்து, காப்பிட்டு ஏவலாளர் முதலாயினார் கைகொடுத்துச் செல்லவிடுவது வழக்கம். அதனை ஓலையென்றும்,முடங்கலென்றும் கூறுவர். ஓலையில் எழுதப்படுதலின் ஓலையென்பது பெயராயிற்று;இலை என்னும் பொருளுடைய பத்திரத்தில் வரையப்படுதலின் பத்திரமென்பது பெயராயினாற்போல,பிற்காலத்தே ஓலையென்பது மங்கலமல்லாத செய்தி வரைந்ததாகப் பொருள் படுவதாயிற்று. செய்தி வரைந்த ஓலையை வளைத்துச் சுருள் செய்தலின்,அது முடங்கல் எனவும் பெயர் பெறும். முடங்கல்-வளைதல். முடங்கல் வரைதலைப்பற்றிய வேறு சில செய்திகளும் பின் காட்டுவனவற்றால் அறியலாகும்.
சிலப்பதிகாரம்,புறஞ்சேரியிறுத்த காதையில்,மாதவி தீட்டிய முடங்கலொன்றைக் கோவலன் பெற்ற வரலாறு காணப்படுகிறது. மாதவி திருமுகமெழுதக் கொண்ட கருவிகள் :சண்பகம் மாதவி,பச்சிலை,பித்திகை,மல்லிகை,செங்கழுநீர் என்பவற்றால் நெருக்கத தொடுதத மாலையின் இடையே கட்டிய, முதிர்ந்த தாழம்பூவின வெள்ளியதோடும் ,அதற்கு அயலதாகிய
பித்திகையின் முகையும்,செம்பஞ்சிக் குழம்பும் ஆகும்.பித்திகை அரும்பை எழுது கோலாகக் கொண்டு ,செம்பஞ்சிக் குழம்பிலே தோய்த்துத் தாழையின் வெண்டோட்டில் எழுதினளென்க.//
சைவசமயத்தில் சிவபெருமான் பாணபத்திரரின் வறுமை தீர்க்க சேர அரசனுக்குக் கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது.அப்பாடல் சைவத்திருமுறைகளில் காணப்படுகிறது.
சுவாமி சிவானந்தா எழுதிய கடிதங்கள் தத்துவங்களை விளக்குகின்றன. அக்கடிதங்களின்
தொகுப்பு,epistles of sivananda என்ற தலைப்பில் நூலாக வெளிவந்திருக்கிறது.
சிறந்த கருத்துக்களைக்கூற டாக்டர் மு.வ. அவர்கள் கடிதவடிவத்தை எடுத்துக் கொண்டு
தம்பிக்கு, தங்கைக்கு என்று புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
நேரு,காந்தி போன்ற தலைவர்களின் கடிதங்கள் இலக்கியமாகவும்,வரலாறாகவும் அமைந்தன என்பார்கள்.மெக்காலே எழுதிய கடிதங்கள் ஆங்கில இலக்கியமாகக் கருதப்படுகின்றன.
சிலப்பதிகார காலத்திலிருந்து கொஞ்சகால முன்பு வரை கடிதம் எழுதும் பழக்கம் நன்றாக
இருந்து வந்தது.தொலைபேசி வந்தபிறகு கொஞ்சம் குறைந்தது.கைபேசி வந்தபின் மிக,மிக குறைந்து விட்டது.
அன்புள்ள என்று ஆரம்பித்து ,பேரோ அல்லது கண்ணே மணியே என்றோ ஏதோ எழுதி, இங்கு நாங்கள் எல்லோரும் நலம் அங்கு எல்லோரும் நலமா?நலம் நலம் அறிய ஆவல் என்று
அந்த காலத்தில் கடிதம் இப்படித்தான் நலம் விசாரித்து எழுதிக் கொள்வார்கள். இங்கு மழை பெய்கிறது,அங்கு மழை உண்டா? மாடு கண்ணு போட்டுதா,வெள்ளாமை எப்படி இருக்கு? என்று ஊர் நடப்பு,நாட்டு நடப்பு எல்லாம் கேட்டுக் கொள்வார்கள்.
பழைய கடிதத்தை எடுத்துப்பார்த்தால் அந்த அந்த காலக்கட்டங்களின் நிலை புரியும்.
ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டாலும் நலமா என்றும் செளக்கியமா என்றும் நல்லா இருக்கிறீர்களா? என்றும் கேட்டுக் கொள்வார்கள். விஞ்ஞானம் வளர்ச்சி பெற்றதில் நாம் இழந்தவை ஏராளம்,அதில் கடிதப்போக்குவரத்தும் ஒன்று. திருவள்ளுவர்:
//அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லைபொருள் இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.//
என்று சொன்னார் ,ஆனால் இப்போதைய குறள்:
’செல் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை
மடிக்கணிணி இல்லாருக்கு எவ்வுலகும் இல்லை.” என்றாகிவிட்டது
யாருக்கும் கடிதம் எழுதவோ ,அதை ஆசை ஆசையாய் படிக்கவோ நேரம் இல்லை.
போகிற போக்கில் செல்லில் பேசிக்கொள்வதுதான்! வண்டி ஓட்டிக் கொண்டு ,அப்படிப் பேசுவதால் நடக்கும் விபரீதங்கள் எத்தனை எத்தனை?
வாழ்க்கையில் நிறைய நல்ல விஷயங்களை இழந்தோம்.
திருமணம் ஆன பின் அப்பா அம்மாவிடமிருந்து எனக்குக் கடிதம் வந்தால் குதுகலம்.
அம்மா சமையல் குறிப்பு,கோலம், பூஜை முறைகள் எல்லாம் எழுதி அனுப்புவார்கள்.
குழந்தைப் பேறுக்கு அம்மாவின் வீட்டுக்குப்போன போது, கணவர் என் நலம்,குழந்தை நலம்
கேட்டு எழுதும் போது பெருமிதமான குதுகலம்.குழந்தை வளர்ப்பு எல்லாம் அக்கா அம்மாவிடம் கடிதத்தில்கேட்டுத் தான் .அண்ணன் அக்கா எல்லாம் கடிதம் எழுதும் போது
புதிதாக என்ன சினிமா பார்த்தாய்? புதிதாக என்ன கோவில் போனாய் என்று கேட்பார்கள்
தங்கை ,தம்பி அம்மாவிடம் பள்ளி டூர் போக சிபாரிசு செய்யச் சொல்லி எழுதுவார்கள்.
தோழிகள் எப்போது இனி சந்தித்து கொள்வது எப்போது என்றெல்லாம் கேட்டு எழுதுவார்கள்.எனது மாமனார் வாராவாரம் கடிதம் எழுதுவார்கள்.அவர்கள் எங்களை ஒவ்வொரு பண்டிகைக்கும் வந்து சேருங்கள் என்று எழுதுவார்கள். வாராவாரம் கடிதம் எழுதவில்லையென்றால் உன்னிடமிருந்து கடிதம் இல்லையே அம்மா கவலைப்படுகிறாள்
என்று என் கணவருக்குக் கடிதம் வரும்.என் அப்பாவிடமிருந்தும் நாலுநாளைக்கு ஒருதடவை கடிதம் எழுது என்று கடிதம் வரும்.சின்மையானந்த்ர் நடத்திய தொடர் சொற்பொழிவு விபரம் எல்லாம் அதில் இருக்கும்.
என் மகள் திருமணமாகி இரண்டு கடிதங்கள் எழுதியிருப்பாள்,அப்புறம் எல்லாம் போன் தான்.
மகன் வேலைக்குப் போன புதிதில் ஒரு கடிதம் எழுதினான் அப்புறம் போன்.இப்போது
இண்டர் நெட் சாட் தான்.
மின்னஞ்சலில் கடிதங்களை எழுதித் தாள்களை மிச்சப்படுத்தி மரங்களைப் பாதுகாத்து மழைவளம் பெறுவோம் என்பது இப்போதைய சுலோகம் .
கடிதம் எழுதச் சோம்பல் படும் நமக்கு இது ஒரு நல்ல கருத்தாகவே படுகிறது.
எப்படி இருந்தாலும் ஏதாவதொரு வடிவில் கடிதங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும்
இல்லையா?
வாழ்க வளமுடன்!