ஊமத்தம்பூ- மொட்டும் மலரும்
ரேடியோ பூ என்றும் சொல்லுவோம். கிராமபோன் ஸ்பீக்கர் போல் இருப்பதால் இந்த பேர்.
வேம்பும், அரசமரமும் -நாகர்கள் மரத்தடியில் -மரத்தின் உள் பகுதியை உற்றுப் பார்த்தால் ஐந்து தலை நாகம் கண், மூக்குடன் இருப்பது போல் இருக்கிறது. தெரிகிறதா என்று பாருங்கள்.
காய்ந்த மொட்டை மரத்தைத் தழுவிப் படர்ந்து மொட்டை மரத்திற்குப் பசுமையைக் கொடுத்து மயில்களை வரவேற்று இருக்கிறது பசுமைக் கொடி.
புல் புல் பறவை மாடிப்படிக்கு அடியில் கேபிள் ஒயர்களை சேர்த்துக் கூடு கட்டி குஞ்சு பொரித்து, குஞ்சுக்கு உணவு அளிக்கிறது. காத்திருந்து காத்திருந்து பதிவில்.
மாயவரம் வீடு.
இங்கு (மதுரையில்) கேபிள் ஒயர் உள்ள சுவற்றின் பொந்துக்குள் சிட்டுக்குருவிகள் கூடு கட்டி இருக்கும் படத்தைப் போட்டபோது எல்லோரும் பயந்தார்கள். இறைவன் பறவைகள் கூடு கட்டும் போது பயமில்லா வரத்தை அளித்து இருப்பார் போலும்.
கோவையில் அத்தை வீட்டில் மொட்டைமாடியில் வேண்டாம் என்று தூக்கிப் போட்ட கட்டைக்கு அடியில் தூங்கு முஞ்சிமர இலைகள் விழுந்து கிடக்கும் குப்பையில் குடைபிடித்து இருக்கும் காளான்கள்
நான் வித்தியாசமானவன் என்று தனித்திருக்கும் காளான்!
கற்றாழைப்பூ-
பூ மேல் நோக்கிப் பூக்காமல் கீழ் நோக்கிப் பூத்து இருக்கிறது
கீரைக் கடைசல், வத்தக் குழம்பு செய்த கல்சட்டி,
அரைக்கீரை, வத்தக்குழம்பை இந்த சட்டியில் சுண்ட வைத்த சுண்டக் கறி அத்தனை ருசியாக இருக்கும். இப்போது கீழாநெல்லி முளைத்து கேட்பாரற்றுக் கிடக்கிறது மொட்டைமாடியில்.
ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டவை , இன்று மூலையில்!
எங்கள் தோட்டத்தில் நந்தியாவட்டைச் செடியின்
தண்டில் பச்சோந்தி .
நிறம் மாறுவதினால் இதனை அப்படித்தானே சொல்வார்கள்.
மாயவரம் வீட்டில் தொட்டிகளில் நிறைய பூச்செடிகள் வைத்து இருந்தேன், அரளிச் செடி முதன்முதலில் பூத்த போது
மேய்ச்சல் நிலம் கண்ணுக்கு எட்டிய தூரம் இல்லை வெகு தூரம் போகணும் அண்ணே ! அதுதான் ஆட்டோ சவாரி!
"நம்ம ஊர் போல வருமா? "பாடலில் இந்தக் குளியலைப் பற்றி வரி வருது சொல்லுங்களேன்
இது எதற்கு என்று தெரியும் தானே?
வாழ்க வளமுடன்!




